Contact us at: sooddram@gmail.com

 

ஜெயலலிதா என்கிற ஆச்சரியக்குறி!

(புருஜோத்தமன்)

ஜெயலலிதா என்ற பெயரைக் கேட்டவுடனேயே எனக்கு ஞாபகம் வருவது குங்குமம்- செம்மஞ்சம்- சிவப்பு போன்ற கண்ணைக்குத்துகின்ற நிறத்திலான ஆடைகளில் எம்.ஜி.ஆருடன் ஆடிப்பாடும் காதல் பாடல்கள். அதுவும், கேபிள் தொலைக்காட்சிகளின் வரவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா, சிவாஜி- சரோஜாதேவி பாடல்கள் இல்லாமல் இரவு நேரங்கள் அநேகருக்கு போவதேயில்லை. சில பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

பெண்கள் என்றாலே நளினமானவர்கள்- மென்மையானவர்கள் என்கிற மேம்போக்கான பார்வையை ஆணாதிக்க சமூகம் வேண்டுமென்றே திணித்து வந்திருக்கிறது. அதுவும், அவர்களுக்கான உரிமையை எந்தக்காலத்திலும் வழங்குவதை தவிர்த்து வந்திருக்கிறது. ஆனால், உண்மையிலேயே பெண்களிடமிருக்கிற துணிச்சலும், வேகமும் பல தருணங்களில் ஆண்களிடம் இருப்பதில்லை.

சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்திரா காந்தி, மார்க்கிரட் தட்சர் என்கிற பெயர்களைக் கேட்டாலே பலருக்கு பிரமிப்பே மிஞ்சி நிற்கிறது. அதுவும், இவர்களின் அதிரடியான முடிவுகள் சில தருணங்களில் பயங்கரமானது. சிறிமாவின் ஆட்சிக்கால இலங்கையை சிறிமாவே பிற்காலத்தில் விரும்பியிருக்கமாட்டார். அதுபோல, இந்திரா காந்தியின் அசட்டுத்துணிச்சலும், இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி என்று அழைக்குமளவுக்கு பெயரெடுத்த மார்க்கிரட் தட்சரும் மறக்கப்பட முடியாதவர்கள்.

அதுபோல, நடிகையாகவிருந்து தமிழக அரசியலில் மறக்கமுடியாதளவுக்கு வளர்ந்த ஜெயலலிதாவும் துணிச்சலான பெண்தான்.மறக்கமுடியாத' என்ற சொல்லுக்குள் அவரின் ஆரம்ப கால திரைப்பட வாழ்க்கை, எம்.ஜி.ஆருடனான நெருக்கம், சவால்களை முறியடித்து முதல்வரானமை, முதல்வராகி செய்த ஆடம்பரங்களும்-ஊழல்களும், சட்டசபைக்குள் அவர் தி.மு.க.வினால் அசிங்கப்படுத்தப்பட்டது, கலைஞரை நடுராத்தியில் குண்டுக்கட்டாக கைது செய்தது, விடுதலைப் புலிகளை கடைசி வரை எதிர்த்தது, ஒரேயிரவில் இலட்சக்கணக்கான ஏழைத்தொழிலாளர்களின் தொழிலைப் பறித்தது. போரென்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்' என்ற தத்துவத்தை சொன்னது. இப்படி பலதும் இருக்கின்றன.

அண்மைய நாட்களில் ஜெயலலிதாவின் ஈழ அக்கறைய(?) ஆதரித்தும், எதிர்த்தும் பல பதிவுகள் வந்திருக்கின்றன. அது, பலரது எண்ணங்களைச் சொன்னது. ஜெயலலிதாவின் ஈழத்தமிழர்களின் மீதான அக்கறையை நான், 1994களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கவின் தமிழர்கள் மீதான அக்கறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இதுபலருக்கு பிழையாகக் கூட படலாம். ஆனாலும், அவர்களின் மனநிலையில் அப்படியொரு ஒற்றுமையிருப்பதாகவே எனக்குப்படுகிறது.

1990களின் ஆரம்பத்தில் இலங்கையின் சமாதான தேவதையாக வலம் வந்தவர் சந்திரிகா குமரதுங்க. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன மக்கள் முன்னணியை ஆட்சியைப்பிடிக்க வைத்தவர். ஜனாதிபதியானவர். சிங்கள மக்களின் ஆதரவு மட்டுமல்ல தமிழ்- முஸ்லிம் மக்களின் குறிப்பிட்டளவான ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்தவர்.

ஆனாலும், அதற்குப் பின்னராக வரலாறுகள் தமிழர்களுக்கு பல படிப்பினைகளைக் கொடுத்தது. 1994களில் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தின் மீதான இராணுவ படையெடுப்பும், அதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்- யுவதிகளின் காணாமல் போனமையும் குறிப்பிடக்கூடியன. (தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவு முள்ளிவாய்க்காலுக்குள் எழுதப்படுவதற்கான முதலாவது அத்தியாயம் 1994ஆம் ஆண்டு சமதானப் பேச்சுக்களின் போது எழுதப்பட்டது.)

யாருக்கும் வளைந்து கொடுக்காத மனநிலையுடனேயே சந்திரிகா தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதும் செயற்பட்டார். லஷ்மன் கதிர்காமரை இலண்டனிலிருந்து அழைத்துவந்து வெளிநாட்டு அமைச்சராக்கியதன் மூலம் சர்வதேச ரீதியிலும் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பெருமையை சந்திரிகா கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில் மக்கள் மீதான வன்முறையும்- தாக்குதல்களும்கூட குறைவின்றி நடைபெற்றன. ஆனாலும், அவரின் அண்மைக்கால மனநிலை மாற்றங்கள் சிந்திக்க வைப்பதற்குப் பதில் சிரிக்க வைக்கின்றன. அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், தமிழர்கள் மீதான பழைய பாசம் பற்றிக் கொண்டிருக்கிறது.

அதுபோலவே, ராஜிவ் காந்தியின் கொலையுடன் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக முடிவுகளை எந்தவித சமரசமுமின்றி எடுத்து வந்தவர் ஜெயலலிதா.முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம் வரை' ஈழத் தமிழர்களின் மீது அக்கறையின்றியிருந்த ஜெயலலிதாவுக்கு எப்படி, 2009 மே 19க்குப் பின்னர் அப்படியொரு பாசமும்- அக்கறையும் ஒட்டிக்கொண்டது. விடுதலைப் புலிகளை அவர் எதிர்த்தமை தொடர்பில் எனக்கு பெரிய கருத்துக்கள் எதுவுமில்லை. ஆனால், ஈழத்தமிழர்களை ஜெயலலிதா ஓரக்கண்ணால்கூட பார்க்கத் தயாராக இருக்கவில்லை. அது என்றைக்குமே உறுத்தலான விடயம்.

அப்படியிருந்த ஜெயலலிதாவின் மனநிலை மாற்றத்துக்கு யார் காரணம்?. அதன் பின்னணி என்ன? என்றெல்லாம் பல ஈழத்தமிழர்கள் அதுவும் புலம்பெயர் சமூகம் யோசிப்பதேயில்லை. ஏனெனில், அவர்களுக்கு தங்களை நட்டாற்றில் விட்டவர்களை ஏதாவது ரூபத்தில் சீண்டிப்பார்க்க வேண்டும். அதுவும், உடனடியாக நடந்துவிட வேண்டும். அதற்காக தங்களின் மீது அளவுகடந்த அக்கிரமங்களை செய்தவர்களைக்கூட மறந்து மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள். சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரித்தது முதல், அண்மைக்கால சந்திரிகாவை கொண்டாடுவது வரை அது தொடர்கிறது.

அதுபோலதான், இறுதி மோதல்களின் போது தமிழக முதல்வர் கலைஞர் அதனை நிறுத்துவதற்கு ஒன்றுமே செய்யாமல் தங்களை தோற்கடித்துவிட்டார். எனவே, கலைஞரின் தோல்வியைக் கொண்டாடுவோம். அத்துடன், கலைஞர் மீதான கோபம் கலைந்து விட்டது. அதுபோல, கலைஞரைத் தோற்கடிக்க ஜெயலலிதாவால் முடிந்தது. அதனால், ஒருநாளில் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்கள் பலரும் கொண்டாடத் தயாரானார்கள்.

இந்தக் கொண்டாட்ட மனநிலையை உணர்ந்து கொண்ட ஜெயலலிதாவும் ஈழத்தமிழர்கள் மீதான திடீர் பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறார். மஹிந்த சகோதரர்களுக்கு எதிராக செயற்படுவதுபோல காட்டிக்கொள்கிறார். அறிக்கை விடுகிறார். பொருளாதாரத் தடையை விதிக்க கோருகிறார். இதன்மூலம், தமிழக மக்களின் ஆதரவை தக்க வைக்க முடியும் என்று நம்புகிறார். அதுவே, தொடர்கிறது.

ஈழத்தமிழர்களில் அநேகர் அற்ப சலுகைகளுக்காக துணைபோனவர்கள் இல்லைத்தான். ஆனாலும், போலி வார்த்தைகளை நம்பி மோசம் போனவர்கள் என்பதை மறுக்கவே முடியாது. ஏனெனில்,ச அதற்கு நூற்றாண்டுகளைத் தாண்டிய வரலாறு எங்களிடத்தில் உண்டு. ஆகவே, மீண்டுமொரு முறை பாசாங்கு வார்த்தைகளை நம்பி நட்டாற்றில் நிற்க தயாராகிறார்கள்.

தனிப்பட்ட ரீதியில் ஜெயலலிதா ஜெயராமின் துணிச்சல் எனக்கு என்றைக்குமே பிடித்தமானது. ஆனால், ஈழத்தமிழர்களின் மீதான திடீர் பாசத்தை என்னால் நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஜெயலலிதா என்றைக்குமே எனக்கு ஆச்சரியக்குறியாகவே இருக்கிறார்!!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com