Contact us at: sooddram@gmail.com

 

தகவல் தொழில்நுட்ப பயங்கரவாதம்

Channel 4 போலி ஒளி நாடாக்கள்

மனித உரிமை மீறல்களா? நீதிக்குப் புறம்பான படுகொலைகளா? யுத்தக் குற்றங்களா? சீச்சீ! இவை எதுவுமே இலங்கையில் இடம்பெறவில்லை, இப்படி எவனாவது அடித்துக் கூறுவானேயானால் அவன் அடிமுட்டாளாகவே இருப்பான். 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக ஜே.ஆர். அரசு கட்டவிழ்த்து விட்ட கொடூரம் அப்பட்டமான மனித உரிமை மீறல். அது ஓர் இன சங்காரம். பிரேமாவதி மனம்பேரி, சாரதாம்பாள், அகிலாண்டேஸ்வரி, கிருஷாந்தி குமாரசாமி வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அடங்கும் வெகு சிலர். சந்திக்கு வந்த வெகுசில சம்பவங்கள் இவை. சந்திக்கும் சட்டத்திற்கும் முன்னால் வராமலேயே சமாதியாக்கப்பட்ட சம்பவங்கள் பற்பல.

பிரேமாவதி மனம்பேரியையும் கிருஷாந்தி குமாரசாமியையும் கெடுத்துக் கொன்ற படையினரை சட்டம் தன் பிடிக்குள் சிக்கவைத்தமை பாராட்டுக்குரியது. இவை வெறும் உதிரிச் சம்பவங்கள் என்றாலும் கண்டனத்துக்குரியவையே. நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் கைதேர்ந்தவர்கள் புலிகள். சிங்களப் படையினர் என்பார்கள் அவர்கள். தெமழ கொட்டியா என்பார்கள் இவர்கள். இரு தரப்பினர்களின் மோதலில் அதிகம் பலியானவர்கள் அப்பாவிப் பொது மக்களே. இருந்தாலும் வகை தொகையின்றி அப்பாவி தமிழ் மக்களை அதிகளவுக்கு கொன்றவர்கள் புலிகள். மீண்டும் சந்திக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் சனல் - 4 ஒளிநாடா விவகாரத்தை ஓர் அறிவு சார்ந்த அலசலுக்கு உட்படுத்துவதற்காகவே இந்த முன்னோட்டம் தரப்படுகின்றது.

சனல் - 4 என்பது பிரிட்டனின் இரண்டாவது பெரிய தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் இறுதி யுத்தத்தோடு தொடர்புபட்ட பல ஒளி நாடாக்களை இந்த நிறுவனம் ஒளிபரப்பு செய்திருக்கிறது. இதில் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ம் திகதி காண்பிக்கப்பட்ட ஓர் ஒளிநாடாவும் இந்த வருடம் நவம்பர் 30ம் திகதி காண்பிக்கப்பட்ட மற்றொரு ஒளி நாடாவும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கின்றன. இலங்கைப் படையினர் நீதிக்குப் புறம்பான படுகொலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதைக் காட்டும் பாணியில் இந்த ஒளிநாடா காட்சிகள் அமைந்திருந்தன. புலிகளை அல்லது தமிழர்களைப் பிடித்து நீதிக்கு முரணான முறையில் படையினர் சுட்டுக் கொள்கிறார்கள் என்பதைக் காட்டி அபாண்டம் கற்பிப்பதற்காகவே இந்த வீடீயோ காட்சிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பது இலங்கை அரச தரப்பு வாதம். உண்மையிலேயே இவை யுத்த களப் பகுதிகளிலேயே எடுக்கப்பட்டன என்பது புலம்பெயர்வாழ் புலிச்சார்பு தரப்புகளின் வாதம். இந்த வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில் மனித உரிமை அமைப்புகளென தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகள் குய்யோ முய்யோ என்று கூக்குரல்களை எழுப்பி வருகின்றன. இவை சர்வதேச மட்டத்திலும் பிரச்சினைகளைக் கிளப்பி இருக்கின்றன.

கடந்த வருடம் ஜி.எஸ்.பி. பிளஸ் என்ற வரிச்சலுகைக்கு இலங்கை விண்ணப்பித்திருந்த வேளையிலேயே அந்த காணொளிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இந்த வருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றச் சென்றிருந்த வேளையிலேயே ஒளிநாடா காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. எனவே சரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே இந்த ஒளிநாடா காட்சிகள் காண்பிக்கப்பட்டன என்று அரச தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் நியாயங்கள் இருக்கின்றன. அத்துடன் இது ஒரு பொய் பிரசாரம் என்று அரசாங்க தரப்பில் தெரிவிக்கும் மறுப்புக்கு இது வலுச்சேர்ப்பதாகவும் இருக்கின்றது.

மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் காட்சிகள்என்ற எச்சரிக்கை யோடுதான் கடந்த வருடம் ஒளிநாடா காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கண்கள் கட்டப்பட்ட ஒருவனின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருக்கின்றன. நிர்வாணமாக அந்த மனிதனை இராணுவச் சீருடை அணிந்த ஒருவன் இழுத்து வந்து நிலத்தில் இருக்க வைத்துவிட்டு தலையின் பின்புறமாக சுட்டுக் கொல்கிறான். சுடுவதற்கு முன்னர் அந்த சீருடை அணிந்தவன் பூட்ஸ் காலால் கொல்லப்பட்டவனின் முதுகில் உதைகிறான். மேலும் எட்டு நிர்வாணச் சடலங்கள் அங்கு நிலத்தில் சிதறிக் கிடக்கின்றன. ஒரு சடலம் துணியால் மூடப்பட்டிருக்கின்றது. அது ஒரு பெண்ணின் கடலமாக இருக்கலாம். இந்த காட்சி காண்பிக்கப்படும் போது சுடு, அடி போன்று சிங்களத்தில் உத்தரவிடும் குரல்கள் கேட்கின்றன. இந்தக் குரல்கள் அசரீரி போன்று ஒலிக்கின்றன. கதைக்கும் கதா பாத்திரங்களின் வாயசைவோ அல்லது யாரென்பதோ அங்கே காண்பிக்கப்படவில்லை.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதும் சுட்டவர்களும் சுடுபவரும் சிங்களப்படையினர் என்பதுமே அந்த ஒளிநாடாவின் மறைபொருள். இனங்காணப்படாத இடம் ஒன்றில் எடுக்கப்பட்ட ஒளிநாடா அது. கொல்லப்பட்டவர்களும் கொலையாளிகளும் யாரென அச்சொட்டாக இனம் காட்டப்படவில்லை. சிங்களப்படை வீரர் ஒருவரே கையடக்கத் தொலைபேசி மூலம் இவற்றைப் படம் பிடித்தார் என்று சனல்- 4 விளக்கம் அளித்தது.

இந்த ஒளிநாடாவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கையளித்தவர் ஜோநாதன் மில்லர் என்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மில்லர் மேற்படி தொலைக்காட்சி நிறுவனத்தின் வெளிவிவகார நிருபர் என்றும் கூறப்பட்டது. இந்த ஒளிநாடாவை தன்னிடம் கையளித்தவர்கள் இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர் அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மில்லர் தெரிவித்திருந்தார். ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு அந்த பத்திரிகையாளர் அமைப்பு இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். முகமும் முகவரியுமில்லாத அந்த போலி அமைப்பு அப்போதுதான் முதல் தடவையாக முகம் காட்டியது என்பது ஒருபுறமிருக்கட்டும். கையடக்கத் தொலைபேசி மூலம் இவற்றைப் படம் பிடித்திருக்க முடியாது என்று அப்போதே தேசிய, சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதனை நிராகரித்திருந்தார்கள் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புலிகள் வன்னி யுத்த களத்தில்தான் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரோம், பெல்ஜியம், தாய்லாந்து, இந்தியா, எரித்திரியா ஆகிய நாடுகள் உட்பட கிட்டத்தட்ட 12 நாடுகளில் புலிகளின் சர்வதேச அமைப்புக்கள் பலமாக இயங்கி வந்த காலம் ஒன்றிருந்தது. நாடு கடந்த அரசாங்கம் என்றெல்லாம் புலம்பெயர் வாழ் தமிழர்கள் சிலர் இப்போதும் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். மேற்படி ஒளிநாடா ஒளிபரப்பப்பட்ட போது அவற்றின் உண்மைத் தன்மையை ஊர்ஜிதப்படுத்தி நம்பிக்கையை ஊட்ட சனல் -4 தவறியமை குறிப்பிட்ட ஒளிநாடா பற்றி பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியது.

வீடியோவின் மூலக்காட்சிகளில் அதிகமானவை கணனியில் மேற்கொள்ளப்பட்ட கிராபிக் காட்சிகளாகவே தென்படுவதாக நியூயோர்க்கில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றொஸ் கூறி இருந்தார். ஊடகங்களுக்குப் பாரிய பொறுப்பு இருக்கின்றது. வெறும் சகட்டு மேனிக்கு படம் காட்டக் கூடாது. எங்கே? எப்போது? எவ்வாறு? ஏன்? எப்படி? என்ற விளக்கங்களுடன்தான் பொறுப்புள்ள ஊடங்கள் இவற்றை வெளியிட வேண்டும். அவைதான் ஊடக தர்மம். வெறுமனே ஊடக சுதந்திரம் என்று வாய்கிழிய கத்துபவர்களுக்கு ஊடக பொறுப்புகள் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

கடந்த நவம்பர் 30 ம் திகதி சனல்- 4 காண்பித்த ஐந்து நிமிட ஒளிநாடாவும் இவ்வாறு சேறு பூசும் நோக்கத்துடன் தான் தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்று லண்டனில் உள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கை குறிப்பிடுகின்றது. 16 மாதங்களுக்கு முன்னர் காண்பிக்கப்பட்ட அதேபோன்ற தொரு ஒளிநாடாவே இதுவென்றும் உயர் ஸ்தானிகராலயம் வகைப்படுத்தி இருக்கின்றது. ஆனால் இதில் ஓர் அதிகரித்த தன்மை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலத்தில் 7 சடலங்கள் காணப்படுவதாகவும் 7 பெண்கள் கொல்லப்பட்டிருப்பதாக காட்டப்படுவதாகவும் ஏ.எப்.பி. என்ற பிரஞ்சு செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக் கின்றது. காண்பிக்கப்பட்ட சடலங்களில் ஒன்று புலிகளின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய இசைப்பிரியா என்பவரினது என்றும் அநாமதேயங்களை மேற்கோள் காட்டி சனல்- 4 தெரி வித்திருக்கின்றது.

இலட்சக்கணக்கான மக்களை வெளியேற விடாமல் புலிகள் தடுத்து வைத்திருந்த நான்கு கிலோ மீற்றர் நீளமான முள்ளி வாய்க்காலில் தான் இறுதி யுத்தம் நடைபெற்றது. இறுதி யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற தேடுதலின் போது 350 சடலங்கள் கைப்பற்றப்பட்டன என்று இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் 30 பேரின் சடலங்கள் புலிகளின் உயர் மட்ட தலைவர்களுடையது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் இறுதி யுத்த காலச் சம்பவங்களென்று கூறப்படுவதை முன்வைத்து இலங்கை அரசை கண்டிக்கும் தீர்மானம் ஒன்றினை ஐரோப்பிய ஒன்றி யம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நிறைவேற்றி இருந்தது. 785 அங்கத்தவர்க ளைக் கொண்டது ஐரோப்பிய பாராளுமன்றம். 70 உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தில்தான் மேற்படி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதான் ஐரோப்பிய ஜனநாயகம்.

இறுதியாக நக்கீரனை சாட்சிக்கு அழைக்க வேண்டியுள்ளது. நெற்றிக்கண் ணைக் காட்டிலும் குற்றம் குற்றமேஎன்று சொன்ன புராதன காலத்து நக்கீரனை அல்ல. தமிழகத்தில் இருந்து வெளிவரும் நக்கீரன் சஞ்சிகையையே. பிரபாகரன் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திக தியே கொல்லப்பட்டு விட்டார். பிரபாகரனின் மரணச் செய்தியை படத்துடன் காண்பித்த தொலைக்காட்சி செய்தியை பிரபாகரனே கதிரையில் அமர்ந்திருந்து. பார்ப்பது போன்ற காட்சியை நக்கீரன் சஞ்சிகை கடந்த ஓகஸ்ட் மாதம் பிரசுரித்திருந்தது. அதாவது அன்டன் பாலசிங்கமும் பிரபாகரனும் அமர்ந்திருந்து உரையாடும் ஒரு படத்தை எடுத்து அதில் கணனி மூலம் கிரபிக் செய்து மாற்றம் செய்யப்பட்டிருந்ததை அப்படியே காண்பித்திருந்தது.

கணனியும் கிரபிக் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்திருக்கும் நவீன யுகத்தில் போலி ஒளிநாடாக்களுக்கு பஞ்சமா என்ன? இவ்வாறுதான் சனல்- 4 ஐக் கேட்க வேண்டியுள்ளது.

(சுஐப் எம். காசிம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com