Contact us at: sooddram@gmail.com

 

ஜெயகாந்தன் சரியென்று பட்டதை தயக்கமின்றி வெளிப்படுத்துபவர்

(முருகேசு ரவீந்திரன )

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராக ஜெயகாந்தன் போற்றப்படுகிறார். இவர் ஒரு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். இடையில் நாவல், கவிதை, புதினம் எனப் பலதரப்பட்ட இலக்கிய வடிவங்களையும் எழுதியிருக்கிறார். இருந்தாலும் ஜெயகாந்தன் சிறுகதை மன்னாக இலக்கிய ஆர்வலர்களால் இன்றும் போற்றப்படுகின்றார். ஓர் எழுத்தாளன் எத்தகைய பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி எழுதுகிறான் என்பதை வைத்தே அவன் அடையாளப்படுத்தப்படுகிறான். அவனது சமுதாயக் கண்ணோட்டத்தை அறிய இது தேவையாகவுள்ளது.

ஜெயகாந்தன் என்ற படைப்பாளியையும் அவரது படைப்புக்கள் வாயிலாகவே புரிந்து கொள்ள முடியும். இவரது படைப்புக்கள் பற்றி ஆய்வு செய்த விமர்சகர்கள் ஜெயகாந்தன் கம்யூனிஸ்டாக இருந்த போது முற்போக்கான கதைகளை எழுதியதாகவும் ஆனால் பின்னாளில் அவரது படைப்புக்களில் முற்போக்கு சிந்தனைகளை காணமுடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

இன்றும் சில விமர்சகர்கள் ஜெயகாந்தன் பேனா பிடித்த போது அவர் சாதாரணமானவராக இருந்தார். அதனால் சாதாரண மக்களின் பிரச்சினைகள் பற்றி மிகச் சிறப்பான படைப்புக்களை வெளிக்கொண்டு வந்தார்.

எழுத்துறையில் புகழ்பெற்ற பின்னர் அவரது வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. அவரைச் சுற்றிலும் வசதியானவர்களே காணப்பட்டனர். வறுமையில் வாழ்பவர்களுக்கு வயிற்றுப்பசி.

இது ஜெயகாந்தனின் ஆரம்பகால படைப்புக்களில் காணப்பட்டது. வசதியாக வாழ்பவர்களுக்கு உடற்பசி. இது ஜெயகாந்தனின் பிற்கால படைப்புகளில் செக்ஸ் பற்றி அதிகம் எழுத காரணமாக அமைந்தது.

சமூகப் பிரச்சினைகளை மறந்து விட்டு பின்னாளில் நிர்வாணம் குறித்தே இவர் சித்திரித்ததாகவும் சில விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜெயகாந்தனை கம்யூனிஸ்டாக அடையாளப்படுத்த முடியுமா என்பது இன்னொரு சாராரின் கருத்து. இவர்கள் அவர் ஒரு போதும் கம்யூனிஸ்ட்டாக இருந்ததில்லை எனக் கூறுகின்றனர்.

அவரது படைப்புக்களை சரியாக நோக்காததால் அவரை கம்யூனிஸ்டாக வகைப்படுத்தி விட்டனர் என இவர்கள் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக அவரது படைப்புக்களை இனம் காட்டுகின்றனர்.

பழை வேதசாஸ்திரங்களில் சொல்லப்படுகின்ற பிரம்மஞானத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு வேதகால ஆசாரங்களை வழுவாமல் கடைப்பிடிப்பதில் விடாப்பிடியாக இருக்கும் சங்கர சர்மாவிற்கும் ஒரு கம்யூனிஸ்ட் என்று கதையில் சித்திரிக்கப்படுகின்ற சேஷாந்திரிக்கும் இடையில் ஏற்படும் கொள்கை மோதலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைபிரம்மோதேசம்ஆகும்.

நாஸ்திகத்தை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசுகிறார் சர்மா-

அப்பவும் யாரோ சில தனி மனுஷ்ய அறிவாளிகள்தான் நாத்திகம் பேசிண்டிருந்தா ஜனங்கள் எப்பவுமே ஒத்துக்கலை. அதனாலேதான் சமூகம் வளர்ந்தது. ஜனங்களே நாஸ்திகத்தை ஏற்றுண்டான்னா லோகமே குட்டிச் சுவர்தான். அதனலே இந்த நாஸ்திகத்தை எதிர்த்து லோகத்தை காப்பாத்தனும்

கம்யூனிஸ்ட் சேஷாந்ரி இதற்கு பதில் அளிக்கவில்லை. ஆம் ஜெயகாந்தன் இதற்கான விடையை கதையில் எழுதவில்லை. கதையை வேறு ஒரு பக்கம் இழுத்துச் செல்கின்றார். அப்படி என்றால் எப்படி இவரை கம்யூனிஸ்ட் எனக் குறிப்பிட முடியும் என சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கு ஜெயகாந்தன் கூறும் பதில் இவ்வாறு அமைகிறது. நான் கடைப்பிடிக்கும் கொள்கைக்கும் தத்துவங்களுக்கும் முரணான ஒரு கொள்கையை, ஒரு சீலத்தை எனது சர்மா தழுவியிருக்கலாம். எந்த நோக்கத்திற்காக நான் கொள்கையை தழுவியுள்ளேனோ அதே நோக்கத்திற்காக எனக்கு மாறுபட்ட கொள்கையை சங்கர சர்மா தழுவிநிற்பதால் எனது கண்டனத்துக்கும் தூற்றுதலுக்கும் அவரை ஆளாக்குவது தர்மமுமன்று, பெருந்தன்மையுமன்று.

உங்கள் நாத்திகம் உலகத்தை குட்டிச் சுவராக்கும் என்று அவரது வார்த்தைக்கு ஆத்திரப்பட்டு நாத்திகர்களின் அண்டவெளி பயணத்தையும் புதிய கலாசாரத்தின் விஞ்ஞான புரட்சிகளைப் பற்றியும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் சேஷாத்திரியின் பாத்திரம் பலவீனமுற்று விடும்.

பாத்திரப் படைப்புக்கு என்கதையமைப்புக்கு அது புறம்புஇவ்வாறு ஜெயகாந்தன் பிரம்மோபதேசம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நாத்திகம் பேசுவோர் பலர் நாம் முற்போக்கு வாதிகள் என எண்ணிக் கொள்கின்றனர். ஜெயகாந்தன் யார் முற்போக்குவாதி என தெளிவாக இனம் காட்டுகிறார்.

எவனொருவன் நன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதோ பல பிரிவுகள் மீதோ துவேசம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும் உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்கு நானோர் உதாரண புருஷன் என்ற வேட்கையோடு செயலாற்றுகிறானோ, அவன் அத்தளவில் மனித இயங்கொண்டோரின் மரியாதைக்குரிய முற்போக்கு வாதிதான்

இப்படி ஜெயகாந்தன் எழுதியுள்ளார்.

நான் தமிழில் படிப்பதே இல்லை என பெருமை பேசியவர்களை தமிழில் படிக்க வைத்தவர் ஜெகாந்தன். ஆங்கிலம் படித்த பலரும் இவரது கதைகளை தேடிப் படிக்க ஆரம்பித்தனர். அறுபதுகளில் அவரது கதைகளும் நாவல்களும் தமிழ் கூறும் தேசம் எங்கும் புகழ்பெற்றிருந்தன. ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் போட்டி போட்டுக் கொண்டு ஜெயகாந்தனின் படைப்புக்களை வாங்கிப் பிரசுரித்தன. இதனால் அவற்றின் விற்பனையும் அதிகரித்தது.

ஜெயகாந்தன் உரைநடை இலக்கியங்களை எழுதியதோடு கவிதைகளையும் எழுதியுள்ளார்.

இலக்கியத்தில் பிரசாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயகாந்தனின் விளக்கம் இவ்வாறு அமைகிறது.

பிரசாரம் இல்லாத இலக்கியமே கிடையாது. பிரசாரங்களும் இலக்கியமாவதுண்டு. இலக்கியங்களும் பிரசாரமாவதுண்டு. முன்னது சிறப்பு. பின்னது வீழ்ச்சிஎனக் குறிப்பிடுகின்றார். விமர்சனங்கள் பற்றி ஜெயகாந்தன் இவ்வாறான கருத்தை கொண்டுள்ளார். ஒரு படைப்பாளிக்குப் பிரயோசனப்படாத எதுவுமே பிரபஞ்சத்தில் இல்லை.

ஒரு படைப்பை விடவும் விமர்சனம் படைப்பின் ஆக்கம் நிறைந்ததாக இருக்கும் போது அந்தப் படைப்பாளி முதிர்ச்சி அடையாதவன் என்கிற முறையில் அந்த விமர்சனத்தினால் பயனடையலாம்.

இதனை ஒரு பொது விதியாக மரபாக ஆக்குவது படைப்பிலக்கியத்துக்கு அதிகப் பலனைத்தராது. விமர்சனத்தின் நோக்கம் இரசனைக்கு உதவுவதுதான்எனக் கூறியுள்ளார். விமர்சகர்களாக நம்மை வெளிக்காட்டிக் கொள்ள முயல்பவர்களுக்கு ஜெயகாந்தனின் கூற்று உண்மையை எடுத்துரைப்பதாகவுள்ளது.

தனக்கு சரியெனப் பட்டவற்றை தயக்கமின்றி எழுதுவதால் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின்ற ஒரு படைப்பாளியாக ஜெயகாந்தன் காணப்படுகின்றார். நான் சரி என நினைப்பவற்றை தயக்கமின்றி வெளிப்படுத்தும் இலக்கியவாதி தான் வாழ்கின்ற காலத்தில் மாத்திரமல்லாமல் அதற்கு பின்பும் கருத்துக்கள் வாயிலாக சமூகத்தில் வாழ்த்து கொண்டேயிருப்பான். பாரதி வாழும் காலத்தில் இந்தளவுக்கு போற்றப்படவில்லை.

ஜெயகாந்தன் வாழும் போதே போற்றவும் தூற்றவும் படுகின்றார். ஒருவரின் கருத்துக்கள் எல்லோருக்கும் ஏற்புடையதாக அமையாது என்பதற்கு ஜெயகாந்தன் நல்லதொரு உதாரணமாக விளங்குகின்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com