Contact us at: sooddram@gmail.com

 

டில்லிக்கு அடுத்த படியாக ஆபத்தான நகரம் சென்னை

உலகில் சுற்றாடல் பாதிப்புள்ள இருபது நகரங்களில் 13 இடங்கள் இந்தியாவில் உள்ளதாக அறிவிப்பு

சுதந்திரமடைந்த பிறகு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமும் மிகப் பெரிய கல்வி வளர்ச்சியும் எல்லா நாடுகளாலும் பாராட்டப்பட்டன. 1947 ஆம் ஆண்டு தொடங்கி 1960 வரை யிலும் மற்ற நாடுகளின் உயர் கல்வி நிலையங்களில் பேராசிரியர்களாகவும் ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானிகளா கவும் இந்தியர்கள் பலர் பணியிலிருந்தனர். அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியர்கள் குடியுரிமை பெற்று பல பெரிய பதவிகளில் அமர்ந்தனர். அதுபோன்ற நிலைமை படிப்படியாக குறைந்து தற்போது இந்திய நாட்டின் நிர்வாகம் சோம்பேறித்தனத்தில் சிக்கித் தவிக்கிறது. அதில் எல்லோரையும் பாதிக்கும் ஒரு விஷயம் இந்திய பெரு நகரங்களில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அங்கு வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை சீரழித்து வருகிறது என்பதாகும். இந்தப் பாதிப்பினால் நிறையப் பேர் கடுமையாக நோய்வாய்ப்படுவதும் பலர் மரணமடைவதும் பல ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியத் தலைநகர் டில்லிதான் மிக மோசமான மாசுபட்ட காற்றினால் சூழப்பட்ட நகரம் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இன்றைய நிலையில் அகில உலகிலும் 20 நகரங்கள் மிக மோசமான மாசுபட்ட காற்றால் சூழப்பட்ட நகரங்கள் எனவும் அவற்றில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்றும் அறிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம். அந்த 13 நகரங்களிலும் மிகவும் மோச மானது டில்லி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரங்கள் தெரிந்த பின்னர் வளர்ந்துவிட்ட மேலை நாடுகளின் அரசுகள் தங்கள் மக்களுக்கு ‘எச்சரிக்கை’ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

இதுவரையிலும் அந்நாடுகள் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் நாட்டு மக்களுக்கு ‘பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை, வழிப்பறி, தெருக்களில் நடக்கும் கலாட்டா ஆகியவற்றிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்’ என்கிற அறிவுரைகளைத்தான் வழங்கி வந்தன. ஆனால் இன்றைய நிலைமையில் இந்தியாவிற்கு செல்பவர்கள் அங்கே பரவியுள்ள நச்சுப் பொருள்கள் கலந்த சுற்றுச்சூழல் தங்களைப் பாதிக்கும் என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கி வருகின்றன.

அமெரிக்கா, ஜெர்மனி. ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் டில்லி நகரில் வேலை செய்யும் மூன்று ஆண்டுகளை இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கலாமா என்று யோசித்து வருகின்றனவாம். காரணம் அந்த அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் டில்லி மாநகரில் பரவியுள்ள நச்சுக்காற்றை சுவாசிப்பதால் நோய்கள் எற்படலாம் என்ற பயமே. இது நடந்தால் மற்ற நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள் இங்கு வருவதைத் தடுக்கலாம்.

அதனால் இந்தியப் பிரதமரின் ‘இந்தியா விற்கு வந்து உங்கள் தொழிற்சாலைகளை தொடங்குங்கள்’ எனும் முதலீடு செய்யும் திட்டத்தை வெற்றியடையச் செய்ய முடியுமா எனும் கேள்வி எழுகிறது. ஒரு கோடி 80 இலட்சம் மக்கள் வசிக்கும் டில்லியில் உள்ள பல பள்ளிகளையும் ஆராய்ந்து அங்கே பரவியுள்ள கெட்ட காற்றை பட்டியலிட்டுள்ளது பசுமை அமைதி எனும் சுற்றுச்சூழல் பொது நல நிறுவனம். காற்றில் கலக்கும் வாகனங்களின் புகை, கழிவுப் பொருள்களை எரிக்கும் போது உருவாகும் கரும்புகை, கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் இடிப்பு மற்றும் கட்டுமான வேலைகளின் போது பறந்து காற்றில் கலக்கும் தூசு ஆகியவற்றால் சுவாசிக்கும் காற்று மாசுபடுகிறது.

ஆங்கிலத்தில் ‘பார்ட்டி டுலேட் மேட்டர் (பி.எம்) எனப்படும் துகள்கள் குப்பை கூளங்களிலிருந்தும் வாகனங்களின் புகைகளிலிருந்தும் உருவாகி காற்றில் கலக்கின்றன. ஒரு துகளின் துல்லியமான அளவு தமது ஒரு தலை முடியில் நூறில் ஒரு பங்கு தடிமன். அது கண் பார்வைக்குப் புலப்படாது. ஆனால் நுண்நோக்கியில் பார்க்கும் போது தெரியும். மாசுக் கட்டுப்பாட்டை ஆராயும் கருவிகள் மூலம் கண்டுபிடித்து அவற்றின் தடிமன் எவ்வளவு என்பதை கணக்கிடுவார்கள்.

10 மைக்ரோ தடிமன் உள்ள கண்ணிற்கு புலப்படாத கழிவுத் துகள்கள் சுவாகிக்கும் நகர்ப்புற மக்களின் நுரையீரலுக்குள் புகுந்து அங்கேயே தங்கி விடுகின்றன. பின்னர் இரத்தத்தில் கலந்து உடலின் பல உறுப்புகளுக்கும் செல்கின்றன. அதனால் புற்றுநோய், இருதயப் பாதிப்பு போன்ற பெரிய வியாதிகள் உருவாகின்றன.

மேலை நாடுகளில் இதுபற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட இந்தப் பாதிப்பு தீமையை விளைவிக்கிறது எனத் தெரியவந்துள்ளது. இதுபோன்ற பாதிக்கப்பட்ட நகரங்களில் வசித்தாலும் வீட்டினுள்ளே ஏ.சி. அறையில் இருக்கும் வசதி படைத்தவர் களுக்கு பெரிய அளவில் பாதிப்பு கிடையாது.

ஆனால் தெருவிலும், வெட்டவெளியிலும் நிறைய நேரங்களை செலவிடும் ஏழை எளிய மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க இந்திய நாட்டில் உபயோகிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டில் ஒரு விவாதம் நடந்தது.

டீசல் கார்களுக்கு அதிக வரி விதித்து அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும் அதிகம் சுற்றுப்புற சூழல்கள் பி. எம். துகள்களால் நிரம்பியுள்ள நாள்களில் தனியார் வாகனங்களை உபயோகிக்கக் கூடாது என சட்டம் இயற்றப்படும் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் இன்று வரை அதுபோல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்சமயம் இந்தியாவில் 17 கோடியாக உள்ள தனியார் வாகனங்களின் எண்ணிக்கை 200 இல் 40 கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் ‘பி.எம். 2.5 துகள்கள் மூன்று மடங்கு அதிகமாகி கார்கள், லொறிகள். பெரிய வாகனங்கள் உருவாக்கும் நச்சுத்தன்மை கொண்ட காற்று ஐந்து மடங்கு அதிகரிக்கும் என அமெரிக்காவின் சாண்டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பினால் குழந்தைகள் இறப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. டில்லி நகருக்கு அடுத்தபடியாக சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்பட்ட நகரம் எனும் பெருமை சென்னை நகரக்குக் கிடைத்துள்ளது.

தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, வாகனங்கள் வெளியிடும் புகை, கழிவுகள் எரியும் போது உருவாகும் புகை, சாதாரண அடுப்புகளில் விறகுகளில் தீயூட்டி சமையல் செய்யும் போது உருவாகும் புகை என பலதரப்பட்ட காற்றின் பாதிப்புகளில் பரவும் பி. ஏ. துகள்கள் நகரின் பல பகுதிகளில் எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதைக் கணக்கிடும் கருவிகளை குறிப்பிட்ட இடங்களில் பொருத்த வேண்டிய திட்டத்தை இன்றுவரை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது தமிழ்நாட்டின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

தற்போது இயங்கும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிலையங்களில் இரண்டில் மட்டுமே இதுபோன்ற துகங்கள கணக்கிடும் கருவிகள் உள்ளன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

426 சதுர கி. மீ. பரப்பளவுள்ள சென்னை நகருக்கு 75 இடங்களில் சுற்றுச்சூழலின் மாசுபட்ட காற்றின் நச்சுத்தன்மையை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சென்னை நகரில் 1991 ஆம் ஆண்டில் சுமார் 5 இலட்சம் மோட்டார் வாகனங்கள் இருந்தன. தற்சமயம் அது 30 இலட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 20 சதவீதம் கார்கள் 55 சதவீதம் இரு சக்கர வாகனங்கள். ஒரு நாளைக்கு 800 இரு சக்கர வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை நகரில் 30 சதவீதம் அதிக அளவில் நுரையீரல் நோய் பாதிப்புக்கள் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சூழல்நிலையில் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மிகப் பெரிய எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.

இதில் மிகவும் கொடுமையான ஓர் அம்சம் சுற்றுச்சூழல் பாதிப்பினால் உருவாகும் வியாதிகளை குணப்படுத்தும் முறை தனியானது என்பது தெரியாமல் பல மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பதால் வேறு பல உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு நோயாளிகள் மேலும் அதிக அளவில் பாதிக்கப்படு கிறார்கள்.

சென்னையில் வட பெரும்பாக்கம் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை மூலப்பொருளாக உபயோகித்து பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.

அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பலவிதமான நோய்கள் உருவாகி மருத்துவர்களை அணுகுகின்றனர். இந்த வியாதிகளுக்குக் காரணம் அப்பகுதியில் கழிவுப் புகைகளைக் கக்கும் தொழிற்சாலைகள்தான் என்பது தெரியாமல் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். இது எங்கு போய் முடியும் என்பதே தெரியவில்லை.

எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தியாவின் எல்லா நகர்ப்புறப் பகுதிகளையும் ஆராய்ந்து சுற்றுச்சூழல் மாசுபட்ட அளவைக் கணக்கிட்டு அவற்றை நீக்கும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com