Contact us at: sooddram@gmail.com

 

நிஷேவிதா

ஆழிப்பேரலையை தலை குனியச் செய்தவள்

நிஷேவிதா – வடமொழியில் இருந்து வந்திருக்கக் கூடிய இந்தச் சொல்லுக்கு நேரடி அர்த்தம் எனக்குத் தெரியாது. ஆனால், நான் புரிந்துகொண்ட பொருள், நிஷேவிதா என்றால் அழகு என்பதே. மட்டக்களப்பு மருத்துவமனையில், உனது அம்மாவின் கட்டிலின் அருகே, உனது அம்மம்மா உன்னை தூக்கி வைத்திருக்க, கைக்குழந்தையாய் உன்னை முதன் முதலாக நான் பார்த்தபொழுது, இந்தப் பெயரைவிட நீ அழகாய் தெரிந்தாய். ஆனால், இப்போது அதனைவிட அழகாய் தெரிகிறாய். உனது அம்மாவும் (உமா அக்கா) அழகு. அவர்கள் வீட்டில் ஆண் சகோதரம் இல்லாததால், அவர்கள் அனைவருக்கும் தம்பியாய் அங்கு நுழைந்தவன் நான். அங்கு நான் சிரித்து, விளையாடியது, மகிழ்ச்சியாய் இருந்தது மிக, மிக அதிகம்.
அவர் எனது சகோதரி என்பதால் அவரது அழகை நான் அதிகமாகப் பேசக் கூடாது, ஆனால் எங்களுடைய அம்மா அடிக்கடி அதனைச் சொல்வார். எங்கள் அம்மா அந்த நாளில் மிகவும் அழகானவர். ஆனால், அவரே ‘’உமா ஒரு பதுமை போல, டோல் போல, அவ்வளவு அழகு என்று எப்போதும் சொல்வார்.


உங்கள் அப்பாவும் மிகவும் அழகானவர். அவர்களது திருமணத்தின் போது நான் ஒரு சிறுவன். அந்தக் காலகட்டத்தில் அங்கு நான் பார்த்த புதுக் கல்யாண ஜோடிகளில் இவர்கள் மிகவும் அழகானவர்கள். அதுதான் கண்பட்டுவிட்டது போலும்.
நான் நாட்டைவிட்டு முதன்முதலாக புறப்பட்ட அன்று உன்னை முருங்கனில், உங்கள் வீட்டில், உங்கள் அப்பாவின் கைகளில் கொண்டுசென்று நான் கொடுத்தது எனக்கு இன்னமும் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது.
உனது அப்பாவும், தான் இறப்பதற்கு முன்னர், இறுதியாக என்னுடன் தொலைபேசியில் பேசிய பொழுது, ஏனோ தெரியவில்லை, இதனையே ஞாபகப்படுத்தினார்.
அன்றைய பயணத்தின் போது உன்னை கைகளில் தூக்கியபடி நான், என்னுடைய அப்பா, உமா அக்கா எல்லாரும் சென்றோம். மிகவும் இனிமையான நாள் அது. என்னுடன் நிறைய நேரம் நீ இருந்த நாளும் அதுதான். அதன் பின்னர் உன்னை குழந்தையாக நான் பார்த்ததே இல்லை.
உண்மையில், அதன் பின்னர் உன்னை ஒரு பிரமிப்புடனேயே பார்க்க வைத்தாய்.
உன்னுடைய கண்ணீரை எழுத்துக்களில் மாத்திரமே நான் பார்த்திருக்கிறேன். குழந்தையில்கூட நீ அழுததாக எனக்கு ஞாபகம் இல்லை. சுனாமியில் உனது தம்பியை, தந்தையை நீ இழந்தபோது நான் அங்கு இல்லை.
ஆனால், அன்றைய நிகழ்வுகள் குறித்து பேசிய அனைவரும், உன்னைப் பற்றி நிறையவே பேசினார்கள், ஆனால், அவர்கள்கூட உனது கண்ணீரைப் பற்றி பேசவில்லை. அன்று உனது அம்மா முதல் அனைவரும் அழ, நீ மாத்திரம் அழுதிருக்கமாட்டாயோ, அதற்கு உனக்கு நேரம் இருந்திருக்காதோ என்றுகூட எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
ஒரு குமர் பெண்ணாய், பதின்ம வயதியில், கடலழித்துப் போன நாவலடியிலும், அதனையடுத்து மட்டக்களப்பு மருத்துவமனையிலும் மரித்துப் போனவர்களின் உடல்களின் மத்தியில், உனது அப்பாவை, தப்பியை தேடிய போது நீ அழுதாயா மகளே? உனக்கு அதற்கு நேரம் இருந்ததா? இருந்திருக்க முடியாது..
அவர்களது உடல்களை கண்டெடுத்து, இறுதி நிகழ்வு நடத்திய பிறகு, உனது தந்தையின் நண்பரின் குடும்ப உறுப்பினர்களின் உடல்களை நீ எப்படி தேடியலைந்தாய் என்பதை பாப்பா எனக்கு கூறினாள். அன்று நான் உனக்காக அழுதேன்.
அழித்து, ஓய்ந்துபோன கடல்கூட அன்று உனக்காக அழுதிருக்கும்.
இன்று எல்லாம் நடந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. அனைவரின் கண்ணீரும் காய்ந்துபோகும் தருணம் இது.
இந்து சமுத்திர சுனாமியின் அழிவுகள், அவலங்கள், சோகங்கள் குறித்து இந்தக் காலகட்டத்தில் ஆயிரம் கதைகளை நான் கேட்டிருக்கிறேன். செய்திக்காக பல தகவல்களை நானே படித்து, மொழிபெயர்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனது கண்ணின் முன்பாக தெரிந்தது எனக்கு மிகவும் நெருக்கமான உனது அப்பாவும் தம்பியுந்தான்.
ஆனால், இப்போது அவர்களது முகங்கள் மறைந்து, ஏனோ உனது முகந்தான் எனக்கு நினைவில் நிற்கிறது. அந்தக் கடலலைகளின் மேலாக உனது முகமே தெரிகிறது. கீழே அந்த கடல் உன் முன்பாக, உனது துணிவைப்பார்த்து தலைகுனிந்து நிற்கிறது.
கடலழித்துப்போனது மிகவும் மோசமான நிகழ்வு. அது தந்த சோகங்களும் மிகவும் அதிகம். ஆனால், கடல் நடத்திய அந்த போர்க்களத்தில், உனக்கு சற்றும் பரிச்சயமில்லாத இடத்தில், இறந்து கிடந்தவர்களின் உடல்களின் மத்தியில் நடந்து, நெஞ்சில் சிறுமியாக பருவத்தில் குமரியாக நீ நடத்திய தேடுதல் ஒரு யாகம்.
சுனாமியின் சோகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் துணிவோடும், மிடுக்கோடும் அன்று தாக்குப் பிடித்து நின்று போராடிய உன்னைப் போன்றவர்கள்தான் இனி நினைவில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.
மறைந்தவர்களை மறந்துபோகச் சொல்ல எனக்கு தார்மீக உரிமை எதுவும் கிடையாது, ஆனால், அந்த கடலலைகளை, அதன் அழிவுகளை தாண்டி வா.
இப்போதெல்லாம், நீ அழகானவளாக மாத்திரமல்ல திடமானவளாக, மிடுக்கானவளாகவும் எனக்கு தெரிகிறாய். உனது மகளையும் உன்னைப் போல் வளர்த்துவிடு.
நிஷேவிதா என்ற பெயருக்கு புது அர்த்தம் ஒன்றையும் நீ தரலாம். துணிவுள்ளவள் என்று…

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com