Contact us at: sooddram@gmail.com

 

அறியப்படாத இலக்கிய முகம்

இதே டிசம்பர் மாதத்தில்தான் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய விவசாயிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 1968-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் பாதிப்பை விளைவித்தது. ஞானக்கூத்தன், இன்குலாப், இந்திரா பார்த்தசாரதி, சோலை சுந்தரபெருமாள் உள்ளிட்ட பலரும் பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சமூகக் கொடுமையைத் தங்கள் படைப்புகளில் பதிவுசெய்துள்ளனர்.

ஆனால் அதற்கு ஆறாண்டுகளுக்கு முன்பு 1962-ல் இதே போன்ற ஓர் அடக்குமுறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் ‘சூத்திரதாரி’ என்னும் ஒரு சிறுகதை வெளிவந்திருந்தது. ஆர். என். கண்ணன் என்பவர் அந்தக் கதையை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு. வெளிவந்தவுடனே பரவலாக வாசிக்கப்பட்டு கவனமும் பெற்றது. அந்த எழுத்தாளருக்கு அதுதான் முதல் கதை. அதற்கு முன்பு கட்டுரைகள் எழுதியுள்ளார். முதல் கதைதான் என்றாலும் கதையின் விவரிப்பு கூர்மையானதாக இருந்தது. உண்மை ஒளியும் பொருந்தியிருந்தது. வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்தும் தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’, பூமணியின் ‘வெக்கை’ போன்ற நாவலை எழுதியிருக்க வேண்டிய அந்த எழுத்தாளர் துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு கதையே எழுதவில்லை. அதுவே அவரது முதலும் கடைசியுமான கதையாகிவிட்டது. ஆனால் அவர் தன் வாழ்க்கையைப் பக்கங்களுக்குள் அடக்கவியலாத அனுபவங்களால் ஆனதாக மாற்றிக்கொண்டார். 72 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பொது வாழ்க்கையே இன்றைய சமூகத்திற்கான ஒரு முன்னுதாரணம். தோழர் ஆர்.என்.கே. என அழைக்கப்படும் மதிப்புமிக்க தலைவர் நல்லகண்ணுதான் அந்த எழுத்தாளர்.

முதலாளிகளின் அடக்குமுறை

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கம்தான் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்தது. அந்த இயக்கமோ பெரும்பாலும் பண்ணையார்களையே நம்பியிருந்தது. சுதந்திர இந்தியாவிற்குத் தேர்தல் வந்தபோது வேட்பாளர்கள் பலரும் பண்ணையார்களே. இல்லையெனில் பண்ணையார்களின் ஆதரவையும் ஆசியையும் பெற்றவர்களாக இருந்தனர். சுதந்திரம் பெற்ற பிறகும் அதே ஆண்டான், அடிமை முறைதான். இந்தச் சூழலில்தான் ‘ஆகாவென்று எழுந்தது யுகப் புரட்சி’. தோழர்கள் பலர் கிராமம் கிராமமாகச் சென்று முதலாளிகளின் அடக்குமுறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர். தோழர் நல்லகண்ணு அவர்களுள் ஒருவர்.

கவிதையின் மீது ஈடுபாடு

அந்தக் காலகட்டத்திய நல்லகண்ணுவின் அனுபவம்தான் ‘சூத்திரதாரி’ கதையாக வெளிப்பட்டிருக்கிறது எனலாம். நல்லகண்ணு கவிதையின் மீது ஈடுபாடு கொண்டவர். சுப்ரமண்ய பாரதியும், சுத்தானந்த பாரதியும் இவரது ஆதர்ச கவிகள். கவிதைகளும் எழுதியிருக்கிறார்; மொழிபெயர்த்துள்ளார். ஆனால் கதைக்கு மிக எளிமையான வட்டார வழக்கு மொழியே அவர் தெரிவு. அந்தக் காலகட்டத்திய ரொமண்டிஸிசமும் இவரது கதையில் இல்லை. கதைச் சூழல் குறித்த தேவையில்லாத அழகியல் விவரிப்புகள் இல்லை. இந்த அம்சம், கருத்தைச் சிதைக் காமல் கதைக்குப் பலமாகிறது.

சுதந்திர இந்தியாவின் சிறு கிராமத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சாரம்தான் கதையின் மையம். பண்ணையார்கள் அந்தக் காலத்தில் தனி அரசாங்கங்களாக இருந்தனர் என்பதைக் கதை தொடக்கத்திலேயே சித்திரித்துவிடுகிறது. அவர்களின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது என்கிறது கதையின் ஒரு வரி. பண்ணையார்களின் தயவில்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஆதாரமாகிறது. பண்ணையார்கள் கை நீட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலையில் மக்கள் இருந்துள்ளனர் என்பதும் புலனாகிறது. ஏனெனில் தனக்குப் பணியாத மக்களைக் காவல்துறையை ஏவித் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு இருந்துள்ளது.

முனியனின் குடிசை

கைலாசபுரம் என்னும் கிராமத்தை கீழச்சேர்ப் பண்ணை, மேலச்சேர்ப் பண்ணை ஆகிய இரு பண்ணையார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் குமாரசாமியா பிள்ளை பண்ணையார்களின் ஆதரவை நாடி வருகிறார். போட்டியிடுபவர் சொந்தக்காரர். கட்சியும் வேண்டப்பட்ட கட்சி என்பதால் ஆதரிக்கிறார்கள். அந்த ஊரின் பெரும்பான்மை ஜாதி வாக்கை நம்பி அவர்களில் ஒருவரை வேட்பாளராக அறிவித்து தன் கட்சிக்கான அறுவடையைச் செய்ய மற்றொரு புதிய கட்சி முயல்கிறது. இதற்கிடையில் தொழிலாள வர்க்கத்தின் புதிய எழுச்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் களத்தில் இறங்குகிறது.
பண்ணைகளைக் கடந்து செல்லும் கம்யூனிஸ்ட் தோழர்களின் சைக்கிள் பேரணி பண்ணையார்களை நடுநடுங்கச் செய்கிறது. ஒலிப்பெருக்கியிலிருந்து தெறிக்கும் அவர்களது முழக்கங்கள் பண்ணையார்களின் செவிநரம்பை அதிரச்செய்கின்றன. பேரணியின் முன்னின்று செல்லும் முனியன் என்ற ஒரு தலித்தை நோக்கிப் பண்ணையார்களின் தடித்த கன்னங்கள் சிவக்கின்றன. அதுவரை ‘பெளவியமாக’ இருந்த தலித்துகளுக்கு கம்யூனிச இயக்கம் தந்த தைரியம் பண்ணையார்களால் சகிக்க முடியாததாக இருக்கிறது. இறுதியில் முனியனின் வீடு தீப்பற்றி எரிகிறது.

நாட்டார் பாடல்களில் ஈடுபாடு

நல்லகண்ணு சிறையில் இருந்த கால கட்டத்தில் வாசிப்பு, எழுத்து எனத் தீவிரமாக இயங்கியுள்ளார். நாட்டார் பாடல்கள் மீது அவருக்கு உள்ள நாட்டத்தை அந்தக் காலகட்டத்திய அவரது கட்டுரைகளின் வழியே அறிய முடிகிறது. கசப்புக் கவிஞர் என அழைக்கப்பட்ட ஆண்டான் கவிராயன் குறித்து எழுதியுள்ளார். இந்தக் கவிஞர் குறித்த பதிவை உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ நூலில் பார்க்க முடிகிறது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் புனைப்பெயர்களில் ஒன்று ‘ஆண்டான் கவிராயன்’. சமுதாய அநீதிகளைச் சபித்துப் பாட இந்தப் புனைப்பெயரை கவிமணி சூட்டிக்கொண்டுள்ளார். ஆண்டான் கவிராயனின் தனிப் பாடல் திரட்டுகளிலிருந்து பல பாடல்களை நல்லகண்ணு மேற்கோள் காட்டுகிறார். 1950-ல்தான் ஆண்டான் கவிராயன் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றன. அதை வாசித்துப் பதிவுசெய்ததில் நல்லகண்ணுவின் நுட்பமான வாசிப்பு நமக்குப் புலனாகிறது. சாதி, மத பேதமின்றி உயரும் ஆண்டான் கவிராயனின் சாடல்களைப் பாரபட்சமின்றிப் பகிர்ந்து கொள்கிறார் நல்லகண்ணு.

பாடல்கள் மூலம் கடந்த சிறைக்கொடுமை

கொண்டாட்டத்திற்கான, தேம்பலுக்கான வடிவமாகப் பாடல்கள் இருக்கின்றன. சிறைகளின் தனிமையை, கொடுமைகளை கைதிகள் பாடல்கள் மூலம்தான் கடந்திருக்கிறார்கள். அவற்றைச் சிறைப் பாடல்கள் எனத் தனியாகப் பட்டியலிடுகிறார் நல்லகண்ணு. அந்தக் காலத்தில் சிறை அதிகாரிகளை ‘சார்’ என விளிப்பது மரியாதைக் குறைவாகப் பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகளை விளிப்பதுபோல் ‘துரை’ என்றே விளிக்க வேண்டும். இதை மீறும் கைதிகளுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. “...தீஞ்ச ரொட்டிக்கும்/கையேந்தி நிற்கும் பரிதாபம்/பார்/ சார்... சார்... என்று சொன்னால் ஷட் அப்” என்னும் சிறைப்பாடலை வேடிக்கையாக மேற்கோள் காட்டுகிறார்.
நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் நா. வானமாமலை தொடர்பால் இவருக்கு நாட்டார் பாடல்கள் மீதான ஆர்வம் மிகுந்திருக்கலாம் என அவதானிக்க முடிகிறது. நா.வா. குறித்தும் நல்லகண்ணு எழுதியிருக்கிறார். திரு.வி.க., தமிழ்ஒளி, தொ.மு.சி. ஆகியோர் குறித்தும் மரியாதையுடன் பதிவுசெய்துள்ளார். பாரதி குறித்த அவரது கட்டுரைகள் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.

பாரதியைத் தேடி

காசியில் பாரதி வசித்த வீட்டைத் தேடி அலைந்த கதையைச் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்கிறார் நல்லகண்ணு. கங்கையின் ஓரத்திலிருந்த ஒரு வீட்டில் பாரதி வசித்துவந்துள்ளார். தன் மாமா மீதுள்ள பயம் கலந்த மரியாதையால் மாடி அறையில் பதுங்கிக்கொண்டிருந்த காட்சியைத் தன் எழுத்துகள் வழியாக நல்லகண்ணு நம் கண் முன்னே உருவாக்கிவிடுகிறார். பாரதிக்கும் அவரது தங்கைக்குமான நேசத்தை நல்லகண்ணு விவரிக்கும்போது பாரதியின் இன்னொரு பக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது.
நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் தாண்டி பாரதியும் மார்க்ஸும் நல்லகண்ணுவின் ஆதர்ச புருஷர்களாக இருக்கிறார்கள் எனலாம். இப்போது இவருடைய அலுவலக மேஜையில் இவர்கள் இருவரது நிழற்படங்களை மட்டும் பார்க்க முடிகிறது. இந்த நிழற்படங்களில் இருக்கும் பாரதியும் மார்க்ஸும் இரு தனி நபர்கள் மட்டுமல்ல; 72 ஆண்டுக் காலப் பயணத்தின் மொழியும் அரசியலும்.
(மண்குதிரை)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com