Contact us at: sooddram@gmail.com

 

ஊழல்வாதிகளைக் கூண்டில் நிறுத்துக!

(கி.இலக்குவன்)

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஸ்வீடன் நாட்டிலிருந்து போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இடைத்தரகர்களுக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான ஊழல் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. இன்று நடைபெற்றுள்ள அடுக்கடுக்கான ஊழல்கள் அந்த ஊழல்களையெல்லாம் வெறும் ஜுஜுபி என்று கூறத்தக்கவையாக மாற்றிவிட்டன. நகர் வாலா ஊழல்கள் நடைபெற்ற போது பிரதமர் பதவி வகித்த இந் திரா காந்தி, ஊழல்கள் ஏதோ இந்தியாவில் தான் நடை பெறுவதாகக் கருதிவிடாதீர்கள்; அது ஒரு சர்வதேச நிகழ்வு என்று கூறி அலட் சியப்படுத்தினார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற் பட்டுள்ளது என்று தலைமைத்தணிக்கை அதிகாரி தெளிவாகக் குறிப்பிட்ட பிறகும் இன் றைய பிரதமர் மன்மோகன் சிங்கோ, ஊழல் எதுவும் நடைபெற்றதாக ஒப்புக்கொள்ள மறுக் கிறார். அவர் ஒரு மவுனச் சாமியாராகிவிட்டார். நாடாளுமன்றக்கூட்டுக்குழு அமைக்கப்பட் டால் அவரது மவுன விரதத்தை உடைக்கும் சக்தி அக்குழுவுக்கு உண்டு என்பதால், குழு அமைக்கும் முடிவே எடுக்கப்படாத வகை யில் செயல்பட்டு வருகிறார். ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, அதற்கு நேரடியாக பதில் கூறாத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியது என்ன தெரியுமா? ஊழல் நடைபெற்றுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்த நேரங்களிலெல்லாம் அதில் எங்கள் கட்சிக் காரர்கள் சம்பந்தப்பட்டதாக சிறிதளவு சந்தே கம் வந்தாலும் கூட அவர்களை உடனடி யாகப் பதவி விலகச் செய்திருக்கிறோம். அது நட்வர்சிங்காக இருந்தாலும், சசிதரூராக இருந்தாலும், அசோக் சவாணாக இருந்தா லும் அதே நிலை தான் என்று கூறி, நாங்க ளெல்லாம் சத்திய சந்தர்கள்; ஊழலை சிறிதும் சகித்துக்கொள்ளாதவர்கள். ராசா பதவி விலகுவதென்பது கருணாநிதியின் கையில் தான் இருக்கிறது என்று மறைமுகமாகக் குறிப் பிட்டு விட்டு ஒதுங்கிவிட்டார். தமிழக முதல் வர் கருணாநிதியோ தனது வழக்கமான ஆயுத மாகிய ஆரியன்-திராவிட மோதல், அக்கிரகார சூழ்ச்சி ஆகியவற்றைக் கையிலெடுத்து விட்டார்.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பே என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளது. நவீன தாராளமய யுகத்தில் ஊழலின் அரசியல் பொருளாதாரம் புதிய பரிணாமங்களை எட்டி யுள்ளது. முந்தைய காலங்களில் உரிமங் களைப் பெறுவதற்கும் சில விதிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதற்கும் லஞ்சம் கொடுப்பது பெருமுதலாளிகளின் வாடிக்கை யாக இருந்து வந்தது. ஆனால் பெருமுத லாளிகளும் தொழில் நிறுவனங்களும் தாங் களே கொள்கைகளை வகுப்பவர் நிலைக்கு இன்று உயர்ந்துவிட்டனர். இந்த அமைச் சரை விலைபேசுவது, அந்த அமைச்சரை விலை பேசுவது என்பதெல்லாம் பழைய கதை. கொள்கைகளையே விலை பேசுவது தான் இன்றைய நடைமுறை. தொலை தொடர் புத்துறையாக இருந்தாலும் சரி, எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்துறையாக இருந்தாலும் சரி, அணுசக்தித்துறை, தற்காப்புத்தறை ஆகிய எந்த துறையாக இருந்தாலும் சரி, தொழில் நிறுவனங்களின் நலன்களுக்காக கொள்கை களையே விலை பேசிவிட முடியும். இன் றைய தினம் ஊழலை எதிர்த்து உரத்தக் குர லில் பேசிவரும் பாஜக வின் கர்நாடக மாநில முதலமைச்சர், பெங்களூர் நகரின் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை தனது மகன்கள், மருமகன்கள், மகள் மற்றும் பிற உறவினர்களுக்கு வாரிவழங்கிவிட்டு அம் பலப்பட்டு நிற்கிறார். அவரைப் பதவி விலகு மாறு நிர்ப்பந்தித்தால் தென்னாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பாஜக ஆட்சிக்கு சமாதிகட்ட வேண்டியிருக்கும் என்பதால் எடியூரப்பா பதவியில் நீடிப்பதற்கு பாஜக உயர்மட்டத்தலைவர்கள் ஆசி வழங்கி விட்டனர்.

சோழப்பேரரசன் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் ஆட்டு வரி, மாட்டு வரி, பூட்டுவரி என்று பல்வேறு விதமான வரிகள் போடப் பட்டதாகக் கூறுவார்கள். இன்றைய முதலா ளித்துவ ஆட்சியாளர்களோ விதவிதமான ஊழல்களை அரங்கேற்றியுள்ளனர். அரிசி பேர ஊழல், கோதுமைபேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், சவப்பெட்டி ஊழல், தொலைத் தொடர்புத்துறை ஊழல் என்று நீண்டு வரும் பட்டியலில் விளையாட்டுப்போட்டி ஊழலும் இன்று இடம்பெற்றுவிட்டது. ஏழை இந்தியா பல்லாயிரம் கோடிசெலவு செய்து காமன் வெல்த் போட்டிகளை நடத்த வேண்டுமா என்று காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய் யர் குரலெழுப்பி வந்தார். இன்று காமன் வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடைபெற்றுள்ள ஊழல்களைப் பார்க்கும்போது அவர் கூறியது சரியானதாகவே தோன்றுகிறது.வல்லரசாக இந்தியாவை மாற்றிவிட்டோம் என்று கூறிக் கொள்ளும் ஆசை ஒருபுறம், அண்டை நாடான சீனா ஆசியவிளையாட்டுப் போட்டிகளை மட்டுமின்றி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்திவிட் டது. சீனாவால் நடத்தமுடியும் என்றால் இந்த விளையாட்டுப்போட்டிகளை நம்மால் நடத்த முடியாதா என்ற எண்ணத்தில் தான் இந்திய ஆட்சியாளர்கள் ஒரு சவாலைப் போலக் கருதி அதை நடத்துவதற்குப் பிற நாடுகளு டன் போட்டி போட்டனர்.

இந்த போட்டிகளை நாங்கள் நடத்துகி றோம் என்று 2003ல் அறிவித்த போது, ரூ.1899 கோடிக்குள் செலவை முடித்து விடலாம் என்று கணக்கு போட்டனர்.

2007 ஏப்ரல் மாதத்தில் ரூ.3566 கோடி வரை செல்லும் என்று மதிப்பீட்டை உயர்த்தினர்.

நிகழ்ச்சிகளை மக்கள் பார்வையிடுவதற் கான அரங்கங்கள்,நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள்,விளையாட்டை நடத்துவதற்கான நடைமுறைச்செலவுகள் போன்றவற்றுக்கு ரூ.12888 கோடி ஆகும் என்று தலைமைக் கணக்குத்தணிக்கை அதிகாரி மதிப்பிட்டி ருந்தார்.

விளையாட்டுகள் துவங்கும் போது செல வின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?முந்தைய மதிப்பீட்டுக்கு சற்றும் தொடர்பில்லாமல் செலவு ரூ.70000 கோடியை எட்டியிருந்தது..

2006-ம் ஆண்டில் மெல்போர்ன் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நடை பெற்றபோது ரூ.5200 கோடிதான் செலவு ஆயிற்று. பணவீக்கம் காரணமாக 100சதம் விலையுயர்வு ஏற்பட்டதாக வைத்துக்கொண் டாலும் இப்போது ஆனதாகக் கூறப்படும் செலவில் 7ல்1 பங்கு தான் ஆகியிருக்கும்.

செலவு மதிப்பீடுகள் இவ்வாறு பல்கிப் பெருகியுள்ளதே, பெரும் ஊழல் நடைபெற்ற தற்கான போதுமான ஆதாரங்களாக உள்ளன. கீழ்க்கண்ட விபரங்கள் அதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஐதராபாத்தில் ஒரு புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்கு ஆனசெலவு வெறும் ரூ.90 கோடிதான். ஆனால் தில்லி யில் ஏற்கனவே உள்ள ஜேஎல்என் விளை யாட்டரங்கத்தை புதுப்பிப்பதற்கு மட்டும் ஆன செலவு ரூ.961 கோடி.அந்த விளையாட்டரங் கத்துக்கு வெளியே ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நடைபாலம் பயன்பாட்டுக்கு வருமுன்னரே இடிந்துநொறுங்கிவிட்டது.

முற்காலத்தில் தொடர்ந்து இடிந்து விழுந்த சுவரைக்கட்ட முன்வந்த வறுமை யில் வாடிய ஒரு புலவர் அதற்குக் கூலியாகக் கொடுத்த நெற்கொண்டு போமளவும் வரை யிலாவது நில்லாய் நெடுஞ்சுவரே என்று பாடி னாராம். பில் பணம் வாங்கும் வரையிலும் கூட நடைபாலம் நிற்காமல்போனதே என்று ஒப்பந்தக்காரர் வருந்தியிருப்பாரோ?

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி களில் தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர் கள் படாடோபமாக அறிவித்தனர் என்ற போதி லும் சொல்லுக்கும் செயலுக்குமிடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது. காமன் வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழுவைத் தவிர வேறுபல முகமைகளும் அதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு மொத்தத்தில் ரூ.70,000 கோடிக்கு மேல் செலவு செய்துள் ளன. இந்த அனைத்து முகமைகளின் செயல் பாடுகளையும் துல்லியமாக ஆய்வு செய்து நடைபெற்ற முறைகேடுகள் அனைத்துக்கும் அவற்றை பொறுப்பேற்குமாறு செய்யவேண் டும். பல்வேறு விசாரணை அமைப்புகளின் கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு முழு கவனத்துடன் விசாரணை நடத்துவதற்கு பதிலாக விசாரணைக்குரிய தலைப்புகள் குறித்து எத்தகைய தெளிவுமில்லாமல் ஒரு இரு நபர் குழுவை அரசாங்கம் நியமனம் செய்துள்ளது. காமன் வெல்த் விளையாட்டு ஏற்பாட்டுக் குழு வின் செலவுகளில் ஏற்பட்ட ஊழல் குறித்துத்தான் இருநபர் குழு ஆய்வு செய்யும். தனது அரசாங்கம் செய்துள்ள செலவு களை அல்ல என்று தில்லி முதல்வர் பகிரங் கமாக அறிவித்துள்ளார். அது ஏற்புடைய தல்ல. நடை பெற்றுள்ள அனைத்து ஊழல் களையும் கண்டறிந்து ஊழல்வாதிகள் அனைவருக்கும் தண்டனை வாங்கித்தரும் வரையில் ஓயமாட்டோம் என்பதை பிரக டனப்படுத்துவதற்காக டிசம்பர் 11 வரை ஒரு வார கால பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது. முடிவு செய்துள்ளது. இந்திய நாட்டு அரசியல்வாதிகளிலேயே ஊழல் அண்டாதவர்கள் இடது சாரிகள் மட் டுமே என்று கம்யூனிச எதிர்ப்பாளர்களும் ஒப் புக்கொள்கிறார்கள்.எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு தகுதி வாய்ந்தவர்கள் அவர்களே என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com