Contact us at: sooddram@gmail.com

 

வேரில் விழுந்த விசம்

எல்லாளனின் நல்லாட்சி


 
இலங்கை முழுவதும் பரவியிருந்த எல்லாளன் நல்லாட்சியில் பௌத்தமதம் மற்றைய மதங்களைப்போல் பாதுகாக்கப்பட்டதால் இந்நல்லாட்சியை மறுக்க மகாவம்சத்தை எழுதிய பல்லவ மகாநாமதேரரால் முடியவில்லை. எல்லாளன் மனுநீதிச் சோழனுக்கு நிகராக ஒப்பிடப்பட்டான். எல்லாளனை சோழ அரசன் என்பது முற்றிலும் தவறா னது இந்திய வரலாறுகளிலோ, கல்வெட்டு, அகழ்வாய்வுகளிலே எல்லாளனைப் பற்றிக் எதுவும், எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவன் தமிழீழத்தைச் சேர்ந்த தனித்தமிழ் உத்தரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அரசன் என்பதற்கான பல ஆராரங்கள் உள்ளன. பாளிமொழியில் எலாரா என்பதே எல்லாளன் ஆனது இதன் அர்த்தும் ஈழராஜன் என்பது என பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள்  கருதுகிறார்.

 
சேனன், குத்திகன் எனும் தமிழ் மன்னர்களிடம் இருந்து அனுராதபுரத்தை அசேலன் கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். கி.மு 145ல் எல்லாளன் அவனை வென்று அனுராதபுரத்தை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான். எல்லாளனின் சொந்த இடமாக பூநகரியின் தெற்கெல்லையிலுள்ள பாலியாறுப்பகுதி என்று எண்ணித்துணியலாம். வவுனிக்குளத்தின் தோற்றமே எல்லாளனில் இருந்துதான் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாளன் பயிற்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பலகுளங்களை நிறுவி கடலில் வீணாகப்போகும் நீரைத் தேக்கினான் என்கிறது பலவராறுகள்.

 
துட்டகைமுனுவின் படையெடுப்பு. 

 
தனது தந்தையான காக்க வண்ணதீசனின் மரணத்தின் பின் அவன் வைத்திருந்த படையுடனும், தான் தயாரித்து வைத்திருந்த படையுடனும் தன்தாய் விகாரமாதேவியு டனும் 500பிக்குக்களுடனும் அனுராதபுரத்திற்குத் தெற்கில் இருந்து புறப்பட்டான் துட்டகாமினி. எல்லாளன் போன்ற நீதிதவறா ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளப்ப இயலாது என்பதை உணர்ந்த இவன் இனத்துடன் இணைத்து மதத்தையும் சேர்ந்து யுத்தகோசத்தை அமைத்தான். இந்த இன மத வெறி என்பது தெற்கிலே துட்டனான காமினியால் முதன் முதலில் முன்னெடுக்கப்பட்டது என்பதை இங்கே காணலாம். இதுவும் அடிவேரில் ஊற்றிய நஞ்சே. ஐதேகட்சி, சுதந்திரக்கட்சி, பண்டாரநாயக்கா, ஜேஆர், போன்றவர்களால் துவேசம் மத இனவெறி ஏற்றப்பட்டது என்பதை விட வேரில் பரம்பரையாக சிங்கள இரத்தத்தில் ஏற்றப்பட்ட விசமே இது. ஜேஆர் பண்டாரநாயக்கா போன்ற கிறிஸ்தவர்களும் அரசியலுக்காக பௌத்த வெறிக்குள் அகப்பட்டுக் கொண்ட சந்தர்ப்பவாதிகளே. புத்தபிக்குகளை போருக்கு அழைத்துச் சென்ற துஸ்டன் இந்தக்கைமுனுவே. இந்த விசம் இன்றுவரை பிக்குக்களை அரசியலில் கால்பதித்து நிற்கவைத்தது. கௌதம புத்தரோ அரசசைத் துறந்து வந்தவர். போரை வெறுத்துவர். பௌத்தத்தை உலகெங்கும் பரப்பிய அசோகன் போரே வேண்டாம் அது பாவச்செயலென்று பௌத்தத்தைத் தழுவியவன். ஆனால் இந்தத் துஸ்டன் காமனியோ போருக்கே எதிரான பௌத்தத்தை போருக்காகப் பாவித்தான். இவன் பௌத்த மதத்தின் எதிரியாகத், துரோகியாகப் பார்க்கப்படவேண்டிவன். 

 
கைமுனுவின் படை முதன்முதலில் மகியங்களையில் எல்லாளனின் படையை சந்தித்தது. இப்படி சிறுசிறு இராவத்தளங்களை அழித்துக் கொண்டு சென்ற கைமுனு படை அம்பதீர்த்தத்திலுள்ள எல்லாளனின் படையை முற்றுகை இட்டும் 4மாதங்களு க்கு மேல் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. காரணம் எல்லாளனின் படைத்தளபதி தித்தம்பம் அதிவல்லவனாக இருந்தான். இருப்பினும் பெண் விடயத்தில்  அவன் பலவீனனாக இருந்ததை அறிந்த கைமுனு தன்தாய் விகாரமாதேவியை அரக்கு காயாகப் பாவித்தான். தன்தாயை அன்னியனுக்கு காட்டியும், கொடுத்தும் ஒரு போர் மக்களுக்கோ மனிதர்களுக்கோ மனிதத்துக்கோ தேவையா? இந்த அசிங்கமான, கேடுகெட்ட செயலை இந்தக் கெட்ட ஜென்மம் கைமுனு செய்தான். இதை மாகாவம்சமே தலையில் சரித்திரம் என்றும் கைமுனுவை கதாநாயகன் என்றும் கொண்டாடுகிறது. ஒருதாயை விபச்சாரியாக்கிய பெருமை சிங்களம் தம்பரம்பரை என்று தலையில் வைத்து கொண்டாடும் துட்டகைமுனுவுக்கு உள்ளது. தாயையே விபச்சாரியாக்கியவனின் பரம்பரை பிணங்களுடன் உறவு கொள்ள முயன்றது அதிசயத்துக்குரியதல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். சென்ற பேரினவாத அரசியலில் பெண்கள் அரக்கு காய்களாக இருந்ததை அவதானித்திருப்பீர்கள். கருணா அம்மான் டக்லஸ் போன்றவர்களுக்கும் புலத்தில் இருந்து சென்றவர்களுக்கு மதுவும் மாதுவும் பரிசளிப்கப்பட்டு இரகசியப் படங்கள் எடுக்கப்பட்டு வெருட்டி அரசியல் நடத்திய விதம் வேரில் ஊறியிருந்த விச இரத்தத்தை காட்டுகிறது.

 
அவன்படை பொலநறுவையில் எல்லாளனின் படையை முறியடிக்க முடியாது திண்டாடியது. பலமான கோட்டைகள், கொத்துளங்கள், அகழிகள் பாதுகாப்பரண்கள் என்று பாதுகாப்புப் பலமாக இருந்ததனால் மேலும் நான்கு மாதத்தக்கு மேல் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இருபடையினருக்கும் பேரழிவு நிகழ்ந்தது. அதன்பின் எல்லாளனின் தலைநகரான அனுராதபுரத்தை நோக்கி நகர்ந்தபோது கிரலகம், மகிலநகர் எனுமிடங்களில் துட்டகைமுனுவின் படு படைதோல்வி கண்டது. பேரழிவைச் சந்தித்த அவன்படை உதவிகளை, ஆளணிகளை தெற்கில் உருகுணையில் இருந்து பெறவும், தம்மைத்தயாராக்கிக் கொள்ளவும் காசபர்வதம் எனுமிடத்தில் பாசறை அமைத்துக் கொண்டான். இதை எல்லாளன் அனுமதித்தான் என்பது பெருந்தன்மைக்குரியது. அடியோடு அடியாக துண்டகைமுனுவின் படைகளை முழுமையாக நாசமாக்கியிருக்க முடியும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மைதரும். நஞ்சி பட்டாலும் தொட்டாலும் நஞ்சு நஞ்சாகவே இருக்கும். எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில் போர்நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற போர்நிறுத்தங்கள் போருக்கான தயார்படுத்தல்களே இதுவரை இருந்திருக்கிறது என்பதையும் காணலாம்?

 
மீண்டும் தன்னையும், தெற்கிலிருந்து பெற்ற உதவிகளுடன் அனுராதபுத்திலுள்ள எல்லாளன் கோட்டையை கைமுனு படைகள் சுற்றிவளைத்தாலும். முன்னேறமுடிய வில்லை. பலவீனமான படையை வைத்து வெற்றியை எட்டமுடியாது என்று கண்ட துட்டனான கைமுனு எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். பெருமனதுடன் 72வயது நிரம்பிய கிழவனான எல்லாளன் ஒரு துஸ்ட இளைஞனின் வேண்டுகோளை ஏற்று களம் புகுந்தான். இதுவே எல்லாளன் செய்த முட்டாள் தனமான  செயலும் தன் தலையிலேயே வாரி மண்ணைப்போட்ட செயலுமாகும். பெருந்தன்மை என்பது பொறுக்கித்தனத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடாது. 

 
தனிச்சமரை ஏற்ற எல்லாளன் தனது மகாபர்வதம் என்ற பட்டத்துயானையிலும், துட்டன்  கண்டுலன் எனும் யானையிலும் இருந்தபடி சமரை எதிர்கொண்டிந்தனர். 72வயது எல்லாளனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது துட்டகைமுனு யுத்த தர்மத்துக்கு எதிராக தனது யானையை  எல்லாளனின் யானைமேல் ஏவிவிட்டான் அது தன்தந்தத்தால் எல்லாளனின் யானையைத்தாக்க மகாபர்வதம் நிலத்தில் சாய்ந்தது. அத்துடன் மாமன்னன் எல்லாளனும் சாய்ந்தான். அந்த வேளைபார்த்து, எல்லாளன் எழுந்திருப்பதற்கு முன்னால் மீண்டும் யுத்ததர்பத்தை மீறி தனது ஈட்டிகளை எறிந்து மாவீரன் எல்லாளனை கெட்ட கைமுனு கொன்றான். 

 
தனிச்சமருக்கு ஒருவரை அழைக்கும் போது பலமும், வயது, அனைத்தும் ஏறக்குறைய சமனாக இருக்கவேண்டும். இதை துட்டன் செய்யவில்லை. மாவீரன் எல்லாளனிடம் பெருந்தன்மை இருக்கலாம் ஆனால் அது நீதியற்ற ஏமாற்றுத்தனத்துக்கு துணை போயிருக்கக் கூடாது. யானைப்போர் என்பது ஆயுதபலத்திலும் அதைக் கையாளும் திறமையிலேயே போர் வெற்றி அமையும். இங்கே முதலில் யானையை எல்லாளன் யானை மீது ஏவி விட்டதே போர்தர்மத்தை மீறிய செயலாகும். அன்றைய யுத்த தர்மமானது மிருகங்களைப் போருக்குப் பாவிக்கலாம் ஆனால் அவற்றுக்கெதிராக ஆயுதங்களைப் பாவிக்கக் கூடாது. இதைக் கடைப்பிடித்தானா கடையனா கெட்ட துட்டன் கைமுனு? அதுமட்டுமல்ல நிராயுதபாணிமேல் ஆயுதம் பாவிப்பது உயரிய யுத்தமீறலாக அன்றும் இன்றும் கணிக்கப்படுகிறது. யானையால் விழுந்த எல்லாளன் எழுந்திருப்பதற்கு முன்ரே யுத்தர்மத்தை மீறி எல்லாளன் மீது ஈட்டியை ஏவினான் சிறுமதி கொண்ட கெட்ட துட்டன். எல்லாளன் என்றும் சரணடைந்திருக்க மாட்டான். அப்படி சரணடைவற்குக் கூட அனுமதிக்கவில்லை இந்தத் துட்டன் கைமுனு. இவனை கதாநாயகனாகப் போற்றும் பொன்சேகாவும், கோத்தபாயவும் மகிந்தவுமா அனுமதிப்பார் கள். இந்தத் துட்டனின் வாரிசுகளா, அவன் உதிரத்தில் உதிர்த்தவர்களா, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாமல் விடுவார்கள். இப்படிச் சரணடைந்தவர் களைக் கொல்லாது விட்டிருந்ததால் தான் இது அதிசயம். அன்று மாகாவம்சத்தில் இருந்து வேர்களில் ஊற்றிய விசங்கள் இன்று விழுதுவிட்டு விருட்சங்களாக இயக்கபரம்பரை அரக்கர்களாக, சிங்களப்படையாக பௌத்தபேரின வாதமாக எழுந்து நிற்கிறது. எது அன்று எல்லாளனுக்கு நடந்ததே அதுவே முள்ளிவாய்காலில் எமக்கும் நடந்தது. 

 
போரின்பின்

 
வரலாற்றுப் பாடங்களை நான் திருப்பிப் பார்க்கும் போது எது அன்று நடந்ததே அதுவே இன்றும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதாவது பழைய நாகரீகங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவது போல போர், வாழ்வியல், படைப்புக்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. இந்த வட்டத்தை வெட்டவேண்டமாயின் சரித்திரங்களை அறிவதும், அனுபவங்களை திரட்டி ஆய்வதுமே வெற்றிக்கான பாதையாக அமையமுடியும். இறந்த பின்னர் செய்யும் மாலை, மரியாதையை துட்டகைமுனு செய்தான் ஆனால் துட்ட கைமுனுவின் வாரிசுகள் செய்தார்களா? அரை உயிருடன் கிடந்தவர்களை உயிருடன் புதைத்தார்கள். இறந்தவர்களின் உடல்களை தெருக்தெருவாக நிர்வாணப்படுத்தி தமது பெண்களுக்கு காட்சிக்குக் காட்டி மகிழ்ந்தார்கள். பெண்களை நிர்வாணமாக்கி கொலை செய்தார்கள். பிணத்துடன் இச்சை கொண்டார்கள். விதை விசவிதையாக இருந்தால் நற்பயனுள்ள மரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? எல்லாளன் இறந்ததை அறிந்த அவனின் மருமகன் பாலுகன் ஏழாம் நாள் 6000 படை வீரர்களுடன் பூநகரியில் இருந்து படையெடுத்து வந்து கைமுனுபடைகளைத் தாக்கி தோல்வியடைந்தான்.

 
போர்களின் பின் மனமுடைந்த கைமுனு தனது கொலைகளை எண்ணி மனம்வருந்தி அமைதி வேண்டி பௌத்ததேரர்களிடம் துயரைச் சொன்னபோது பௌத்தத்தை நேர்மையாகக் கடைப்பிடிக்க முடியாத தேரர்கள், பிச்சாந்திகள் கைமுனுவைத் தேற்றினார்கள் இப்படி "பௌத்தத்தை நம்பாத அனைவரும் நரகவாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய, விலங்குகளுக்குச் சமமானவர்கள் இவர்களைக் கொன்றால் பாவம் சேராது" என புத்தசங்கத்தால் உரைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் அதிகாரம் எக்ஸ் எக்ஸ் வி, பக்கம் 175 வரி 75ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பரனவிதான தான் எழுதிய புத்தகமான இலங்கைச் சரித்திரம் (கிஸ்டறி ஆவ் சிலோன்) 3ம் அதிகாரத்தில் பக்கம் 162ல் விளக்கியுள்ளார். இந்தப் போதனை இஸ்லாத்தை நினைவுபடுத்தவில்லையா? எல்லா மதங்களும் ஏறக்குறைய அண்ணன் தம்பிகள் தான்

 
துட்டகைமுனு 24வருடங்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆண்டான். இவனுடன் சேர்த்து 44வருடங்கள் தமிழர் அல்லாதவர்களின் கையில் அனுராதபுரம் இருந்தது. வடக்கில் இருந்து 7குறுநிலமன்னர்கள் படையெடுத்து வந்து மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றினர் என்பதே வரலாறு. நோர்வே நக்கீரா 02.04.2015
  

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com