Contact us at: sooddram@gmail.com

 

முல்லா முஹமது ஓமர்

மரணத்தைப் பலியிடல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மரணம் எப்போதும் ஒரு துன்பியல் நிகழ்வு தான். ஆனால், மரணத்தைப் பலியிடுவது கேவலமானது. சர்வதேச அரங்கில் மரணத்தைப் பலியிடுவது புதிதல்ல. ஆனால், அவ்வாறு ஏன் நிகழ்கிறது அல்லது நிகழ்த்தப்படுகிறது என்பது பல சமயங்களிற் புதிரானது. அவ்வகையிலேயே அண்மையில் அறிவிக்கப்பட்ட தலிபான்களின் தலைவர் முல்லா முஹமது ஓமரின் மரணத்தைக் காணவேண்டியிருக்கிறது. கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அரசு முல்லா ஓமர் இறந்துவிட்டாரென அறிவித்தது. ஆப்கானிஸ்தானும் தலிபான்களும் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள நிலையில், குறிப்பாக அடுத்த சுற்றுப் பேச்சுக்கட்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இச் செய்தியை ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

முல்லா ஓமரின் மரணத்தை அறிவித்த ஆப்கான் அரசு, அவர் இரண்டு ஆண்டுகள் முன்பே இறந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் முன்பே இறந்த ஒருவரின் மரணத்தை ஆப்கான் அரசு இப்போது அறிவிப்பது ஏன் என்பது முதலாவது கேள்வி. அதைவிட, கடந்த மாதம் ஆப்கான்-தலிபான் பேச்சுக்களை ஆதரிப்பதாக முல்லா ஓமர் தனது ரமழான் வாழ்த்துச் செய்தியிற் குறிப்பிட்டதாகச் சொல்லிய தகவலின் வாய்மை என்ன? அச் செய்திதானே பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்த உதவியது. இந்நிலையில் இம் மரணச் செய்தியானது பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என ஆப்கான் அரசு அறியாதா? எனின், இது ஏன் நிகழ்ந்தது?

முல்லா ஓமர், இப்போது இறந்தாரா அல்லது எங்களுக்குச் சொல்லப்படுவது போல இரண்டாண்டுகள் முன்னர் பாகிஸ்தானின் கராச்சி நகர வைத்தியசாலையிற் காலமானரா என்பதல்ல பிரச்சினை. மரணங்கள் இயற்கையானவை. ஆனால், இந்த மரணத்தை இப்போது பலியிடும் காரணங்கள் முக்கியமானவை. ஒசாமா பின் லேடனின் மரணம் கொண்டாடப்பட்ட மரணம். முல்லா ஓமரது பலியிடப்பட்ட மரணம்.

இஸ்லாமிய போராட்ட இயக்கங்களில் அல் கைடாவை அடுத்து மிக அறியப்பட்ட இயக்கமாகத் தலிபான் உள்ளது. அவ் வரிசையில் அண்மைய புதிய வரவு ஐ.எஸ்.ஐ.எஸ். 2001இல் அமெரிக்க வர்த்தக மையக் கட்டடத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக தலிபான்களுக்கெதிராக அமெரிக்கா தொடுத்த போர், தலிபான்களை உலகறியச் செய்தது. அதனால், வெளித் தோற்றத்துக்கு, ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்குக் காரணமெனப் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், தலிபான்களின் கதை வேறு.

தலிபான்களின் தோற்றம் அமெரிக்க-சோவியத் கெடுபிடிப் போரின் விளைவுகளில் ஒன்று. கெடுபிடிப் போர் நிலவிய காலத்தில், 1979இல் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தன் அரசியல் இராணுவச் செல்வாக்கை நிலைநிறுத்த முற்பட்டது. அதன் போக்கில் ஏற்பட்ட வெகுசன எதிர்ப்பின் பின்னணியில் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்து, அங்கிருந்த சோவியத் சார்பான ஆட்சியைக் கவிழ்த்துத் தனக்கு உவப்பான இன்னொரு ஆட்சியை நிறுவியது. இப் பின்னணியில் ஏலவே அங்கு ஊடுருவியிருந்த அமெரிக்கா, சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து சோவியத் யூனியனை அங்கிருந்து விரட்டும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது. 1989இல் சோவியத் யூனியன் அவமானமான தோல்வியுடன் வெளியேறும் வரை அமெரிக்க முயற்சிகள் ஓயவில்லை.

ஆப்கானிஸ்தானை நாத்திகர்களும் சாத்தானின் சீடர்களுமான கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாக பிரசாரத்தை மேற்கொண்ட அமெரிக்கா, அவர்களை விரட்டும் புனிதப் போரைத் தொடங்குமாறு இஸ்லாமிய மதவாதிகளை அணிதிரட்டியது. இன்று, அமெரிக்காவை எதிர்த்துப் புனிதப் போர் நடத்தும் பயங்கரவாதிகள் எல்லோரும் இப்படித்தான் உருவாகினர். முஜாகிதீன்களுக்கான ஆயுத உதவி முதல் பணம் வரை அனைத்தும் அமெரிக்காவிலிருந்து வந்தன. மதத்தைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாமிய நாடுகளிலிருந்து போராளிகள் இறக்குமதியாயினர். பின்னாளில் அல் கைய்தாவை ஆரம்பித்த ஒசாமா பின் லேடன், இவ்வாறே சவூதி அரேபியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தார்.

இதற்கான மையமாகப் பாகிஸ்தான் பயன்பட்டது. பாகிஸ்தானின் சகல மாநிலங்களிலும் அமெரிக்க நிதி உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் நிறுவப்பட்டன. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாஹிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் ஆணைக்கேற்ப இந்த வேலைகளை ஒருங்கிணைத்தது. இந்த அடியாள் வேலைக்காகவே பாகிஸ்தானிய இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழு மனதுடன் ஆதரித்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் விலகியதும் அமெரிக்க ஆசியுடன் தலிபான்கள் களத்தில் இறங்கினர். இத்தகைய முட்டாள் மதவாதிகள், ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருப்பது தனக்குப் பலவிதங்களில் உதவுமென எதிர்பார்த்தே தலிபான்களை அமெரிக்கா ஆதரித்தது.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆண்டார்கள். அவர்களின் தலைவராக முல்லா ஓமர் இருந்தார். உலக நாடுகள், தலிபான் ஆட்சியை அங்கிகரியாத போதும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கிகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுக்களுக்காகத் தலிபான் பிரதிநிதிகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றன.

ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தவரை அமெரிக்கா உருவாக்கி வளர்த்த இஸ்லாமிய மதவாதம், அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிவந்தது. சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இருவரும் தத்தமது நலன் கருதிப்; பிரியும் சூழ்நிலை வந்தது. முதல் வளைகுடாப் போரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் முஸ்லிம்களுக்குச் சினமூட்டின. இப் பின்னணியிலேயே பின் லேடனின் அல் கைய்தா, தனது முன்னாள் எஜமானை எதிரியாக அறிவித்தது. தலிபான்கள் அதற்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.

கடந்த 14 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் வெல்லமுடியாத ஒரு போரிற் சிக்கியுள்ள அமெரிக்கா, அங்கிருந்து மெதுமெதுவாக நழுவ வேண்டுகிறது. அதன்படியே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா- இரண்டாண்டுகள் முன்பு படைக் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்தார். இவ்விடத்துக், 'கடைசிப் பயங்கரவாதி அழிக்கப்படும் வரை பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் தொடரும்' எனும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் சூளுரை நினைவுகூரத் தக்கது. அவமானமான வெளியேற்றத்தைக் கௌரவத்துடன் நிகழ்த்த அமெரிக்கா விரும்புகிறது. வெளித் தோற்றத்துக்கு 'அமெரிக்கா என்றும் பயங்கரவாதிகளுடன் பேசாது' என்று வீராப்புப் பேசினாலும், தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது. அதன் தொடர்ச்சியே தற்போது ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் நிகழும் பேச்சுவார்த்தைகளாம். அதற்கு வாய்ப்பாக, குவான்டனாமோவில் தான் சிறைவைத்திருந்த ஐந்து தலிபான் தலைவர்களை அமெரிக்கா ஆரவாரமின்றி விடுவித்துள்ளது. அவர்களுக்கான வசதிகளைக் கட்டார் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே முல்லா ஓமரின் மரணத்தை ஆப்கான் அரசு அறிவிக்கிறது. அதை உறுதிப்படுத்திய தலிபான்கள் புதிய தலைவராகத் தமது இரண்டாம் நிலைத் தலைவராயிருந்த முல்லா மன்சூரைத் தலைவராக அறிவித்த நிலையிற், பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன. ஆப்கான் அரசு இரண்டாண்டுகளுக்கு முன்பே முல்லா ஓமர் இறந்துவிட்டார் என்ற செய்தியை வெளியிட்டது. இரண்டாண்டுகட்கு முன் இறந்தவரைப் பற்றிய தகவலைப் பேச்சுவார்த்தைகட்கு இரண்டு நாட்கள் முன்பாக வெளியிடும் தேவை என்ன என்பது முக்கியமானது. இதை இருவிதமாக விளங்கலாம். முதலாவதாக, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை ஆப்கான் ஜனாதிபதி விரும்பவில்லை. அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் இப்போது ஆப்கானிஸ்தானின்; பல பகுதிகளைக் கட்டுப்பாட்டிற் கொண்டுள்ள தலிபான்களுக்கே சாதகமாகும்.

முடிவில் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் போக நேரும். எனவே, அவர் பேச்சுவார்த்தைகளைக் குழப்புவதன் மூலம் அமெரிக்கப் பிரசன்னத்தை தொடர முயல்கிறார். மாறாகத், தலைவரின் சாவை அறிவிப்பதன் மூலம் தலிபான்களிடையே குழப்பத்தை உருவாக்கிப் பேச்சுவார்த்தைகளில் வலுவான நிலையை எட்டும் முயற்சியாகவும் இதை நோக்கலாம்.

ஆப்கானிஸ்தான் மீதான உலகின் கவனம் உலக அமைதி பற்றியதல்ல. ஆப்கானிஸ்தான்- பூகோளரீதியான அமைவிடம் பற்றியது. கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கில் துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான், வடகிழக்கில் சீனாவின் ஷின்ஜியாங் மாநிலம் ஆகியவற்றை எல்லைகளாகக்; கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பின் லேடனைத் தேடி அமெரிக்க இராணுவம் படையெடுக்க முன்பே, மத்திய-ஆசிய நாடுகளின் இயற்கை வளங்களைக் - குறிப்பாக எண்ணெய், எரிவாயுவைத் தேடி அமெரிக்க நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன. 2000 மைல் நீண்டு அகன்ற ஸ்ற்றெப்பிஸ் புல்வெளிகளையும் பனிபடர்ந்த நெடிய மலைத் தொடர்களையும் கொண்ட மத்திய-ஆசிய நாடுகள் அனைத்திலும் இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. சோவியத் யூனியனின் உடைவு, புதிதாகத் தோன்றிய நாடுகளிடமிருந்தும் மத்திய-ஆசிய நாடுகளிலிருந்தும் எரிபொருள் வளங்களைக் குறைந்த விலைக்குப் பெறுவதை இயலுமாக்கியது. அதிற் சிக்கல் ஏதென்றால் எண்ணெயையும் எரிவாயுவையும் கொண்டு செல்லும் குழாய்களெல்லாம் ரஷ்யாவினூடாகவே செல்கின்றன. இதை அமெரிக்காவோ அமெரிக்க எண்ணெய்க் கம்பனிகளோ விரும்பா.

இதற்குத் பதிலீடாகக் கஸ்பியன் கடலுக்குக் குறுக்கே எண்ணெய்க் குழாய் அமைப்பதினும் தூரம் குறைந்த, அரைவாசிச் செலவு மட்டுமே கொள்ளக்கூடிய பாதை ஆப்கான் - பாகிஸ்தான்-அரபிக் கடல் எனும் குழாய்ப் பாதையாகும். அரபிக் கடலிலிருந்து இந்தியாவையும் பிற ஆசிய நாடுகளையும், வளைகுடாவையும் ஐரோப்பாவையும் எளிதாக அடைய முடியும். மேலும் பாகிஸ்தானின் பாலைவனப் பகுதிகளில் கணிசமான எரிவாயு உள்ளது. தெற்காசியா, சீனா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகள் என ஆசியா முழுவதையும் கட்டுப்படுத்தற்கு ஏற்ற இராணுவ முக்கியம் வாய்ந்த இடத்தில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளமை அதைக் குறிவைக்க இன்னொரு காரணமாகும்.

முல்லா ஓமரின் மரணத்தைப் பலியிடுகிற அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் இப்போதைய நவீன ஜிகாதிகளுடன் ஒப்பிடும் போது முல்லா ஓமர் மிதவாதி என்றும் அதீத வன்முறையை விரும்பாதவர் என்றும் எழுதுகின்றன. முல்லா ஓமர், ஆப்கானிஸ்தானில் மனிதஉரிமைகட்கெதிரான ஓர் ஆட்சியை நடத்தியபோதும் பாமியன் புத்தர் சிலைகளைச் சரித்தபோதும் அமெரிக்கா இரகசியமாக அபின் கொள்வனவு செய்ததை இங்கு நினைவு கூரலாம்.

இன்று அதிதீவிர இஸ்லாமியக் குழுக்களின் எழுச்சியால் அமெரிக்கா திக்குமுக்காடும் நிலையில் முல்லா ஓமரை மிதவாதியென்பதில் ஆச்சரியமில்லை. மறுபுறம் பின் லேடன் போல் அமெரிக்கக் கரங்களில் இறுதிவரை சிக்காது அமெரிக்கா வலைவீசித் தேடிய ஒருவரின் மரணத்தைப் பலியிடுவதுதான் அமெரிக்கா கொண்டாடக்கூடிய வெற்றி.

வாழ்க்கையைப் பலியிட முடியவில்லை, அ
தனால் மரணத்தைப் பலியிடுகிறார்கள். அவ்வளவே..!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com