Contact us at: sooddram@gmail.com

 

இன்று சர்வதேச விளையாட்டு தினம்

இளைஞரை வளப்படுத்தும் கல்வியுடன் இயைந்த விளையாட்டு

விளையாட்டு என்பது வெறுமனே ஓடியாடிப் பொழுதைக் கழிக்கும் ஒரு நிகழ்வாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், அது இன்று மனித வாழ்வில் பெறுமதிமிக்கதான ஒரு இடத்தை பிடித்துள்ள நிலையில் அதனை சர்வதேசமே இன்று கொண்டாடும் அளவுக்கு மதிப்பும் மாண்பும் தங்கியுள்ளது என்றால் பாருங்களேன். விளையாட்டு உடல் உள ரீதியான ஆரோக்கியமுடைய சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்குரிய சகல பண்புகளையும் உள்ளடக்கியுள்ளதாகவே அறிஞர்களும், ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.

அந்த வகையில் ஆரம்ப நிலையிலிருந்தே கல்வியை விளையாட்டின் மூலமாக வழங்குவதற்கு உலக அரசுகள் கங்கணம் கட்டியுள்ள நிலையில் நமது நாட்டிலும் விளையாட்டும் அதனூடான கலைத் திட்ட வடிவங்களும் அங்கீகரிக்கப்பட்டு விளையாட்டின் கெளரவம் பேணப்பட்டு வருகின்றமையைக் காணலாம்.

உலக அரங்கில் மிகப் பெரியதோர் விளையாட்டாக இன்று கருதப்படு கின்ற ஒரு நிகழ்வுதான் ஒலிம்பிக் ஆகும். 1896 ஆம் ஆண் டுக்கு முன்னரும் இது இருந்து வந் தாலும் நவீன ஒலிம்பிக்கின் ஆரம்பம் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரிலிருந்து ஆரம்பமாகின்றது. அந்த வகையில் சர்வதேச ஒலிம்பிக் குழு 1894 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை ஒலிம்பிக்கை நடத்தும் பலம்வாய்ந்த குழுவாக காணப்படுகி ன்றது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டவரானபியரே கூபார்ட்என்பாரின் பெரு முயற்சியின் காரணமாக நவீன முறையில் தோற்றம் பெற்று நான்கு ஆண்டுகளுக்கொரு முறை உலகின் அனைத்து நாடுகளை யும் ஒன்று சேர்த்து பல்வேறு விளை யாட்டுக்களையும் உள்ளடக்கியதாக நடைபெற்று வருகின்ற இவ்வொலிம் பிக்கானது நூற்றாண்டுகளையும் கடந்துள்ளது என்றால் அதன் பெறுமானம் பெறுமதி எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம்.

நமது நாட்டின் விளையாட்டு மங்கை என வர்ணிக்கப்படுகின்ற சுசந்திகா ஜெயசிங்க கடந்த 2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றபோது வெண்கலம் பெற்றமையானது நமது நாட்டு மக்களை துள்ளிக்குதிக்க வைத்து தங்கமங்கையை பாராட்டியமை நாடறிந்த விடயம். அதற்கு முன்ன ராகவும் 1948 ஆம் ஆண்டில் இலண்டன் ஒலிம்பிக் போட்டியில்டங்கன் வைற்என்பவர் வெள்ளிப் பதக்கத் தையும் வென்றிருந்தார். இருந்தாலும் நூற்றாண்டு கண்டுவிட்ட ஒலிம்பிக் போட்டிகள் எவ்வளவு தூரம் வலுவானவை என்பதையே இவைகள் காட்டுகின்றன.

இன்று ஒலிம்பிக்கை நோக்கியதா கவே நாடுகள் தமது விளையாட்டுக் களை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை சர்வதேச ரீதியில் இன்று பிரபல்யம் பெற்றுள்ள விளை யாட்டாக கிரக்கெட் எனப்படுகின்ற திறந்தவெளி விளையாட்டு கரு தப்படுகின்றது. இவ்விளையாட்டுக் களை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமே நடத்தி வருகின்றது. அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றமை குறிப் பிடத்தக்கதாகும்

அதேபோன்றதொரு விளையாட்டாக கருதப்படுகின்ற மிகவும் பிரபல்யமான விளையாட்டு கால்பந்தாட்டம் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாக நடைபெறும் இவ் விளையாட்டினை பியிபிதி எனப்படுகின்ற சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனமே நடத்தி வருகின்றது.

இவ்வாறு கருதப்படுகின்ற விளை யாட்டுக்கள் சர்வதேச தரத்தில் போட் டியாளர்களைத் தயார் செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை அரச சார்புடன் நாடுகள் வீரர்களை தயார்படுத்தி வருகின்றன. இன்று எந்த விளையாட் டாக இருந்தாலும் அது கல்வியோடு சம்பந்தப்பட்டதாகவே காணப்படுகின் றது. ஆரம்பக் கல்வி பயிலும் ஒரு மாணவன் தனது திறமையை பாட ங்களிலும், விளையாட்டுக்களிலும் காட்டுவதை காண்கின்றோம்.

அவனது திறமையை மேம்படுத்துவதற்காக பாடசாலைகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஊடாக மேலும் மேலும் பெரும் ஊக்கல்கள் வழங்கப்பட்டு பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், மாவட்டம் மற்றும் மாகாண மட்டம் என்றும் இறுதியில் தேசிய மட்டம் என் றெல்லாம் மாணவர்களின் திறமை பரிசோதிக்கப்படுகிறது. மிகவும் உயர்வான மட்டத்தில் இருப்பவர் களை சர்வதேச மட்டங்களில் நடத்தப்படுகின்ற போட்டிகளில் கலந்துகொள்வதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப் பிடத்தக்கதாகும்.

வெற்றியும் தோல்வியும் வீரனுக் கழகுஎன்பார்கள். ஆதலால்தான் ஆரம்பப் பிரிவு வகுப்புக்களிலிருந்தே இதனை விளையாட்டுடனான கற்றலை மேம்படுத்துவது பொருத்தமா கும் என்பது அறிஞர்களினது கூற்றாகும்.

பொதுவாகவே ஆரம்பப் பிரிவு மாணவர்களது பருவமானது பிள்ளை விருத்தியின் தீர்க்கமான ஒரு பருவம் என்றும், எதிர்காலத்தில் வெற்றிகரமான ஒரு பிரஜையாகச் செயற்படுவதற் குரித்தான பல்வேறு ஆற்றல்களை உருவாக்கம்பெற இசைவடையும் பருவமாகும். அதற்காக வேண்டியே பிள்ளைகளின் வளர்ச்சிக்கு சாதகமான அல்லது தூண்டுகோலாக அமையக் கூடிய சூழலை ஒதுக்கி அதன் மூல மாக அவர்களது சூழலுடன் தொடர் புறுகின்ற அனுபவங்களையும், மகிழ்வையும் ஏற்படுத்த வேண்டிய பாரிய கடமைப்பாடு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் உள்ளது. அப்போதுதான் அவர்களது விருத்தியின் உச்ச நிலையை அடைவதற்குத் தூண்டுகோலாக அமைகிறது.

அந்த வகையில் அமைந்துள்ள ஆரம்பப் பருவப் பிள்ளைகளுக்கான உடலாரோக்கிய வேலைத்திட்டத்தின் ஊடாக 2020 ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற ஒரு பிரஜை உள, உடல் ரீதியாக ஆரோக்கியமானவ னாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே 2007 ஆண்டில் இத்திட்டம் பணி செய்து வருகின்றது. உளம், உடல் ஆரோக்கியமாக இரு க்கின்றபோதுதான் சமுதாயமும் ஆரோக்கியமுடையதாய் காணப்படும். ஆதலால்தான் இன்றைய கலைத்திட் டத்தில் ஆரம்ப பிரிவுகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

தேசத்தின் உற்பத்தியில் தோள் கொடுக்கக்கூடிய உளச் சமநிலையைக் கொண்ட, சிறந்த உடல் நலத்தையுடைய ஒரு சந்ததிக்குத் தேவையான அடிப் படை அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும்.

பொதுவாகவே பாடசாலைகளில் கலைத் திட்டத்துடன் இணைந்ததாக பல்வேறு செயற்பாடுகள் காணப்படு கின்றன. அது அவர்களது கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு உதவியாக அமைகின்றது. அந்த வகையில் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளே முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.

பல்வேறுபட்ட இணைந்த கலைத் திட்டங்கள் காணப்பட்டாலும் விளையாட்டுடன் கலந்த சாரணியம், கடேட் போன்றவைகளுடன் ஏனைய துறை சார்ந்த நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றன. இவை இரு ந்திட்ட போதிலும் விளையாட்டுக்கள் அங்கே களைகட்டவில்லையாயின் பாடசாலையும் சோபையிழந்து காணப்படுகின்ற ஒரு நிலைமையையும் காணலாம். அந்த வகையில் மாணவர் களது உடல், உள விருத்தியை ஊக்கு விக்கும் வண்ணம் போட்டிகள் நடா த்தப்படுவதன் ஊடாக மாணவர்களின தும் வளர்ச்சியில் அதிக பலனை அடைய முடியும் என்பதே ஆய்வா ளர்களது கருத்துமாகும்.

அந்த வகையில் நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கான தேசிய கல்வி முறைக்கான இலக்குகளில் காணப் படுகின்ற தேசிய குறிக்கோளில் இவ்வாறு கூறப்படுகின்றது, அதாவதுஒருவரது உள, உடல் நலனையும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளிப் பதை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தையும் மேம்படுத்தல்என்று கூறப்பட்டுள்ளதன்படி பார்க்கிற போது விளையாட்டு போன்ற செயற்பாடுகள் ஒருவரது நலனில் அதிக அக்கறை செலுத்துகின்றமை முக் கியமாகும். அப்போதுதான் அவனது எதிர்கால வாழ்வும் நிலையானதாய் அமைகிறது.

மேலும், கல்வியினூடாக விருத்தி செய்யப்படுகின்ற அடிப்படையான தேர்ச்சிகளில் மேற்குறித்த இலக்கினை அடைந்துகொள்வதற்காகஓய்வு நேரத்தைப் பயன்படுத்துதல், விளை யாட்டு பற்றிய தேர்ச்சிகள் மேற் கொள்ளப்படல் வேண்டும்என்று கூறப்படுகின்றது. அதாவதுஅழகியற் கலைகள், இலக்கியம், விளையாட்டு, மெய்வல்லுநர் போட்டிகள், ஓய்வுநேரப் பொழுது போக்குகள் மற்றும் வாழ்வின் ஆக்கபூர்வமான செயற் பாடுகள் மூலம் வெளிப்படுத்தப்படும் இன்ப நுகர்ச்சி, மகிழ்ச்சி, மன வெழுச்சிகள் இவை போன்ற மனித அனுபவங்கள்மூலமாக இத்தேர்ச்சிகள் மேற்கொள்ளப்படுவது சாலச் சிறந்தது என்பதைக் கல்வியியலாளர்கள் வகுத்துள்ளனர். எனவே விளையாட்டின் பெருமையை உலகம் போற்றுகின்ற ஒரு நிலைமைக்கு ஆரம்பக் கல்வியின் ஊடான செயற்பாடுகள் வித்திடுகின்றன என்றே கூறலாம்.

எனவேதான் இன்றைய காலத்தில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு கல்வியும் ஒரு சாதகமாக அமைகின்றது. சிறப்பான கல்வியின் ஊடாக சிறந்த முறையில் தனக்குரித்தான விளை யாட்டுக்களில் பிரகாசிப்பதற்கு கல்வி உதவி நிற்கின்றது.

உலகில் ஆக் ரோஷங்களும், பிரச்சினைகளும் ஏற்பட்டாலும் விளையாட்டு சமாதா னத்தையும், மன அமைதியையும் ஏற்படுத்திவிடுகிறது என்றாலும் சர்வதேச ரீதியாக நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளின் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்ற ஒரு பொதுவான பார்வை காணப் படுகின்றது. அந்த நிலைமையில் இருந்து விடுபடுவதை உண்மையான விளையாட்டுக்குரிய தகுதியாகக் கூடக் கொள்ளலாம்.

இன்றைய சர்வதேச விளையாட்டு தினத்தில் விளையாட்டுக்களின் மேன் மையை ஊக்குவிக்கும் அதேநேரத்தில் கல்வியின் ஊடாக அந்த விளை யாட்டை ஒழுங்கு படுத்துகின்ற போது சமநிலை, ஆளுமையுள்ள மனிதனாக மாறுவதற்குரிய பண்புகளை கல்வியும், விளையாட்டும் அவனுக்கு போதித்து நிற்கின்ற ஒரு நிலைமையும் காணலாம். சர்வதேச ரீதியில் நாட் டுக்குப் புகழைத் தேடிக் கொடுத்துள்ளமுத்தையா முரளிதரன், சுசந்திகா ஜெயசிங்க, லாபீர்போன்ற பலரை நாம் மறக்கக்கூடாது. என்றும் அவர் களது நாமம் எமது நாட்டின் புகழை ஓங்கச் செய்துகொண்டே இருக்கும்.

அதேவேளை இன்னும் பலரும் உழைத்துள்ளனர். உழைத்தும் வரு கின்றனர். அவர்களையும் ஊக்கப்படுத் துவது நமது கடமையாகும். எதிர்கால நலமுடைய சமாதான சுகவாழ்வை விரும்புகின்ற மக்களை உருவாக்குகின்ற கல்வியையும் விளையாட்டையும் பெறுவதற்கான முயற்சிகளில் உரியவர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதிலிருந்து விடுபட்டு, உண்மையான ஜனநாயகத் தன்மை நிறைந்த பரஸ்பர ஒன்றுமை மிக்கதான செயற்பாடுகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் சிறப்பான எதிர்கால நற் பிரஜைகளை உருவாக்கலாம் என்பதே இன்றைய யதார்த்த உலகின் தேவை யாக காணப்படுகிறது.

(எஸ். எல். மன்சூர் (கல்விமாணி), அட்டாளைச்சேனை.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com