Contact us at: sooddram@gmail.com

 

ஒரு நாளைக்கு 1500 ரூபா ...சாப்பாடு + இரவில் தண்ணி பார்டி: சுமந்திரனின் சுத்து

இலங்கையில் தேர்தல் நடைபெற இருந்தவேளை , பல புலம்பெயர் தமிழர்கள் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை ஆதரித்தார்கள். இதேவேளை மேற்குலக நாடுகள் சிலவற்றோடு நெருக்கமாக இருக்கும் நபர்கள் சிலர் , சுமந்திரன் வெற்றிபெற்றால் மட்டுமே மேற்குலக நாடுகள் நினைப்பது நடக்கும் என்று தமது எஜமான் நாடுகளுக்கு கூற. அவர்கள் பெரும் பணத்தை வாரி இறைத்துள்ளார்கள். யாழில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இளைஞர்களை தெரிவு செய்த சுமந்திரன் அவர்களுக்கு 45 நாள் வேலைத் திட்டம் என்று ஒன்றை அறிவித்தார். ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு தலா 1,500 ரூபா வழங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஒரு நபருக்கு, மாதம் சுமார் 45,000 ரூபா கொடுக்க வேண்டும்.

இந்த 45,000 ரூபாவை 40 ல் பெருக்கினால் அவர் இந்த 40 இளைஞர்களுக்கும் கொடுத்த சம்பளக் காசு எவ்வளவு என்பது தெரியும். இது இவ்வாறு இருக்க 3 நேர சாப்பாடு இரவில் தண்னி பார்டி என்று வேறு கலக்கி உள்ளார். தேர்தல் முடிந்து மறு நாள் வாக்குகள் எண்ணப்பட்டுகொண்டு இருந்த வேளை , மிகவும் பரபரப்பாக காணப்பட்ட சுமந்திரன் ஒரு சமயத்தில் ஸ்ரீதரனை தொடர்புகொண்டு ,நான் தெரிவாகமாட்டேன் போல இருக்கிறது என்று புலம்பியுள்ளார். இது ஒரு புறம் இருக்க எவ்வாறு கள்ள வோட்டுகள் குத்தப்பட்டது என்பதனையும் இங்கே நாம் நிச்சயம் தெரிவிக்க வேண்டும். இதனை வாசித்தால் தான் உங்களுக்குப் புரியும்.

ஒரு கட்சி மாவட்டத்தில் போட்டியிட்டால் , முதலில் வாக்குச் சீட்டில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகிறது என்ற விடையம். மேலும் போட்டியிடும் நபர்களின் பெயர்கள் இருக்கும். வாக்காளர்கள் தாம் விரும்பும் ஒரு கட்சிக்கு புள்ளடி போட்டு பின்னர் தாம் விரும்பும் நபருக்கு புள்ளடி போடவேண்டும். இது போன்று 3 பேருக்கு அவர்கள் புள்ளடி போட முடியும். இதனையே நாம் "விருப்பு வாக்கு" என்கிறோம். ஆனால் வட கிழக்கில் உள்ள பலஆயிரக் கணக்கானவர்கள் , இவ்வாறு செய்வதில்லை. அவர்கள் தமது வாக்குச் சீட்டில் ஒரு கட்சியை தெரிவு செய்து விட்டு, போடுவார்கள். இல்லையென்றால் ஒரு கட்சி மற்றும் ஒரு விருப்பு வாக்கை புள்ளடியிட்டு வாக்குப் பெட்டியில் போடுவார்கள். அப்படி என்றால் மேலும் 2 புள்ளடி போட வேண்டிய இடம் காலியாக இருக்கும் அல்லவா ?

அங்கே தான் தமது சித்து விளையாட்டை பொதுவாக அரசியல் கட்சிகள் காட்ட ஆரம்பிப்பார்கள். ஒரு மாவட்டத்தில் கட்சிக்கு விழுந்த வாக்குகளை வைத்தே எத்தனை ஆசனம் ஒதுக்கப்பட்டது என்ற விடையம் தெரிவிக்கப்படும். இதனை எண்ண கொழும்பில் இருந்து அல்லது பிற மாவட்டங்களில் இருந்து நபர்கள் அல்லது அதிகாரிகள் வருவார்கள். மேலும் வெளிநாட்டு அவதானிகளும் இருப்பார்கள். இந்த வாக்குகள் எண்ணி முடிவுற்றதும் , இவர்கள் அங்கே இருந்து அகன்றுவிட, யாழில் (உள்ளூரில்) உள்ள நபர்கள் விருப்பு வாக்குகளை எண்ண ஆரம்பிப்பார்கள். அபோது கட்சிக் காரர்கள் மட்டும் அங்கே இருக்க அனுமதி வழங்கப்படும். இந்த விருப்பு வாக்குகளை எண்ணும் நபர்களில் பலர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவானவர்களாக இருப்பார்கள். இவர்கள் கைகளில் தான் MP க்களின் தேர்வு தங்கியுள்ளது. யார் -யார் எத்தனை விருப்பு வாக்குகளை பெற்றார்கள் என்று பார்த்து , அதன் எண்ணிக்கை அடிப்படையில் கிடைத்த ஆசனங்கள் பகிரப்படும்.

இன் நிலையில் யாழில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று முன்னணியில் இருந்த நபர் ஸ்ரீதரன் ஆவார். இரண்டாவதாக மாவையும் , மூன்றாவதாக சித்தார்தனும் இருந்துள்ளார்கள். இவர்களை மாற்றி அமைப்பது என்றால் , பல ஆயிரக் கணக்கான போலி புள்ளடிகளை வாக்கு எண்ணும் நபர் போட வேண்டி இருக்கும். இதனால் இவர்களில் கை வைக்க முடியாது. ஆனால் சுமந்திரன் , அருந்தவபாலன் மற்றும் சரவணபவான் ஆகியோருக்கு இடையே அருந்தவ பாலன் அதிக விருப்பு வாக்குகளை பெற ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தது. இந்த நிலையில் தான் சுமந்திரனுக்கு தகவல் பறந்துள்ளது. இதனால் தான் அவர் டொலிபோன் அடித்து ஸ்ரீதரனோடு புலம்பி உள்ளார். ஆனால் மறு கணமே வாக்கு எண்ணும் இடத்தில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில ஆட்களுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல , சில வாக்கு சீட்டுகளில் 2 இடம் காலி அல்லது 1 இடம் காலியாக இருக்கும் அல்லவா ? அதில் நீங்கள் விருப்பு வாக்காக யாரையும் புள்ளடி இட முடியும். அப்படி புள்ளடி இட்டு விட்டு வாக்குகளை எண்ண ஆரம்பித்தார்கள். இதனூடாக அருந்தவ பாலன் 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வி அடைந்ததாக அறிவிக்கபப்ட்டார். மேலும் சுமந்திரன் மற்றும் சரவணபவான் ஆகியோர் வெற்றி பெற்றதாக (அதாவது கூடிய விருப்பு வாக்குகளை பெற்றதால் கட்சியால் அவர்கள் தெரிவாகியுள்ளதாக) அறிவித்தது கூட்டமைப்பு. இதுவே நடந்து முடிந்துள்ளது. இதில் படு கேவலமான விடையம் என்னவென்றால் , யாழில் உள்ள மொத்த MP ஆசனமே 7 தான். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 பேரை அங்கே நிறுத்தியது. ஏன் தெரியுமா ? அருந்தவ பாலன் போன்ற நபர்கள் யாழில் மிகவும் பிரபல்யமானவர்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் , பல ஆயிரக்கணக்கான மக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்குப் போடுவார்கள்.

இவ்வாறு பிரபலங்களை வேட்ப்பாளர்களாக முன் நிறுத்தி , மக்களிடம் இருந்து கட்சிக்கான வாக்குகளை பெருவாரியாகப் பெறுவது. பின்னர் விருப்பு வாக்குகளை இவர் தான் கூடப் பெற்றார் என்று கூறி , தமக்கு வேண்டப்பட்ட நபர்களை MP ஆக்குவது தான் இவர்களின் சில்லறைத் தனமான வேலையாக உள்ளது. இது தான் அரசியலாம்... இவர்கள் தான் 2016ம் ஆண்டு தமிழர்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்கப்போகிறார்களாம். அடுத்த தேர்தல் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ளது. ஆனால் அந்த தேர்தலில் முறைமைகள் மாற்றப்பட உள்ளது. ஒரு பிரதேசத்தில் ஒரு நபர் எடுக்கும் வாக்குகளை மட்டும் கருத்தில் கொண்டே ஆசனம் ஒதுக்குவது என்ற முறைமை கையாளப்பட உள்ளது. எனவே 2020ல் நடக்கவுள்ள தேர்தலில் பல அதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக அல்லது மாற்றாக அரசியல் களம் இறங்கிய கட்சிகள் எதுவும் இவ்வாறு சில்லறைத்தனமான வேலைகளைச் செய்யவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம்.

நேர்மையாக அரசியல் நடத்தினால் வெல்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு தான். ஆனால் இனி இந்த பருப்பு வேகாது என்பதனையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் அல்லவா ...

அதிர்வுக்காக,

கண்ணன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com