Contact us at: sooddram@gmail.com

 

'எல்லோருக்கும் என் இனிய நத்தார் வாழ்துக்கள் உரித்தாகட்டும்' - வே.பிரபாகரன்

 

யேசு பாலகனின் பிறப்பின் மகிமை அறியாதோர்; என்னைபோன்று பூலோகத்திலும், மேல்லோகத்திலும்  துன்பவியல் (நரக) வாழ்வை அனுபவிப்பார்கள் - வே.பிரபாகரன்

 

சமாதானமும், சந்தோசமும் நமது நாட்டில் இப்பொழுது நிலவுவதாக நான் அறிகின்றேன். நான் இப்பொழுது மேல்லோகத்தில் (நரகலோகத்தில்)  இருப்பதால் இந்த மாதரியான ஒரு நல்ல சூழ்நிலை நமது நாட்டில் காணப்படுவதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகின்றேன். இருந்தாலும் எனக்கு அடிமைபபட்டிருந்த வன்னி மக்கள் என்னை அம்போ என்று விட்டு விட்டு ஓடியதால் இன்னமும் துன்பத்தை அனுபவித்து கொண்டிருப்பதாக இங்கு (இறந்த பின்;) வருபவர்கள் சொல்லுகிறர்ர்கள் அதை நினைத்து கொஞ்சம் சந்தோசமாக இருக்கின்றேன்.

 

நான் நாட்டில் இப்பொழுதும் உயிருடன் இருந்திருந்தால,; இப்படியெல்லாம் மக்களை சந்தோசமாக இருக்கவிட்டிருப்பேனா?

எத்தனை குண்டுகள் வைத்து எத்தனை உயிர்களை குதறி எடுத்திருப்பேன், எத்தனை கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் வாங்குதல், எத்தனை களம் அமைத்து பலபேரின் பிள்ளைகளை பலிகொடுத்திருப்பேன்.

அதற்குள் அற்ப ஆயுளில் என்னை இங்கு அனுப்பி வைத்துவிட்டார்;கள்.

 

மேல்லோகத்துக்கு என்னால் கஸ்ரப்பட்டு மரணமடைந்து வந்த மக்கள் என்னை இவன்தான் பயங்கரவாதகரன் (பிரபாகரன்) என எமனிடம் காட்டிக்கொடுத்து விட்டார்கள். படுதுரோகிகள். எல்லாம் நான் செய்த பாவங்கள்.

 

புலம்பெயர் தேசங்களில் மாவீரர் விழா கொண்டாடியதாக நான் அறிந்தேன். ஆனால் இங்கே என்னோடு இருக்கும் மாவீரர்கள் என்னை ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை. என்னை பார்த்தால் மகா துரோகி, மகா பச்சை கள்ளன், மகா படுபாதகன், மாகா கோழை என்றுதான் அழைக்கிறார்கள்.

 

என்னுடைய இளைய மகன் பாலச்சந்திரன் கூட என்னை பார்த்து முகத்தில் காறிதுப்பிவிட்டு போறான். ஏன்ரா இப்படி செய்கிறாய் என்று நான் கேட்டால். என்னையொத்த பையன்கள் எத்தனை பேரை பிடித்து ஆயுத பயிற்சி கொடுத்து பலியெடுத்த பாதகன் நீ என்கிறான்.

 

என் பெரிய மகனுக்கு என்னைவிட இங்கு கடுமையான தண்டணை  நாளும் கிடைக்கிறது. ஏன்என்றால், அவர்தானாம் கடைசிக்கட்ட நாட்களில் சனத்தை ஓடவிட்டு சுட்டவராம். அவரால் சுடப்பட்ட சனம்தான் அவருக்கு சரியான அடிபோடுகிறார்கள்.

 

அவனுக்கு சைகிலே ஓடத்தெரியாது, ஆனால் அங்கு பூலோகத்தில் அவன் விமானம் ஓட்டியாக இருந்ததாக யாரே கதைகட்டிவிட்டிருக்கிறாஙகள். அவனுக்கு பிளேன் ஓடதெரிந்திருந்தால் எங்களிடம் இருந்த 3 பிளேனில் நாங்கள் தப்பி எங்கயாவது போயிருக்கலாமே?

 

வெளிநாடுகளில் பொய்யையே கக்கி எழுதுகின்ற ஊடகங்கள்தான் இந்த கதையை கட்டிவிட்டிருக்கிறார்கள். பரதேசி நாய்கள்.

 

பூலோகத்தில் நான் இருக்கும்போது தேசிய தலைவர் என அழைத்தவர்கள் என்னை இங்கு தேசத்தை அழித்த 'தேச துரேகி' தறுதலையன் என்றுதான் அழைக்கிறார்கள். யாரடா உனக்கு இந்த பட்டம் தந்தது என அமரர் அமிர்தலிங்கமண்ணை என்னை இங்கு கேட்டுக் கேட்டு அடிக்கிறார்;. ஐயோ! ஐயோ! அந்த பட்டத்தை எனக்கு  நானேதான் வைத்தனான் என்று சொன்னாலும் அந்தாள் திரும்ப திரும்ப அடிக்கிறார்;. தேசியம் என்றால் என்னவென்று உனக்கு தெரியுமாடா எனக்கேட்கிறார். நான் 17வயதில்  ஆயுதம் எடுத்து இயக்கம் ஆரம்பித்த எனக்கு தேசியம் என்றால் எப்படி அண்ணை தெரிந்திருக்கும் என்றுசொன்ன பிறகுதான் சமாதானம் ஆகியவர்.

 

அங்கு என்னை மேதகு என அழைத்தவர்கள் இங்கு மொக்கு முண்டம் என்று அழைக்கிறார்கள். இங்கு நான் எல்லாருக்கும்  பணிவிடைசெய்கிறேன். இந்த நரகலோகத்திலும் பலபிரிவுகள் உண்டு. நான் ஏற்கனவே இராணுவத்திடம் சரணடைந்து மிகவும் பயங்கரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பூலோகத்திலேயே நரகத்தை அனுபவித்து இங்கு வந்ததால் ஓரளவு இங்கு எமனிடமும், சூரனிடமும் அடிவாங்குவது  குறைவு.

 

என்னுடன் சேர்ந்து சரணடைந்த பொட்டம்மன் போன்றோர்; இன்னும் இலங்கையில் நரகலோகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அனேகமாக இங்கு வந்த பின்பு அவருக்கு கடுமையான தண்டனை உண்டு. ஏன்என்றால் பூலோகத்தில் நடந்த அனைத்து தற்கொலைத்தாக்குதல்களும் அவர்தானே நடத்தியவர்.

 

சரணடைந்த எனது மகன்கள் இருவரையும் ஆமிதான் அடித்து சித்திரவதை செய்து கொன்றார்கள். எனது சின்ன பையனை ஆமிக்காரர்கள் காலால் மிதித்துதான்கொன்றவர்கள். அதுவும் எனக்கு முன்னால். என்னை நிர்வாணமாக இரண்டுநாள் வைத்திருந்து தான் அடித்தவர்கள். அந்த துன்பத்தை உலகத்தில் யாரும் அனுபவித்திருக்கமாட்டார்கள். ஆதனால்தான் இங்கு எனக்கு தண்டனை குறைவு. எனது மனைவி எங்கு இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது. பூலோகத்தில் இருக்கிறாளா அல்லது மேல்லோகத்தில் இருக்கிறாளா என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.

 

கடசிக்கட்ட போரில் நான்தான் சனத்தை போகவிடாமல் மறித்து வைத்திருக்கும்படி போராளிகளிடம் சொல்லி வைத்தனான். அப்பாவி சனங்கள் செத்ததற்கு நானே பொழுபெறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எங்கள் இயக்கத்துக்கு வேலைசெய்த பணம்பிடுங்கும் கிரிமினல்களதான்   என்னை இப்படி சனத்தை பிடித்து வைத்திருக்க சொன்னவர்கள். அப்பதான் ஐ.நா.சபை தலையிட்டு போரை நிறுத்தும் என்றார்கள். அவர்களை அங்கு பார்த்தால் சொல்லுங்கள் இங்கு வரும்பொழுது அவர்களுக்கும் கடுமையான தண்டணை கிடைக்கும் என்று. என்னால் அல்ல இயமனால்.....

 

எனது விடுதலை (படுகொலை) புலிகள் இயக்கத்தில் இருந்த முக்கியமான தளபதிகள் எல்லோரும் இலங்கையில் சிறையில்தான் இருக்கிறார்கள். என்னோடு சரணடைந்த 47பேரைதான் இராணுவம் கடுமையாக சித்திரவதை செய்து கொன்றது. அதில ஒருத்திதான் இசைப்பிரியா என்பவள். ரமேஸ் சரணடைந்து சித்திரவதை செய்து படமெடுத்த மாதிரி, என்னையும் சித்திரவதை செய்யும்போது  படமெடுத்து வைத்திருக்கிறார்கள். இது சரத்பொன்சேகாவுக்கு தெரியும். அவர் வெளியில் சொல்லிபோடுவார் என்ற பயத்தில்தான் அவரை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

 

நாங்கள் சரணடைவதற்கு முக்கிய காரணம் ஐ.நா சபை காரர்களும், எரிக்சொல்கெய்ம் என்ற கேடியும், மற்றும் இந்தியாவில் வாழும் கிரிமினல் பாதரான ஜகத்கஸ்பார் என்றவனும் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியில்தான் நாங்கள் ஆமியிடம் வெள்ளை கொடியுடன் சரணடைந்தோம்.

 

மேற்குலகத்தினரை நம்பி வெள்ளை கொடியுடன் சரணடைந்த எங்களை கொன்றதற்காகதான் ஐ.நா.சபையால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் போர்க்குற்றமாகும். மற்றும்படி போரில சனம்செத்ததற்காக அவர்கள் கவலைப்படவில்லை. அது போர் குற்றமில்லை. 

 

போர் என்றாலே குற்றம்தானே? போர் நடந்தால் சனம் சாகும்தானே. மேற்குலகத்தினருக்கு இதுதெரியாதா? இந்த சண்டையை சாட்டி ஈராக், ஆப்கானிஸதான் போன்று இலங்கையை ஆக்கிரமிக்கலாம் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் இவங்களை இலங்கைகுள் புகவிடாமல் மகிந்த அண்ணை புத்திசாலித்தனமாக சைனா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் இவங்களின் திட்டத்தை முறியடித்து விட்டார்.

 

அமெரிக்கா தலைமையில் இயங்கும் ஐ.நா.சபை உட்பட, அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் சனத்தை சாகடித்து பிழைப்பு நடத்துகின்ற அமைப்பினர்கள்தான். இவங்கள்தான் உலக மகா பயங்கரவாதிகள்.

 

மேற்குலதினர்தான் எங்கள் நாட்டில் சண்டையை 30வருடமாக நடத்தியவர்கள். அவர்களுக்கு, மேற்குலகத்துக்கு பிழைப்புக்கு போன புலிப்பினாமிகள் கொடுத்த காசை நம்பித்தான் எங்களுக்கு ஆயுதம் தந்து சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே சண்டையை தொடர்ந்து நடத்தி 30 வருடமாக பிழைப்பு நடத்தியவர்கள்.

 

நாம் நடத்திய போராட்டமான கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் வாங்குதல், குண்டுவைத்தல் போன்ற பயங்கரவாதம்  செயல்களை அவர்களின் நாடுகளில் செய்யவிடுவார்களா? ஒருவனை கொலைசெய்தாலே 20வருட தண்டனை விதிப்பவர்கள் எங்கள் நாடுகளில்  நாங்கள் நாளும்கொலைகள் செய்தோம். அப்படியிருக்கும் போது, எப்படி எங்களை ஐ.நா.சபையினர் அங்கீகரிப்பார்கள்,  இதையே இந்த  வெளிநாடுகளில் வாழும் மந்தைகூட்டங்களான,   புரிந்துகொள்ளக்கூடிய அறிவே இல்லாத முண்டங்கள்தான் இந்த புலிப்பினாமிகள்தான் எங்களின் இந்த பயங்கரவாத போராட்டத்தை அங்கீகரிப்பார்கள் என்று கூறி எங்களை வளர்த்தவர்கள்.

 

உண்மையில் போர்க்குற்றவாளிகள் என்றால் வெளிநாடுகளிலிருந்து போர் நடத்தும்படி காசுகொடுத்தவர்கள்தான். இவர்களைதான் உண்மையில் சிறையில் பிடித்து அடைக்கவேண்டும். ஆனால் அவங்கள் சொல்லுகிறார்கள் மகிந்த போர்க் குற்றவாளியாம் என்கிறார்கள். அப்ப நமது இயக்கத்துக்கு இவங்கள் எதற்கு காசு கொடுத்தவர்கள்? இந்த மாதிரியான பொய்யன்களால்தான் நமது இனம் மிகவும் துன்பப்பட்டது.

 

மேற்குலகத்தினர் தங்களுக்கு என்று பல சட்டங்கள் இயற்றி வைத்துகொண்டு மடமைகள் மாதிரியான எங்களை (ஆபிரிகர்கள், தமிழர்கள், தலிபான்கள்) போன்றவர்களின் உயிரை எடுப்பதுதான் அவர்களின் வேலை.

 

மேற்குலகத்தினர் தூள் விற்பவனை பிடித்து சிறையில்  அடைப்பார்கள் ஆனால் தூள் வாங்குபவனை ஒன்றும்செய்ய மாட்டார்கள். ஆனால்பாருங்கே ஆயுதம் வாங்குபவர்களை பிடிப்பார்கள் ஆயுதம் விற்பவனை ஒன்றும்செய்ய மாட்டார்கள். ஏன்தெரியுமோ மேற்குலகத்தினர்தானே ஆயுதம் விற்பவர்கள்.

 

மேற்குலகத்தினருக்கு தெரியாமலா எங்களுக்கு ஆயுதங்கள் வந்தது. நாங்கள் ஆயுதம் வாங்குவதற்கு எமக்கு காசுகொடுத்து உதவிய புலிப்பினாமிகளை கிரிமினல் சட்டத்தில் போட்டு அடைத்திருந்தால் இப்படியெல்லாம் நமது நாடு குட்டிச்சுவராகியிருக்குமா?

 

ஈழத்தமிழர்களே முதலில் இந்தியனை நம்பாதீர்கள். அதிலும் இந்திய தமிழனை துப்பரவாக நம்பாதீர்கள். நாங்கள் சித்திய ஒவ்வொரு துளி இரத்ததை காசாக்கி குடித்தவர்களே இந்த நெடுமாறன், கோபாலசாமி, சீமான் போன்றவர்கள்தான்.

 

நான் இப்பொழுது மறைந்திருப்பதாக வைக்கோ அறிக்கை விட்டிருக்கிறார். இதிலிருந்தே தெரிகிறது இவன்  பொய் சொல்லுகிறான் என்று. நீங்களே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நான் என்  வாழ்நாள் முழுவதுமே மறைந்துதானே வாழ்ந்து வந்தேன். எப்பொழுதாவது வெளியில் வெளிக்கிட்டு திரிந்திருக்கிறேனா? எதே இப்பொழுதுதான் நான் மறைந்து இருப்பதாகசொல்லுவதே பொய்தானே!.

 

இவன் சீமானை எனக்கு யார் என்றேதெரியாது. வன்னி காட்டுக்குள் வந்து என்னை பார்ப்பதற்காக கன நாட்களாக தவம் கிடப்பதாக எனக்கு தகவல் தந்தார்கள். அதனால் அவனை ஒருமுறை போய் பார்த்தேன். என்னிடம் சினிமா படமெடுப்பதற்கு உதவிசெய்யும் படி காசுகேட்டான். அவனின் கதையை நம்பி அவனுக்கு நிறைய காசுகொடுத்தேன். இதுதான் நடந்தது. இவன் எங்களோடு சேர்ந்து போராடவா வன்னிக்கு களவாக வந்தவன்?

 

இவங்களை பற்றி எல்லாம் நீங்கள் புரிந்து வைதிருக்காவிட்டால் இவங்கள் எங்கள் காசில் உலகம் சுற்றுவாங்கள்.  இப்பொழுது என்னை அண்ணன் என்கிறான். இவன் எந்த முறையில் எனக்கு தம்பி?

இவங்களுக்கு ஈழத்து தமிழர்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கு?

 

கவிஞர் காசியானந்தன் என்ற கள்ளனின் வாழ்கையை பாருங்கள். எந்தவித உழைப்பு இல்லாமல் எப்படி இந்தியாவில் வசதியாக மனைவி பிள்ளைகளுடன் வாழ்கின்றான்? இவங்கள்தான் இந்திய உளவுதுறையான றோவோடு சேர்ந்து எங்கள் இயகத்தையே பிரித்தவர்கள். கருணா பிரிவதற்கும் காசியானந்தன் என்றவன்தான் காரணம். காசியானந்தன் கிழக்கு மாகாண மட்டகளப்பை சேர்ந்தவன். கருணாவும் மட்டகளப்பை சேர்தவன். காசியானந்தனுக்கும் கருணாவுக்கும் நிறையதொடர்பு உண்டு.

 

கே.பி தான் எங்களுக்கு வந்த ஆயுதம் கொண்டு வந்த 13 கப்பலையும் சிறிலங்கா புலனாய்வு துறைக்கு காட்டிக்கொடுதவன். இப்படி நாங்கள் நடத்திகொண்டிருந்த பிசினஸ் போராட்டத்தை காட்டிக்கொடுத்து வெளிநாடுகளில் பலபேர் பணம் படைத்தவர்களாகிவிட்டார்கள் அதெல்லாம் உங்களுக்கு வடிவாக தெரியும்

 

சரி, எல்லோரும் இங்கு வந்தவுடன், அவரவர் செய்த செயல்களுக்குரிய  தண்டனைகள் உண்டு என்பதை அறியத் தருகின்றேன்.

 

மகிந்தவை நான் கெட்டவர் என்றோ அல்லது நல்லவர் என்றோ சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. 3லட்சம் மக்களையும், 12ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளின் உயிர்களையும அவர் காப்பாற்றியிருக்கிறார்;. இன்னும் இரண்டு மாதம் என்னை போர் செய்ய விட்டிருந்தால் இவ்வளவு பேரையும் நான் சாகடித்திருப்பேன்.

 

அந்த வகையில் அவர் நல்லவர் ஆனால் என்னை அழித்த பின்பும் தமிழர்களுக்குரிய உரிமைகளை, அதிகாரபரவலாகத்தை அவர் இன்னும் வழங்காமல் இருப்பது எனக்கு மிகவும் வேதனையளிக்கின்றது.

 

என்னை போன்று வன்னியிலிருந்த தமிழர்களுக்கு எந்தவொரு உரிமையையும் அவர் வழங்காமலிருந்தால் மீண்டும் நாட்டில் சண்டை மூழும் என்பதுதான் உண்மை.

 

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். நடந்தவைகளை மறந்து எனிமேலாவது மனிதர்கள் மனிதநேயத்துடன் யேசுநாதா போன்று நேசித்து வாழ பழகிகொள்ளுங்கள்.

 

இன்று யேசு பிறந்த நன்நாளிலாவது நாம் மற்றவர்களை நேசித்து நடப்போமாக...

 

வே.பிரபாகரன்.(மேல்லோகம்)

 

(ஆக்கம்: கி,பாஸ்கரன், சுவிஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com