Contact us at: sooddram@gmail.com

 

வினை தீர்க்க வந்தவரே வினையாகி போகலாமா ?

இணக்க அரசியல் என்றால் அடுத்தவர்களுடன் தாமும் ஒத்துழைத்தல். தாம் தலைமை தாங்கும் இனத்துக்கு அவர்கள் செய்யும் பாதகமற்ற செயலுக்கு அங்கீகாரம் வழங்கல். தம் நியாயமான கோரிக்கைகளை ஏற்பவர்களை பதவியில் நிலைக்க செய்தல். இவை அனைத்தையும் இடமறிந்து காலமறிந்து செய்தல். அடிப்படையில் விட்டுக்கொடுத்தல் பின் கொடுத்து வாங்கல் (Give &Take ) என பல பரிமாணம் கொண்டது இணக்க அரசியல். சாயம் போகும் சேலையாக போகிறதா வடமாகானசபை என எண்ணும் நிலை தான் இன்று காணப்படுகிறது. அன்று ஆளுநர் தலைமையின் கீழ் இருந்த காலங்களில் நடந்தவை கூட இன்று கடந்த ஒரு வருடத்துக்கு மேலான அரசியல் தலைமையின் கீழ் நடைபெறவில்லை. அன்று இணக்க அரசியல் செய்தவர்கள் மீது வசை பாடி வட மாகாண சபையில் பதவிக்கு வந்தபின் தாமும் இணக்க அரசியல் செய்யப்போவதாக கூறி அதற்கு புது விளக்கமும் கூறிய முதல்வர் இன்று வரை செயும் அரசியல் என்ன என பட்டிமன்றம் வைத்தே விவாதிக்க வேண்டும்.

அன்று தமிழர் விடுதலை கூட்டணி எம் பி வெற்றிவேலு யோகேஸ்வரன் மத்தியில் மோதலை கடைப்பிடித்த போதும் வடக்கு வந்த மந்திரியை தன் நண்பன் என்று ஆரத்தழுவ அவர் திறந்து வைக்க வந்த காப்புறுதி கூட்டுத் தாபன திறப்பு விழாவில் கலந்து கொண்டது போல

இன்று பிரதமருடன் மோதல் போக்கு கொண்ட முதல்வர் தனக்கு தா.தே. தலைவர் சம்மந்தர் ஐயா ஏற்பாடு செய்த வட மாகாண மீனவர் வாழ்வாதார பிரச்சனை பற்றி ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தன் மாகாண அமைச்சரை அனுப்பிவிட்டு சுகாதார மந்திரியை வரவேற்க சென்ற செயலும் தலையை விட்டு வாலை பிடிக்கும் செயலை தான் மீண்டும் செய்கிறது.

வந்த மந்திரிக்கு புகழாரம் சூட்டிவிட்டு பிரதமர் ரணில் மீது வசைபாடினார் வடக்கின் முதல்வர்.

முன்னைய அரசை மாற்ற இன்றைய எங்கள் ஜனாதிபதிக்கு உதவியவர் மந்திரி ராஜித செனரத்தின எனவே அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி எனக்கூறிய முதல்வர்.

ஆனால் பிரதமர் ரணில் வந்தது தன் கட்சியை வளர்க்க அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அதனால் தான் கலந்து கொள்ளவில்லை என்றார்.
இது மிகவும் மலினமான அரசியல். எங்கள் ஜனாதிபதி என முதல்வர் உறவு கொண்டாடும் மிஸ்டர் மைத்திரி எப்படி திரு ரணில் தலைமை யினாலான கட்சியின் ஆதரவு இன்றி வென்றிருக்க முடியும் முதல்வர் அவர்களே.

அதனால் தான் தன்னை வெல்ல வைத்தவரின் பலம் மட்டுமல்ல விட்டுக்கொடுப்புக்கும் நல்லெண்ண முடிவாக ஜனாதிபதி பதவி ஏற்ற மறுகணமே திரு ரணிலை பிரதமாராக நியமித்தார்.

தொடர்ந்து நாட்டில் நல்லாட்சி அமைவதற்காக ஆரம்பத்திலேயே இணக்க அரசியலை வரலாற்றில் பிளவு பட்டிருந்த நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் நிகழ்த்திக்காட்டின முதல்வர் அவர்களே.

225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 45 உறப்பினர்களை கொண்டவர் பிரதமர் ஆனார் அவரது ஆட்சி நடக்கிறது என நக்கல் அடித்தார் முதல்வர்.

ஆனால் 30 உறப்பினர்களை சபையில் கொண்ட உங்கள் தலைமையில் எத்தனை அணிகள் உண்டு என்பதை எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே. அன்று உங்கள் முன் பதவி பிரமாணம் எடுக்க கூட அவர்கள் விரும்பவில்லை.

நீங்களும் ஒருமுறை ஆயுதம் ஏந்தியவர்களுடன் இணைந்து இருப்பதால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது என்றீர்கள். அந்த ஆயுதம் ஏந்தியவர்களால் கொண்டுவரப்பட்ட மாகாணசபை தான் இன்றுவரை நிலைத்து நீடிக்கிறது. போடப்பட்ட ஒப்பந்தங்கள் முதல் அரசின் மந்திரிசபை மட்டுமல்ல மாவட்ட சபை கூட குறைப்பிரசவம்தான்.

மேடைப் பேச்சாளன் மக்களுக்கு தெரிவிக்க வந்த விடயங்களை தன் இதயத்தில் இருந்து பேசவேண்டும். நடப்பவை பற்றிய சுய அறிவுடன் வார்த்தைகள் கோர்வையாக வந்தால் அது சத்திய வாக்காகும்.

ஆனால் இன்று வரை நீங்கள் மேடைகளில் பேசவேயில்லை. எழுதி தயாரித்து வந்ததை வாசித்தீர்கள் அதில் மிகுந்திருந்தவை வசைபாடலே.

தம்பிக்கு பதவி கேட்டார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் மீதும்,

இராணுவ பாணியில் நடக்கிறார் என முன்னாள் ஆளுநர் மீதும்,

மத்திய அரசின் மகுடிக்கு ஆடுகிறார் என முன்னாள் பிரதம செயலாளர் மீதும்,

வாய்ச்சொல் தவறிவிட்டார் என முன்னாள் ஜனாதிபதி மீதும்,

தன் மாமன் ஜே ஆர் போல் நடக்கிறார் தன் கட்சியை வளர்க்கவே வந்து போனார் என ரணில் மீதும்

வசை பாடல்களை எழதி வைத்துதான் வாசிக்கிறார்.

தன்னை சுற்றி உள்ள இளம் வக்கீல்களின் வார்த்தை பிரயோகங்களை தான் முதல்வர் வாசிப்பதாக உள்வீட்டு செய்தி.

ஏனென்றல் டக்ளஸ் தேவானந்தா பற்றி பழி சுமத்தி அறிக்கை விட்ட இதே முதல்வர் தான் தந்தி டி வி யில் நேர்காணலின் போது மக்கள் நலனுக்காக நாம் ஒரு பாதையில் போகிறோம் டக்ளஸ் வேறொரு விதமாக அதை செய்கிறார் என பேட்டியளித்தார்.

ஆக முதல்வர் சொந்தப் புத்தியில் பேசுவது ஒன்றாகவும் எழுதி வந்து வாசிப்பது வேறொன்றாகவும் இருக்கிறது. கம்பவாருதி ஜெயராஜ் விக்கியருக்கு சொந்தப்புத்தி மத்திமம் நாங்கள் எழுதி கொடுத்ததை வாசிப்பது தான் கம்பன்கழக கால வழக்கம் என பகிரங்கமாக கூறிவிட்டார்.

பிரதமர் வருகை பற்றி தம்முடன் கலந்து ஆலோசிக்கவில்லை என முகம்சுளிக்கிறார் முதல்வர். நோவுக்கு மருந்தா இல்லை மருந்துக்கு நோவா என்ற நிலையில் மக்களை வைத்திருக்க போகிறாரா முதல்வர்.

பதவிக்கு வந்த நாள் முதல் முன்னைய அரசு முட்டுக்கட்டை போடுவதாக வந்த அறிக்கைகளை கவனத்தில் கொண்டுதான் மக்கள் ஆட்சியை மாற்றினார்கள்.

புதிய ஆட்சி வந்து 30 நாட்களுக்குள் பிரதமருடன் முரண்பட தொடங்கிவிட்டார். இப்போது படிப்படியாக இராணுவத்தை அகற்றுவதாக பிரதமர் வாக்குறுதி தந்தால் நான் அவருடன் கைகுலுக்குவேன் என்கிறார்.

தான் முரண்படுவது மக்கள் நலனுக்காகவே அன்றி தன் சுய கர்வத்தால் அல்ல என மக்களை நம்பவைத்து பேக்காட்ட முயல்கிறார் முதல்வர்.
இதே போல் பதவி பிரமாணத்தை மகிந்தர் முன் செய்தபோது ஏற்பட்ட சல சலப்பை அடக்க இராணுவ பின்னணி கொண்ட ஆளுனரை மாற்றவும் என்னுடன் முரண்படும் பிரதம செயலாளரை மாற்றவும் ஜனாதிபதியின் சம்மதம் பெறவே என் சம்மந்தி வாசு தேவ நாணயகாரவுடன் என் சுற்றம் புடை
சூழ சென்று அவர்முன் பதவி பிரமாணம் செய்தேன் என அனைவர் காதிலும் அப்போதே பூ சுற்றினார்.

எம் மக்கள் தாமாகவே முடிவெடுத்து கொண்டுவந்த புதிய அரசில் தான் அவை இரண்டும் நடந்தது முதல் அமைச்சர் அவர்களே. அதுவரை மகிந்தரும் உங்களை மதிக்கவில்லை, நீதி மன்றமும் நீங்கள் பிரதம செயலாளருக்கு போட்ட கட்டளையை மீளப்பெற செய்ததை யாரும் மறக்கவும் இல்லை கௌரவ முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களே.

மத்தியால் மாகாணத்தை எவ்வளவு கட்டுப்படுத்தலாம் என பிரதமர் உணர்த்துவதாக கூறும் முதல்வர் தான் சத்திய பிரமாணம் எடுத்த உறுதி பத்திரத்தை மீண்டும் படிக்கவேண்டும். பதவிக்கு வருவதற்காக நீங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மக்கள் வாக்கைப்பெறத்தான் வெளியிட்டீர்கள்.

முன்னாள் நீதியரசர் தீர்வை பெற்றுத்தருவார் என நம்பிய மக்கள் வாக்குத்தான் போட்டார்கள். ஆனால் 1977லில் மக்கள் வழங்கியது தனிநாட்டுக்கான ஆணை. அதையே மாவட்ட சபைக்கு விலைபேசிய அன்றைய தலைமைகள் விட்ட தவறுகளுக்கு தம் உயிரை விலையாய் கொடுத்தது அன்றைய இளைஞர் தலமைகள்.

ஸ்ரீலங்கா அரசின் கீழ் இயங்கும் மாகாண சபைக்கு தான் நீங்கள் முதல்வர். மத்திய அரசுக்கு கட்டுப்பட்டது தான் உங்கள் சபை.

1988 ல் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை அதற்கு தனியாக முதலமைச்சரின் கீழ் இயங்கும் டி ஐ ஜி யின் தலைமையிலான பொலிஸ் பிரிவு மேலதிகமாக சி வி எப் எனும் மக்கள் தொண்டர் படை அத்தனைக்கும் அரணாக இந்திய அமைதிப்படை இருந்தபோதே

உள்ளே இருந்து கொல்லும் வியாதி போல் பிரபாகரன் பிரேமதாசாவின் செல்லப்பிராணியாக மாறியதால் அந்த சபை செயலற்றுப் போனது நாம் வாழும் காலத்தில் நடந்த நிகழ்வு.

வடக்கில் இருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றுவேன் என கூறுவதோ அல்லது கட்டம் கட்டமாக வெளியேற்றுவேன் என கூறுவதோ ரணிலுக்கு இப்போது முடியாத காரியம் என்பது முதல்வருக்கு நன்கு தெரியும்.

அவ்வாறு கூறும் சுமுகமான அரசியல் சூழ்நிலை தெற்கில் தற்போது இல்லை. மகிந்தவின் தோல்வியை ஏற்க்க முடியாமல் நுகேகொடை முதல் கண்டி இரத்தினபுரி வரை கூடும் கூட்டம் மேலும் பெருகவே அது வழி சமைக்கும். இனவாதப் பேய் பெரும் பூதமாக மீண்டும் நாட்டை சூறையாடும்.

ஆகவே ரணில் அதை கூறமாட்டார். எனவே முதல்வர் தன் சுய கௌரவ பிரச்னையை ( ரணில் தன்னை பொய்யர் என தந்தி டி வி யில்கூறியதை ) மக்கள் பிரச்சனையுடன் முடிச்சு போடுகிறார்.

ஆரவாரம் இல்லாமல் பிரதமர் வடக்கின் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் மேற்கொள்வதை பலர் அறிவர்.
அவர் அதை பகிரங்கமாக செய்தால் தெற்கின் சுயநல அரசியல்வாதிகளின் கொதிநிலை பேச்சுக்கள் அண்மித்துவரும் தேர்தலில் எதிரணிக்கு வாக்குகளை குவித்து மீண்டும் அராஜக தலைமையின் கீழ் நாடு போய்விடும்.

மக்கள் நலனை பேண தலைமைகளுடன் தான் பேசவேண்டும்.அதில் மோதல் ஏற்பட்டாலும் அதை பேசித்தான் தீர்க்கவேண்டும். அதை விடுத்து தலையுடன் மோதலும் வாலுடன் உறவும் கொள்வதால் தலைமையை சீண்டலாம் என நினைப்பது சின்னத்தனம்.

ஏற்கனவே வந்த பிரதமரை புறம்தள்ளியது மட்டுமல்ல வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி ஜனாதிபதியுடன் பேசவேண்டிய பொறுப்பான வேலையையையும் புறம்தள்ளி திறப்புவிழாவுக்கு வந்த மந்திரிக்கு மாலை மரியாதையை செய்து அவர் முன்பே அவரது அமைச்சரவை தலைவர் மீது வசைபாடவா உங்களை மக்கள் மாகாண சபைக்கு முதல்வர் ஆக்கினார்கள் ?

நீங்களும் திறப்பு விழாக்களில் மாலை மரியாதையை பெறலாம் என்பதற்காகவா முதல்வர் ஆனீர்கள் ? உங்கள் இவ்வாறான செயல்களால் நீங்கள் பதவி சுகம் பெறலாம் ஆனால் மக்கள் எதை பெறுவார்கள் ?

வந்த மந்திரி தன் தலைவனின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவே வந்தார். முதல்வர் வந்தாலும் வராவிட்டாலும் அவர் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்திருப்பார்.

நல்லிணக்கம் என்ற விடயம் நடைபெறாவிட்டால் நாடு சர்வதேச விசாரணைக்குள் அகப்படும் அது நம் நாட்டுக்கு அபகீர்த்தி என எண்ணும் பெரும்பான்மை இனத்தில் உள்ள பலர் வடக்கிற்கும் தெற்கிற்கும் பாலம் அமைக்கும் ஜனாதிபதியின் முயற்ச்சிக்கு செயலாக்கம் கொடுக்கும் நல்லிணக்கத்துக்கு பிள்ளையார் சுழிபோட ஒவ்வொருவராக வடக்கிற்கும் கிழக்கிற்கும் வரத்தொடங்குகிறார்கள்.

அவர்கள் வருவது எம்மீதான கரிசனையால் அல்ல தம்மை சர்வதேச நெருக்குவாரத்தில் இருந்து பாதுக்காக தான் என்று எடுத்துக்கொண்டாலும் பலனடையப்போவது எம்மக்கள் தான்.

விட்டால் என் ஓய்வு வாழ்வுக்கு ஓடி விடுவேன் என்பதை கூட எழுதித்தான் வாசிக்கிறார் முதல்வர்.

இதயம் பதவி சுகத்துக்கு ஏங்க அதை மறைக்க, பொறுப்பை ஏற்றால் செய்து முடிக்கவேண்டும் என்ற வீராப்பை கூட எழுதித்தான் வாசிக்கிறார்.
வட மாகாணா மக்கள் பனங்காட்டு நரிகள் உங்கள் சலசப்புக்கு எடுபட மாட்டார்கள். எத்தனையோ விண்ணாதி விண்ணர்களை தந்த செம்பாட்டு மண். சுயநல மில்லாத நல்ல தலைவர்களுக்கு பஞ்சமில்லா மண்.

என்ன செய்வது நிலத்தடி நீரில் நஞ்சு கலந்தது போல் வஞ்சகரான தமிழ் தேசியம் பேசுவோரின் மாய வலையில் மாட்டிய புள்ளி மான்களை போல் மருண்டு நிற்க்கின்றார்கள். நிச்சயம் இன்றைய இளம் புத்திசாலி கலை மான்கள் தம் கொம்புகளால் அந்த வலையை அறுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மிஸ்டர் மைத்திரி பிரதமர் ரணில் திருமதி சந்திரிகா கூட்டு நாட்டின் புரையோடிப்போன பிரச்சனைக்கு தீர்வுகாண போடும் திட்டம் நல்ல பலனை தரும் என பட்டறிவு உள்ள சம்மந்தர் உணர்கிறார்.

ஏற்கனவே சந்திரிகா கொண்டுவந்த தீர்வு பொதியை எரித்த கட்சியின் தலைவரும், புலிகளுடன் கொண்ட உறவை குழப்ப ரணில் அரசை கலைத்த அம்மையாரும் ஆடிய கூத்தினை அருகில் இருந்து பார்த்த அவரது பார்வையில்

இப்போது இருவரும் மிஸ்டர் மைத்திரியுடன் இணைந்து மும் மூர்த்திகளாய் காட்சி தருவதால் தனக்கு மட்டுமல்ல தமிழ் இனத்துக்கும் ஞானப்பால் கிடைக்கும் என நம்புகிறார்.

அதுவரை உங்கள் வரட்டுக் கௌரவ செயலை தொடர்ந்து உங்கள் பகிஸ்கரிப்பாலும் வசைபாடலாலும் உங்கள் தலைவரின் நம்பிக்கையில் மண் அள்ளிப்போடாதீர்கள்..

அண்மையில் சந்திரிகா கூட ஆட்சி மாற்றத்துக்கு தா தே கூ தான் உதவியது அதன் தலைமையுடன் நல்லுறவு உள்ளது ஒருசிலர் தான் அவசரப்பட்டு அரசை விமர்சிக்கிறார்கள் என்று கூறியதையும் கவனத்தில் கொள்ளவும்

(மாதவன் சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com