Contact us at: sooddram@gmail.com

 

இறுக்கமடைந்து வரும் சிரிய நெருக்கடி
 

(ரவூப் ஸெய்ன்)

சிரியாவின் உள்நாட்டுப் போர் ஐந்தாவது ஆண்டின் காலெடுத்து வைக்கிறது. கடந்த நான்கு ஆண்டு காலப் போரில் 220,000 மக் கள் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் சனத்தொகையில் அரைவாசிப் பேர் தமது இருப்பிடங்களிலிருந்து அகதிகளாய் வெளியேறி, உள்நாட்டிலும் வெளிநாடு களிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுள் 4.3 மில்லியன் மக்கள் அயல் நாடுகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். போரினால் இடம்பெயர்ந் தவர்களுள் 5 இலட்சம் சிறுவர்களும் உள்ளடங்குவர். சிரியாவிலிருந்து அயல் நாடுகளுக்குத் தப்பியோடியுள்ள மக்களின் தொகை குரோஷியா நாட்டின் சனத் தொகைக்குச் சமமானது. அவர்கள் வெளிநாட்டின் நிவாரண உதவிகளிலேயே தங்கியுள்ளனர்.

சிரியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 120 பில்லியன் அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. நான்கில் ஒரு சிரியன் வறுமைக் கோட் டின் கீழ் வாழும் நிலை உருவாக்கி யுள்ளது. ஆயுள் எதிர்பார்ப்பும் 22 வருடங்களால் குறைந்துள்ளது.

அலெப்போ நகரில் (சிரியாவின் இரண்டாவது பெரிய நகரம்) உள்நாட்டுப் போருக்கு முன்னர் 2500 வைத்தியர்கள் பணியாற்றினர். இப்போது 90 பேரள விலேயே பணியாற்றுகின்றனர் என அந்நாட்டின் மருத்துவக் கழகம் தெரிவிக் கின்றது.

துருக்கிய எல்லைப் புறமாக பெருந் தொகை மக்கள் நாட்டை விட்டு வெளி யேறுகின்றனர். அரசாங்கம் பொதுமக்கள் மீது அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இருப்பை அச்சுறுத்தும் நோக்கிலும் விlustலீr கிoசீb மற்றும் கிலீrrலீl கிoசீb என்பவற்றை தாறுமாறாகப் பயன்படுத்துகின்றது.

சமாதானத்திற்கான எதிர்பார்ப்பு

நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் சிரியாவில் நீடித்த சமாதானமொன்று ஏற்படுமா என்ற ஏக்கப் பெருமூச்சு மக்களிடையே நிலவுகின்றபோதும் பெரும்பாலான மக்கள் சமாதானத்தின் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர். சிரியாவின் மக்கள் புரட்சி பிராந்திய சக்திகளால் திட்டமிட்டு திருடப்பட்டுள் ளதை அவர்கள் ஆத்திரத்தோடு நோக்குகின்றனர். புரட்சியை திருடிய திலும் திசை திருப்பியதிலும் சூழ வுள்ள அறபு நாடுகள் மட்டுமன்றி, மேற்குலகுக்கும் ஒரு பங்குள்ளதை அவர்கள் உணர்கின்றனர்.

சிரிய நெருக்கடி இப்போது சிரியா வின் உள்நாட்டு நெருக்கடியாக மட்டும் நீடிக்கவில்லை. மாறாக பிராந்தியத் திலுள்ள பல்வேறு அரசியல் நெருக் கடிகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் நெருக்கடி மென் மேலும் இறுக்கமடைந்துள்ளது.

உண்மையான சுதந்திரத்திற்காகப் போராடுகின்றவர்கள் யார் என்று அரசியல் நோக்கர்களாலோ ஊடக வியலாளர்களோ சாதாரண பொது மக்களலோ புரிந்துகொள்ள முடியாத ளவு நாட்டின் அரசியல், இராணுவ நெருக்கடிகள் சிக்கலடைந்துள்ளன.

மத்திய கிழக்கில் சமீபத்தில் நடந்த மக்கள் புரட்சியைத் தொடர்ந்து இரத்தக் களரியில் சிரியாவே மிகவும் ஆபத்தான நிலைக்கு வந்துள்ளது. அடுத்துவரும் பல தலைமுறையினரை, அவர்களின் வாழ்வியலை, கலாசார, ஆன்மீக வாழ்வை அது மோசமாக பாதிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது. எதிர் காலத்திற்கான ஒரு புதிய அணுகுமுறை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டி யுள்ளது.

சிரியாவில் ஆளும் பாத் iஆ அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை திசை திருப்புவதில் பல்வேறு காரணிகள் பங்குபெற்றுள்ளன. பிராந்தி யத்தின் வல்லரசாக மாற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ஈரான் இம்மோதலின் முக்கிய பங்காளியாகும். மேற்கு நாடுகளின் ஆதரவோடு அதன் மறை முகமான இராணுவ நிதி உதவியோடு செயல்படும் யிஷியிஷி அமைப்பின் தோற்றம் இஸ்லாமிய வாதிகளின் புரட்சியை முற்றிலும் திசை திருப்பி சீரழித்துள்ளது.

உலகம் தழுவிய கிலாபத்தை உரு வாக்கப் போகின்றோம் என திடீரென களத்திற்கு வந்த அவ்வியக்கம், குறைந்த பட்சம் சிரியாவில் ஒரு நல்லாட்சியைத் தோற்றுவிப்பதற்கு எவ்வகையிலும் முயற்சிக்கவில்லை. புறம்பாக, மக்க ளின் கிளர்ச்சியையும் புரட்சியையும் திசை மாற்றி, மத்திய கிழக்கின் அரசியல் நெருக்கடி பற்றிய கவனத்தை திசை திருப்பி வருகின்றது.

சிரிய ஈராக் எல்லைப் புறத்தைத் தாண்டி, லிபியா, தூனிஸியா, எகிப்து என அதன் சிறு சிறு ஊடுருவல்கள் உலகளாவிய ரீதியில் பாரிய சர்ச்சையை உருவாக்கி வருகின்றது. வட ஆபிரிக் காவில் நீண்டகாலம் உள்நாட்டு குழப்பங்களோடு சுருங்கியிருந்த தூனிஸியா இப்போது அரசியல் நெருக்கடிகளின் சர்வதேச அரங்கிற்கு இழுத்து வரப்படுகின்றது. அதற்குப் பின்னணியில் கறுப்புத் தலைப்பாகை கட்டிய இந்த யிஷியிஷி தீவிர வாதிகளே உள்ளனர்.

சிரிய மக்கள் புரட்சியை பல்வேறு ஆயுதக் குழுக்களின் உள்ளகச் சண் டையாகவும், அதிகாரத்திற்கான போட் டியாகவும் மேற்கு நாட்டு ஊடகங்கள் வியாக்கியானம் செய்வதற்கு இந்தத் தீவிரவாத இயக்கம் நன்கு பயன் படுத்தப்படுகின்றது.

ஈரானின் தலையீடு

சிரியாவின் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் அடுத்துள்ள மிகப் பெரும் சவால் ஈரானின் எல்லை மீறிய தலையீடாகும். சிரியாவில் ஆளும் வர்க்கம் iஆ என்பதற்காக அவ்வரசாங்கத்தை நீடிக்கச் செய்வ தற்கு ஈரான் தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றது. ஆயுதம், படைப்பலம், நிதி ஆதரவு என்பவற்றை சிரிய அர சாங்கத்திற்கு தொடர்ந்தும் ஈரான் வழங்கி வழங்குகின்றது.

ஈரானின் புரட்சிகர காவல் படையினர் (யிran ஞிலீvolutionary மிaurனீ) உள்ளிட்டு, லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லாஹ் ஆயுததாரி களும் சிரியாவில் அரசாங்கப் படைக ளோடு இணைந்து கிளர்ச்சியாளர்க ளுக்கு எதிராக போராடுகின்றனர். ஈரான், வளைகுடாவிலுள்ள ஆயுத உற்பத்தி நாடுகளுள் ஒன்றாகும். அறபு நாடுகள் எதுவும் ஆயுத உற்பத்தியில் ஈடுபடவில்லை. ஈரானின் இந்தப் பிடிவாதம் சிரியாவின் பெருந்தொகை பொதுமக்கள் படுகொலை செய்யப் படுவதற்குக் காரணமாகின்றது.

மில்லியன் கணக்கான மக்கள் அகதிமுகாம்களில் எதிர்கொள்ளும் அவலங்களுக்கு ஈரான் தார்மீக ரீதியில் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது. பள்ளி செல்லும் வயதில் சிறார்கள் போர்ப் பீதிக்கும் குண்டுத் தாக்குதல் களுக்கும் இரையாக்கப்படுவதற்கு ஈரான் வகைகூற வேண்டும்.

சிக்கலடைந்து வரும் நெருக்கடி

2011 இல் டமஸ்கஸில் ஆரம்பித்த மக்கள் கிளர்ச்சி எகிப்து, லிபியா, யெமன் போன்று உடனடி ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், அது நடைபெறவில்லை. புறநடையாக ஐந்தா வது ஆண்டில் கிளர்ச்சி கால்பதித் துள்ளது. இதற்கான பிரதான காரணங் களுள் ஒன்று, ஈராக், ஈரான், லெபனான், சவூதி அரேபியா போன்ற நாடுகளோடு இப்பிரச்சினை தொடர்புபட்டிருப்பதே. தத்தமது நாடுகளின் சொந்த நலன்க ளுக்காக சிரியாவின் போர்க்களம் பயன்படுத்தப்படுகின்றது. ஈராக், ஈரான், லெபனான் என்பவை ஒரே கூட்டணியில் செயல் படுகின்றன. அவை ஜனநாயகம், மனித உரிமைகள், சிரிய மக்களின் எதிர்பார்ப்பு, நீதி நேர்மை போன்ற அனைத்து விழுமியங்களையும் மீறி ஈரான் ஆதரவு அரசாங்க மொன்றை (iஆ அடிப்படையிலானது) தக்க வைப்பதற்கு எந்த விலை கொடுக்கவும் தயாராகவுள் ளன.

மறுபுறம் இதற்காக சிரிய மக்கள் வழங்கிவரும் விலை மிகவும் பாரியது.

போராடி வரும் ஆயுதக் குழுக்கள்

போர்க்களத்தில் முதலில் கொல்லப் படுவது உண்மை என்பர். சிரியாவில் தன்னியல்பாக நடந்த மக்கள் எழுச் சியை ஆயுத ரீதியாக வழிநடத்தும் நோக்கில் இஸ்லாமிய அடிப்படையிலான ஆயுதக் குழுதோற்றம் பெற்றது. காலப்போக்கில் குட்டையைக் குழப்பும் நோக்கில் பல்வேறு வெளிநாட்டு சக்திகள் தலையிட்டு ஒன்றுக் கொன்று முரண்பட்ட நலன்களைக் கொண்ட ஆயுதக் குழுக்களை களத்தில் இறக் கியது.

ஏற்கனவே அமெரிக்கப் படையின ரால் வேட்டையாடப்பட்டு வரும் அல்கையிதா போன்றனவும் களத் திற்கு வந்தன. இதன் விளைவாக, சிரியாவில் மக்களின் அபிலாசைக ளைப் பிரதிபலிக்கும் உண்மையான ஆயுதப் போராட்டத்தை திசை திருப் பவும் அதன் தாற்பரியத்தை குறைத்து மதிப்பிடவும் வெளிநாட்டு சக்திகள் முயல்கின்றன.

சிரியாவில் அரச படையை வெல்ல முடியாமல் இருப்பதற்கு அங்கு போராடிவரும் ஆயுதக் குழுக்களின் உள்ளக மோதலும் பிரதான காரண மாகும். அரசாங்கத்திற்கு எதிரான பொது மக்களின் யுத்தம் ஒருங் கிணைந்ததல்ல. ஒன்றுபட்ட பலம் அங்கு பிரயோகிக்கப்படவில்லை. அவ் வாறு பிரயோகிக்கப்படுவதைத் தடுக் கும் நோக்கிலேயே வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்பான ஆயுதக் குழுக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

இதனால், யார் உண்மையான சுதந் திரத்திற்காகப் போராடுகின்றவர்கள் என்பது வெளியுலகத்திற்கு தெளிவற்றுப் போகின்றது.

மேற்கு நாடுகளின் புறக்கணிப்பு

சிரியாவில் கிளர்ச்சி ஆரம்பித்ததி லிருந்து மேற்கு நாடுகளின் ஆத ரவை சிரிய மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், கடைசி வரை யில் மேற்கு நாடுகள் எவ் வித ஆதரவும் அளிக்க வில்லை. சர்வதேச நிறுவன ங்களான ஐ.நா மற்றும் பாது காப்புச் சபை என்பனவும் சிரியாவில் கூர்மையுடைந்து வரும் மனிதாபிமான நெருக் கடிகளை போதிய அக்கறை யுடன் அணுகவில்லை. பஷ்ஷார் அல்அஸதை பாதுகாப்புச் சபை இதுவரை ஒரு போர்க் குற்றவாளியாக அறிவிக்கவில்லை.

அமெரிக்கா சிரிய அரசா ங்கத்தை ஆரம்பத்தில் குற் றம் சுமத்தியது. அங்குள்ள யுரேனிய செறிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முனை ப்பாக இருந்தது. உள்நாட்டுப் போரை இதற்காகவே பயன் படுத்தியது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆயு தங்களை சிரியாவிலிருந்து முற்றிலும் களைவது மட் டுமே அமெரிக்காவின் இல க்காக இருந்தது. அதைத் தாண்டி, சிவில் ஜனநாயக குறிக்கோள்கள் எதுவும் அமெரிக்காவுக்கு இருக்க வில்லை. தற்போது ஈரானு டன் அமெரிக்கா தொடங்கி யிருக்கும் நல்லுறவு சிரியா வின் சிவில் சமூகத்திற்கு எதிரான மற்றொரு சவாலாகும்.

எதிரியின் நண்பன் எதிரி என்ற வாய்ப்பாட்டை மாற் றிக் கொண்டுள்ள அமெரி க்கா, ஈரானின் நட்பு அரசா ங்கமாகவுள்ள சிரியாவில் அரசாங்க மாற்றத்தை ஏற்ப டுத்துவது தனது பிராந்திய நலன்களுக்கு எதிரானது எனக் கருதுகின்றது.

சிரியா பற்றிய அமெரிக்கா வின் இப்புதிய அணுகு முறை மிகவும் ஆபத்தானது. ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி சமீபத்தில் வெளியிட் டுள்ள அறிக்கை மிகுந்த கண்டனத்திற்குரியது. அதை உள்ளடக்கிய வகையிலேயே சிரியாவின் அரசியல் தீர்வுத் திட்டம் சாத்தியமானது என்று ஜோன் கெரி பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது சிரியா குறித்து அமெரிக்கா வின் நிலைப்பாட்டில் ஏற்பட் டுள்ள பெரிய மாற்றமாகும்.

இம்மாற்றம் சிரியாவில் நீடித்த சமாதானத்திற்கும் ஜன நாயக ஆட்சி மாற்றத்திற்கும் விடுக்கப்படும் பாரிய அச்சு றுத்தலாகும்.

சிரிய அகதிகள் ஐரோப் பிய நாடுகளை நோக்கி நகர் ந்து வருகின்றனர். 1460 நாட் கள் நடந்த இரத்தக் களரியில் சிரியர்கள் போன்று வேறு எவரும் கடும் அவலங்களை எதிர்கொண்டிருக்க வாய்ப்பி ல்லை. அறபு முஸ்லிம் நாடு களின் அசமந்தப் போக்கும், அறபு லீக்கின் கையாலாகாத் தனமும் சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை நீடிக்கச்செய்கின்றது.

அறபு முஸ்லிம் நாடுகளின் அதிகார பீடங்கள் இந்நெருக்கடியை மிகச் சரியாகக் கையாளதவரை சிரிய மக்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com