Contact us at: sooddram@gmail.com

 

விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட

 

புலிகள் இயக்கம்ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் போராளிகள்??

 

இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகினஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது. மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது. சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

 

விடுதலைப் புலிகளின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கின்ற தலைமைச் செயலகத்திற்கு விடுதலைப் புலிகளின் துறைகள் ஒன்றின் உப பிரிவான அனைத்துலகப் பணியகம் கட்டுப்பட மறுப்பதோடு தலைமைக்கு சவாலும் விடுகிறது என்கின்ற பாரதூரமான செய்தியை இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்தின.

 

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் பற்றி கூறியாக வேண்டும். மே 2009 வரை தேசியத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழீழத் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இயங்கி வந்தது. முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கு பின்பு தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலை இழந்த தலைமைச் செயலகம் குறிப்பிட்ட காலத்திற்கு தன்னுடைய செயற்பாட்டையும் இழந்து போயிருந்தது.

 

ஆயினும் சிறிலங்காப் படைகளின் முற்றுகையை உடைத்து வெளியேறிய போராளிகள் மீண்டும் தலைமைச் செயலகத்தை புறநிலை நாடுகளில் இருந்து செயற்பட வைத்தார்கள். பல மூத்த தளபதிகள் போரில் கொல்லப்பட்டு விட்டாலும், ஆளுமை மிக்க சில தளபதிகள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் எனக் குறிப்பிடத்தக்க சிலர் தப்பி வந்து இந்த தலைமைச் செயலகத்தை மீள உருவாக்கி, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியமைக்கும் பணியில் இறங்கினார்கள்.

 

ஆனால் இந்தப் பணியில் இவர்களுக்கு ஒரு பெரும் சவால் காத்திருந்தது. தலைமைச் செயலகத்தை உருவாக்கிய போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் நன்கு அறிமுகமானவர்களாகவே இருந்தார்கள். வெளிநாட்டுக் கிளைகளின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான் அவர்கள். ஆனால் புலம்பெயர் வாழ் மக்களுடன் அவர்களுக்கு அறிமுகம் இருந்திருக்கவில்லை.

 

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர் வாழ் மக்களிற்கும் பாலமாக செயற்பட்டு வந்த அனைத்துலகப் பணியகம் சிலருடைய தவறான வழிநடத்தலால் குளறுபடியாக நடக்கத் தொடங்கியது. புலம்பெயர் மக்களுடன் தமக்கு இருக்கும் நேரடித் தொடர்பை தமது பலமாக கருதிய குறிப்பிட்ட நபர்கள் சில விடயங்களில் தான் தோன்றித்தனமாக நடக்கத் தொடங்கினார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தரவுகள் சிலவற்றை செயற்படுத்தவும் இவர்கள் மறுத்தார்கள்.

 

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அனைத்துலகப் பணியகத்தின் செல்வாக்கில் செயற்படுகின்ற ஊடகங்களாகிய பதிவு, ஈழமுரசு, கருப்பு போன்றவற்றில் விடுதலைச் செயற்பாட்டாளர்களை கொச்சைப்படுத்துகின்ற திறந்த மடல்”, கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் வெளிவரத் தொடங்கிய பொழுது, அவைகளை நிறுத்தும்படி கண்டிப்பான உத்தரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து சென்றது.

ஆனால் அவற்றை நிறுத்துவதற்குப் பதிலாக போராளிகளைக் காட்டிக் கொடுக்கின்ற கைங்கர்யத்தில் இந்த ஊடகங்கள் இறங்கின. ரகசியமாக செயற்பட்டு வந்த போராளிகள் சிலரின் பெயர்களையும் இருப்பிடங்களையும் வெளியிட்டு கட்டுரை வரைந்து பெரும் துரோகச் செயலை இந்த ஊடகங்கள் செய்தன. இந்தக் காட்டிக்கொடுப்பின் காரணமாக சில நெருக்கடிகளையும் போராளிகள் சந்திக்க நேர்ந்தது.

 

பேச்சுக்களின் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அதுவரை சிலரிடம் இருந்த நம்பிக்கையின் மீது இந்தச் சம்பவம் கல்லைத் தூக்கிப் போட்டது. அனைத்துலப் பணியகம் நவம்பர் 26 அன்று மாவீரர் நாள் அறிக்கை விட்டு செய்த மலிவான அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது.

 

இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. தலைமைச் செயலகம் சார்பில் குறிப்பிட்ட நாடுகளுக்கு போராளிகள் அனுப்பப்பட்டு நிர்வாக மாற்றங்களுக்கான வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

ஆனால் தமது ஊடக பலத்தை பயன்படுத்தி போராளிகளைமர்ம நபர்கள்”, “கேபியின் ஆட்கள்என்று பரப்புரை மேற்கொள்ளவும், எதிரியிடம் காட்டிக் கொடுக்கவும் தயங்காத கூட்டத்தை கையாள்வது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்மையிலேயே சவாலான விடயமாகவே இருக்கப் போகிறது.

ஆயினும் தலைமைச் செயலகத்தில் செயற்படுகின்ற போராளிகள் புலிகளுக்கே உரிய உறுதியோடு இருக்கிறார்கள். நிலைமையை ஒழுங்குபடுத்தி புலிகள் இயக்கத்தை துடிப்போடு செயற்பட வைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

 

வரும் வாரங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளில் பல மட்டங்களில் பலவிதமாக விளங்கிக் கொள்ளப்படும். குழப்பங்களுக்கு இடம் அளிக்காது மக்களும் விடுதலைச் செயற்பாட்டாளர்களும் தெளிவாக இருக்க வேண்டியது இந்த இடத்தில் மிக முக்கியமானதாகும்.

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காது, சொந்த மூளையைக் கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். சில பொய்ப் பரப்புரைகளுக்கு பலியானால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியை இல்லாமல் செய்வதிலேயே போய் முடியும்.

ஆகவே வரும் வாரங்களில் புலம்பெயர் ஊடகங்களின் வெளிவர இருக்கின்ற செய்திகள் குறித்து மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.

 

புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தீர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்திறன் மிக்க ஒரு இயக்கமாக மீண்டும் உருவெடுக்க இருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.

முக்கிய குறிப்பு: இக் கட்டுரையில் பல விடயங்கள் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் விரிவாக பேச முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் காலத்தின் தேவை கருதி தவிர்க்கப்பட்டுள்ளன. நிலைமை அனுமதித்தால் முழு விபரங்களோடு விரிவான கட்டுரை வெளிவரும்.

 

- வி.சபேசன் B.A.Pol.Sci

 

தணிக்கைகளற்ற விரிவான கட்டுரை வெளிவரும் வரை காத்திருப்போம் 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com