Contact us at: sooddram@gmail.com

 

பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை
தீர்வுக்கு என்ன வழி?

தமக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று கூறி மீண்டும் பட்டதாரிகள் போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதலில் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலுமே இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. க.பொ.த. உயர்தரத்துக்குத் தோற்றும் சுமார் 3 இலட்சம் வரையிலான மாணவர்களில், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் சுமார் 25இ000 வரையிலானவர்கள், தமது பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னர் ஒவ்வொரு முறையும் இப்படி தம்மைத் தாமே வேலையற்ற பட்டதாரிகள்(‘வேலையற்ற’ என்று சொல்லாமல், ‘வேலை தேடும்’ என்று சொல்லலாமே?) என்று பிரகடனப்படுத்திப் போராட்டங்களை நடத்துவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

 க.பொ.த. உயர்தரத்தை நிறைவுசெய்தவர்களில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் சுமார் 10சதவீதத்துக்கும் குறைவான இந்த மாணவர்களுக்கு, பெருமளவு நிதியைச் செலவிட்டு 15 பல்கலைக்கழகங்களிலும், மேலும் பல உயர்கல்வி நிறுவனங்களிலும் இலவசமாக பட்டக்கல்வி வழங்கப்படுகிறது. இருந்தும், அந்தப் பட்டக்கல்வியைக் கொண்டு தமக்கான வேலைவாய்ப்புக்களைத் தேடிக்கொள்ள முடியாதவர்களாக ஒவ்வொரு பட்டம் பெற்ற அணியிலிருந்தும் போராட்டக்குரல்கள் முன்வைக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகிறது.
கோர்மென்டு உத்தியோகம்?

‘கோழி மேய்ப்பதாக இருந்தாலும் கோர்மென்டில் மேய்க்கவேண்டும்’ என்று சொல்லப்படுவதுபோல், இவர்கள் அனைவருமே தமக்கு அரசாங்க உத்தியோகம் வழங்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இத்தகைய போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். உண்மையில் இலங்கையில் அரசாங்க உத்தியோகம் என்ற ஒன்றே கிடையாது. பொதுமக்கள் சேவகர்-(Public Servant) என்ற பதம்தான் இந்த உத்தியோகங்களுக்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த வேலைவாய்ப்புக்களில் வெறும் 12 சதவீதமே இருக்கக்கூடிய இந்தப் பொதுச்சேவைத்துறையில் தமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதுதான் இவர்களது ஒரே கோரிக்கையாக இருக்கிறது. 88 சதவீத வேலைவாய்ப்புக்கள் குவிந்துள்ள தனியார்துறையில் பணியாற்ற இவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசாங்க உத்தியோகம் என்று இவர்கள் குறிப்பிடும் பொதுச்சேவைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பணி ஓய்வின் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதே இவர்கள் இதை அதிகம் விரும்பக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும், பெரும்பாலான பட்டதாரிகள் தனியார்துறையில் பணியாற்றுவதற்கு அவசியமான தொழிற்திறன்களைக் கொண்டிருக்காததும், இவர்கள் அந்தத் துறையில் வேலைவாய்ப்புக்களைப் பெற முடியாமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

அதாவதுஇ பெரும்பாலான பட்டதாரிகள் தொழில்வாண்மை உள்ளவர்களாக இல்லாதிருப்பதே அவர்களால் பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னரும் தொழில்வாய்ப்பொன்றைத் தேடிக்கொள்ளவோ அன்றி சுயதொழில் முயற்சியொன்றை ஆரம்பிக்கவோ முடியாதிருப்பதற்குக் காரணமாக இருக்கிறது.
யார் காரணம்?

பட்டதாரிகளின் இந்த நிலைமைக்கு உண்மையில் யார் காரணம்? 3 – 4 வருடங்களாக மாணவர்களுக்கு பட்டக்கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், இவர்களுக்கு வேண்டிய தொழில் திறன்களை ஏன் வழங்குவதில்லை?
குறைந்தபட்சம் தொழிற்சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கணினி, ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் திறன்கள் உள்ளிட்ட மென்திறன்கள் பல்கலைக்கழகப் பட்டக்கல்விக் காலத்தில் இவர்களுக்கு வழங்கப்படுவது அவசியமல்லவா?

பெருமளவூ நிதியைச் செலவிட்டு இவர்களுக்கு பட்டக்கல்வியை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் இவர்களுக்கு இந்த ஆற்றலை வழங்காமல் வெறுமனே பட்டத்தை மட்டும் வழங்கி தொழிலுக்காக வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளிவிடுவது ஏன்?
விரிவுரையாளர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்கவேண்டும், கல்விக்கான நிதியொதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும் என்றெல்லாம் போராட்டங்களை நடத்தும் பல்கலைக்கழக கல்விசார் சமூகம், இவ்வளவு நிதிச்செலவீனத்துடன் வழங்கப்படும் பட்டக்கல்வி மாணவர்களுக்கு தொழிற்திறன்களை வழங்குகிறதா என்பது குறித்தும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமல்லவா?

தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடும் விரிவுரையாளர் ஒன்றியங்களிடம், மாணவர்களின் இந்த நிலைமை குறித்த அக்கறை இருந்திருக்கவில்லை என்பதை, சில வருடங்களுக்கு முன்னர் சம்பள அதிகரிப்பு கோரி இவர்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை நடாத்தியபோது அவர்களிடம் நான் இதுகுறித்து வாதிட்டவேளை வெளிப்படையாக அறிந்துகொண்டிருந்தேன்.

தமது போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அவர்கள் நடாத்திய இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புக்களின்போதும், பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற முடியாமல் இருக்கின்ற நிலைமை பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு, அதற்குத் தாம் பொறுப்பல்ல என்றவிதமாகவே அவர்களிடமிருந்து பதில் வந்திருந்தது.
ஆக, ஒவ்வொரு வருடமும் பட்டக்கல்வியை நிறைவுசெய்துவிட்டு தொழில்வாய்ப்புக்களைப் பெற முடியாமல் திண்டாடும் மாணவர்கள் ஒரு புறமும், மாணவர்களின் இந்த நிலைமைக்கு அவர்களுக்கு வழங்கப்படும் கல்வியில் உள்ள குறைபாடும் காரணமல்லவா என்று சிந்திக்க மறுக்கும் பல்கலைக்கழக கல்விசார் சமூகம் மறுபுறமுமாக இந்த நிலைமை நீடித்துக்கொண்டே இருக்கிறது.

மாற்றத்துக்கான அறிகுறி

ஆனால், பொதுவான பல்கலைக்கழக கல்விசார் சமூகத்தின் இந்தப் போக்குக்கு மாறாக, சப்பிரகமுவா பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவரும் தற்போது உயர்கல்வி அமைச்சுப் பொறுப்பு வகிப்பவருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் அமைந்து வருகின்றன.

மாணவர்கள் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக உருவாக்கப்படவேண்டும் என்றும், அதற்கான திறன்களையூம்இ வல்லமையையூம் அவர்களுக்கு வழங்கவேண்டியதே இன்றைய உயர்கல்வித்துறையின் முதலாவது பிரதான இலக்கு என்றும் சிலோன் டுடே(20-01-2015) பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 80சதவீதமான மாணவர்கள் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையிலேயே தொழில்செய்யவேண்டிய நிலைமை இருக்கிறது என்றும்இ இதற்கேற்ற வகையில் மாணவர்களைத் தயார் செய்வதே இன்றைய உயர்கல்வியின் பிரதான இலக்காக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து பட்டக்கல்விப் பாடத்திட்டங்களிலும் தொழில்வாய்ப்புக்களுக்கு அவசிமான திறன் பயிற்சிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் தமது இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களுக்கு இலவச கல்வியையும் வழங்கி, பட்டம் பெற்ற பின்னர் இலவச வருமானத்தையும் வழங்கவேண்டும் என்பதான நிலைமை நீடிக்கக்கூடாது என்றும்; வாதிடுகிறார்.

உயர்கல்வித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், இந்த மாற்றங்களுக்கான ஆலோசனைகளை ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக அறிவித்திருக்கும் அவர், உயர்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் இதற்கென விசேடமாக ஒரு பிரிவை உருகாக்கி, reforms@mohe.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாக ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

மாணவர்களுக்கே முதலிடம்

அதுமட்டுமல்லாமல்இ பல்கலைக்கழகம் அடிப்படையில் மாணவர்களுக்கானது என்ற வகையில் மாணவர்களுடனான ஊடாட்டம் அதிகரிக்கவேண்டும் என்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க பல மட்டங்களிலும் வலியூறுத்தி வருகிறார். பல்கலைக்கழகக் கல்வியின் பிரதான பயனாளிகள் என்ற வகையில்> பல்கலைக்கழகச் செயற்பாடுகள் தொடர்பான முடிவுகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடும் அவர், பல்கலைக்கழக வரவுசெலவுத் திட்ட அறிக்கைகளை அனைவரது பார்வைக்கும் வைத்து மாணவர்களின் அபிப்பிராயங்களைப் பெறுதல், மூதவை, பேரவை உள்ளிட்ட முக்கிய உயர்மட்டங்களில் மாணவர்களின் கருத்துக்களுக்கு இடமளித்தல் உள்ளிட்ட பல யோசனைகளை முன்மொழிந்து வருகிறார்.

சொன்னதுபோலவே, சில பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று மாணவர் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிவரும் அவர், எதிர்காலத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் மாணவர் பிரதிநிதிகளை கிரமமாகச் சந்தித்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அவர்களது கருத்துக்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கவூள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவின் இந்தச் சிந்தனைகளும், நடவடிக்கைகளும், உயர்கல்வித் துறையில் பல முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, மாணவர் மையமாக அதன் செயற்பாடுகள் அமைய வகைசெய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை வெறுமனே அரசியல் ரீதியானதாக மட்டும் வியாக்கியானித்து பேசிக்கொண்டிருக்காமல், எதிர்கால சந்ததியினர் என்ற வகையில் இளைஞர் சமூகத்துக்கு நன்மை பயக்கும் வகையிலான உயர்கல்வித் துறையின் இந்த மாற்றங்கள் வெற்றிபெற பல்கலைக்கழக கல்விச் சமூகம் ஒத்துழைப்பதுடன், இந்த மாற்றங்கள் குறித்து அறிந்துகொண்டு மாணவர்களும் அவற்றைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தாமதிக்கக்கூடாது.
(Rushangan Kodeeswaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com