Contact us at: sooddram@gmail.com

 

"அணு ஆற்றல் தொடர்பான உடன்பாட்டில் இந்தியா அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டது" - அம்பலப்படுத்துகிறது அமெரிக்கா - அ.மார்க்ஸ்

ஒபாமாவின் வருகையை ஒரு மாபெரும் வெற்றியாக இந்திய அரசும் ஊடகங்களும் கொண்டாடியபோதும் இயற்றப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் பூடகமாகவே வைக்கப்பட்டுள்ளது. இதழாளர் சுஹாசினி ஹைடர் சொன்னதுபோல எல்லாம் தெளிவாக ஒரு மூன்று மாத காலமாவது ஆகும் போல உள்ளது. ஒபாமா வருகையின் நேரடியான விளைவுகளைச் சொல்வது என்பதைக் காட்டிலும் அந்த வருகையை ஒரு குறியீடாக்கி அதன் மூலம் உலகத்திற்கு உணர்த்தும் செய்திதான் இரு நாடுகளுக்கும் முக்கியமாக இருந்தது. ஆசிய -பசிஃபிக் பகுதியில் வளர்ந்து வரும் சீனச் செல்வாக்கிற்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் வேறெப்போதையும் விட அதிகமாக நெருங்கியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி.
 
மன்மோகன்சிங் அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொண்ட "123" ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் கடந்த ஏழு ஆண்டுகளாக இருந்து வந்த "இழுபறி" முடிவுக்கு வந்துள்ளது என்பதை இந்த வருகையின் மிகப் பெரிய வெற்றியாகச் சொன்னபோதும் அதன் முழு விவரங்களை வெளிப்படுத்துவதில் இந்தியத் தரப்பிற்குக் கொஞ்சம் வெட்கம் இருந்தது.
தனது சாதனைகளைப் பறைசாற்ற வார்த்தைகளை விரயமாக்கத் தயங்காத மோடி அணு ஒப்பந்தம் குறித்த இந்த அறிவிப்பைச் செய்யும்போது மட்டும், ”நமது சட்டம், நமது பன்னாட்டுக் கடப்பாடுகள், தந்திரோபாயம் மற்றும் வணிகச் சாத்தியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன” என்பதோடு நிறுத்திக்கொண்டார். இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அப்போதைய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் சற்று எரிச்சலோடு பதிலளித்ததை பத்திரிகைகள் சுட்டிக்காட்டியிருந்தன.
 
அணு ஒப்பந்தத்தைப் பொறுத்தமட்டில் இரண்டு அமசங்களில் இரு தரப்புகளுக்கும் இடையே இழுபறி இருந்துவந்தது.
அணு உலை விபத்து ஏற்படும் பட்சத்தில் நமது மக்களின் நலன்கள் பாதுகாக்கப் படுவதில் எந்தச் சமரசமும் கூடாது எனக் கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டதன் விளைவாக அன்றைய காங்கிரஸ் அரசு 2010ல், “சிவில் அணு ஆற்றல் விபத்துப் பொறுப்புச் சட்டம்” (Civil Nuclear Damage Liability Act)  ஒன்றை இயற்ற வேண்டியதாயிற்று. அணு உலையில் விபத்து ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்படும் நம் மக்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை அணு உலை அமைத்தவர்களே ஏற்க வேண்டும் என்பதும், உலை, தொழில்நுட்பம், இடுபொருட்கள் ஆகியவற்றை அளித்தவர்கள் மீது வழக்குத் தொடரும் உரிமைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டு என்பதும் இச்சட்டத்தின் 46வது பிரிவு மூலம் உறுதி செய்யப்பட்டன.
 
நாடாளுமன்ற விவாதங்களின் போது இந்தப் பாதுகாப்பு விதிகளை உருவாக்குவதற்கு இடதுசாரிக் கட்சிகளோடு சேர்ந்து
பா.ஜ.கவும் அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தபச் சட்டப் பிரிவைத்தான் அமெரிக்கா உள்ளிட்ட அணு உலை வியாபார நாடுகள் எதிர்த்து வந்தன.
 
இன்று ஒபாமாவுடன் வந்துள்ள உடன்பாட்டில் மோடி அரசு இந்த நிபந்தனைகளை விட்டுக் கொடுத்துள்ளது., விபத்து நேர்ந்தால் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டம் ஒன்றின் மூலம் அதை ஈடு கட்டலாம் எனவும், அதற்காக இந்திய அரசு 1500 கோடி ரூபாயை முதலீடு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இழப்பீட்டுப் பொறுப்பு அணு உலை விற்பனை நாடுகளிடமிருந்து இந்திய மக்களிடம் மாற்றப்படுகிறது.
 
தவிரவும் கூடுதல் இழப்பீடு வழங்குதல் தொடர்பான ஒரு ஒப்பந்தத்த்திற்கும் (Convention on Supplementary Compensation) இன்று இந்தியா ஒப்புதல் (ratify) அளித்துள்ளது. இது இன்னும் 3000 கோடி ரூபாய் சுமையை இந்தியாவுக்கு ஏற்றுகிறது. எந்த நாட்டில் அணு உலை நிறுவப்படுகிறதோ அந்த நாடு இந்தக் கூடுதல் இழப்பீட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்கிற இந்த ஒப்பந்தத்தை இது வரை ஃப்ரான்ஸ், சீனா, ருஷ்யா, அமெரிக்கா முதலான நாடுகள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 
விபத்து ஏற்படும் பட்சத்தில் உலை, தொழில்நுட்பம், இடுபொருட்கள் முதலானவற்றை அளித்தவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் உரிமையை வழங்கும் சட்டப் பிரிவை (Law on Tort) பலவீனப் படுத்துவதற்கும் மோடி அரசு ஒத்துக் கொண்டுள்ளது. இந்தச் சட்ட நிபந்தனைகளைத் தளர்த்தும் வகையில் "பொதுநிலை அறிக்கை” (Memorandum of Law) ஒன்றை வெளியிட இந்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
 
ஒபாமா  வருகைக்குப் பல மாதங்கள் முன்னதாகவே மோடி அரசு இந்த முடிவுகளை எடுத்துச் செயல்படத் தொடங்கியது.ஈது குறித்த முடிவுகளை எடுக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது டெல்லி, வியன்னா, லண்டன் ஆகிய நகரங்களில் கூடி, அணு உலை விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், இன்சூரன்ஸ் பாதுகாப்பு முறைகள், அவற்றில் முதலீடு செய்யத் தேவைப்படும் தொகை என்பவை குறித்தெல்லாம் தனித் தனியே விவாதித்து இரகசியமாக முடிவுகளை எடுத்தது. அவை ஒபாமா வந்தபின் ஒப்பந்த வாசகங்களாக்கப்பட்டன. மக்களைப் பாதிக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சினையில் மக்களை விலக்கி விட்டு முழுக்க முழுக்க  அதிகாரிகளின் துணையுடன் முடிவுகளை மேற்கொண்டு அவற்றை அந்நிய அரசொன்றுடன் ஒப்பந்தமாக்குவது எந்த வகையிலும் ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல என்பது குறித்து அரசு கவலைப்படவில்லை.
 
அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு இருந்த இழுபறியின் இரண்டாவது அம்சம் இந்திய அணு ஆற்றல் முயற்சிகளை கண்காணிக்கும் உரிமை தொடர்பானது. எந்திரங்கள் மற்றும் இடுபொருட்களை அளிப்பவர்கள் என்கிற வகையில் நமது அணு ஆற்றல் முயற்சிகளைக் கண்காணிக்கும் உரிமையை அமெரிக்கா 123 ஒப்பந்தத்தின் மூலம் வற்புறுத்தி வந்தது.
 
இறையாண்மைக்கு எதிரானது என இந்தியா இதை மறுத்து வந்தது. இதை இப்போது அமெரிக்கா விட்டுக் கொடுத்துள்ளது (waive) என்பது போல இந்தியத் தரப்பிலிருந்து செய்திகள் கசியவிடப் பட்டன. இனி 123 ஒப்பந்தம் தடங்கலின்றிச் செயல்படும் எனவும், அமெரிக்காவே முன் கை எடுத்து இந்தியா மீது தடை விதித்திருந்த நாடுகளுடன் பேசி அணு வணிகத் தடைகளை நீக்கும் எனவும் சொல்லப்பட்டது.
 
ஆனால் இன்று அமெரிக்கா இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி விட்டது.  இந்த அம்சத்திலும் விட்டுக் கொடுத்துள்ளது அமெரிக்கா அல்ல இந்தியாதான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அணு அற்றல் தொடர்பான எந்தெந்த முயற்சிகளையெல்லாம் அமெரிக்கா கண்காணிக்க வேண்டும் என இதுகாறும் வற்புறுத்தி வந்ததோ அவை குறித்த விவரங்களை எல்லாம் தானே தந்து விடுவதாக மோடி அரசு வாக்களித்துள்ளதாக இன்று அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது (The Hindu, Feb 5). தாங்கள் வழங்கும் கருவிகள் மற்றும் மூலப் பொருட்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் உரிமைகளை அதிகாரபூர்வமாக விட்டுக் கொடுப்பதாக (executive waiver) ஒபாமா எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்றும் அமெரிக்கத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
 
அணு ஆற்றல் தொடர்பான ஒபாமா - மோடி உடன்பாடு ஏற்பட்ட கையோடு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அமர்தீப் சிங் கில் வேண்டிய தரவுகளை இந்தியா அமெரிக்காவுக்கு அளிக்கும் என்கிற முடிவு குறித்து, "இது நாம் வழக்கமாகக் கனடாவுடன் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள்தான். அதைத்தான் அமெரிக்காவுக்கும் தருவதாகச் சொல்லியுள்ளோம்" என்றார். இது முழுப் பொய் என்பதை இன்று அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது.
 
"எங்கள் சட்டப்படி நாங்கள் வழங்கும் அணு ஆற்றல் கருவிகள் முதலியவற்றின் பயன்பாட்டைக் கண்காணிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. முதல் முறையாக இப்போதுதான் இந்தியா எங்களின் இந்தச் சட்டத் தேவைகளுக்கு இணங்க உரிய தகவல்களைத் தருவது எனவும், தொடர்ந்து உரிய கால இடைவெளிகளில் கலந்தாலோசனைகளுக்கு உடன்படவும் வாக்களித்துள்ளது" என்று அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வெர்மா கூறியுள்ளார். இந்தியாவுக்கென இது தொடர்பாகப் பிரத்தியேகமாக அமெரிக்கா இயற்றியுள்ள 'ஹைட்' சட்டத்தின்படி ஒபாமா அமெரிக்கக் காங்கிரசுக்குப் பொறுப்பானவர். தன்னிச்சையாக அவர் இந்தச் சட்ட நிபந்தனைகளை விட்டுக் கொடுத்துவிட இயலாது. மாறாக இந்தியா தன் நிலைபாட்டை விட்டுக் கொடுத்ததன் விளைவாகத்தான் இன்று ஒபாமா - மோடி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்கா தெளிவாக்கியுள்ளது.
 
விபத்து நடந்தால் இழப்பீடு வழங்கும் பொறுப்பிலிருந்து அமெரிக்காவையும் பிற அணு உலை வியாபார நாடுகளையும் விடுவித்து அந்தச் சுமையை இந்திய மக்களின் தோள்கள் மீது சுமத்துவது தொடர்பான "பொது நிலை அறிக்கையை"த் தயாரிப்பதில் இந்திய அதிகாரிகள் இப்போது மும்முரமாக உள்ளனர். இந்த அறிக்கை முழுமையானவுடம் அது அமெரிக்காவிடம் தரப்படும். ஒபாமா அதற்கு ஒப்புதல் அளித்தவுடன் ஒப்பந்த நிறைவேற்றம் தொடங்குமாம்.
 
ஆக அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கோருது, காரணமானவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் வழக்குப் போடுஅது ஆகிய எல்லா உரிமைகளையும் மோடி அரசு இன்று விட்டுக் கொடுத்துள்ளது. சிவில் மற்றும் இராணுவம் தொடர்பான இந்தியாவின் அணு ஆற்றல் முயற்சிகள் அனைத்தையும் அறிந்து கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கதவும் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
இப்படியான கண்காணிப்பு உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குவதென்பது நமது படுக்கை அறையுள் ஒரு மூன்றாம் மனிதரை நாற்காலி போட்டு அமரச் செய்வதற்கு ஒப்பு என்கிற விமர்சனம் இது குறித்த விவாதங்களின்போது முன் வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
(ஜூனியர் விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com