Contact us at: sooddram@gmail.com

 

இன்றைய தேவை தமிழ் மக்களின் சேவை

(Dr. Rajasinham Narendran,  Ph.D) (Guelph, Ontario  Canada) Saudi  Arabia

இன்றைய தேவை தமிழ் மக்களின் சேவைகிட்டத்ட்ட முப்பது வருடங்கள், பல வடிவங்களில் வியாபித்து ஆயுதப் போராட்டம், சென்ற வருடம் இலங்கை இரா ணுவத்தால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆயுதப்போராட்டத்துக்கான அடிப்படை காரணங்கள் பற்றி விவாதித்து, நியாயப்படுத்துவதற்கான காலம் இதுவல்ல. இப  ோரின் தாக்குதலால் ஏற்பட்ட விளைவுகளை எதிர் நோக்கி, புத்திசாலித்தனமாக நடப்பதே இக்காலகட்டத்தில் உகந்தது. நாமே நமக்கு எதிரிகளாக மாறக்கூடாது எமது மக்கள், எமது உறவினர்கள், எங்கள் மொழி பேசுபவர்கள், எமது பிரதேசங்களில் வாழ்பவர்கள், தமிழருக்கென்று நடாத்தப்பட்டபோரில் மிகவும் கொடூரமாக பாதிக்கப்பட்டவர்கள், இன்று சீரழிந்து இடம்பெயர்ந்தவர்களாகவும், அகதிகளாகவும், விதவைகளாகவும், ஊனமுற்றோராகவும், அனாதைகளாகவும், கைதிகளாகவும் அல்லற்படுகின்றனர்.இவர்களுக்கு உதவி செய்து கைகொடுப்பது எங்கள் கடமை.

ஆயுதப்போராட்டமோ, வேறு எந்த எதிர்பார்ப்போ, எமது மக்களுக்கு வருங்காலங்களில் எவ்வித நன்மையையும் ஏற்படுத்தப்போவதில்லை. நாம் தமிழர் என்ற உணர்ச்சியைத் தவிர்த்து, எமது மக்கள் மனிதர்கள், அவர்களுக்கு, எமக்காக சீரழிந்தவர்களுக்கு, தன்மானமுள்ளவர்களாக வாழும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற உணர்ச்சி எம்மிடையே எழவேண்டும். அவர்களுக்கு இருக்க வீடுவேண்டும். உண்ண உணவு வேண்டும், உடுக்க உடைவேண்டும், தொழில்செய்ய வசதி வேண்டும். கல்வி வேண்டும். மருத்துவ வசதி வேண்டும். விதவைகளுக்கும், அனாதைகளுக்கும், ஊணமுற்றோருக்கும் நீண்டகால பராமரிப்பும், உதவியும் வேண்டும். அரசியல் விவாதங்கள் இப்பிரச்சனைகளிற்கு தீர்வு ஏற்படுவதற்கு தடையாகவே இருக்கும்.

இப்பிரச்சனைகளைத் தீர்த்து, எமது மக்களையும், சமுதாயத்தையும் மீண்டும் கட்டியெழுப்பி, 21ஆவது நூற்றாண்டிற்கேற்ப, வளர்ச்சியுடன் நாம் ஓங்கி வாழ வைக்க வேண்டும். இதற்கு உதவிதேவை. கைகொடுக்கும் தெய்வங்கள் தேவை. எம் சமுதாயம், தகுதி வாய்ந்த, காலகட்டத்திற்கேற்ற தலைமையற்ற ஒன்றாக இன்று இயங்குகின்றது. சுயநலமற்ற, தீர்க்கதரிசனமுள்ள, அறிவுள்ள தலைமை தமிழர்களுக்கு, கிட்டத்தட்ட 75-80 வருடகாலமாக இருந்ததில்லை. இதுவே, தமிழர்களிடையே காணப்படும் பெருந் தட்டுப்பாடு. ஓர் நல்ல தலைமை தோன்றுவதற்கு, ஏற்றகாலமிது. மக்களிடையே நல்ல தலைமைக்கான தாகமிருக்கின்றது. நல்ல தலைமைக்கான தேவையிருக்கின்றது. இம்மக்களிற்கு உதவிசெய்து பாடு படுபவர்களிடமிருந்துதான் இத்தலைமை வரவேண்டும். வரும்

இலங்கையரசை எதிர்ப்பதனாலோ, குறைகூறுவதனாலோ நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. இவ் எதிர்ப்பரசியல் தோற்றுவிட்டது. இலங்கையருசுடன், நட்புடனும், சமயோசிதத்துடனும், இணைந்து செயற்படுவதன் மூலமே எம்மை எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளை நாம் தீர்க்கமுடியும். எமக்கு இலங்கையரசின் ஒத்துளைப்பும், ஆதரவும், நம்பிக்கையும் இப்போது தேவை. அதே நேரத்தில் சிங்கள முஸ்லிம் சமூகங்களின் கனிவும், பரோபகாரமும், ஆதரவும் எமக்குத்தேவை. இவற்றை பெறுவதற்கு நாம் அரசாங்கத்தினதும், இச்சமூகங்களினதும் நமபிக்கைக்கு பாத்திரமாகவேண்டும். நம் கையே நமக்கு உதவி, என்ற அடிப்படை உன்மையையும் ஏற்கவேண்டும். ஆகவே தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், எம்மக்களுக்குதவ முன்வர வேண்டும். இவ்வுதவி, இண்றைக்கு நாளைக்கு மட்டுமல்ல, இன்னும் பத்து வருடங்களுக்காவது தேவைப்படும்.

இன்று வட- கிழக்கில் வாழும் மக்கள் மிக நலிந்து, பொருளாதார பலமற்ற, சமுதாய அமைப்புக்கள் அழிக்கப்பட்ட, கல்விகலாச்சார முறைமைகள் சீரழிந்த சூழலில் வாழ்கின்றனர். தீர்க்க தரிசனமிழந்த ஒரு உரிமைப்போராட்டத்தால், உள்ளதையும் இழந்து பரிதவிக்கின்றனர். சீர்கெட்டு, நாதியிழந்து, தவிர்க்கும் இச்சமுதாயத்தை எவ்வாறு உயிர்பெறச்செய்வது என்பது இன்னொரு பாரிய போராட்டமே. தமிழராய் வாழ்வதற்குமுன், எம்மக்கள், மனிதராய் வாழவேண்டும். மனிதராய் வாழ்வதற்கு அவர்களது அடிப்படைத் தேவைகள் கவனிக்கப்படவெண்டும். மனிதர் என்ற உணர்ச்சியுடனும், பெருமையுடனும் வாழ்வதற்கு, அவர்களுக்கு உழைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவெண்டும். விவசாயம், கால்நடைவழர்ப்பு, கைத்தொழில், மீன்பிடித்தல், போன்றவை மீண்டும் நன்றாய் இயங்கவேண்டும். தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும். தொழிற் பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்படவேண்டும். பணமுதலீடுகளை செய்யப்படவேண்டும். இன்னும் எத்தனையோ செய்யப்படவேண்டிய தேவையும், சந்தர்ப்பங்களுமுள்ளன. இதில் பங்கெடுப்பது ஒவ்வொரு வசதியுடைய, மனிதாபமுடைய தமிழனினதும் கடமை. இதை எக்காரணம்கொண்டும் நாம் உதற முடியாது.

இலங்கை அரசின் அணுசரனையுடனும், திரு.குமரன் பத்மநாதனின் ஈடுபாட்டின் ஊடாகவும் உறவுகளின் புனர்வாழ்வு புனரமைப்பு திட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள (NERDO) இக்காலகட்டத்தின் தேவை.  இவ்வமைப்புக்கு கொடுக்கப்படும் நன்கொடைகள், இலங்கை அரசை சென்றடைகின்றன என்கின்ற தேவையற்ற புலம்பல்களை நம்பவேண்டாம்.  இது நான் எதிர்பார்க்கும் படி இயங்கினால், வட -  ிழக்கு வாழ் மக்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும். அரசாங்கத்தின் ஆதரவிற்கும், நம்பிக்கைக்கும்,மேற்பார்வைக்கும் இது உட்பட்டிருப்பது இன்றுள்ள சூழ்நிலையில், இவ்வமைப்பிற்கு ஒரு நல்ல அத்திவாரமாக அமையும். யுத்தம் முடிந்து ஓராண்டு ஆனாலும், ஆறாப் புண்களும், நீறு பூத்த நெருப்பாக இன்னும் இருக்கும் கோபதாபங்களும், அவநம்பிக்கைகளும் பழைய நிகழ்வுகளை நினைவுறுத்தும் வடுக்களும், இவ்வமைப்பின் இயக்கத்துக்கு தடையாக இருக்கக்கூடாது. இவ்வமைப்பு இன்றைய தேவை. இவ்வமைப்பு இலங்கை அரசாங்கத்தின் உத்தேசங்களையும், தமிழ் மக்களின் ஊக்கசமயோசிதங்களையும் பரிசோதிக்கும் ஓர் கூடமாக அமையப்பொகின்றது. உங்கள் யாவரினதும் பல்வகையான பங்களிப்பு இப்போது இவ்வமைப்பிற்கு தேவைப்படுகின்றது.

பாரதி கேட்டதுபோல்,

‘‘ ிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் !

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர !

அதுவுமற்றவர் வாய்ச்சொல்லருளீர !

ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் . . . ‘‘

மற்றயோர் தடையாக இராதீர் (எனது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com