Contact us at: sooddram@gmail.com

 

சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!!

(கருணா கணபதிப்பிள்ளை)

நடைபயணம்,   ஊர்வலம், உண்ணாவிரதம். தீக்குளிப்பு, அமைதிப்பேரணி, சாவிலும் எழுவோம், அலைகடல் போல் எழுவோம், குதித்து எழுவோம், ஓயமாட்டோம் என பல்வேறு வகையான போராட்டங்களை போர் முடிவடைவதற்கு முன்னரான கடைசி 3மாதங்களில் தலைவரையும் தலைவரின் போராட்டத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக புலம்பெயர் புலியாதரவாளர்கள் மேற்குலக நாடுகள் முழுவதும் நின்று போடாத கூத்துக்களும் ஆடாத ஆட்டங்களும் இல்லை.

30வருடகால போராட்டதில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தடவைகள் எதாவது ஒரு பெயரில் ஊர்வலமாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா.சபைக்கு முன்னால் புலிக்கொடியுடனும், தவைரின் படத்துடனும் போய்நின்று எங்கள் தலைவர் பிரபாகரன், ‘வீவோண்ட் தமிழீழம்என கத்தி பல கோரிக்கைகளை ஐ.நா. சபையினரிடம் முன்வைத்தார்கள்.

இவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஐ.நா.சபையினர் இந்த 30வருட காலத்தில் என்றுமே ஏற்றுகொள்ளவுமில்லை ஆகக்குறைந்தது உங்கள் கோரிக்கைகளை நாங்கள் பரிசீலனைக்காவது எடுத்துக்கொள்கின்றோம் என்றாவது எப்பொழுதுமே கூறியதில்லை.

பின்பு, கடைசிகட்ட போர் நடைபெற்றக்கொண்டிருந்த போது 3மாத காலமாக ஏறக்குறைய ஒட்டுமொத்த சுவிஸ் வாழ் தமிழர்களையும் அழைத்துகொண்டு ஐ.நா.சபை முன்பு போய் நின்று சனத்தை சிங்கள இராணுவம் படுகொலை செய்வதாகவும், அதனால் சனத்தை சிங்கள படையினரிடமிருந்து காப்பாற்றி பிரபாகரனிடம் அந்த சனத்தை ஒப்படைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு (கொஞ்சம் கொஞ்சமாக தமிழனை அழிப்பதற்கு) வழிவகை செய்யவேண்டும் என ஐ.நா.சபையினரிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.

இதை ஐ.நா.சபையினர் தெளிவாக புரிந்துகொண்டு கொஞ்ச சனம் அழிந்தாலும் பறவாயில்லை 30வருடமாக இலங்கைத் திருநாட்டில் தலைவிரிதாடிய   பயங்கரவாதத்தை எனிமேலும்   விட்டுவைக்க முடியாது என்பதால் மறைமுகமாக மேற்குலகத்தினர்கள் முடிந்தவரை புலிகளை அழிப்பதற்கு உதவினார்கள்.   அதற்கு பிறகு புலியாதரவாளர்கள்   ஜ.நா.சபை பக்கமே போவதில்லை.

 

புலியாதரவாளர்கள் புலிக்கொடியுடன்   ஐ.நா.சபைக்கு முன்னால போனாலே ஐ.நா.சபைக்காரர்கள் முகம் சுழிக்க வெளிக்கிட்டிருவார்கள்.   காசுக்காக   புலிகளை ஆதரித்த சுவிஸ்,   நோர்வே    நாடுகள் சிலதை தவிர கனடா,   பிரித்தானியா,    ஜெர்மனி,    பிரான்ஸ்போன்ற நாட்டினர்களுக்கு புலிக்கொடியை கண்டாலே அலர்சியாகிவிடும்.      முக்கியமாக ஜெனிவா நகர் வாழ் சுவிஸ் மக்களுக்கு இந்த புலிகொடியுடன் திரியும்   கூட்டங்களை கண்டாலே,    பயணம் செய்யும் போத  ூனை குறுக்கால   போறமாதிரி  பார்ப்பார்கள்.

புலிகள் இலங்கையில் மே மாதம் 18திகதி அழிக்கப்பட்டதோடு    அந்த நிலமை முற்றாக மாறிவிட்டிருந்தது.     ஜெனிவா வாழ் மக்கள் நிம்மதியாக பயணம் செய்தார்கள்.   இப்பொழுது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியுள்ளது.   லண்டனிலிருந்து சிவந்தன் என்ற பூனையோடு (புலிகள்) சேர்ந்து இன்னும் கொஞ்ச பூனைகள் ஜெனீவா நகருக்கு குறுக்கால போவதற்கு வந்துகொண்டிருக்கிறார்களாம். அதுவும் புலிக்கொடியுடன் வருகிறார்களாம்.

சிவந்தனின் நடைபயணத்தை நாம் கொஞ்சம் உற்றுநோக்குவோமானால் இந்த நடைபயணத்தின் நோக்கம் என்னவென்பது புரியும்.    அதாவது இந்த மாதிரியாக   புலியாதரவாளர்கள  ெய்யும்   நடவடிக்கைகள்     யாவும் தங்களுக்கு     தமிழ் மக்களிடையே ஒரு publicity  யை தேடுவதும்,    பதுக்கி வைத்திருக்கும்   புலிகளின்    காசுகளை   தங்களின்    உல்லாச நடவடிக்கைகளுக்கு செலவழிப்பதுமே தான் இவர்களின் குறிக்கோளாகும். இதை தவிர இவர்கள் வேறெதையும் சாதிக்கபோவதில்லை.

 சிவந்தனின் நடை பயணத்தை நாம் அவதானித்த வரை இது ஒரு சுற்றுலா நடவடிக்கையாகவே இதை பார்க்க கூடியதாக உள்ளது. சிவந்தன் ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக உடையுடுத்திக்கொண்டு, இரவில் நல்ல உல்லாச விடுதிகளில் தங்கிக்கொண்டு, வடிவாக குடித்து சாப்பிட்டுக்கொண்டு வரும் வழிகளில் நல்ல இடங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டு வருகிறார்.

எங்கெங்கு தங்கவேண்டும்,  எந்தெந்த இடத்தில் நடக்கவேண்டும், எந்தெந்த இடங்களில் தூங்கவேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே ஓழுங்கமைக்கப்பட்டபடியே சிவந்தனின் நடையோடு நடைபெற்று வருகின்றன.   இவரின் இந்த நடைப்பயணத்துக்கு ஆதரவளிப்பவர்கள் நாடுகடந்த அரசமைபினராகும்.

கிட்டதட்ட   1000கிலோமீற்றர்கள் நடைபயணமாக வருபவர் எப்படியிருப்பார் என்ன மாதிரியான உடல்நிலையில் இருப்பார் என்பதனையும், சும்மா ஊரை பேய்காட்டுவதற்காக நடந்துவருபவர் எப்படியிருப்பார் எப்படியான உடல்நிலையில் இருப்பார் என்பதனையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை நீங்கள் ஒருமுறை கண்ணுற்றால் நான்சொல்லுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை புரிந்துகொள்வீர்கள்.

ஒருவிடயம் தெளிவானது. இந்த புலிக்கொடியை தூக்கிகொண்டு யார் எந்தனை மைல்கள் நடந்து அல்லது தவண்டு போய் ஐ.நா.சபை முன் போய்நின்றாலும் எதுவும் நடக்கவோதில்லை.       இப்படி வீணாக செலவழிக்கும் காசுகளை சிவந்தன் கொண்டுபோய் வன்னியில் உள்ள மக்களுக்கு கொடுத்தால் பெரிய புண்ணியமாக இருக்கும். சிவந்தனின் இந்த நடைபயண காணொளியை நீங்கள்கொஞ்சம் கண்ணுற்றால் நான் மேலே கூறியவிடயங்கள் எந்தளவு உண்மை என்று உங்களுக்கு புரியும்.

(காணொளியில் பார்க்க.......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com