Contact us at: sooddram@gmail.com

 

மூதூர் முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள்

(கலைமேகம்)

மூதூர் வாழ் முஸ்லிம் மக்களின் 1940 களிலிருந்து 1975 ஆம் ஆண்டுகாலம் வரையான திருமண நடைமுறைகள் சுவாரஸ்யம் மிக்கவை. அதாவது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் திருமண வயதையொத்த இளம் பெண் இருக்கும் பட்சத்தில் அப்பெண்ணின் பெற்றோர் தமது சொந்தத்தில் அப்பெண்ணின் முறை மச்சினனையோ, அல்லது மூதூர் வட்டையைச் சேர்ந்த வேறு ஒரு வாலிபனையோ, முதலில் குடும்பசகிதம் ஒன்றுகூடி ஆலோசித்து மாப்பிள்ளை கேட்டுப் போகும் படலத்தை ஆரம்பிப்பார்கள். அந்தப் பணியை அக்குடும்ப உறவினர்களில் ஆண்கள் இருவரைத் தேர்ந்தெடுத்து உரிய வாலிபனின் பெற்றோருடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து இன்னாருடைய பெண்ணுக்கு உங்கள் மகனைக் கேட்க முடிவு செய்தோம் மாப்பிள்ளை தருவீர்களா? என வினவுவார்கள்.

குறிப்பிட்ட ஆணின் பெற்றோர் உடனே மறுப்புக்கூறாது இவ்விடயத்தை அந்த வாலிபனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரிடம் கூறி முதலில் அபிப்பிராயம் அறியுங்கள். அவர் சம்மதம் அறிந்து நீங்கள் செயற்பட்டால் போதுமானது எனக்கூறி தேனீர் மட்டும் வழஞ்கி உபசரித்து அவர்களது மனம் நோகாமல் அனுப்பிவைப்பார்கள். அப்பெண்ணின் குணாதிசயங்கள் படிப்பு, ஓதல் போன்றவைகளையும் பொய்யுரையாது கூறுவார்கள். அத்துடன் அவ்வாலிபன் ஒரு ஆசிரியனாக இருந்தால் வயல் நிலம் மற்றும் வீடு, வீட்டுடன் கூடிய காணி, மற்றும் திருமணச் செலவுக்கான பணம், சீதனம், ஆதனம் தருவதாகவும் பேரம் பேசி விடுவார்கள். அந்த வாலிபன் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்தால் அதுவும் வண்டில் மாடு ஓட்டுபவரா இருந்தால் வீட்டுடன் கூடிய காணியும் ஒரு தொழிலுக்கு வண்டில் மாடும் தருவதாக பேசுவார்கள். அவர் ஒரு வியாபாரியாக இருந்தால் வீடு வியாபாரத்திற்குரிய முதலீடு பணம் இவைகள் பற்றியெல்லாம் பேசுவார்கள். வசதி குறைந்த ஏழைப் பெற்றோர் பெரும்பாலும் பெண்ணுக்குரிய ஆதனத்தை கொடுக்க வகையில்லாது திருமணப் பேச்சைத் தள்ளிவைப்பார்கள். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குமர்கள் இருப்பார்களேயானால் மாப்பிள்ளை தேடும் படலம் அசமந்தப் போக்கிலேயே இருக்கும். இதுபற்றி குடும்ப உறவுகளோ, அல்லது சமய சீர்திருத்தவாதிகளோ உதவ முன்வருவது முயற்கொம்பாகவே இருக்கும்.

இந்நிலையில் அந்த வாலிபனின் நண்பனினூடாகச் செய்தி எட்டுமிடத்து மாப்பிள்ளையான வாலிபன் நண்பனிடம் முதலில் அபிப்பிராயம் கோருவான். அந்த நண்பன்முடிடா அது நல்ல பெட்டை, அதோட படிப்புக்குறைந்தாலும் வயல், காசு இதெல்லாம் இருக்குஎன்று உசிப்பேத்தி சம்மதத்தை பெற்றோரிடம் தெரிவிப்பான்.

வாலிபனின் பெற்றோர் அவர்களைச் சார்ந்த ஒரு நபரை பெண் வீட்டாரிடம் அனுப்பி தகவல் தெரிவிப்பார்கள். சம்மதம் அறிந்த பெண்ணின் பெற்றோர் இரண்டாவது முறையாக பெண்ணின் தாயாருடன் இன்னொரு உறவுக்காரப் பெண்ணுமாகச் சேர்ந்து அந்த வாலிபன் வீட்டுக்கு தின்பண்டங்களை அன்பளிப்பு கொடுக்க எடுத்துச் சென்று மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று குசலம் விசாரிப்பார்கள். பின்னர் அவர்கள் சம்மதம் வாக்குறுதியை வழங்கி தொடர்பை ஆரம்பிப்பார்கள்.

அந்த வாலிபனும் பெண் பார்க்கணுமே, அவளுடன் பேச வேண்டுமே என்று தற்கால வாலிபர்கள் நிபந்தனை விதிப்பது போல அலைய மாட்டார்கள். பெற்றோர், உறவினர் கட்டு தாலியை என்றாற்போதும் சம்மதித்து விடுவார். அதனைத் தொடர்ந்து பெண் வீட்டார் அவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து சம்பிரதாயத்திற்காக மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி மாப்பிள்ளை முடிவெடுக்கும் படலத்தை ஆரம்பிப்பார்கள். அப்போது அந்தக் கோஷ்டியிடம் மாப்பிள்ளை வீட்டாரின் பிரசன்னமாக இருக்கும் உறவினர் சீதன, ஆதனம் பற்றிய பேச்சை ஆரம்பித்து அதற்கு அவர்கள் ஒப்புதல் வாக்கு மூலமளித்த பிறகு மாப்பிள்ளை தருவதாக முடிவெடுப்பார்கள். அதன் பிறகு அங்கு வந்த பெண் வீட்டு உறுப்பினர்களுக்கு சிற்றுண்டிகள் தடல்புடலாக வழங்கப்படும். பரஸ்பர உறவுகள் சுமுகமானதும் பெண் வீட்டாருடன் உறவுகள் மேலும் இறுக்கமடையும். பலகாரம், பழவகையென பரிமாறிக் கொள்வார்கள்.

மாப்பிள்ளை வீட்டாரும் அடிக்கடி சென்று மணப் பெண்ணையும் சந்தித்து திருமண நாட்குறிக்கும் வேலையை ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு கக்கிலிப் பணம் வழங்கும் நிகழ்வாக பெண் வீட்டார் அவர்களைச் சார்ந்த இருவரையோ, மூவரையோ ஏற்பாடு செய்து பேசப்பட்ட பணத்தொகையை ஒரு நாட்குறித்து மாப்பிள்ளை வீட்டில் வைத்து அங்கு அவர்கள் சார்ந்த இருவர் முன்னிலையில் பணத்தை ஒப்படைப்பார்கள். இவ்வழக்குகள் ஆண்கள் மூலமாகவே நடைபெறும். அடுத்து அத்தினத்திலேயே திருமண நாள் பற்றிய முடிவும் சிலசமயம் பேச்சவார்த்தை நடைபெறவும் செய்யும்.

அடுத்த கட்டமாக திருமண நாள் பேசப்பட்ட பிரகாரம் ஒரு வாரத்திற்கு முன்னரேயே பெண்ணைப்பெற்ற தாயும், ஆணைப் பெற்ற தாயும் சேர்ந்து இருவருமாக அவர்கள் குடும்பத் தலைவர்களுமாக இணைந்து சொந்த உறவுகள், பிற நண்பர்கள், அறிந்தோர் ஆகியோருக்கும் வீடு வீடாகச் சென்று திருமணத்திற்கு அழைப்பு விடுப்பார்கள். அவ்வமையம் மாப்பிள்ளையும் தனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், அறிமுகமான ஏனையோருக்கும் வாய்மூலமாகவும், அழைப்பிதழ் மூலமாகவும் சொல்லி முடிப்பார். இனி திருமணம் முடிவு தினம் பெண் வீட்டில் மட்டுமே மாடாடு அறுத்து நெய்ச்சோறு சமைத்து மற்றும் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்வார்கள். அவ்விருந்தில் அரைப்பகுதி சோறு கறியாக மாப்பிள்ளை வீட்டிற்கும் மாட்டு வண்டியில் ஏற்றி உரிய நேரத்திற்கு அங்கு அனுப்பியும் வைப்பார்கள். இங்கு உணவை மாப்பிள்ளை வீட்டார் எதிர்பார்த்து சாப்பாடு வந்ததும் அதனை உண்டு மகிழ்வார்கள். திருமண நாளன்று மாப்பிள்ளை பெண் வீடு செல்லு முன் தாலிச் செப்பு கொண்டு செல்லும் ஒரு வழக்கமுண்டு. அதாவது அந்த தாலி நகை பெரும்பாலும் பெண் வீட்டாரே வாங்குவார்கள். அதை பெண் வீட்டிலிருந்து அவளின் சகோதரி ஒருவர் தலைமையில் ஒரு வாகனத்தில் பெண்களுமாகச் சேர்ந்து மாப்பிள்ளை வீட்டில் ஒப்படைப்பார்கள்.

அதனைப் பெற்ற அவர்கள் அங்கிருந்து திருப்பி அதே வாகனத்தில் மாப்பிள்ளையின் சகோதரி சூழ வேறு ஒரு சில பெண்களுடன் திரும்பவும் பெண் வீட்டிற்கு கொண்டு சென்று ஒப்படைப்பார்கள். பெண் வீட்டைச் சேர்ந்த சில ஆண்கள் வாகனம் மூலம் மாப்பிள்ளையை அழைத்து வருவதற்காகச் செல்வார்கள். அவர்களை மாப்பிள்ளை வீட்டார் வரவேற்று திருமண சிற்றுண்டிகள் வழங்கி மாப்பிள்ளையை அனைவரும் இணைந்து ஒரு சிறிய காரில் மாப்பிள்ளை அவரின் ஓரிரு நண்பர்கள் சகிதம் ஏற்றி மிக மெதுவாக வாகனத்தை செலுத்த முன்னால் மேளகாரர்கள் வாத்தியம் இசைத்து வர தொடர்ந்து பின்னால் ஆண்களும், பெண்களுமாக அந்த இரவு வேளையில் பெற்றோல் மெக்ஸ், வெளிச்சத்தில் அழைத்து வந்து பெண் வீட்டு மணப்பந்தலில் மூன்று பக்கத்திலும் தலையனை வைத்து வெண் துணியிட்டு அதில் மாப்பிள்ளையை உட்கார வைப்பார்கள்.

இத்தனைக்கும் எப்படிப்பட்ட படித்த பட்டதாரி மாப்பிள்ளையாய் இருந்தாலும் மாப்பிள்ளை ஒரு வெள்ளைச் சாறமும், வெண்ணிற முழுக் கை சேட்டுமே அணிந்திருப்பார். தலையை கைக்குட்டை மூடியிருக்கும் இதுதான் மாப்பிள்ளையின் ஆடை. பின்னர் காவின் திருமணப் பதிவுயாவும் முடிந்ததும், பெண் வீட்டில் திருமணத்திற் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி ரிபிசீ8t@னிu. இது முடிந்த கையோடு சகலரும் எழுந்து மாப்பிள்ளைக்கு கைலாகு கொடுத்து ஸலாம் சொல்லி பெண்ணிருக்கும் அறைக்கு கூட்டி செல்வார்கள் அங்கு மாபிள்ளையின் கால்களை தேங்காய் பாலால் பெண்ணின் வீட்டுப் பையனொருவன் கழுவ அவனுக்கு மணமகன் பணத்தைப் பரிசளிப்பார். அத்துடன் மணமகளின் தந்தை கைபிடித்துக் கொடுப்பார். மாபிள்ளை மஹரென்ற ஒன்றை நகையாகவோ, அன்றி நூற்றி ஒரு ரூபா பணமாகவோ வழங்குவார்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட இரட்டைக் கதிரையில் உட்காரவைத்து பெண்களாகக் கூடி பெண் மாப்பிள்ளைக்கு பால் பழமும் பருகக் கொடுப்பார்கள். அதே சமயம் சில்லறைக் காசுகள் சிலவற்றை வெற்றிலைத் தட்டில் போட்டு மணமக்களின் தலையைச் சுற்றி உயர்த்தி கொட்டிவிடுவார்கள். அதனை அங்கிருக்கும் அனைவரும் பொறுக்கி எடுப்பார்கள். அத்தோடு மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் தாலியும் கட்டுவார்.

இவை யாவும் முடிந்த கையோடு மணமகனை உடனே அவரின் நண்பர் கள் அவரின் வீட்டிற்கு மாப்பிள்ளை ஏற்றி வந்த காரில் அழைத்து வந்து விடுவார்கள். மணப் பெண் ணும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவார். விடிந்து சுமார் எட்டு மணியளவில் பெண் வீட்டிலிருந்து மணமகனுக் குரிய ஆடைகள், வாசனைத் திரவியங்கள் என்பனவற்றை ஒரு தோல் பெட்டியில் வைத்து பெண்ணின் சகோ தரியிடம் கொடுப்பார். அத னைக் கொடுத்த கையோடு பெண்ணின் சகோதரனும் அங்கு சென்று மணமகனை மணமகள் இல்லத்திற்கு அழைத்து வந்ததும், இருவ ருக்கும் காலை உணவு பரி மாறப்படும். உணவைச் சாப் பிட்டதும் மணமகன் உண வுப் பரிசாக மோதிரமொன்றை மணமகளுக்கு அணிவிப்பார். பின்னர் மணமகனை அவர் வீட்டில் கொண்டு விடப் பட்டதும் அதேமாதிரி அன்று பகலும் மதியபோசனத்திற்கு அழைத்து வரும் நிகழ்வு வழமைபோல் நடைபெறும். பிற்பகலும் இந்த விதிமுறை பேணப்படும். இனி மணமகள் அழைப்பு வைபவம். திரு மண அழைப்பு இரண்டாம் நாள் பெண்ணழைக்குமுக மாக மீண்டும் உற்றார் உறவினர் தெரிந்தவர்களுக் கொல்லாம் வீடு வீடாகச் சென்று பெண்களுக்கு மட்டும் ஒரு நாட் குறிப்பிட்டு மீண் டும் அழைப்பு விடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியும் இரவு எட்டு, ஒன்பது மணியள விலேயே நடத்துவார்கள்.

மணமகன்வீட்டுப் பெண் கள் சூழ பெரிய வாகன மொன்றில் வந்து மணமகளுக்கு கூறைச் சேலையொன்றை அணிவித்து அலங்கரித்து இரு குடும்பத்துப் பெண் களும் சேர்ந்து மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல் வார்கள். அங்கு இரவு விருந்து தடல்புடலாக நடக் கும். மணமகன் வீட்டில் இரண்டு நாட்களை கழித்த தும் பெண் வீட்டவர்கள் திரும்பவும் நூற்றியொரு முட்டைப் பலகாரம், மஸ்கட், பழம், மாப்பிள்ளை அணியக் கூடிய உடைகள் யாவும் கொண்டு சென்று கொடுத்து பிற்பகல் வேளையில் மண மகள் இல்லம் அழைத்து வந்து விடுவர்.

இத்தனை விடயங்களும் சகல மூதூர் முஸ்லிம் மக்க ளும் செய்தே ஆக வேண் டும். சீதன நடைமுறையும் வழக்கமாக இருந்து கொண்டே இருக்கிறது. இந்நடைமுறையை மாற்றியமைக்க எண்ணி இங்குள்ள மார்க்க அறிஞர் மர்ஹ¥ம் நூரு முகம்மது ஆலிம் என்பவர் 1975 ஆம் ஆண்டில் தனது மகனுக்கு பகல் விருந்து மட்டும் வழங்கி நண்பகல் ஒரு மணியுடன் திருமணத்தை நடத்தி முடித்து மணமகளை யும் அன்றே தன் இல்லம் அழைத்து வந்து விட்டார். அன்றிலிருந்து அவர் ஆரம் பித்து வைத்த அந்த திரு மண நடைமுறை இன்று வரை மூதூர் வாழ் முஸ்லிம் மக்களால் பேணப்பட்டு தாலி கட்டுதல், செப்புத் தூக்கல், மேளகாரர்கள் அழைப்பு இவையெல்லாம் தவிரிக்கப்பட்டு புதிய மாற்றத்தில் திருமணங்கள் நடைபெறுகிறதெனலாம். பழமை மாறுவதும், புதுமை புலருவதும் நியதியே!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com