Contact us at: sooddram@gmail.com

 

குறைவாய் புலம்பெயர்தோம் என்பதில் நம் பெருமை இருக்கின்றது ..!

(கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர் கூட்டமைப்பு ஒன்றின் புத்தக வெளியீடு ஒன்றில் இடம்பெறுவதர்க்காக எழுதப்பட்ட கட்டுரை)

இந்த உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் ஒரே விதிதான் "யாதும் ஊரே யாவரும் கேளீர் " நாம் எப்படி வாழவேண்டு , எங்கு வாழவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நம் தனி ஒருவரிடம் மட்டும் இருந்துவிடுவதில்லை . அவற்றை தீர்மானிக்கும் சக்தி பலதரப்பட்டவையாக இருக்கின்றன யுத்தம் , உலகமயமாக்கல் என்கின்ற இராட்ஷத காரணிகளால் சொந்த நாடுகளை பிரிந்தவர்களே உலகத்தில் அதிகமானவர்கள் . யுத்தத்தில் சிதறிப்போய் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இன்றுவரை தாய் நாட்டின் பசுமை நினைவுகளுடனும், என்றோ ஓர் நாள் சொந்த ஊரில் குடியேறி விடவேண்டும் என்கின்ற ஏக்கங்களுடனும் வாழ்த்து வருகின்றோம்.

புலம்பெயர் தமிழர் என்கின்ற பொதுவான வார்த்தைக்குள் அடக்கிவிட்டாலும் . விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு , வடக்கு பிரதேச ரீதியான வேறுபாடுகள் தனிசிறப்புகள், பெருமை கூறல்கள் நம் உரையாடல்களுக்குள் நிச்சயம் ஒளிந்துதான் கிடக்கின்றன . அந்தவகையில் புலம்பெயர் கிழக்கு தமிழர்களிடையே நான் கிழக்கு என்கின்ற பெருமை கிழக்கில் வாழ்பவர்களை காட்டிலும் சற்று அதிகமாகவே இருக்கின்றதென்றே சொல்ல வேண்டும் "நான் பிறந்த மண்ணை பெருமைப்படுத்துவதும், அம் மண் மீது பெருமைகொள்வதும் என் தாய்க்கு கொடுக்கும் மரியாதை போன்றது"
(துரதிஷ்டவசமாக பல கிழக்கு தமிழர்கள் பார்ப்பது சிலர் அரசியலில் பயன்படுத்தும் பிரதேச வாதம் என்கின்ற சில்லறை வார்த்தையை எம் ஆத்மா சார்ந்த உணர்வோடு ஒப்பிட்டு பார்த்து பிரதேசம் சார்ந்து தீவிரமாக இருப்பவர்களை பிரதேசவாதிகள் என்று முத்திரை குத்துவதும் , உணர்வுகளுக்கு சேறு பூசுவது போன்ற சிலரின் நடவடிக்கைகள் வேதனைக்குரியதாக இருக்கின்றது.

எம் உணர்வுகளை மதிக்கும் சகிப்புத்தன்மை மிக்க வடக்கை பூர்வீகமாகக்கொண்ட புலம்பெயர் தமிழர்களும் இருகின்றனர் என்பதை கிழக்கினை பிறப்பிடமாக கொண்ட சிலர் புரிந்துகொள்ள வேண்டும் அதை எந்த வகையிலும் மறுத்து விடமுடியாது.)

நம்மில் பலர் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்களை கூடப்பிறந்த உறவுகளாய் பார்க்கின்றோம் , தாராள உரிமை எடுத்துக்கொள்கின்றோம். நல்லது கேட்டவைகளை பகிர்ந்துகொள்கிறோம் , நம் ஒன்று கூடல்களுக்காக சிறு சிறு விழாக்களை கூட பேரு விழாக்கள் ஆக்கிக்கொள்கின்றோம் இவை அனைத்துக்கும் அடிப்படை நாம் ஊரிலேயே சேர்ந்து வாழ பழகியவர்கள். அறிந்தோ அறியாமலோ எம் மனதின் ஓரம் எம்மவர்களை காணவேண்டும் பழகவேண்டும் என்கின்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது . நாம் கொண்டாடும் விழாக்கள் வருமானம் சார்ந்தவையாக வெளித்தோற்ற மளித்தாலும். பல அவ்வாறு இருப்பதில்லை. சந்தோசத்துக்கு வரவு செலவு பார்க்கக்கூடாது என்றாலும் ஒரு பேச்சுக்கு பார்த்தால் நாம் விழாக்கள் நடத்த செய்யும் செலவுகளை விட இதுவரை நாம் சென்ற விழாக்களுக்காக செலவு. செய்தவையே அதிகமாக இருக்கும் (ஆடைகள் + பயணம் + கொடுத்தவை + அலைச்சல் எல்லாமே அடங்கும்) ஆக நாம் விழாக்களுக்கு விரும்பி செலவு செய்ய ஆயத்தமாகவே இருக்கிறோம் . பொதுவாகவே தமிழர்களாகிய நாம் மற்ற கலாச்சாரம் சார்தவர்களை காட்டிலும் நல்லவர்கள் என்பதை நாம் நம்பவேண்டும் , எம்மிடம் இருக்கும் நன்றியுணர்வு , மற்றவர்களை மதித்தல் , நேர்மை , இறக்க உணர்வு, உதவுதல் என எல்லாமே ஒருமித்து வைத்திருக்கும் மனிதர்கள் நாமாகவே இருப்போம் ( சிலர் விதிவிலக்கு அதை மொத்த சமூகத்தோடு ஒப்பிட முடியாது) இவை அனைத்தையுமே புலம்பெயர் எதிர்கால சந்ததியினருக்கு அப்படியே கடத்தவேண்டும் என்பதிலேயே இருக்கின்றது எம் இனப்பெருமையின் ,பிரதேசத்தின், பழக்க வழக்கத்தின் இருப்பு .

குறைவாய் புலம்பெயர்தோம் என்பதில் நம் பெருமை இருக்கின்றது என்பது ஒரு வகை திருப்தி .
யுத்தம் பொருளாதார ரீதியில் சிலரை வளர்த்து விட்டிருக்கின்றது, நாகரிக உலகுடன் சமமாக வாழ பலக்கிவிட்டிருக்கின்றது . எம் மொழி ,இனத்தில் அறிமுகத்தை உலக நாடுகளுக்கு தந்திருக்கின்றது . மறு முனையில் சொந்த நாட்டின் நம் இருப்பை குறைதிருக்கின்றது , நம் மொழிக்குள் வேற்று மொழிகள் ஊடுருவி நன்றாய் தமிழ் பேசவேண்டிய நம் இளையோர் வேற்று மொழிக்காரனை போல் தடுமாறி கொச்சையாய் தமிபேசி திரியவேண்டி இருக்கின்றது. தமிழனை செல்வந்தனாக்கி கூடவே நோய்களையும் கொடுத்திருக்கின்றது இந்த புலம்பெயர் வாழ்வு .
சில பெற்றோர் மிக நாகரீகமானவன் அவரவர் வாழ்க்கை அவரவர் உரிமை சுதந்திரம் என்று தம் பிள்ளைகளை அவர் விருப்பங்களுக்கு விடுபவராய் காட்டிக்கொள்ள முயற்சித்தாலும் . பிள்ளைகள் மீதான கவலைகள் பெற்றோர் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.
இவை எல்லாமே யுத்தமும் புலம்பெயர் வாழ்கையும் சேர்த்து பாதித்திருக்கின்ற காரணிகள் .

சிலர் கவலை கொள்வதுண்டு கிழக்கை சார்தவர்கள் பலர் இங்கு இல்லை என்று. அடித்து சொல்ல முடியும் நம்மை விட கிழக்கில் ,வடக்கில் அல்லது இலங்கையில் வாழ்பவர்கள் பல மடங்கு மகிழ்சியாக , நெருக்குதல்கள் (அரசியல், சிலர் மீதான இராணுவ கெடுபிடி தவிர்த்து ) இல்லாமல் . வாழ்கின்றனர். சிலரிடம் பொருளாதாரம் மட்டும் குறையாக இருக்கிறது . இதனை விடுமுறைகளுக்கு இலங்கை சென்று வருபவர்கள் நன்று உணர்ந்திருப்பர்.
நம் இனத்துக்கு நம்மால் செய்யக்கூடிய உதவி அவர்களை இங்கு அழைத்து பணக்காரன் ஆக்குவதல்ல. அவர்களை அங்கேயே வாழ முடிந்த உதவிகளை செய்வதாயே இருக்கவேண்டும்.

விரும்பியோ விரும்பாமலோ இந்த வாழ்க்கையை வாழ பழகிவிட்டோம் . ஊரோடு குடியேறவேண்டும் என்கின்ற உணர்வு இருந்தாலும் ஜதார்த்தமும், நடைமுறையிலும் சாத்தியம் என்பது மிகக்குறைவாகவே இருக்கின்றது. மிக மிக சிலருக்கே அதை சாதியமாக்கவும் முடியுமானதாக இருக்கும்.
இவை ஒருபுறமிருக்க உங்கள் பிள்ளைகளை தயவு செய்து ஊருடன் தொடர்பு படுத்தி விடுங்கள் அவர்கள். நான் இலங்கையன் , கிழக்குக்கு, வடக்குக்கு சொந்தமானவன் என்கின்ற உணர்வுகளை ஊட்டிவிடுகள் . புலம்பெயர் இளையோர் கைபெசிகளுக்குள் முடங்கிவிட்டனர். சற்று கைபெசிகளுக்குல்லேனும் தாயக மக்கள் பற்றிய சிதனைகளை ஊடிவிடுங்கள். அவர்களின் தற்போதைய வாழ்க்கையை தொந்தரவு செய்யாவண்ணம் நம் பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருங்கள் . காரணம் இலங்கயுடனேயே தொடர்பு அறுந்த புலம்பெயர் தமிழ் சமூகமொன்று உருவாகிக்கொண்டிருக்கின்றது. கண்டும் காணாமல் அதை வளர்துவிட்டுவிட கூடாதல்லவா..!

ஏற்று கொண்டாலும் இல்லாவிட்டாலும் நாம் தஞ்ச கோரிக்கைக்கு கொடுத்த காரணங்களை சற்று மீட்டுப்பாருங்கள் . எத்தனையோ பேரின் வாழ்க்கை பாலாக்கப்படிருக்கின்றது , உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றது. அதனை இழப்புக்களும் நடந்திருக்கின்றது . அந்த இழப்புகளின் பங்கு நாம் இன்று வாழும் வாழ்க்கையில் இருக்கின்றது முடிந்தளவுக்கு அவர்களுக்கு உதவி செய்யவேண்டுமல்லவா..! அவை யுத்தத்தை அனுபவித்த நமக்கு மட்டும் தெரிந்தால் போதாது . நம் பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகள் +++ என்ன தெரியவேண்டி இருக்கின்றது. அப்போதுதான் குறைந்தபட்சம் பொருளாதார ரீதியிலேனும் நம் பிரதேசத்தை கைதூக்கி விட முன்வருவார்கள் . இல்லையென் அவர்கள் அவர்கள் வாழ்க்கை என்று நம் தாயகத்தை மறுத்துவிடும்/மறந்துவிடும் ஆபத்து ஜதார்த்தத்தில் இருக்கின்றது. கிழக்கு தமிழர்களாகிய நாமும் தூர நோக்கோடு சில விடையங்களை சிந்தித்து செயற்படவேண்டியிருக்கின்றது

நாம் குறைவாக இருப்பதையே நம் பலமாக எடுத்துக்கொண்டு . சமூகம் சார்த்த விடையங்களை தனிப்பட்ட ரீதியிலும் , குழுக்களாகவும் நம் ஆத்மா திருப்தியோடு எங்களுக்கு தெரிந்த கிழக்கு மக்களுக்கேனும் உதவிசெய்ய பழகிக்கொள்வோம் . நம் சந்ததியினருக்கும் பழகிவிடுவோம் .

"சரியான உதவி என்பது தேவைப்படுபவனுக்கு சரியான நேரத்தில் அவனை தூக்கிவிட பயன்படுபவையாக இருக்கட்டும் "

இரா.வி.ராஜ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com