Contact us at: sooddram@gmail.com

 

உண்மைகள்.உறங்குகின்றன..

(Koviloor Selvarajan)

நமது தாயகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனட, அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏதுமில்லாதவர்களாக வெறுமனே ஏதிலிகளாக வந்த எம் மக்கள் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மொழி,வேலைவாய்ப்பு, கலாச்சாரம், காலநிலை, என்று பல காரணிகளால் கஷ்டப்பட்டார்கள். ஊரிலிருந்த காணிபூமி, அம்மா, அல்லது மனைவியின் தங்க நகைகள், ஏன் பத்துசத வட்டிக்கு கூட கடன் வாங்கியே முகவர்களுக்கும், விமான பயணத்திற்கும் கொடுத்தார்கள். அப்படித்தான் அநேகம் பேர் இந்த மேற்குலக நாடுகளுக்குள் வந்தார்கள். இவர்களில் தாயகத்தில் தரமான உத்தியோகத்தில் இருந்தவர்கள் கூட தங்களின் நிலத்தைவிட்டு  ுலத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. இங்கு  வந்தபோது  இவர்கள்தான் மிகவும் கஷ்டப் படவேண்டியதாகப் போய்விட்டது.
 

தாயகத்தில் இருந்தபோதும் இரண்டாந்தர பிரஜையாகப் பார்க்கப்பட்ட இவர்கள் அந்நிய தேசங்களிலும் அவமானத்தையும்,கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டியதாயிற்று.பெரிதும் மன உழைச்சலுடன் இருந்த இவர்கள் நாளடைவில் தங்களை மாற்றிக்கொண்டு தங்களுக்கு புகலிடம் தந்த நாடுகளுடன் ஒன்றிப்போவதத்கு பழகிக் கொண்டார்கள். இப்படியே மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்கள்.பனியிலும்,குளிரிலும் இவர்கள் கஷ்டமான வேலைகளையும், பழக்கப் படாத வேலைகளையும், இரவு பகலாக செய்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது.நொந்து நூலாகி இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த இவர்கள் முதலில் தங்களின் கடன்களை அடைத்தார்கள்.பலர் அக்கா,தங்கைகளை கரைசேர்த்தார்கள்.சிலர் தம்பி,தங்கைகளை படிக்கவைத்தார்கள்,வளவு
வாங்கினார்கள், வீடுகட்டினார்கள், உறவுகளுக்கு உதவினார்கள்.ஊருக்கு பல காரியங்களுக்கு உதவினார்கள்,

இவ்வளவிற்கும் இவர்கள் படும் கஷ்டம் ஊருக்கோ அல்லது உறவுகளுக்கோ தெரிவதில்லை.அவர்கள் நினைப்பெல்லாம் ஏதோ வெளிநாட்டில் பணம் வானத்திலிருந்து கொட்டுகின்றதென்பதே. அதனால்தான் நாளுக்குநாள் தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும் அனுப்பி இவர்களை இம்சைப்படுத்தினார்கள். இவர்கள் தங்கள் துன்பத்தை அவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாமல் திண்டாடியது ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாது.புலத்தில் உள்ள பலர் தங்கள் கஷ்டத்தை மறைத்துக்கொண்டு அங்கிருந்து பணம் கேட்டபோதெல்லாம் வட்டிக்கு வாங்கி அனுப்பிய சம்பவங்கள் ஏராளம். இன்னும் சொல்லப்போனால்...தங்களின் தம்பியையோ, அக்காளின் மகனையோ,அல்லது மனைவின் தம்பியையோ ஒரு வெளிநாட்டுக்கு கூப்பிடுவதற்கு பெருந்தொகைப் பணம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு வரும்போது இவர்கள் வங்கிகளில் கடன் எடுத்துத்தான் செய்ய முடிந்தது.

இதையெல்லாம் ஊரில் உள்ளவர்கள் அறியார்கள்.ஆனால் உண்மை அதுதான். இவர்கள் இரவு பகலாக ஊன்,உறக்கமின்றி ஓய்வு உளைச்சலின்றி நாள்தோறும் வேலை செய்தே இவர்களின் கடன்களை படிப்படியாக கட்டவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்கள். இன்னும் சொல்லப்போனால் ஊரில் உள்ள கோவில் குளம், சிறுவர் காப்பகம், முதியோர் இல்லம், வெள்ள அழிவு, பள்ளிக்கூட முன்னேற்றம், சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகள் என்று ஏகப்பட்ட காரியங்களுக்கு இவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டிவரும். அதைவிட புலத்தில் நடக்கும் திருமணங்கள், பெண்கள் வயசுக்கு வரும் விழா,பிறந்த நாள் கொண்டாட்டம், கேளிக்கை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,என்று பலவற்றிற்கு இவர்கள் பணம் செலவளித்தே ஆகவேண்டும்.  இதைவிட, இவர்களின் வீட்டு கடன், பிள்ளைகளின் பாடசாலை கட்டணம்,மாதாந்த மின்சாரக் கட்டணம், வீட்டு தொலைபேசிக் கட்டணம்,கையில் உள்ள அலைபேசி கட்டணம், இணையவலை கட்டணம், காருக்கு உரிய காப்புறிதிக்கட்டணம், அதற்குரிய வீதிக் கட்டணம், எரிபொருள் நிரப்ப பணம், வைத்தியசாலை கட்டணம், மாத்திரை, மருந்துக்குரிய பணம், மாதாந்த கடனட்டை கொடுப்பனவு, வீட்டு நிர்வாக செலவு, இதில் உணவு, அத்தியாவசிய பொருட்கள், மற்றும் முக்கிய இதர செலவுகள்வந்து இவர்களின் முன் நிற்கும்.வாசிக்கும்போதே மூச்சு வாங்குதல்லவா?

இதையெல்லாம் இவர்கள் எப்படி கஷ்டப்பட்டு சமாளிக்கிறார்கள் என்பது அந்த ஆண்டவன்  ஒருவனுக்குத்தான் தெரியும். ஊரில் இருக்கும் சொந்தங்களுக்கோ அல்லது பொது பணிக்கு 
பணம் கேட்டு எழுதும் அமைப்புகளுக்கோ தெரியாது.
இன்று பார்த்தால், ஊரில் உள்ள ஒரு சாரார் புலத்தில் வாழும் மக்களைவிட வாழ்க்கைத்தரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை  ஊருக்கு போய்வந்த பலர் சொல்கிறார்கள். குறிப்பாக ஆழிப் பேரலை அழிவுக்குப்பின், அரசாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் பல திட்டங்களும், வசதிகளும், வாய்ப்புகளும் பரவலாக ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றும், அநேக வீடுகள் மாடி வீடுகளாக கட்டப்பட்டும், அநேக வீடுகளில் மகிழூர்திகழும்,(கார்)உந்தூர்திகளும் (மோட்டார் சைக்கிள்) கணிசமான வீடுகளில் இருக்கின்றன என்ற தகவலும் வருகின்றன.

அங்கு வசதியாக உள்ளவர்கள் தங்களை  வளம்படுத்தவே பார்க்கிறர்கள். தங்களின் பணத்துக்கு பங்கம் வராமல் காணிபூமி வாங்கி விடுகிறார்கள். மாடுகண்டு, தோட்டம் துரவு வீடுவளவு என்று சொத்து சேர்ப்பதில் நாட்டமாக இருக்கிறார்கள்  என்ற செய்திகளும், அங்குள்ள பொதுநல தேவைகளுக்கு இவர்கள்  பெரிதாக உதவுவதில்லை, இதை புலம் பெயர்ந்த மகளிடமே எதிர்பார்க்கிறார்கள் ஏன் இப்படி? என்ற கேள்வியும், ஆதங்கமும் புலத்தில் வாழும் மக்களிடையே இன்று எழுந்து நிற்கிறது.

பலர்  வெளிப்படையாகவே தங்களின் கஷ்டத்தையும்,இயலாமையையும் சொல்லி ஊரில் வசதியாக உள்ளவர்களிடமும் பொதுநல அமைப்புகள் உதவி கோரலாமே என்று சொல்கிறார்கள்.சிலர் வழமைபோல் என்ன கஷ்டமோ ஏதோ தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். இந்தக் கட்டுரை என்ன சொல்லவருகிறதென்றால் புலத்தில் வாழும் மக்கள் இங்கு மகா கஷ்டத்திலேதான் அதாவது கட்டுரையில் சொன்ன பல பிரச்சினைகளுக்குள் இருந்தே வாழ்கிறார்கள் என்பது உண்மை. இந்த உண்மை உறங்குகிறது. ஊரில் உள்ள உறவுகளும், ஏனையோரும் இதை புரிந்துகொள்ளுங்கள் என்பதை தான். வாசகர்களே சற்று சிந்தியுங்கள்..சரியென்று படுகிறதா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com