Contact us at: sooddram@gmail.com

 

தேசிய கீதம் தேசியப் பிரச்சனையா? இனப்பிரச்சனையின் ஒரு அங்கமா?

(இரா.வி .விஸ்ணு)

இலங்கை என்றொரு தீவு உலக வரைபடத்தை ஒட்டியே உலக நாடுகளுக்கு அறியப்பட்டிருக்கும் ஒருகாலத்தில . இன்று வளர்சியடைந்த சர்வதேச நாடுகளுக்கு இணையாக உலக சாமானிய மக்கள் பலரும் அறியத்தக்க நாடாக சர்வதேச ஊடகங்கள் தம் செய்திகளில் முக்கியத்துவப்படுத்தப்படும் நாடாகவும் மாறுவதற்கு வழிசமைத்தவர்கள் தமிழர்கள் என்பதை நாம் தைரியமாக சொல்லலாம். இலங்கையில் இனப்பிரச்சனை ஒன்றின் காரணமாக ஆயுதப்போராட்டம் ஒன்று நடைபெறுகிறதென்று அல்லது நடைபெற்றதென்ற  உலக சாமானியர் பலருக்கு தெரியும்.

அத்தோடு, இலங்கையின் தமிழ் என்கிறதொரு மொழி பேசப்படுகிறது என்று தெரிந்த பல உலக சாமானிய மக்களுக்கு சிங்கள மொழி பற்றி தெரியாது. உலக ரீதியில் பார்த்தால் சிங்க மொழி என்பது ஒரு சிறுபான்மை மொழியே, இருந்து ஒரு சிறுபான்மை மொழி இலங்கையில் ஒரு பெரும்பான்மை மொழியாக காணப்படுவது வரவேற்க்கத்தக்க விடையமே. எமது நாட்டை பொறுத்தவரை ஒரு சிறுபான்மை மொழி தன்னைவிட பலமடங்கு பழமையும் பெரும்பாமையும் மிக்க மொழியினை ஒடுக்க நினைப்பத , புறக்கணித்து இல்லாதொழிக்க நினைப்பது வேடிக்கையான விடையம் அதிலும் மிகவும் ஆழமாக சிந்திக்கப்படவேண்டிய விடயம்.

பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் இன்னவாதம , மதவாதம் , மொழிவாதமேன்பது தவறாகவே கணிக்கபடவேண்டிய அல்லது தவிர்க்கப்படவேண்டிய விடயமாகவிருப்பினும் எமது நாட்டை பொறுத்தவரை முஸ்லீம் , தமிழ் , மலையகமென அரசியல் கலாசார ரீதியில் தனி இனங்களாக பிரிக்கப்பட பல்லினங்களும் பொதுவாக பேசுகின்ற மொழியாக தமிழ் காணப்படுகிறது. ஆகவ  இம மொழிக்கான பாதுகாப்பு என்பதுவும், உரிமைகள் என்பது பாதுக்ககபட வேண்டியவை. தாய் மொழியை காக்கவேண்டி  கடம தமிழ் பேசும் அனைவருக்கும் இருக்கின்றது. அத்தோடு சக மொழியினை மதிக்கவேண்டியதும் சுதந்திரம் கொடுக்கவேண்டியதுமான கடமை இலங்கை பிரஜை ஒவ்வொருக்கும் இருக்கிறது. இதை சிங்கள  மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டுமேன்பதே அணைவரினது அவா .

ஏனைய நாடுகளைப்போன்றே இதுவரைகாலமும் இலங்கையின் தேசிய கீதமேன்பது சுதந்திரம் பெற்றதன் அடிப்படையிலும் தேசிய கீதம் உருவாக்கப்பட்டது. அவ்வாறே பாடப்பட்டும் வந்தது (இக்கருத்தில் முரண்பாடுகளும் சிலருக்கு இருக்கலாம்). இப்போது புதிதாக கிளப்பப்பட்டிருக்கும  ிரச்சனை மிகவும் பாரதூரமான விடயம் . அதுவும் இலங்கையின் அனைத்து சாமானிய மக்களையும் உணர்வுரீதியில் கட்டிப்போடவேண்டிய, உணர்வுரீதியில் கையாளப்படவேண்டிய விடயத்தினை, சமூக அமைப்புகளிடமும , பொதுமக்களிடமும் கலந்தாலோசிக்காமல், ஜனாதிபதி , அமைச்சரவை என்ற ரீதியில் தன்னிச்சியாக ஒரு யோசனையோ, தீர்மானமோ எடுப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதனை அபிவிருத்தி, சட்டம், திட்டம  என்கிற ரீதியில் பார்க்கமுடியாது. தேசிய கீதம் தொடர்பாக அண்மைக்காலங்களில் ஊடக வாயிலாக வந்த செய்திகள், தேசியகீதம் தொடர்பான சிக்கல்கள் உற்று கவனிக்கபடவேண்டியவை. அது மாத்திரமல்ல இப்பிரச்சன  ுறிப்பிட்ட சில கால அவகாசத்துக்குள்ளேயே தீர்கப்பட்டாகவேண்டும்.

எமது தமிழ் பேசும் சமூகத்தை (முஸ்லீம ,தமிழ் ,மலையகம்) பொறுத்தவரை இலங்கையில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்படுமானால் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளையும், ஜனநாயகவழி போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டிய கடமை தமிழ் ,முஸ்லீம், மலையக அரசியல் வாதிகளுக்கும் , நாட்டில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் இருக்கிறது . அதற்காக தயாராக இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த விடயத்தில் வடக்க , கிழக்கு , மலையகம் , மேல்மாகணம் என தமிழ் பேசும் மக்கள் அனைவரினது ஆதரவும் கிடைக்குமென்றே நம்பலாம் . ஒரு சிலர் அமைச்சு, பதவிகளுக்கும், அதிகாரங்களுக்குமாக இவ்விடயத்தில் பின்வாங்குவார்களாக இருந்தால் அது ஒருவகையில் மொழித்துரோகத்துக்கு ஒப்பானதாகிவிடும் (மீண்டும் துரோகி பட்டமா ..!) என்பதை உணர்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

"இலங்கையில் தேசிய கீதம் ஒன்றே இருக்கவேண்டுமென்பது சாதகமாக பரிசீலிக்கப்படவேண்டிய விடயமே". அப்படியாக இருந்தால் தேசிய கீதத்தினை முற்றாக மறுசீரமைக்கலாம். தமிழ , சிங்கள மொழிகள் கலந்த ஒரு தேசிய கீதத்தினை இலங்கையின் தேசியகீதமாக மறுசீரமைப்பது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்குமென தோன்றுக்கின்றது. அதுமாத்திரமல்ல போருக்கு பின்னதான இன ஒற்றுமையின் திறவுகோலாகவும், இலங்கையின் அனைத்து இன மக்களுக்கும் தேச பக்தியினை ஊட்டுவதாக தேசியகீதம  அமைவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது.

ஆனாலும் ஒரு நாட்டின் தேசிய கீதத்தினை மறுசீரமைப்பதேன்பது சாதரணமான விடயமல்ல. மறு சீரமைப்பதற்கான கருத்துக்கள் இரு மொழிகள் கலந்த தேசிய கீதமாக மறுசீரமைக்கவேண்டும் அல்லது உருவாக்கப்படவேண்டும் என்ற ரீதியில  ிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக முற்போக்குவாதிகளிடமிருந்து , அரசியல்வாதிகளிடமிருந்து பலமாக எழவேண்டும்.

யதார்த்த சூழ்நிலைகளை பார்த்தால் இனவாத கருத்துக்களே இன்றுவரை தேசியகீத சர்சை தொடர்பாக ஊடகங்களில் பிரதிபலித்திருக்கின்றன. அப்படி பார்த்தால் சிங்கள சமூகத்திலிருந்து இனவாத கருத்துக்கள் பலமாகவும் அக்கருத்துக்களை சமாளிக்க கூடியவகையில் தமிழ் பேசும் சமூகத்தின் சில அரசியல்வாதிகளிடமிருந்த  கவலைகளும், எதிர்கருத்துக்களும் தேசியகீத சர்ச்சை தொடர்பில் வந்திருக்கின்றன. இன ஒற்றுமை தொடர்பில் சிங்க சமூகத்திடமிருந்தோ, தமிழ் பேசும் சமூகத்திடமிருந்தோ உருப்படியான கருத்துக்களோ அல்லது செயற்பாடுகளோ பெரிதாக இதுவரை எழுந்ததாக இல்லை. ஆரோக்கியமான இலங்கையினை கட்டி எழுப்பவேண்டுமானால் இன ஒற்றுமை என்பது இன்றியைமயாத ஒன்றாக இருக்கிறது. இதனை அரசியல்வாதிகளும் மக்களும் புரிந்துகொள்ளவைப்பதற்கான செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படவேண்டும .

தேசியகீத பிரச்சனை உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த சமயத்தில் இலங்கையராகிய நாம் கவனமாக இதனை கையாளவேண்டிய தேவை இருக்கிறத . மேற்சொன்னதுபோல் எனது தமிழ்பேசும் சமூகம் இப்பிரச்சனையில் விழிப்பாகவே இருக்கவேண்டும். அதைவிடவும் இலங்கையின் அரச இயந்திரமும , ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ் விடயத்தில் பொறுப்பாக  நடக்கவேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

"இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்

பெருமை பிறங்கின்று உலக "

( நன்மையெது தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை

மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவர )

(இரா.வி.விஸ்ணு)(மார்கழி 25, 2010

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com