Contact us at: sooddram@gmail.com

 

ஒரு குழந்தை கடவுளைக் கண்டபோது!
(ம.செந்தமிழன்)


’நீ யார் செல்லம்?’ என பெரியவர்கள் முதன்முதலில் கேட்டபோது, குழந்தை தனக்குப் பிடித்தவர்களைச் சொன்னது. பல்வேறு காரணங்களால் அந்த பதிலில் நிறைவடையாத பெரியவர்கள் ‘உண்மையைச் சொல். உனக்கு யாரைப் பிடிக்கும்?” எனக் கேட்டனர். அதிலிருந்து குழந்தை, ‘உண்மை வேறு, மனதில் தோன்றுவதைப் பேசுவது வேறு’ எனக் கற்றுக் கொண்டது.
இரண்டாம் முறையாக, ‘நீ யார்செல்லம்?’ எனக் கேட்கப்பட்டபோது, அக்கேள்வியைக் கேட்பவர்கள் பெயர்களையே சொன்னது குழந்தை. இப்போது அருகே இருந்த மற்றவர்கள், தங்கள் முகங்களை முன்னிறுத்தி அதே கேள்வியைக் கேட்டார்கள். குழந்தை முன்னிறுத்தப்பட்ட முகங்களின் பெயர்களைச் சொன்னது. எல்லோருமாகச் சேர்ந்து, ‘கெட்டிக்காரப் பிள்ளை’ எனப் பாராட்டினார்கள். மனதில் உள்ளதைச் சொல்லாமல் எதிரே இருப்பவர்களின் பாராட்டுதல்களுக்காகப் பேசுவது கெட்டிக்காரத்தனம் என்பதைக் கற்றுக் கொண்டது குழந்தை.
பின்னர், அதே கேள்வி பலரால் கேட்கப்பட்டது. குழந்தை பலவாறாகப் பதில் சொல்லி, பாராட்டுகளையும் கண்டிப்புகளையும் சுமந்து வளர்ந்தது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது அக்குழந்தைக்கு.
எல்லாப் பாடங்களும் உண்மை எனும் வார்த்தையின் வெவ்வேறு விளக்கங்களாக இருந்தன.
சற்றே வளர்ந்த பின்னர் அக்குழந்தையிடம் ‘உண்மையைச் சொல்’ என்று யாரேனும் கேட்டால் கேட்பவரின் மனம் நிறையும் விதமாக பேசத் துவங்கியது. மேலும் சற்று வளர்ந்த பின்னர் ‘உண்மையில் என்ன நடந்தது?’ எனக் கேட்கப்படும்போது, தனக்கு பாதிப்பு நேராத வகையில் பேசத் துவங்கியது. ஒவ்வொரு முறை அக்குழந்தை ‘உண்மை’ எனும் சொல்லை எதிர்கொள்ள நேரிட்டபோதும் உண்மையைத் தவிர மற்ற அனைத்தையும் பேசியது.
குழந்தை வீட்டிலிருந்த பணத்தை எடுத்து செலவழித்தபோது, ‘உண்மையிலேயே நான் எடுக்கவில்லை’ என்றது. மேலும் அழுத்திக் கேட்டபோது, ‘சத்தியமாக நான் எடுக்கவில்லை’ என்றது. சத்தியம் எனும் வார்த்தையின் பேரால் பொய்யை அழுத்தமாகக் கூற இயலும் என்பதை ஏற்கெனவே பெரியவர்கள் கற்றுத் தந்திருந்தார்கள்.
குழந்தை ஏன் பொய் சொல்கிறது என்ற கேள்வியுடன் பெற்றோரும் குடும்பத்துப் பெரியோரும் அலையத் துவங்கினர். ஜாதக அடிப்படையில் அந்தக் குழந்தை பொய் வாக்கு கூறும் என ஒரு விளக்கம் கிடைத்தது. மரபணுக்களின் பதிவுகளில் அக்குழந்தையின் இயல்புகளில் பொய் நிறைந்துள்ளது என மற்றோர் விளக்கம் கிடைத்தது. உளவியல் காரணங்களும் குழந்தையின் பொய்களுக்கு அடிப்படையாகக் கூறப்பட்டன.
பெரியவர்கள் காரணம் தேடிக்கொண்டே இருந்தார்கள். குழந்தை பொய் பேசிக்கொண்டே இருந்தது.
அக்குழந்தை பூமிக்கு வந்த புதிதில் உண்மை என்பதன் விளக்கம் அதற்குத் தெரியாது. ஏனெனில் உண்மை என்பது விளக்கமே தேவைப்படாத இயல்பு. எது உள்ளதோ அதை அப்படியே புரிந்துகொள்வதும், எது தோன்றுகிறதோ அதை அப்படியே வெளிப்படுத்துவதுமே அக்குழந்தையின் உள்ளே பொதித்து அனுப்பப்பட்ட இயல்புகள்.
இந்தக் குழந்தை வளர்ந்த பின்னர் பல தெய்வங்களை வழிபட்டது. ஒரு அறிவாளி இந்தக் குழந்தையிடம், ‘உண்மையிலேயே தெய்வம் உள்ளதா?’ எனக் கேட்டார். உண்டு என்றால் அறிவாளி தர்க்கம் செய்வார். இல்லை என்றால் அறிவாளி கேலி செய்வார்.
குழந்தை தனது வழக்கமான முறையில், ‘அது எனது நம்பிக்கை. அவ்வளவுதான்’ என்றது. குழந்தை கேள்வியில் இருந்து தப்பிவிட்டது. அறிவாளியோ தனது அறிவுச் செருக்கிற்கு சேதாரம் நேராமல் தப்பிவிட்டார்.
பிறிதொரு நாளில் குழந்தை ஒரு முட்டாளைச் சந்தித்தது. அந்த முட்டாளுக்குப் பல பெயர்கள் இருந்தன. பித்தன், பைத்தியம், அரைவேக்காடு, திமிர் பிடித்தவன் போன்ற பெயர்கள் அவை எல்லாம். அவன் குழந்தையிடம் கேட்டான், ‘உண்மையிலேயே கடவுள் உண்டா?’ குழந்தை சிறிது நேரம் இங்குமங்கும் வெறித்துக் கொண்டிருந்தது. பின்னர் கண்ணீர் மல்கக் கூறியது, ‘சத்தியமாக எனக்குத் தெரியாது’
முட்டாள் அந்தக் குழந்தையை வாரியணைத்தான். அதன் உச்சந்தலையில் முத்தமிட்டான். பின்னர் கூறினான், ‘உண்மையிலேயே கடவுள் உண்டு’
குழந்தை வியப்பு மேலிட அவனைப் பார்த்தது. முட்டாள் தொடர்ந்தான், ‘உனக்கு உள்ளே இருப்பதை உணர்ந்து கொள்ளுதலும், உனக்கு வெளியே இருப்பவர்களுக்காக அந்த உணர்தலை மறைக்காமல் இருத்தலும்தான் உண்மை எனப்படும். அந்த உண்மைக்கு இந்த உலகத்து அறிவாளிகள் இட்ட பெயர்களில் கடவுள் என்பதும் ஒன்று. இவர்கள் தமது மனதின் குரலை உணர்வதும் இல்லை. எப்போதாவது உணர்ந்தால் அதை அப்படியே வெளிப்படுத்துவதும் இல்லை. ஆகவே இவர்களுக்கு உண்மையையும் பிடிக்காது கடவுளையும் பிடிக்காது’
குழந்தை வீடு திரும்பியபோது பெரியவர்கள் கேட்டார்கள், ‘எங்கே போயிருந்தாய்?’ குழந்தை சிறிதும் சிந்திக்காமல் கூறியது, ‘கடவுளைப் பார்க்கப் போயிருந்தேன்’.
(இணைப்புப் படம்: அருவி. படப்பதிவு: நிகரன்)
986 ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஓர் கரிய ஆண்டு. ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு விடுதலை அமைப்புகளும் புலிகளால் தடை செய்யப்பட்டு வேட்டையாடப்பட்ட ஆண்டு.
தமிழீழ விடுதலையை இலட்சியமாக கொண்ட இளைஞர்கள் படுத்த படுக்கையில் படுகொலை செய்யப்பட்டார்கள். நடு வீதியில் போட்டு எரிக்கப்பட்டார்கள். வெளி நாடுகளில் விசேட பயிற்சி பெற்ற போராளிகள் தரம் பிரிக்கப்பட்டு இரகசியமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஏனைய போராளிகள் தரம் பிரிப்புக்கென பல்வேறு வீடுகளில் சிறை வைக்கப்பட்டார்கள். அப்படி சிறை வைக்கப்பட்ட ஒரு வீட்டின் பெயர் "கந்தன் கருணை" - இது யாழ்ப்பாணம் Brown Road இல் அமைந்திருந்தது.
இவ் வீட்டில் 60 போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் அதிகமானவர்கள் EPRLF போராளிகள். காரணம் இவர்கள் தான் புலிகளால் இறுதியாக தடை செய்யப்பட்ட போராட்ட அமைப்பு.
March 30, 1987 புலிகளின் ,உள்முரண்பாட்டின் உச்ச கட்டம், புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டு என்பர் மீது குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது, இதற்கான பழியை EPRLFஅமைப்பின் மீது போட்டு புலிகளின் முக்கிய உறுப்பினரான அருணா என்பவனால் இந்த 60 போராளிகளும் கோரமாக கொலை செய்யப்படுகிறார்கள்.
தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் நாமே என அடம் பிடித்து அதை தட்டி பறித்து கொண்டவர்களும் அவர்களின் ஆதரவு அமைப்புகளும் இப்படுகொலை நடந்து 28 ஆண்டுகள் கழிந்தும் இதுவரை இதற்கு எந்தவிதமான மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.
குறைந்தது அந்தந்த போராளிகளை பெற்றெடுத்த பெற்றோர்களிடமாவது இவர்கள் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இன்றுவரை நடக்கவில்லை.
இவ்வாறான மன்னிப்புக்களை தவிர்த்து நீங்கள் வருடா வருடம் கொண்டாடும் மாவீரர் நிகழ்வுகளுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா எனவும் சற்று சிந்தித்து பாருங்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com