Contact us at: sooddram@gmail.com

 

தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்)

56 வது பிறந்த தினம்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சுபிட்சமான எதிர்காலத்திற்காகவும் போராடி, தடம் பதித்த தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களது 56 வது பிறந்த தினம் (24.12.2013) இன்றாகும். சாவகச்சேரி, நுணாவில் என்னும் இடத்தில் 24.12.1957 இல் பிறந்த தோழர் றொபேட், தனது 24 வது வயதில் ஈபிஆர்எல்எவ் இன் நடவடிக்கைகளோடு தன்னை இணைத்துக்கொண்டார். அவர் 14.06.2003 இல் உயிர்துறக்கும் வiர் அர்ப்பண உணர்வு மிக்க ஊழியனாக, வழிகாட்டும் தலைவனாக சுமார் 32 ஆண்டுகள் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல், இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தார். நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடன் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுடன் யுத்த நிறுத்தம் செய்துகொண்ட புலிகள் தமது அங்கத்தவர்கள், குடும்பங்களுடன் மீள இணைதல் என்ற பேரில் மீண்டும் யாழ் குடாநாட்டுக்குள் பிரவேசித்தனர். அப்போது ஆரம்பித்த கொலைகள் முள்ளிவாய்க்காலிலேயே முடிவடைந்தது. இக்காலப்பகுதியிலேயே தோழர் றொபேட் புலிகளால் சுடப்பட்டார். 

 யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த ஈ.பிஆர்எல்எவ் அலுவலகத்தின் மேல்மாடியில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவேளையில் வேம்படி மகளிர் கல்லூரியின் வகுப்பறையில் மறைந்திருந்து புலிகள் அவரை சுட்டுக்கொன்றனர். இரண்டு துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று அவரது நெஞ்சு பகுதியில் பாய்ந்திருந்தது. 1989 காலப்பகுதியில் உசன் பகுதியில் புலிகளுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் அவர் முன்னரும் தோள் பட்டையில் கழுத்துக்கு அருகே கடும் காயத்திற்கு உள்ளாகி தப்பித்திருந்தார்.

தோழர் றொபேட் தன் சமூக கடமைகளை தலைமறைவு இயக்கமான ஈபிஆர்எல்எவ் ஊடாகவே மேற்கொண்டார். புலிகளால் தடைசெய்யப்பட்ட அரசியல் இயக்கத்தின் செயற்பாட்டாளராகவே அவரது வாழ்கை காலத்தை தொடர வேண்டியிருந்ததால் அவரது ஆற்றல்கள், அவரது குணாதிசயங்கள் மக்களின் கண்களுக்கு மறைக்கப்பட்டு விட்டன. 

எண்பதுகளின் தொடக்கத்தில் அரசியல் ஈடுபாட்டோடும், சமூக அக்கறையோடும் செயற்பட ஆரம்பித்து ஈபிஆர்எல்எவ் இன் அரசியல், இராணுவ நடவடிக்கைகளில் முன்னணி போராளியாக விளங்கினார். 1985 பங்குனி மாதத்தில் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார். அது வரை அவரே ஈபிஆர்எல்எவ் இன் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப்படையின் யாழ் மாவட்ட தலைவராக இருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் வாயிலாக பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களோடு,  ோழர் றொபோட்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இலங்கை அரசு அரசியல் கைதிகளை விடுவித்த போதும் புலிகள் அவர்கள் அரசியல் ரீதியில் மக்கள் மத்தியில் செயற்படுவதற்கு தடையாய் இருந்தனர். புலிகளிடமிருந்து உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. புலிகளின் கண்ணில் படாமல் தலைமறைவாகவே மீண்டும் செயற்பட வேண்டியிருந்தது. இதனால் மனம் உடைந்து போராட்டத்தை விட்டே ஒதுங்கிக் கொண்ட பல நூற்றுக்கணக்கான இளைஞர்களில் தோழர் றொபோட் ஒருவராயிருக்கவில்லை. அவர் மீண்டும் மக்கள் மத்தியில் அரசியல் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

1988 முற்பகுதியில் சிறையிலிருந்து விடுதலையாகி மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றுக்கொள்வதற்கு முன்னர் அவர், ஈபிஆர்எல்எவ் இலிருந்து வெளியேற்றப்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் இராணுவப்பிரிவு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை மீண்டும் ஈபிஆர்எல்எவ் இல் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விடாது முயற்சி செய்தார். இரண்டு தரப்போடும் நெருக்கமான தொடர்பை பேணி இதுகுறித்து தொடர்ந்து பேசி வந்தபோதும் இரண்டு தரப்புமே இதற்கு தயாராயிருக்கவில்லை, அதற்கான சூழலும் நாளுக்க நாள் மோசமடைந்து வருவதை அவதானித்த பின்னர் 1989 ஜனவரியில் அவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று மாகாண சபைகளை பொறுப்பேற்றுக்கொண்ட ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்றுக்கொண்டார்.

இந்திய இராணுவம் இங்கு நிலைகொண்டிருந்த காலத்தில் ஈபிஆர்எல்எவ் அநியாயம் செய்ததாகவும், அடாவடித்தனம் புரிந்ததாகவும் பொதுவாக கூறப்பட்ட போதும் தோழர் றொபேட் பொறுப்பாக இருந்து செயற்பட்ட இடங்களில் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழாமல் பார்த்துக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினர். அத்துடன் வேறு இடங்களிலும் அத்தகைய செயல்கள் இடம்பெறாமல் தடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு துன்பம் விழைவிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் தனது ஆழுமையை, ஆற்றலை தொடர்ந்து பிரயோகித்து வந்தார். ஆனால், இக்காலப்பகுதியிலேயே தோழர் றொபேட்டின் தந்தையார், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் தம்பிராசா புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார். 

1990 முற்பகுதியில் இந்திய இராணுவம வடக்கு- கிழக்கிலிருந்து வெளியேறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கிலிருந்து ஈபிஆர்எல்எவ் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு இடம்பெயர நேர்ந்தது. இந்தியாவில் ஒரிசா, மல்கன்கிரியிலும் தமிழ்நாட்டில் மண்டபம், திருச்சி, புழல் ஆகிய இடங்களிலும் அகதிகள் முகாங்களில் தங்க வைக்கப்பட்ட தோழர்கள், ஆதரவாளர்கள் அவர்களது குடும்பங்களின் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்த குழுவுக்குப் பொறுப்பேற்று, இரவு பகல் பாராது அயராது உழைத்தார். தமது சொந்த நலனுக்காக பிரதேச வாதத்தை கையிலெடுத்த பல முன் உதாரணங்களுக்கு மத்தியில் தோழர் றொபேட் அதற்க  ேர்மாறாக இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தோழர்களோடு ஐக்கியப்பட்டு, ஒன்றிணைத்து செயற்பட்டார். அதனால் அனைவராலும் நேசிக்கப்பட்டார்.

1993 ஆம் ஆண்டு 3 நாட்கள் நடைபெற்ற ஈபிஆர்எல்எவ் இன் இரண்டாவது காங்கிரசில் தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) ஈபிஆர்எல்எவ் இன் மத்திய குழு உறுப்பினராகவும், அரசியல் பீட உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டவர். தோழர்கள் அ. வரதராஜப்பெருமாள் (யாழப்பாணம்), லோகநாதன் கேதீஸ்வரன் (யாழப்பாணம்), துரைரட்ணம் (ரட்ணம் -மட்டக்களப்பு),  ிறிதரன் (சுகுயாழ்ப்பாணம்) , சின்னையா (சர்மா- மட்டக்களப்பு), நேசராசா (நிவாஸ் - மட்டக்களப்பு), தர்மராசா (வில்சன் - யாழ்ப்பாணம்) , ஜெயக்கொடி (சோமுயாழ்ப்பாணம்) , கணேசராசா (ராசிக் - மட்டக்களப்பு), கைலைநாதன் (கைலன் - திருகோணமலை), தம்பையா (சாந்தன் - யாழ்ப்பாணம்), பிரேமச்சந்திரன் (சுரேஸ் - யாழ்ப்பாணம்) இந்த காங்கிரசின் போது தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

1996ம் ஆண்டு யாழ் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பின் 1997 ஆம் ஆண்டு யூன் மாதம் தோழர் றொபேட் இதர தோழர்களுடன் மறுபடியும் யாழ்ப்பாணம் வந்தார். இக்காலப்பகுதியிலேயே புளொட், ரெலோ, ஈபிடிபி ஆகிய கட்சிகளும் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து யாழ் நகரில் அலுவலகங்களை அமைத்து தமது உறுப்பினர்களை புலிகளிடம் பலிகொடுத்து மக்கள் நலன் சார்ந்த அரசியல், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.

தோழர் றொபேட் 1998 இல் இடம்பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் யாழ் மாநகர சபை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டதுடன் ஆளுங்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநகர முதல்வர்கள் சிவபாலன், ரவிராஜ், கந்தையன் போன்றவர்களுடனும் மாநகர சபையில் பிரதிநிதித்துவம் வகித்த புளொட், ஈபிடிபி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களுடனும் கரம்கோர்த்துச் செயற்பட்டார். அதேவேளை கட்சியின் கொள்கை, கோட்பாடுகளில் உறுதியாய் உயர்த்திப் பிடிக்கவும் அவர் தவறவில்லை.

அக்காலப்பகுதியில் காணாமற் பேன, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பிரச்சினை உட்பட மீனவர்கள், யாழ் நகர வர்த்தகர்களின் பிரச்சினைகள், யாழ் மக்கள் எதிர் நோக்கிய மருத்துவ வசதியின்மை, போக்குவரத்துப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சம்பந்தப்பட்ட மக்களோடும், அரச தரப்புக்களோடும் தொடர்புகளை பேணி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.   

பாராபட்சம் இன்மை, பிரச்சினைகளை இனங்காணும் திறன், தனியாகவோ குழுவாகவோ திட்டமிடும் திறன், பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் ஆற்றல், தனியாகவும், குழுவாகவும் பொறுப்புக்களை ஏற்று செயற்படுதல், வேலை வழங்கி கண்காணிக்கும் திறன், மற்றவர்களின் யோசனைகள், பிரச்சினைகளை காதுகொடுத்துக் கேட்டல்,

வேலை செய்யும், செய்விக்கும் ஆற்றல், கருத்து ரீதியில் தெளிவான முற்போக்கான பார்வை, மூட நம்பிக்கைகளுக்கு ஆட்படாமல் விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கும், செயற்படும் பக்குவம், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், துயரங்கள் அகல வேண்டும் என்ற அக்கறை போன்ற தலைமை பண்புகள் நிரம்பிய ஒருவராகவே திகழ்ந்த தோழர் றொபேட் அவர்களின் இழப்பு கட்சிக்கும், தமிழ் மக்களுக்கம், மனித சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com