Contact us at: sooddram@gmail.com

 

யாழ் குடாவின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய்

யாழ் குடாவின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய்கள் கலந்தமையும், அது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும், திட்டமிட்ட விதத்தில் ஆராயப்படவேண்டியவைகளும்
யாழ் குடாவின் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய்கள் கலந்திருப்பது, பரீட்சைகள் மூலம் நிறுவப்பட்டதொரு விடயமாகும். 2012ஆம் ஆண்டில் இது சுண்ணாகம் மின் நிலையக் பகுதியில் முதன் முதலாக பரீட்சித்து அறியப்பட்டிருந்தது. இதை எவரும் நிராகரிக்கமுடியாது.
இன்று கழிவு எண்ணெய்கள் சுண்ணாகம், ஏழாலை, மல்லாகம், அளவெட்டி, தெல்லிப்பழை, இளவாலை, கட்டுவன், புன்னாலைக் கட்டுவன், ஊரெழு, உரும்பிராய், இணுவில், சுதுமலை எல்லையிலுள்ள ஈஞ்சடி வைரவர் கோயில் பகுதிகளிலுள்ள கிணறுகளில் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், முதலாவதாகச் செய்யவேண்டியது, இந்தப் பகுதிகளின் கிணறுகள் பரிசோதிக்கப்பட்டு, அவைகளில் என்னென்ன அளவுகளில் எணணெய், கீறீஸ் என்பவைகள் கலந்துள்ளன என்பது ஆதாரபுர்வமாக அறியப்படவேண்டும். அதே வேளையில் உடுவில் வயல் பகுதிகளிலும், அதனை அண்டிய கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளிலும். கந்தரோடைக் கிராமம், மற்றும் சங்குவேலி என்பவைகளின் கிணறுகளிலும் கழிவு எண்ணெய்கள் கலந்துள்ளனவா என்பது பரீட்சித்துப் பார்த்து, உறுதிப்படுத்தப்படவேண்டும்.
இன்றுவரை உடுவில் வயல் பகுதியிலும், அதைச் சுற்றிய குடியிருப்புப் பகுதிகளிலும் கழிவு எண்ணெய் கிணற்று நீரில் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில், ஒரு மிக முக்கிய கேள்வி எழுகிறது.

சுண்ணாகம் மின் நிலையத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள தெல்லிப்பழை, இளவாலை, கட்டுவன், இணுவில் , உரும்பிராய் போன்ற பகுதிகளில் கழிவு எண்ணெய்கள் கலந்ததாகக் கூறப்படும்போதும், மேற்கே அருகில் உள்ள உடுவில் வயல் பகுதிக்கும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏன் கழிவு எண்ணெய்கள் நிலத்தடி நீரில் பரவவில்லை? பல கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள இளவாலை, தெல்லிப்பழை, கட்டுவன் பகுதிகளுக்கு எப்படிப் பரவியுள்ளது.
மிகத் தொலைவில் உள்ள கிராமங்களில் பரவியிருக்கிறது எனக் கூறப்படுவது பொய்யா?
இக்கேள்விக்குப் பதிலளிப்பதாயின்:

1) கழிவு எண்ணெய்கள் மணல், மண், கற்பாறை, ஏனைய பகுதிகளில் எப்படி உறுஞ்சப்படுகிறது, பரப்பப்படுகிறது என்பது பற்றித் தெரியவேண்டும்.

2) சுண்ணகம் மின் நிலையத்து பகுதியின் தரை படை அமைப்புக்கள், அவற்றின் தன்மைகள் பற்றித் தெரியவேண்டும்,

3) கழிவு எண்ணெய் பரவியதாகக் கூறப்படுத் கிராமங்களின் தரைப் படைகளின் தன்மைகள், அமைப்புக்கள் பற்றித் தெரியவேண்டும்.

 இவைகளைப் பற்றி எவர்களாவது இன்றுவரை ஆய்வுகளைச் செய்து அறிபக்கைகளை வெளியிட்டுள்ளார்களா?
கழிவு எண்ணெய்யினை மணல் பகுதியில் விட்டால், அது மணலுடன் பொருந்தி, ஒரு தொகுதியாக நின்றுகொள்ளும்.
மண்ணிலும் இதுவே பெருமளவில் நடைபெறும்.
ஆனால், கற்பாறைத் தொகுதியில் கழிவு எண்ணெய் ஆனது, பாறை வெடிப்புக்களுடாக வழிந்து ஓடியவண்ணம்தான் இருக்கும்.
சுண்ணாகம் மின் நிலையப் பகுதியானது, தரையின் மட்டத்திலேயே கற்பார்கள் இருக்கும் பகுதியாகும். இந்தக் கற்கள் உடைத்து எடுக்கப்பட்டே இப்பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
கழிவு எண்ணெய் பரவியிருப்பதாகக் கூறப்படும் செம்மண் கிராமங்களிலும், கற்படையானது வெவ்வேறு ஆழங்களில் காணப்படுகின்றது.
ஆகையினால், சுண்ணாகம் மின் நிலையத்தில் கழிவு எண்ணெய்கள் நில மேற்பரப்பில் விடப்பட்டால், அவை ஒரு குளமாக இருந்து, மிகச் சிறிய அளவுகளில் மெல்லமெல்லக் கசிந்து செல்லும் நிலைதான் உருவாகியிருக்கமுடியும்.
இல்லாதுபோனால். மின் நிலையப் பகுதியில் துளைக் கிணறுகள் துளைக்கப்பட்டு அவற்றினுள் கழிவு எண்ணெய்கள் விடப்பட்டிருக்கவும் முடியும்.
அப்படி விடப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நீர் கிடைக்கும் நிலை உருவாகியிருக்கமுடியும்.
கழிவு எண்ணெய்களின் அடர்த்தியைப் பொறுத்தே அது எப்படி கற்படைகளுடாகக் கசியும் என்பது தங்கியுள்ளது.
இதைவிட, நிலத்தின் அடியில் காணப்படும் Aquifer மட்டம்வரை சில நூறு அடிகள் ஆழமாகத் துளைக்கப்பட்டு, அந்தத் தண்ணீருள் கழிவு எண்ணெய்கள் பெரும் அழுத்தத்துடன் இறைக்கப்படவும் முடியும்.
இப்படிச் செய்யப்பட்டால், சுண்ணாகம், மற்றும் பகுதிகளின் அடியில் இருக்கும் Aquifer முழுவதும் கழிவு எண்ணெய்கள் கலந்த நீரைக் கொண்டதாக மாற்றப்பட்டுவிடும்.
இது, அந்த Aquifer இல் இலிருந்து தண்ணீர் பெறப்படும் அனைத்துக் கிராமங்களினது தண்ணீரிலும் நிரந்தமாக கழிவு எண்ணெய்கள் கலந்த நிலையை உருவாக்கிவிடும்.
இந்த நிலையில், யாழ் குடா நாட்டின் நில அடியில் எத்தனை Aquifer உள்ளன, அவைகளின் அமைப்பு, பரப்பு நிலைகள் என்பவைகள் அறியப்படவேண்டும்.
இது பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டு வரை படங்கள் கிடைக்கப்பெறும் நிலை உள்ளதா என்பது அடுத்த கேள்வி.
இப்படி Waste oils கலக்கப்பட்ட Aquifers ஐச் சுத்திகரிக்கம் முறை கண்டறியப்பட்டுவிட்டதா என்பது தெரியவில்லை.
இன்றைய யாழ்குடாவின் நிலை இப்படி இருக்கும்போது, வட மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் ஓரு அவசர அறிக்கையை திணைக்களங்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், மாகாண சுகாதார சேவை அதிகாரிகள் யாரும் ஊடகங்களுக்கோ, பொது மக்களுக்கோ தகவல்களை வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்குவதாயின் அந்தத் தகவலைகளை அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றே கின்னரே செளியிடமுடியும் எனக் கூறியுள்ளது.
வடமாகாண சபையின் சுகாதார அமைச்சுச் செயலரின் இந்த அறிக்கை எப்படியானது?
ஒரு பொது, தனியார் கிணற்றில் கழிவு எண்ணெய்கள் கலந்துள்ளதா என்பதைப் பரிசோதிக்கப் பணம் செலுத்தி ஒருவர் அறிந்த நிலையில், அந்த நீரின் பயன்பாடு பற்றி. சுகாதாரத்திற்குப் பொறுப்பான MOH ஓ, PHI ஓ மாகாண சபை செயலருக்கு அறிவித்துத்தானா, அக்கிணற்று நீரைப் பயன்படுத்தவேண்டாம் என்ற அறிவித்தலை வாய்மொழியுடாகவும், துண்டுப் பிரசுரம் ஊடதகவும் செய்யவேண்டும்?
அதற்கான அனுமதியை சுகாதார அமைச்சுச் செயலர் வழங்காவிடின், அந்த விடயம் மூடி மறைக்கப்பட்டு, மக்கள் தொடர்ந்தும் கழிவு எண்ணெய்கள் கலந்த நீரை உட்கொண்டு இறக்கவேண்டியதுதான்!!
2. சுண்ணாகம் மின் நிலையத்தின் Northern Power Company யின் எந்திரங்களால் உருவாகக்கூடிய கழிவு எண்ணெய்கள்.
வலிகாமப் பகுதியின் கிணறுகளில் கழிவு எண்ணெய்கள் கலப்பது பற்றிப் பலர் பலவற்றை முகநூல்களிலும், இணையத் தளங்களிலும் எழுதி வருகின்றனர். ஆனால். சுண்ணாகம் மின் நிலையமூடாக எப்படி, எவ்வளவு கழிவு எண்ணெய்கள் ஒரு வருடத்திற்கு உருவாகியிருக்க முடியும் என்பது பற்றியும், இதற்கு உண்மையில் என்ன நடைபெற்றது என்பது பற்றியும், திட்டவட்டமாகவும், ஆதாரபுர்வமாகவும் எதனையும் எவரும் கூறவேயில்லை! இவற்றை அறிய, முதலில் எமக்குப் பின்வருவன பற்றி முழுமையாகத் தெரியவேண்டும்.

1) சுண்ணாகம் மின் நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் எத்தனை?

2) இவை ஒவ்வொன்றும் எத்தனை Mega Watts சக்தியை உண்டாக்கக்கூடியவை?

3) இவைகள் என்ன எரிபொருள் கொண்டு, எப்படி இயக்கப்படுகின்றன?

4) ஒவ்வொரு இயத்திரத்திலும், எத்தனை லிற்றர் என்ன வகையான Lubricating Oil பயன்படுத்தப்படுகிறது?

5) எத்தனை மணித்தியாலங்கள் என்ஜின்கள் இயக்கப்பட்டபின்னர் used lubricating oil மாற்றப்பட்டு வருகின்றன?

6) ஒரு வருடத்திற்குச் சராசரியாக எத்தனையாயிரம் லிற்றர்கள் கழிவு எண்ணெய்கள் ஒரு என்ஜினிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, புதிய எண்ணெய்கள் விடப்படுகின்றன?

7) Northern Power Company செயற்பட ஆரம்பித்திலிருந்து ஐந்து மின் பிறப்பாக்கிகளிலும் இருந்து எத்தனை லட்சம் லிற்றர் கழிவு எண்ணெய்கள் உண்டாகி. வெளியே எடுப்பட்டன?

8) இவ்வளவு பெரும் அளவிலான கழிவு எண்ணெய்களை Northern Power Company எப்படி அகற்றியது?

இந்த விடயங்கள் பற்றிய சரியான தகவல்களைப் பெறாது விடயங்களைப் பேசுவது வீண்.
நொதேர்ன் பவரின் மின் பிறப்பாக்கி என்ஜின்கள் பழையனவாக இருந்தால், திகவும் சீக்கிரத்தில் எரிவுக்குப் பயன்படுத்தம் எண்ணையானது lubricating oil உடன் கலந்து, lubricating oil ஆனது வெகு சீக்கிர கால எல்லைக்குள் மாற்றப்படவேண்டி இருக்கும்.
இதே கேள்விகள் இலங்கை மின்சார சபையின் மின் பிறப்பாக்கிகள் தொடர்பாகவும் எழுப்பப்பட்டு விடைகளைக் காணவேண்டியுமுள்ளது.

அதே நேரத்தில் கடந்த காலங்களில் யாழ்ப்பாணக் குடா நாட்டில் இலங்கை மின்சார சபையினால் பயன்படுத்தப்பட்டு வந்த transformers, oil circuit breakers, ஏனையவைகளின் கழிவு எண்ணெய்கள் என்ன செய்யப்பட்டன என்பதும் ஆராயப்படவேண்டும்.
மேலும் மின்சாரசபை எவ்வளவு மின் சக்தியினை ஒவ்வொரு மாதமும் இந்தக் கொம்பனியிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது, அது சுண்ணாகத்தில் எவ்வளவு மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளது என்ற விபரங்களை மின்சார சபையிடமிருந்து பெறவேண்டியும் உள்ளது.

இந்த அடிப்படை விடயங்கள் அறியப்பட்ட பின்னரே, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மையில் என்ன நடைபெற்றுள்ளது என்பதை ஓரளவுக்குச் சரியாக அறிந்து, அடுத்த கட்ட நகர்வினைச் செய்யமுடியும். சக்தி அமைச்சினாலும், வடக்கு மாகாண சபையாலும் நியமிக்கப்பட்ட விசேட குழுக்கள் இவற்றை எவ்வளவு காலத்தினுள் செய்து, அடுத்த கட்ட வேலைகளைச் செய்வார்கள் என்பது தெரியாத நிலைதான் தொடர்கிறது.

(Abimanasingham Sitthawatthai Uthayakumar)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com