Contact us at: sooddram@gmail.com

 

விட்டுக் கொடுக்க முடியாத தேர்தல் உரிமைகள்

அரசியல் ரீதியாக பார்க்கும் போது இந்த வாரம், இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதோர் வாரமாக அமையலாம். ஏனெனில், நாட்டில் அரசியல் கள நிலைமையை வெகுவாக மாற்றி அமைக்கக் கூடிய இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் இந்த வாரம் நாடாளுமன்றத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில், நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை சிறுபான்மை கட்சிகள் உட்பட ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆனால் , அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தமாக இவ்வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கூறப்படும் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பாக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வெளியே இயங்கும் சிறுபான்மை கட்சிகள் சற்று அச்சத்துடனேயே இருக்கின்றன. விகிதாசார முறையோடு தொகுதி வாரி தேர்தல் முறையும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

அதன் படி நாடாளுமன்றத்துக்கு தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் அதிகமாக இருக்கும்.

இதனால், வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு வெளியே சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமோ என சிறுபான்மை கட்சிகள் அச்சப்படுகின்றன.

நிறைவேற்று ஜனாதிபதி முறையில், சிறுபான்மையினருக்கு சாதகமான அம்சங்கள் இருந்த போதும் பெரும்பான்மை சமூகத்தோடு சுமுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினர் அம் முறையை இரத்துச் செய்வதற்கு ஆதரவு வழங்க முன்வந்ததாகவும் ஆனால், தேர்தல் சீர்த்திருத்தம் என்ற விடயத்தில் சிறுபான்மையினரின் உணர்வுகள் புறக்கணிக்கப்படுவதை பார்க்கும் போது, தாம் காட்டிக் கொடுக்கப்பட்டோம் என்ற உணர்வு சிறுபான்மையினரின் மனதில் ஏற்படுவதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருப்பது இதனாலேயேயாகும்.

அரசியலமைப்பு மாற்றம், திருத்தம் என்று கூறப்படும் போதெல்லாம் சிறுபான்மையின மக்கள் அச்சப்படுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வரலாற்றில் அவர்கள் பெற்ற அனுபவமே இதற்குக் காரணமாகும்.

சுதந்திரம் அடைந்த பின்னர், இலங்கையில் இரண்டு முறை அரசியலமைப்பு முற்றாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 18 முறை அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் எல்லா மாற்றங்களும் திருத்தங்களும் நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியதாக கூற முடியாது. ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களும் ஒரு சில திருத்தங்களுமே நாடடில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

வரப்போகும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அவ்வாறே முக்கியமானதாகும்.
திருத்தங்களில் குறிப்பாக 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம், 2001 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 17 ஆவது திருத்தம் மற்றும் 2010ஆம் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தம் ஆகியன நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போலவே பெரும் சர்ச்சைகளையும் கிளப்பின.

சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை இவை அனைத்தும் முக்கியமானவையே. 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பானது, பிரித்தானிய ஆட்சியிலிருந்து நாட்டை முற்றாக விடுவித்த போதிலும் அதுவரை சிறுபான்மை மக்களுக்கு அரசியலமைப்பின் மூலமாகவே வழங்கப்பட்டிருந்த ஒரு பாதுகாப்பு உத்தரவாதம் இதன் மூலம் ஒழிக்கப்பட்டது.

அது தான் 1947ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பின் 29 ஆவது சரத்தின் மூலம் வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பாகும்.

முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கு முன்னர் சிங்களம் அரச கரும மொழியாகும் என்பது தனியானதோர் சட்டமாகவே இருந்தது.

ஆனால், அரச கரும மொழி சிங்களம் என்பது இந்த அரசியலமைப்பின் மூலமே அரசியலமைப்பு அந்தஸ்த்தை பெற்றது. இத்தனைக்கும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரு பிரசித்தி பெற்ற இடதுசாரியான கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவே இந்த முதலாவது குடியரசு அரசியலமைப்பை வரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் அரசியல்வாதிகள், முதலாவது குடியரசு அரசியலமைப்பின் இந்த பாதகமான அம்சங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் , சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை.

1978ஆம் ஆண்டு, பிரதமர் ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நாட்டில் ஒருவித சர்வாதிகாரத்தை உருவாக்கியது எனலாம். அதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி, நீதிமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் பொறுப்பு சொல்லாத ஒருவர். அந்த அரசியலமைப்பிலும் சிங்களம் அரச கரும மொழியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதற்கும் தமிழ் அரசியல்வாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ் ஆயுதக் குழுக்கள் வன்முறை மூலமாக தமது எதிர்ப்பை தெரிவித்தன. அப்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களான உமா மகேஸ்வரன், பேபி, சுப்பிரமணியம் ஆகியோர் இந்த அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரத்மலான விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவ்ரோ விமானமொன்றை குண்டு வைத்து தகர்த்தனர்.

இந்த அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி, நாட்டின் சகல இனத்தவரினதும் வாக்குகளால் தெரிவு செய்யப்படுவதால், அவர் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை புறக்கணிக்க முடியாது என ஆரம்ப காலத்தில் வாதிடப்பட்ட போதிலும் நடைமுறையில் மட்டுமல்ல அது எப்போதும் அவ்வாறிருக்கவில்லை.

ஒரு சில சந்தர்ப்பங்களில் சிறுபான்மையினர் அதன் மூலம் பயன்பெற்ற போதிலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒரு நிறைவேற்று ஜனாதிபதியே கொண்டு வந்தார் என்பதையும் மறந்துவிட முடியாது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் பல முறை தேர்தல் ஒப்பந்தங்களை செய்து கொண்டது. நிறைவேற்று ஜனாதிபதிக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை என்பதைப் பற்றி சற்றும் கவனம் செலுத்தாது, அவ்வாறான பல சந்தர்ப்பங்களில் மு.கா.வை ஏமாற்ற பொதுஜன ஐக்கிய முன்னணி தயங்கவில்லை.

தமக்கு சிறுபான்மையினரின் ஆதரவு தேவை என்பதை முற்றாகவே புறக்கணித்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. போர், கிளர்ச்சி ஆகிய எதுவுமில்லாத நிலையிலும் சிறுபான்மை மக்கள் தமது பாதுகாப்பைப் பற்றி பெரிதும் கவலைப்பட வேண்டிய நிலை அவரது காலத்தில் உருவாகியது. இறுதியில் அதனால், அவர் கவலைப்பட நேர்ந்தமை வேறு விடயம்.

இவ்வாறு நிறைவேற்று ஜனாதிபதி முறை, குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையாவிட்டாலும் நிறைவேற்று ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கை ஓரளவுக்காவது கட்டுப்படுத்து முகமாக 2001ஆம் ஆண்டு 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்ட போது ஏனைய சகல அரசியல் கட்சிகளும் அதனை ஆதரித்த நிலையில், சிறுபான்மை கட்சிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

எனவே தான், பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் அத் திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.

17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமே அரச அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் விடயத்தில் ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட முடியாதவாறு சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இது ஜனநாயகத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்.

ஆனால், தாமும் தமது பரம்பரையினரும் சதாகாலம் நாட்டை ஆள வேண்டும் என நினைத்த மஹிந்த ராஜபக்ஷ, இந்த 17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திலிருந்த நல்ல அம்சங்களை 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இரத்துச் செய்தார். அது மட்டுமல்லாது ஒருவர் இரண்டு முறை தான் ஜனாதிபதியாக பதவியிலிருக்க முடியும் என்று அரசியலமைப்பில் இருந்த வரையறையையும் அவர் அதன் மூலம் இரத்துச் செய்து, ஒருவர் எத்தனை முறையும் ஜனாதிபதியாகலாம் என்ற வகையில் சட்டத்தை மாற்றி அமைத்தார்.

அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த சகல சிறுபான்மை கட்சிகளும் அதனை ஆதரித்தன. தொடர்ந்து ஜனநாயகத்தின் பக்கமே இருந்த சிறுபான்மையினரின் வரலாற்றில் இது ஒரு கறை படிந்த பக்கமாகும்.

ஆனால் இப்போது, அன்று 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உட்பட நாட்டிலுள்ள ஏறத்தாழ சகல கட்சிகளும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவி ஒருவருக்கு ஜனாதிபதியாக இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும் என்ற நிலையை கொண்டுவர இணங்கியுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும் என்று கூறும் சிறு கட்சிகள், சிலவேளை இதனை எதிர்க்கலாம். தேர்தல் சீர்திருத்தங்களும் இதனோடே வர வேண்டும் என்று கூறுகிறதேயல்லாமல் ஸ்ரீ.ல.சு.க இதனை எதிர்க்கவில்லை. எனவே, 18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்து நாட்டுக்கு கேடு விளைவித்தவர்கள் அதற்கு பரிகாரமாக நல்லதோர் காரியத்தை செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறை முற்றாக இரத்துச் செய்யப்படாத நிலையில், சிறுபான்மையினர் இந்த திருத்தத்தை ஆதரிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆதரிக்கவும் தான் வேண்டும்.

ஆனால், தேர்தல் சீர்திருத்தங்கள் என்று வரும் போது அவர்கள் மிக கவனமாக செயற்பட வேண்டியிருக்கிறது.

தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் எவ்வித விவாதமும் இல்லை. இதில் உள்ள விருப்புவாக்கு முறையின் காரணமாக, தேர்தல் காலத்தில் வன்முறை ஏற்படுகிறது.

விருப்ப வாக்குகளுக்காக பலர் இனவாதத்தை தூண்டுகிறார்கள். அதேவேளை வேட்பாளர்கள் ஒரு மாவட்டம் முழுவதிலும் பிரசார வேலைகளில் ஈடுபட வேண்டியதால் பிரதான கட்சிகள் மூலம் பணம் படைத்தவர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.

சிறு கட்சிகள், மாவட்ட வேட்பாளர் பட்டியல்களை நிரப்பிக் கொள்வதற்காக சாதாரண மக்களை பட்டியல்களில் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால், அக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே அனேகமாக தெரிவு செய்யப்படுகிறார்கள்.

எனவே, தேர்தல் முறைமாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்காக தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நீண்ட காலமாக கலந்துரையாடி கண்டுபிடித்த தீர்வு தான் விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைகளின் கலப்பு முறையாகும்.

அது நியாயம் தான் ஆனால், இந்த புதிய முறையின் படி தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அது வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு வெளியே வாழும் சிறுபான்மை மக்களை பாதிக்கிறது. அந்த நிலையை கூடிய வரை தவிர்த்துக் கொள்வதே இவ் வாரம் சிறுபான்மை கட்சிகளின் முன் உள்ள சவாலாக உள்ளது.

(எம்.எஸ்எம்.ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com