Contact us at: sooddram@gmail.com

 

சம்பந்தன் அவர்களே!

முடிவு தமிழ்மக்களிடமே அன்றி சர்வதேசத்திடமோ இந்தியாவிடமோ இல்லை!

நடைபெற இருக்கும் சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது தமிழர்களது தலைவிதியைத் தீர்மானிக்கவோ, மாற்றியமைக்கவோ போவதில்லை என்பது மேலோட்டமான பார்வையிலேயே தெரிந்தபின்னரும் த.தே.கூட்டமைப்பினர் தமக்கேயுரிய குழப்பமான நிலையில் தொடர்வதும் அதேநேரத்தில் கடல் கடந்து முடிவின் வழியைத் தேடுவதும் எமக்கான அரசியல் வெளியின் உறுதிப்பாடின்மையினை வெளிப்படுத்தி நிற்கின்றது. சர்வதேச இராசதந்திரிகளின் பூகோள நலன் சார்ந்த கருத்துருவாக்கத்தில் புரையோடிப்போயுள்ள சிந்தனை வெளிக்குள்ளும், பிராந்திய நலன்சார்ந்து சிங்கள ஆட்சியாளர்களை தடவிக்கொடுக்கும் மென்போக்கு வெளியுறவுக் கொள்கைவாதிகளின் சிந்தனை வெளிக்குள்ளும் தமிழ் மக்களின் தலைவிதிக்கான வழியைத் தேடமுயற்சிப்பது தன்னை பழுத்த அரசியல் தலைவராகக் கூறிக்கொள்ளும் சம்பந்தன் அவர்களுக்கு ஏற்புடயதா என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.

காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக குருட்டு நம்பிக்கையில் தமிழர் பிரச்சினையினை அனுகிவிட முடியாது. சர்வ வல்லமை பொருந்திய சர்வதேச சமூகமே இவ்வாறு கருதி சிங்கள தேசத்தில் ஆட்சிமாற்றத்திற்கு முயற்சிப்பதானது அவர்களது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.

உலகின் கண்ணெதிரே ஒண்டரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்க கொன்றுகுவிக்கப்பட்ட நிலையில் அதற்கான நீதியினை பெற்றுக் கொடுக்க துணிவற்ற சர்வதேசம் பின் வாசல் வழியாக ராசபக்சேவைத் தோற்கடிக்க முயற்சிப்பது நிச்சயமாக நீதிக்காக உரத்த குரலெழுப்பி அண்டமெங்கும் போராடிவரும் எமக்காக அல்ல என்பதனை எமது உறவுகள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

சர்வதேச மனிதநேய சட்டங்கள் வரையறை செய்துள்ள அனைத்துவிதமான எல்லைக் கோடுகளை உடைத்தெறிந்து வானம் தொட்டுநிற்கும் அளவிற்கு நாம் அனைத்து வழிகளிலும் பேரிழப்புகளைச் சந்தித்து நிற்கின்ற நிலையில்கூட எமக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்க முடியாத இந்த சர்வதேச சமூகத்தினால் ஆட்சி மாற்றத்தின் மூலமாக எதனைச் சாதித்துவிட முடியும்?

சர்வதேசம் விரும்பும் ஆட்சிமாற்றமானது இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து சிங்கள அரசினைக் காப்பாற்றவே உதவும். தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, பட்டுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு காரணமான ராசபக்சேக்களின் ஆட்சியை வீழ்த்துவதன் மூலமாக அமையப்போகும் அரசை பொறுப்புக் கூறும் கடப்பாட்டில் இருந்து விடுவிப்பதாகவே அமையும்.

இது மிகவும் ஆபத்தான விடையமாகும். மாபெரும் இனப்படுகொலையை தன் சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தி முடித்துவிட்டு இத்தனை ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் பிடியில் சிக்குண்ட நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்துலக அளவில் முன்னெடுக்கப் பட்டுவரும் நடவடிக்கைகள் பெரும் தடையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி ஆதரவு நாடுகள் துணைகொண்டு ஜ.நா.மன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளை ராசபக்சேக்கள் தடுத்தும், தாமதப்படுத்தியும் வருகின்றார்கள்.

இனப்படுகொலையுடன் நேரடியாக தொடர்புடைய ராசபக்சே அரசாங்கத்தைக் கூட பொறுப்புக் கூறும் நிலைக்கு கொண்டுவர முடியாத இவர்கள் புதிதாக அமையப்போகும் அரசைக் கொண்டு எதனை சாதிக்க முயல்கிறார்கள்?

நாம் கேட்பது எமது பாட்டன், பூட்டன், முப்பாட்டன் காலத்துக்கு முன்பிருந்து பாரம்பரியமாக வாழ்ந்துவரும் மண்ணில் எமது வாழ்வை பிறர் தலையீடு இன்றி வாழும் சுதந்திரத்தையே. அதுகூட மரபுமீறி இல்லாதவற்றையோ முடியாததையோ நாம் கேட்கவில்லை. எமக்கே உரித்தான வாழும் உரிமையின் அடிப்படையில் ஏற்கனவே வாழ்ந்த சுதந்திர வாழ்வினை மீட்டுக் கொடுங்கள் என்றுதான்.

எமது சுதந்திரத்திற்கான சத்திய வேள்வியில் நாம் அதீத இழப்புக்களையும் எண்ணற்ற தியாகங்களையும் சந்தித்து நிற்கின்றோம். மானுட தர்மத்திற்குப் புறம்பாகவே எமக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது என்பது சத்தியமான உண்மையாகும்.

ராசபக்சேக்களின் தோல்வியோ சர்வாதிகார சனாதிபதிமுறை ஒழிப்போ தமிழருக்கான நீதியினை வழங்குவதற்கான பாதையுமல்ல தீர்வுமல்ல. தீர்வுக்கான காலத்தை மேலும் சில ஆண்டுகள் நீடிப்புச் செய்வதற்கும் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தினை நீர்த்துப் போகச்செய்யவுமே இவை பயன்படப் போகின்றது என்பதனை அறுதியிட்டுக் கூறமுடியும்.

நீண்டநெடுங்காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு தாமதப்படுத்தப்பட்டும் தடுக்கப்பட்டும் வருவதற்கு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நேரடித்தலையீடே முதன்மைக் காரணமாகும்.

இந்த சிங்கள பௌத்த பேரினவாதிகளை மீறிய ஒரு சக்தி சிங்கள தேசத்தை ஆளமுடியாது என்பது சுதந்திரம் பெற்றதுமுதல் சிங்கள தேசத்தின் வரலாறு உணர்த்தி நிற்கும் பேருண்மையாகும். ராசபக்சேக்கள் நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்கு இதுவரை பக்கத்துணையாக இருந்ததோடல்லாமல் தூண்டுதலாகவும் இருந்தவர்களும் இவர்களே.

கடந்த பத்து ஆண்டுகள் நடைபெற்ற கொலைவெறி ஆட்சியின் நேரடிப் பங்குதாரர்களாக இருந்தவர்களான மைத்திரி பால சிறீசேனா உள்ளிட்ட கடும்போக்கு சிங்கள இனவாதிகளே பொது எதிரணியில் இன்று முத்தாய்ப்பாக அலங்கரித்துக் கொண்டுள்ளார்கள்.

ராசபக்சே குடும்பத்தின் இரும்புப்பிடிக்குள் நாடும் ஆட்சியும் சிக்கிக்கொண்டதால் தமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கை பிசைந்து நின்றவர்களே மாற்றம் தேடி பொது எதிரணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை உள்ளிட்ட ஊழல், அதிகார முறைகேடுகளில் ராசபக்சேக்கள் ஈடுபடும்போது உடனிருந்தவர்களே பொது எதிரணியில் இன்று இருப்பவர்கள்.

இவர்கள் அனைவரின் பிரதான முழக்கமாக இருப்பது நாட்டையும் ஆட்சி அதிகாரத்தையும் அபகரித்துள்ள ராசபக்சேக்களின் இரும்புப்பிடிக்குள் இருந்து அவற்றினை மீட்டெடுப்பதாகவே இருக்கின்றதே தவிர தமிழர்களுக்கான தீர்வுகுறித்து எதுவும் இல்லை.

தமிழர்களைக் கொன்றுகுவித்த சிங்களச் சிப்பாய் ஒருவரைக் கூட சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று முழங்கும் மைத்திரி பால சிறீசேனாவிடம் தமிழர்களுக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்த ராசபக்சே ரெஜிமண்ட் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க முடியாது.. மக்கள் பணத்திற்கு பதில்சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.. நாட்டு மக்கள் முன்பு இதற்காக பதில் சொல்லும் பொறுப்பு ராசபக்சே ரெஜிமண்டிற்கு உண்டு.. இவ்வாறு வீர முழக்கமிடும் மைத்திரி ஒண்டரை லட்சம் தமிழர்களை கொன்றுகுவித்த ராசபக்சேக்களையும் தொடர்புடைய அத்தனை பேரையும் அது எவராக இருந்தாலும் எவர் காப்பாற்ற நினைத்தாலும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறவில்லையே!

மைத்திரியை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என அரசியல் பாடம் நடத்துபவர்களால் இவ்வாறான வாக்குறுதியை அவரிடம் இருந்து வெளிப்படையாக பெற்றுக் கொடுக்க முடியுமா?

குறை நிலையில் இருப்பது தெரிந்தும் பொது எதிரணியுடன் அரைகுறையானது மட்டுமல்ல தமிழர்கள் குறித்து எதுவுமே இல்லாத ஒரு உடன்பாட்டில் கையெழுத்துப் போடும்மளவிற்கு மனோகணேசனுக்கு அரசியல் நிர்ப்பந்தம் இருப்பதை எம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. அதற்காக கற்பனையின் அடிப்படையில் அவர்களை ஆதரிக்கும் முடிவை தமிழர்களின் மீது திணிப்பதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியா போன்ற நாடுகள் ராசபக்சேக்களை காப்பாற்ற இடமளிக்க முடியாது என மைத்திரி சொல்வதில் பல அர்த்தங்கள் புதைந்துள்ளது. கடந்தகாலங்களில் ராசபக்சேக்களின் நிழலுக்கு அண்மித்த அருகாமையில் இருந்த மைத்திரியின் வாக்குமூலமானது இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராசபக்சேக்களை இதுவரை காப்பாற்றிவந்தவர்கள் யார், இனிமேலும் காப்பாற்ற தயார் நிலையில் இருப்பவர்கள் யார் என்பதனையும் உறுதிசெய்கின்றது.

தமிழினத்தினை அழித்தொழிக்க அனைத்து வழிகளிலும் ஆதரவாக இருந்த சோனியா தலைமையிலான இந்திய அரசு விட்டுச் சென்ற பணியை தற்போதைய மோடி அரசும் தொடர்கின்றமைக்கான இன்றைய சாட்சியமாக மைத்திரியின் பேச்சு அமைந்துள்ளது. இதனை மருத்துவ காரணங்கள் என்ற போர்வையில் இந்திய எசமானர்களிடம் ஆலோசனை செய்யச் சென்றிருக்கும் சம்பந்தன் அவர்களும் சம்பந்தன் வந்தபின்னர் அவருடன் கலந்துரையாடி முடிவினை அறிவிப்போம் என தமிழர்களைக் காக்கவைத்திருக்கும் சேனாதி அண்ணன் உள்ளிட்ட கூட்டமைப்பினரும் கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும். மோடி அரசு தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வினைப் பெற்றுத்தரும் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் தமிழர்களும் இதனை தமது சிந்தைவளிக்குள் புகுத்திக்கொள்வது நல்லது.

புலம் பெயர் தமிழர்களின் இடைவிடாத உறுதிமிக்க நீதிக்கான போராட்டத்தினால் தவிர்க்கவே முடியாது என்ற நிலையில் தமிழகளது பிரச்சினை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழர்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சர்வதேசத்தை சீனா, இந்தியா, ரசியா போன்ற நாடுகளின் துணைகொண்டு ராசபக்சேக்கள் அடக்கிவருவதுடன் அடங்க மறுத்தும் வருகின்றார்கள்.

உலகப் பொருளாதார சுனாகிக்குள் சிக்குண்டு போயுள்ள சர்வதேச நாடுகள் அதனைமீறி யாரையும் பகைத்துக் கொள்ளவோ எதனையும் செய்துவிடவோ முடியாத இக்கட்டில் இருப்பதால் ஆதரவு நாடுகளின் கட்டுக் காவலையும் மீறி ராசபக்சேக்களுக்கு எதிராக துரும்பைக் கூட தூக்கிவைக்க முடியாததன் வெளிப்பாடகவே அவர்களுக்குத் தெரிந்த நன்கு பரிச்சயமான ஆட்சிமாற்றத் திட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள்.

இந்த ஆட்சிமாற்றம் தீர்விற்குப் பதில் தீராத சிக்கலையே கொண்டுவரப்போகின்றது என்பதை விரைவில் அனைவரும் உணர்வார்கள்.

தமிழர்களின் நீடித்த பிரச்சினைக்கு தீர்வினைக் காணும் நிலையை புலம்பெயர் தமிழர்களது அறப்போராட்டங்களும், தாய்த் தமிழகத்தில் உள்ள எட்டுக் கோடி தொப்புள்கொடி உறவுகள் எழுப்பும் ஆதரவுக் குரல்களும், உயிரே போனாலும் பறவாயில்லை என்ற நிலையில் இருந்து இனத்தின் உரிமைக்கா துணிவுடன் எழுப்பப்படும் உரிமைக் குரல்களும்தான் தீர்மானிக்க முடியும்.

இவர்களது குரல்களை அடக்கிவிட்டோ, எண்ணங்களைப் புறக்கணித்துவிட்டோ, விருப்புக்களை தவிர்த்துவிட்டோ எடுக்கப்படும் முடிவானது நிச்சயமாக சர்வதேச சமூகம், இந்தியா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சுயநலன் சார்ந்ததாகவே இருக்குமே தவிர இனத்தின் விடுதலை சார்ந்ததாக இருக்கப் போவதில்லை.

காலத்தால் கூட ஆழ அகலங்களை அறிந்து கொள்ள முடியாமல் திக்கித் திணறும் எக்காலத்திலும் ஏற்புடைய முடிவுகளை எடுக்கும் தமிழீழத் தேசியத் தலைவரின் வழி நின்று சிங்கள தேசத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் இத் தேர்தலை தமிழர்களாகிய நாம் புறக்கணிப்போம்.

இதுவே தமிழரின் நிலையினை தெளிவாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல சரியான வழிமுறையாகும். சிங்கள அரசியல் அமைப்பினை தமிழர்கள் எக்காலத்திலும் ஏற்றுக் கொண்டதில்லை. அவ்வாறு இருக்கும் போது கூட்டமைப்பு கூறுவதைப்போன்று வாக்குரிமையினை முழுமையாகப் பயன்படுத்தி எதனைச் சாதிக்கப் போகின்றோம்? தமிழின உணர்வாளரான இயக்குநர் புகழேந்தி அண்ணன் குறிப்பிடுவதைப் போல் தமிழர்கள் இனிமேல் வாக்களிப்பதாக இருந்தால் ஒரே ஒரு தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆம் சுதந்திர தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பின் போதே எமது வாக்குரிமையினை நாம் பயன்படுத்துவோம்.

மகாபாரத போரில் கண்பார்வை அற்ற திருதராட்டினனுக்கு வாழ்க்கைப்பட்ட காந்தாரி என் கணவர் காணாத எதையும் நானும் பார்க்க விரும்பவில்லை என தனது கண்களை கட்டிக் கொள்வார். போரின் இறுதிக் கட்டத்தில் தன் 99 சகோதரர்களையும் நண்பன் கர்ணனையும் துணைநின்ற மன்னர்களையும் இழந்து நிர்க்கதியாக துரியோதனன் நின்றபோது எந்த ஆயுதத்thaaலும தாக்கமுடியாத வலிமையினை அவனது உடலிற்கு வழகியது காந்தாரியின் கண்களில் தேக்கிவைத்திருந்த சக்திதான்.

பாண்டவர் பக்கம் நின்று சூழ்ச்சியால் துரியோதனனின் தொடைப்பகுதியில் அந்த ஒளிபடாமல் கிருஷ்ணர் தடுத்ததால் பீமனின் கதை இயல்புநிலையில் இருந்த தொடையைத் தாக்கி வீழ்த்தப்பட்டான் துரியோதனன்.

கண்களைக் கட்டி சிவனை நோக்கி தவமிருந்து பெற்ற வரத்தின் மூலம் துரியோதனனுக்கு காந்தாரி சக்திமிக்க உடலைக் கொடுத்தது போல் நாமும் தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கான நிலையினை அடையும்வரை கடுமையாகப் போராடுவோம்.

கிருஷ்ணன்களாக சம்பந்தன்கள் ஆகி காரியத்தைக் கெடுக்காது மக்களை சரியான பாதையில் வழிநடத்துவதே இன்றைய தேவையாக உள்ளது.

(UK Tamil Fouram)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com