Contact us at: sooddram@gmail.com

 

இடதுசாரிக் கட்சிஅரசியலும் தேர்தல்களும்
(சாந்தி)

கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சிகளின் முன்னணியினர் தமது ஜனாதிபதி வேட்பாளர் சகிதம் பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடத்தியுள்ளனர். சுருக்கமாகக் கூறினால், யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்குப் பின்னும் ஏன் இன்னும் இராணுவம் நிலை கொண்டிருக்கின்றது, ஏன் வடபகுதியில் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது எனப் பலகேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர். இந்த இடதுசாரிக் கட்சிகளின் முன்னணியின் பின்னணியினை முதலில் ஆராய்ந்து கொண்டு அவர்களின் அரசியலுக்கு பின்பு வரலாம்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜ கட்சி, சமசமாஜ கட்சி போன்ற இடதுசாரிக் கட்சியினர் (அத்தனை பிரிவினைகள் இருப்பதனால் எதற்கு என்ன பெயர் என்பதே எமக்கு நினைவுக்கு வராமல் போகலாம்) தொடாந்தும் மகிந்த அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பது சிலகாலமாக பிரச்சினைக்குரிய விடயமாக அக்கட்சிகளின் சில உறுப்பினர்களினால் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது. இந்தநிலையில் ஜனாதிபதி முறைமைக்கு எதிராகவும் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் எதிரணி திரண்டுவந்த நேரத்தில் கூட அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த இடதுசாரி அமைச்சர்கள் வெளியேற வில்லை. இதனைக் கண்டித்துஅக்கட்சிகளின் ஒருசாரார் வெளியேறி இருக்கின்றனர். அவர்கள் வெளியேறியகையுடன், தொழிலாளர் ஆட்சியின் ஜனநாயகப் பாரம்பரியத்தின் வழக்கமான அம்சமாக அத்தனை பேரினதும் கட்சி அங்கத்துவமும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, தலைமைத்துவம் அரசாங்கத்தில் தொடாந்தும் அங்கத்துவம் வகிக்கும், ஆனால் அதைக் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்கின்ற வழக்கமான செய்தியே உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஏதோ, வெளியேறியவர்கள் தாம் ஒரு கூட்டணியாகச் சேர்ந்திருக்கின்றார்கள். அவர்களுடன் முன்னிலை சோஷலிஸக் கட்சியும் சேர்ந்திருப்பது போலத் தெரிகிறது. அதன் விளைவுதான் யாழ்ப்பாணத்தில் நடந்த இப் பத்திரிகையாளர் மாநாடாகும்.

எமது நாட்டில் இடதுசாரிக் கட்சிகளின் ஆரம்பகால வரலாறு போற்றப்படத் தக்கதாகும். காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில் மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களுக்கு தமது உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வினை அன்றைய இடதுசாரிக் கட்சிகள் ஏற்படுத்தின. தெற்குப் பிரதேசங்களில் மலேரியாக் காய்ச்சலின் உக்கிரமாகப் பரவிய போது சமசமாஜக் கட்சியினர் செய்த சேவை வரலாற்றிலும் கூறப்பட்டிருக்கின்றது. தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகள் வலுப்பெற்றதும் அங்குபெண்களின் குரல் ஓங்கியதும் இடதுசாரிகளின் சிந்தனைச் செல்வாக்கின் விளைவுகளாயின. அன்றையஅரசின் இராணுவப் படைகளின் நலத்துக்காக விற்கப்பட்ட பொப்பிமலர்களுக்குப் பதிலாக, அந்த இயக்கத்திற்கு எதிராக, இலங்கை நாட்டுக்குரிய சூரியகாந்திப் பூவினைத் தங்கள் சுதந்திர வேட்கை இயக்கத்தின் சின்னமாக வரித்துக் கொண்டனர். அன்றுமிகப் பிரபலமான பிரேஸ் கேர்டில் வழக்கு இவை சட்டரீதியாகவும் அன்றைய அரசிற்கு சவால் விடத் தயாராக இருந்த நிலைமையையே காட்டியது.

எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் நாட்டிலும் சமூகத்திலும் பெரும்பான்மையினத்தினர் ஆதிக்கம் செலுத்திய அந்தநிலையானது இக் கட்சிகளுக்குள்ளும் பிரதிபலித்தது மிகத் துரதிர்ஷ்டமாகும். வர்க்கப் போராட்டக் காரணியைமட்டும் முன்னிறுத்திய இவர்கள, இனத்துவம் மற்றும் பெண்ணடிமைத்தனம் போன்றகாரணிகள் கூட ஒடுக்கு முறைக்கு வழிகோல முடியும் என்பதை உணரத் தவறிவிட்டார்கள். இதனால் அவற்றைத் தமதுகட்சிகளில் நிவர்த்தி செய்யும் கொள்கைகளைக் கூட கைக் கொள்ளவில்லை. எத்தனையோ போற்றத்தக்க தமிழ் புத்திஜீவிகள் இக்கட்சிகளில் அங்கம் வகித்திருந்தும் கட்சியின் தலைமைப்பீடம் சிங்களமாகத் தொடர்ந்தது. முன்பு ஆங்கிலேயர்களுக் கெதிரான போராட்டமாக இருந்ததனால் கட்சிக்குள்ளிருந்த இவ்வேறுபாடுகள் வெளியில் தோற்றவில்லை. ஆட்சிப் பதவிகளில் சிங்களவர்கள் உட்கார்ந்த போது எந்தச் சிங்களவர்களுக்கும் அரசியல் அதிகாரம் கிட்டமுடிகின்ற வாய்ப்புக்கள் புதியஅரசின் கீழ் தோன்றின. இந்தச் சூழ்நிலைகளில் இடதுசாரிக் கட்சிகளின் தலைமைத்துவத்தின் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இம்மாற்றங்களுக்குதேர்தல் அரசியலும் இன்னுமொருகாரணமாயிற்று.

தேர்தல் அரசியலானது கடைக்குப் போய் சேலை வாங்குவதைப் போலாகும். நல்லதரம், அழகு, விலை, குறிப்பிட்ட சேலை பொருத்தமானதா இல்லையா என்னும் யதார்த்த பூர்வமான கேள்விகளுக்கப்பால், ஒவ்வொரு மனிதர்களினதும் உணர்வுகள் தாம் ஒரு சேலையை வாங்குவதா இல்லையா என்கின்ற முடிவைத் தீர்மானிப்பதாகும். அதனை ஆங்கிலத்தில் “Feel Good Factor”என்பார்கள். சேலை மிக விலையானதாக இருந்தாலும், ஏதோ ஒவ்வொரு வரினதும் பழைய அனுபவங்களின் அடிப்படையில் அதனைத் தொட்டுத் தூக்கும் போது நல்ல உணர்வு தோன்றினால் உடனடியாகக் காசைக் கொடுத்து அதனை வாங்கிவிடுவார்கள்.

இன்றும் மகிந்தவைப் பார்த்தால் சிங்கள மக்களுக்கு நல்ல உணர்வு தோன்றுவதைப் பார்க்கலாம். அதுவே அவரது வாக்கு வங்கியாகின்றது. அவர் நடக்கும்போதும் பேசும்போதும் மிக உறுதியானவராகத் தெரிகின்றார், குடும்ப சமேதராக எப்பொழுதும் காட்சியளிக்கின்றார், குழந்தைகளைத் தூக்கித் தூக்கி முத்தம் கொடுக்கின்றார் என இவை பலவகையாகும். மக்களுக்குப் பொருளாதாரம் முக்கியவிடயம் என்பார்கள். சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எமதுநாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ச்சியடைந்திருந்த போது ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கத்தில் ரணில் ஆட்சிக்குவந்து அதனை ஒருவாறு சரிப்படுத்தியதைக் கூட மக்கள் அடுத்த தேர்தலில் சட்டைசெய்யவில்லையே. அவரைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுச் சக்திகளின் கைப்பொம்மையாக அவர் ஆடுவார் போல பலவீனராகத் தெரிகின்றாராம். இங்கோ மகிந்த அரசாங்கத்தின் கீழ் நாம் எமது வருங்காலத் தலை முறைகளையும் சேர்த்து சீனாவுக்கு எம்மை அடகு வைத்துவிட்டுக் கிடக்கின்றோம். எனவே,தேர்தல் அரசியலில் போய் கொள்கை அரசியல் பண்ண முடியாது என்பதே முடிந்தமுடிவாகும். அந்தத் தவறினை இடதுசாரிக் கட்சிகள் செய்தன. இனியென்ன, மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்கும் வகையில் தமதுஅரசியலையும் மாற்றிக்கொண்டனர்.

1970ம் ஆண்டு அன்றைய ஐக்கிய முன்னணிஅரசாங்கத்தில் அட்டகாசமாக அதிகாரம் வகித்துக் கொண்டிருக்கும் பொழுது, “வர்க்கப் போராட்டத்தின் அரங்காக எமது பாராளுமன்றத்தினை மாற்றியிருக்கின்றோம்” என அபத்தமாக தமது நடவடிக்கைகளை இடதுசாரிகள் நியாப்படுத்தினர். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஓர் முதலாளித்துவ சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தின் களமாக அந்தநாட்டின் பாராளுமன்றம் என்றுமே அமையமுடியுமா? அது மட்டுமன்றி, விகிதாசாரத்தின் மூலம் நோக்கின், சிங்கள மக்களை விட அதிகமாக வடக்கு தமிழ் மக்களும், தோட்டத் தொழிலாளர்களும் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தநேரத்தில் அப்பட்டமான இனவாதிகளாகவும் மனச் சாட்சியின்றி மாறினர்.

1970களில் கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமட் தமிழ் மாணவர்களுக் கெதிரான தரப்படுத்தலைக் கொண்டு வந்தபோது, எனது தகப்பனார் என்.எம. பெரேரோவிடம் ஓடினார். “அமைச்சரவையில் பதியுதீன் சகல புள்ளி விபரங்களையும் காட்டியபோது அது நியாயமாகத் தான் எமக்குத் தெரிந்தது ”என்று பதில் கூறி அவரை அனுப்பிவிட்டார் என்.எம். சிறுபான்மைத் தேசியங்களின் எச்ச சொச்ச உரிமைகளையும் துவம்சம் செய்த அரசியலமைப்புச் சட்டத்தினை வரைந்தார் இடதுசாரிப் பெருந்தலைவர் கொல்வின் ஆர் டிசில்வா.

1979ம் ஆண்டு அன்றைய ஜே.ஆர் அரசாங்கம் தமிழ் தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குற்றி அதனை நசுக்குவதற்கு புல் வீரதுங்கவை வடக்கிற்கு அனுப்பிபோது இடதுசாரிக் கட்சிகள் என்னதான் செய்தன? அந்தநேரத்தில் தென்பகுதியின் ஜனநாயகவாதிகளே இனங்களுக்கிடையில் சமத்துவமும் நீதியும் பேணும் இயக்கம் (மேர்ச்) என்று ஒரு அரசுசாரா நிறுவனத்தை தாபித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்திற் கெதிராகப் போராடினர். இன்றுவரை யுத்தத்திற் கெதிராகவும் தமிழ் மக்கள் மீதுகட்ட விழ்க்கப்பட்ட அடக்கு முறைகளுக் கெதிராகவும் இந்நாட்டிலும் சர்வதேசத்திலும் மிகத் தெளிவாகக் குரல் கொடுத்த சமூகம் இந்த என்ஜிஓ சமூகம் மட்டுமேயாகும். அதற்காகவே இன்று ராஜபக்சஅரசு அதனை மன்னிக்கத் தயாரின்றி இருக்கின்றது.

இன்று திடீரென்று ஓடிவந்து சிறுபான்மைமக்கள் உரிமைகளைப் பற்றி இவர்கள் பேசுகின்றனர். இதுவும் தேர்தல் மகிமையோ? இரு பிரதான கட்சிகளும் தமிழ் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப் பயப்படுகின்றனர் என்கின்றனர். அவ்வாறாயின், தமிழ் மக்களின் உரிமைகளை நிராகரிக்கும் அந்த நிலையில் சிங்களமக்கள் இன்னும் இருப்பதுதான் இவர்கள் இதுவரை மக்கள் மத்தியில் செய்த வேலையின் இலட்சணமா? ஒரு நியாய பூர்வமான அரசியல் கோரிக்கையை முன்வைத்ததற்காகத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசுகளுக்குக் கீழ் நின்று அவர்களின் கட்சிகள் பணியாற்றினவே. அதிலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் முற்பிறவியான ஜே.வி.பியானது தமிழர்களின் அழிவைத் தூண்டித் தூண்டி விட்ட கட்சியல்லவா? இவற்றைப் பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கு ஒரு விளக்கமும் கொடுக்கத் தேவையில்லையா?

ஆனால் நாம் கடந்தகாலத் தவறுகளுக்காக இடதுசாரிக் கட்சிகளை சிலுவையில் ஏற்றவரவில்லை. அவை தமது நோக்கங்களையும் செயற்பாடுகளையும் மூலோபாயங்களையும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையே கேட்கின்றோம். எமக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் அரசியல் சமூகக் கட்டமைப்பே தேவை என்பது உண்மையாகில், அக் கட்டமைப்பினை ஒரு குழுவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதால் மட்டும் அடைந்துவிட முடியுமா? அடி தொடங்கி நுனி வரை உருவாக வேண்டிய இம்மாற்றமானது சகல சமூகத்தினரதும், அல்லது குறைந்த பட்சம் சமூகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினரது ஒத்துழைப்போடும் ஒருங்கிணைவோடும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றமாகும். அதற்கு அம்மக்கள் மத்தியில் எத்துணை விழுமியமாற்றங்கள், மற்றும் கண்ணோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். அவர்களது நடத்தைப் பண்பாடுகளில் எத்துணை மாற்றங்கள் தேவை.

இந்த நவீன 21ம் நூற்றாண்டில்கூட இன்னமும் சாதிப் பிரிவினைகளை எம்மால் ஒழிக்க முடியவில்லையே. இந்தசமூகம் போய் சோஷலிஸ அரசினைத் தாபிக்கமுடியுமா? சூழ்நிலை (சமூகம்) மனிதனை மாற்றுகின்றது என மார்க்ஸ் சொன்னார்தான், ஆனால் அச் சூழ்நிலையையும் மனிதர்கள்தானே உருவாக்க வேண்டியதாகவுள்ளது? இந்த இயங்கியல் தொடர்பினைப் புரிந்து கொண்டால் திடீர் சமையல் செய்யப் போகமுடியாது. இது நீண்டகால நோக்கில் மக்கள் மத்தியில் எந்தவித புகழோ கைமாறோ எதிர்பாராமல் செய்யவேண்டிய வேலை என்பதுதெரியும்.

இந்தப் பணியானது இன்று நாம் விளங்கிக் கொள்ளும் அரசியல் கட்சிகளின் அமைப்பு மூலமாகவோ அல்லது தேர்தல் அரசியல் மூலமாகவோ செய்யக்கூடிய பணியல்ல. இன்று அரசியல் கட்சிகள் ஒரு சிறுகுழுவினர் புரியும் ஆட்சி (oligarchy) மட்டுமே. அவை நாம் விரும்பும் சீர்திருத்தத்தினைக் கொண்டுவரக் கூடியனவல்ல. புதிய முறையில் சிந்தித்து புதிய அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்கும் நாள் வந்துவிட்டது. ஓவ்வொரு மக்கள் குழுமமும் தமது நலன் சார்ந்து சிந்திக்கும் வலையமைப்புக்களாவும், கூட்டமைப்புக்களாகவும் மாறி மாறி உருவாக்கிக் கொள்ளும் அமைப்புக்களாகக் கூட இவை இருக்கலாம். இடதுசாரிகளுக்கு ஒரு ஆலோசனை. தேர்தல்களில் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதை விட்டு விட்டு தொடர்ந்து தொடர்ந்து மக்களைச் சந்தியுங்கள், உரையாடுங்கள், அவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள், அவர்களுடன் இணைந்து உலகை மாற்றுங்கள்.

அடிஎன்னடிஉலகம் இதில் எத்தனைகலகம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com