Contact us at: sooddram@gmail.com

 

அரசியலுக்கு அடுத்த கோமாளி தயார்?

ஒருவன், படுத்துக்கொண்டோ, உட்கார்ந்துக்கொண்டோ, நடந்துக்கொண்டோ, கனவு கான்பதையும், கற்பனை செய்வதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாம் காணும் கனவுக்கு ஒரு அர்த்தம் வேண்டும். அர்த்தமேயில்லாமல் கனவு கண்டு கொண்டுயிருப்பவர்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் சொல்வது போல கோமளிகளுக்கும் நாடாளும் ஆசை வந்துவிட்டது. தற்போது அந்த ஆசை நடிகர் விஜய்க்கு வந்துள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியல்வாதியாகலாம், முதல்வர் ஆகலாம் என்பது என்ன நியாயம். அதற்கு ஒரு தகுதி, தராதரம் வேண்டாமா?. முதல்வர் பதவி என்பது என்ன வீட்டுக்கு வெளியில் போடும் கோலமா சரியில்லை என்றால் அழித்து விட்டு திருப்பி போட.

விஜய்க்கு எதனால் இந்த ஆசை?. இந்த சமூகத்திற்க்கு விஜய் என்ன செய்துவிட்டார்?, விஜய்க்கு தமிழனின் வரலாறு தெரியுமா?, ஈழ தமிழனின் பிரச்சனை தெரியுமா?, சமுக பிரச்சனை தெரியுமா?, இந்த சமூகத்தில் எத்தனை சாதியிருக்கிறது என்று தெரியுமா?, சமூகநீதி பற்றி தெரியுமா?, பெரியார் பற்றி தெரியுமா?, திராவிட அரசியல் பற்றி தெரியுமா?, படித்து வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை தெரியுமா?, மக்களுக்காக இவரால் 2 நாள் சிறையில் இருக்க முடியுமா?,

மைக் தந்தால் இன்றைய மக்கள் நிலை பற்றி சொந்தமாக பேச தெரியாத கத்துக்குட்டி தான் நடிகர் விஜய். இயக்குநர் சந்திரசேகர் மகன் என்ற தகுதியுடன் 25 வயதில் சினிமாவுக்குள் வந்தவர் நடிகைகளுடன் குத்தாட்டம் போடுவது, மாமியாருக்கு சோப்பு போடுவது என 8 ஆண்டுகள் குஜிலி சினிமாக்களில் நடித்துவிட்டு மற்ற நடிகர்களை விட அதிகமாக இளைஞர்களுக்கு வன்முறையையும், தண்ணி, தம்மு என கற்று தந்த விஜய் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். பதவிக்கு வந்தால் இன்னும் என்னன்ன கற்று தருவாரோ?.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் என ஆரம்பித்தவர் தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்து அதற்கான காரியத்தில் இறங்கியுள்ளார். அரசியல் ஆசை வரலாம். இந்த சமூகத்தில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் ஆனால் அதற்கென்று ஒரு தகுதி வேண்டாமா?.

அவர் மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழை மக்களுக்கு பலப்பல உதவிகள் செய்துள்ளார் இந்த தகுதி போதாதா என காரணம் சொல்லலாம். நடிகர்-நடிகைகள் பொதுவாக சம்பளத்தில் பாதியை கறுப்பு பணமாக வாங்குவார்கள். விஜயும் இதற்கு விதிவிலக்கல்ல. வந்த பணத்தை அரசின் கணக்கிலிருந்து மறைக்க பொய் கணக்கு காட்ட நலத்திட்ட உதவி அதுயிது என சிலவற்றை செய்தார். அதனால் அந்த உதவிகள் மட்டுமே காரணமாகிவிட முடியாது. தமிழக முதல்வர் கருணநிதி குடும்பம் தான் விஜய் சினிமாவுக்கு வர காரணம் என்கிறார்கள் வேறுசிலர். எப்படி? என கேட்டால், சினிமா உலகை ஆட்டிப்படைக்கும் முதல்வரின் பேரன்கள் விஜய்க்கு தொந்தரவு தருகிறாற்கள் அதனால் தான் அரசியலில் இறங்குகிறார் என்கிறார்கள்.

இது சொத்தையான காரணம். விஜய்க்கு அரசியல் ஆசை இப்போது வரவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஒரு இடத்தை வாங்குகிறார். அந்த இடம் சர்ச்சையில் சிக்குகிறது. தான் தமிழின் பிரபலமான நடிகர் அதனால் அதிகாரிகள் தனக்கு சாதகமாக இருப்பார்கள் என எண்ணினார். ஆனால் அவரின் எண்ணத்தில் மண் விழுந்தது. அரசியல் தலைகள் தலையிட அரசியல்வாதிகளுக்கு சாதகமாகவே விவகாரம் போனது. முதல்வர் கலைஞர் வரை போய் உதவி கேட்டார். அதன்பின் அவருக்கு சாதகமாக விவகாரங்கள் நடந்தன. அப்போது தான் அவருக்கு அந்த அரசியல் ஆசை விதையாக மனதில் விழுந்தது. ஏற்கனவே அரசியல் வாசனை அறிந்த சந்திரசேகர் மகன் ஆசைக்கு உரம் போட்டார்.
சினிமா பட விழாக்களில் ரஜினியை விட விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் குவிந்தார்கள். இதை கண்டு மதி மயங்கிய விஜய் தான் தான் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி என எண்ணினார். விஜய் போகும்மிடங்களில் எல்லாம் மக்கள் ஓடிவந்து முண்டியடித்து பார்த்தார்கள்.

தமிழக மக்களை பொருத்தவரை சினிமாவில் துணை நடிகர்கள் பொதுஇடங்களுக்கு வந்தால் ஆசையாக பார்க்க கூடிவிடுவார்கள். அதுவொரு ஈர்ப்பு அவை ஓட்டாக மாறிவிடாது.
நடிப்பு திலகம் என அழைக்கப்படும் சிவாஜிகணேசனுக்கு எம்.ஜீ.ஆர்ரைவிட ரசிகர்கள் அதிகம். ஆனால் அவரால் கூட அரசியல்வாதியாக ஜொலிக்க முடியவில்லை. அதன் பின் கடந்த தேர்தலின் போது அடுத்த முதல்வர் நான் தான் என கர்ஜித்து கட்சி ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த்க்கு கூடாத கூட்டமில்லை. இதனால் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். 1 இடத்தில் அவர் மட்டுமே ஜெயித்தார். விஜயகாந்த் ஏதோ 50 படம் நடித்து முடித்தவுடன் சினிமாவுக்கு வரவில்லை. 125 படங்களுக்க மேல் நடித்து முடித்தபின்பே அரசியலுக்கு வந்தார். அவரே
மின் மினி பூச்சியாய் தமிழக அரசியலில் இருக்கிறார்.

நான் எம்.ஜீ.ஆர் போல் அரசியலில் ஜெயிப்பேன் என விஜய் சொன்னால் இதை விட காமெடி இருக்க முடியாது. ஏம்.ஜீ.ஆர் அரசியலுக்கு வந்தது விபத்து. 50 வயதுக்கும் மேல் நடித்துக்கொண்டு மட்டுமேயிருந்தார். அறிஞர் அண்ணாவால் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்களிடையே மக்களிடத்தில் ஒரு பெரிய ஆதரவு வட்டமேயிருந்தது. திமுக தலைவருடன் ஏற்பட்ட மோதலில் திமுகவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். அடிமட்ட மக்களின் செல்வாக்கை  ொண்டு கட்சி ஆரம்பித்து ஜெயித்தார்.

இதெல்லாம் தெரியாமல் தமிழ்நாடே என் பக்கம்மிருக்கிறது என கட்சி ஆரம்பிக்கும் விஜய்யை முட்டாள் என்பதை தமிழக மக்கள் உணர வைக்க வேண்டும்.

நன்றி: அன்பானவர்கள் புளொக்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com