Contact us at: sooddram@gmail.com

 

சம்பந்தனும் சுமந்திரனும் ,கொள்கையை மீறி கொத்தடிமை சேவகம் செய்யத்தயார்

1948 இல் இருந்து மாசிமாதம் நான்காம் திகதி இலங்கை அரசு கொண்டாடும் சுதந்திர தின வைபவத்தில் 1972 ம் ஆண்டில் இருந்து கலந்துகொள்வதில்லை என்று தந்தை செல்வநாயகம் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி தமிழர்களுக்கு நீதி வழங்காத சிங்கள அரசின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் நான்றபத்திமூன்று வருடங்களாக தமிழரசு கட்சி கலந்துகொள்ளாமல் இருந்தது.அன்று தந்தை செல்வநாயகம் தீர்மானம் எடுக்கும் வேளையில் கூட இருந்த சம்பந்தன் இன்று அவரது தீர்மானத்தை மீறி தமிழரசு கட்சியின் கொள்கையை மீறி சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டு இருக்கின்றார்.

ஒரு கட்சி அதன் கொள்கையில் நின்று எடுக்கும் ஒரு தீர்மானம் அந்த கொள்கையில் வெல்லும்வரை நீடிக்கவேண்டும். அதுவே உண்மையான அரசியல்வாதியின் நோக்கமாக இருக்கவேண்டும்.இன்று சம்பந்தன் எடுத்த தீர்மானமானது அவர் தமிழ் மக்களை சிங்கள அரசுக்கு அடைவுவைக்க ஒரே அடியாக விற்க தயார் ஆகிவிட்டார் என்றே கருதப்படுகின்றது.

ஜனநாயக நாட்டில் காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப சில விட்டுகொடுப்புக்களை செய்து அரசியலில் நலன்களை பெறுவது என்பது ஏற்புடையதாக இருந்தாலும் ஒரே நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு உரிமையும் சுதந்திரமும் இல்லாத ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த நாட்டில் தமிழ் இனத்தின் சுதந்திரத்துக்காக போராடுகின்றேன் என்று கூறிக்கொள்ளும் முக்கிய தலைவர் சுதந்திர தின விழாவில் பங்குபற்றியது தமிழர் தரப்பினரின் நெஞ்சில் ஆழமாக ஈட்டியால் குத்தியது போல இருக்கின்றது.

சட்டத்தரணி தொழிலை லாபம் ஈட்டும் ஒரே நோக்கத்துக்காக பயன்படுத்தும் சுமந்திரனின் ஆலோசனையை பெற்று தமிழர்களில் தார்மீக உரிமைகளை விட்டுகொடுக்க முயலும் சம்பந்தனின் அண்மைய செயல்பாடுகளால் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டு இருக்கின்றார்கள். மாற்றம் அடைந்துவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப மக்களுக்கு ஏதாவது நல்லதை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் சம்பந்தர் காய்களை நகர்த்துகின்றார் என்ற கோணத்தில் சில அரசியல் வல்லுனர்கள் பார்த்தாலும் பலவேளைகளில் சம்பந்தன் சிங்கள அரசின் தமிழர்கள் மீதான அடக்குமுறை திணிப்பு தீர்வு ஒன்றுக்கு கை உயர்த்துவதாகவும் கருதப்படுகின்றது.

தமிழர் தரப்புக்கு இலங்கையில் இனப்பிரச்சனை மட்டும் அல்ல அன்றாட அவர்கள் வாழ்கையே பிரச்சனையாக இருக்கிறது. அன்றாட தமிழர்களின் வாழ்வியல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.யாழில் பெரும்பகுதியில் இன்று அத்தியா அவசிய தேவையான குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.நிலத்தடி நீர் ஊற்றில் கழிவு எண்ணெய் படிந்து யாழ் முழுவதும் பாழாகும் நிலை வந்துள்ளது.

போர் முடிந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் காணாமல் போனவர்களை ராணுவத்தினரிடம் சரண் அடைந்தவர்களை, சிறைகளில் வாழ்பவர்களை உறவுகள் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.அரசின் கைபோம்மைகள் போல செயல்படும் சம்பந்தன் சுமந்திரன் அந்த காணாமல் போன உறவுகளை பற்றி தீர்க்கமான ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக இதுவரை எந்த செய்தி தாள்களிலோ வேறு ஊடகங்களிலோ அறிய முடியவில்லை.மாறாக முன்னால் போராளிகளை விடுதலை செய்யவேண்டாம் என்று அரசை கேட்டுக்கொண்டதாக அண்மையில் ஒரு செய்தியும் உலாவந்தது. இவர்கள் செயல்பாடுகளை பார்க்கும் பொழுது அதுகூட உண்மையாக இருக்குமோ என்று தமிழ் மக்களை சிந்திக்கவைக்கின்றது.

ராணுவம் கையகபடுத்திய காணிகள் வீடுகள் மக்களின் சொத்துக்களை விடுவிக்க இந்த சம்பந்தனும் சுமந்திரனும் எந்தவிதமான காத்திரமான முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை. மாறாக மக்கள் காணிகளை விடுவிக்க மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை குழப்பும் விதத்தில் தொடர்ந்தும் பலதடவை செயல்பட்டு இருக்கின்றார்கள்.வன்னி, வலிகாமம், சம்பூர் ,அம்பாறை ஆகிய பிரதேசங்கள் வேகமாக சிங்கள் குடியேற்ற பிரதேசங்களாக மாறிவருகின்றது. அவற்றை தடுப்பதற்கு அவற்றை உடனடியாக நிறுத்தி எமது தமிழ் மக்களை நிரந்தரமாக அவர்கள் தாய் நிலங்களில் குடி அமர்த்த அரசோடு ஒட்டி உறவாடும் இவர்களால் ஏன் முடியாமல் இருக்கின்றது.

அண்மையில் வன்னியில் புதைக்கபட்டுள்ள 1500 மேற்பட்ட புத்தர் சிலைகள் சில வருடங்களின் பின்னர் வெளிவரும் அப்பொழுது புத்தர் சுயம்பாக வன்னியில் தமிழர் பிரதேசங்களில் தோன்றிவிட்டார் என்று சிங்கள் அரசு ஒரு பீலாவிடும்.1480 களில் விஜயபாகு என்ற சிங்கள படை தளபதி (சிங்கள மகாவம்சம் கூறும் விஜயபாகு அரசன் அல்ல,சில காலம் யாழ்பாணத்தை ஆண்டு நல்லூர் கோவிலை கட்டியதாக வரலாறுகளில் வரும் 6 புவனேக பாகு எனப்படும் சப்புமல் குமாரையா எனப்படும் கோட்டை சிங்கள அரசன் வளர்த்த தமிழ் சிறுவன் கீழ் இருந்த ஒரு படைத்தளபதி ,பிற்காலத்தில் சப்புமல் குமாரையா வளர்ப்பு தந்தை செய்த சதியை முறியடித்து கோட்டை அரசன் ஆனான் ,இவனது படைதளபதி தான் இங்கு குறிப்பிடப்படும் விஜயபாகு இவன் கோட்டை அரசில் ஏற்பட்ட முரண்பாடுகளால் யாழில் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் துரோகங்கள் செய்தான். பல ஆயிரம் மக்களை கொலை செய்தான், இவன்தான் யாழில் இருந்த சரஸ்வதி மகாலயம் எனப்படும் தமிழர் முதல் நூலகத்தை எரித்தான்.இவன் காலத்தில் தான் நம்பொத்த என்ற பெயர் உள்ள சிங்கள் நூல் எழுதப்பட்டு தமிழர் பிரதேசம் எங்கும் சிங்கள பெயர் சூட்டப்பட்டது.அதாவது இது நிகழ்தது 1480 அளவில் இந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் சில சிங்கள கல்வெட்டுக்கள் அடையாளங்கள் புதைக்கபட்டு புகுத்தப்பட்டது. அவற்றையே பிற்காலத்தில் கண்டெடுத்து அங்கும் இங்கும் புதைத்தும் எடுத்தும் எமது வரலாறுகளை யாழில் தடம் மாற்றினார்கள்.ஆனால் அன்று அவர்களால் வன்னியில் கால் ஊன்ற முடியவில்லை இன்று அதை செய்கின்றார்கள். இவற்றை எல்லாம் நேரடியாக தட்டிகேட்க முடியாமல் சம்பந்தன் தலைமையில் நிற்கும் எமது கூட்டணி வாய் மூடி நிற்கின்றது. அதையும் மீறி கேட்டால் ராணுவ பலம் கொண்டு அடக்கபடுகின்றனர். இப்படியான ஒரு அடக்குமுறை செய்யும் கருத்துசுதந்திரம் கூட இல்லாத நாட்டில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் தமிழர்தரப்பு தலைவர் என்று இன்று அரசியலில் உள்ளவர் கலந்துகொண்டது தமிழர் தரப்பை இன்னும் பலவீனம் அடைய செய்யும் படுபாதக செயல்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிறேமசந்திரன் கூறி இருக்கின்றார். சம்பந்தன் சுமந்திரன் எடுத்த முடிவு கூட்டமைப்பின் முடிவல்ல இது அவர்களின் சொந்த முடிவு என்று அப்படியானால் கட்சியின் முடிவுக்கு எதிராக முடிவெடுத்த இவர்கள் கட்சியில் இருந்து உடனடியாக விலக்கப்படவேண்டும். இதை தமிழரசு கட்சி தலைவர் மாவை இன்றே செய்யவேண்டும். அதற்கு எந்த நொண்டி சாட்டும் தமிழர் தரப்புக்கு சொல்லத்தேவை இல்லை. சொல்லும் சாட்டுக்களை ஏற்றுகொள்ள தமிழர் தரப்பு தயாராகவும் இல்லை .நியாயம் என்பது பக்கசார்பு உடையதாக இருக்ககூடாது.

பாட்டி சுட்ட வடையால் நட்டமும் பாதிப்பும் ஏற்பட்டது பாட்டிக்குதான். நரிக்கோ காகத்துக்கோ அல்ல, அதுபோல இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு தவறான முடிவுகளாலும் பாதிக்கபடபோவது தமிழ் மக்கள் தான் ,சுமந்திரனோ சம்பந்தனோ அல்ல ,,,,எனவே மக்கள் நலன்கருதி சம்பந்தன் சுமந்திரனை தமிழ் அரசு கட்சி உடன் கட்சியில் இருந்து விலத்த வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் முடிவாக எதிரொலிக்கும் என கருதுகின்றேன். நன்றி வணக்கம்

(சிவமேனகை)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com