Contact us at: sooddram@gmail.com

 

கருத்துரிமை, அதன் எல்லை, மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஒரு அழகிய தீர்ப்பு - அ.மார்க்ஸ்


[முகநூல் முதலான வலைத்தளங்கள் பல தரப்பினரும் சந்திக்கும் ஒரு ஜனநாயக ஊடகம். முன் தணிக்கைகள் சாத்தியமில்லாத இந்த உலகம் ஒரு புதிய மொழியை உருவாகியுள்ளது. இது பல்வேறு சாத்தியங்களை மட்டுமின்றி சில ஆபத்துக்களையும் தன்னனகத்தே கொண்டுள்ளது. இதை எவ்வாறு எதிர்கொள்வது? கருத்துரிமைத் தடைச் சட்டங்கள் இதற்குத் தீர்வாகுமா? கருத்துரிமை குறித்துத் தொடர்ந்து நடைபெற்று வரும் விவாதத்தில் இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிக்கியமான ஒன்று]

கருத்துரிமை மற்றும் கருத்துரிமையின் எல்லை ஆகியவற்றுக்கிடையேயான முரண் குறித்த விவாதம் அத்தனை எளிதாக முடிவுக்குக்கு வரக் கூடியதல்ல. சொல்லப்போனால் அந்த விவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்படக் கூடாது. கருத்துரிமைக்கும் அதனுடைய எல்லைக்கும் இடையேயான இழு பறி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

ஒரு கருத்தை ஒருவர் வைத்துக் கொள்வது என்பது மட்டுமல்ல (Freedom of Opinion), அதை வெளிப்படுத்துவதற்கான உரிமையையும் (Freedom of Expression) உலகளாவிய ஜனநாயகப் பிரகடனங்கள் அனைத்தும் தெளிவாக்குகின்றன. ஏனெனில் ஜனநாயகம் என்பது கருத்துரிமையிலிருந்து பிரிக்க இயலாத ஒன்று. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல, அது சிறுபான்மையினர் தம் கருத்தைப் பரப்புவதையும், அதை இயன்றால் பெரும்பான்மை ஆக்குவதையும் உள்ளடக்கியது. ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால் மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து தெளிவு பெற்றிருக்க வேண்டும். எனவே அவர்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.



எனவே கருத்துரிமையின் இன்னொரு பக்கம் “அறிதலுக்கான உரிமையாகவும்” உள்ளது. எனவே ஒரு எழுத்தாளன் அல்லது ஊடகவியலாளனது கருத்துரிமையைப் பறிப்பதென்பது இன்னொரு பக்கம் மக்களின் அறிந்து கொள்ளும் உரிமையைப் பறித்துக் கொள்வதாகவும் ஆகிவிடுகிறது.



எனினும் கருத்துரிமையைப் பற்றிப் பேசியவர்கள் எல்லோரும் அதன் எல்லை குறித்தும் பேசாமல் இருந்ததில்லை. ஏனெனில் கருத்துக்கள் என்பன வெறுமனே ஒரு சொற்குவியல் அல்ல, அவை ஒருவரின் இருப்பின் மீது எதிர்மறையான தாக்கங்களை விளைவித்து அவரது உயிரியல் இருப்பையே அச்சுறுத்தும் வல்லமை வாய்ந்தவை. அதனால்தான் ஜனநாயகக் கோட்பாட்டிற்கான அடித்தளத்தை இட்டுச் சென்றுள்ள ஜே.எஸ்.மில் போனோர் கருத்துரிமையின் எல்லையை “அடுத்தவருக்கு ஊறு (harm) விளைவிக்காதவரை” என வரையறுத்தனர்.



ஆனால் அடுத்தவருக்கு “ஊறு விளைவித்தல்” என்பதுவரை கருத்துரிமையை அனுமதித்துவிட முடியாது, அடுத்தவரைப் புண்படுத்துவது (offend) என்கிற அளவிற்குக் கூட அது இருந்துவிடக் கூடாது எனச் சொல்வாரும் உண்டு.



கருத்துக்கள் ஒருவரது பௌதிக இருப்பைப் பாதிப்பது என்பது பல காரணிகளைச் சார்ந்துள்ளது. யார் அந்தக் கருத்தை உதிர்க்கின்றனர், யார் மீது அக்கருத்து உதிர்க்கப்படுகிறது, எத்தகைய ஊடகத்தின் மூலம் அது பரப்பப்படுகிறது, எவ்வளவு மக்களை அது சென்றடைகிறது, எவ்வளவு காலம் அது மக்கள் மத்தியில் நின்று பாதிப்பை விளைவிக்கிறது என அது பல அம்சங்களைப் பொறுத்துள்ளது. ஒரு சிறு குழுமம் படிக்கிற ஒரு சிற்றிதழில் வெளிவரும் ஒரு கருத்து ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் ஒரு செல்வாக்குமிக்க நடிகர் நடித்துத் தயாரித்து நூறு நாட்கள் ஓடும் ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் ஊறும் வெவ்வெறு அளவினதாக இருக்கலாம்.. பாதிக்கப்படக்கூடிய மக்கள் அதைக் கண்டு கொள்ளும் பதட்டமும் வெவ்வேறு அளவினதாக இருக்கலாம்.



கருத்துப் பரவலில் ஒரு மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ள இன்டெர்நெட் முதலான ஊடகங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் எழுத்ப்படுபவற்றைத் தடை செய்தல் என்பது தகுமா? முக நூல், ட்விட்டர் முதலான சமூக ஊடகங்கள் கருத்துரிமையில் ஒரு புரட்சியை இன்று ஏற்படுத்தியுள்ளன, யாரும் தங்கள் கருத்தை எந்த வித தணிக்கைப் பயமும் இன்றி தோன்றும் கணத்தில் பதிவிட்டு, தேச எல்லைகளைக் கடந்து அக்கணமே பல்லாயிரக்கணக்கானோரின் கண்களில் படுபவையாக அவை மாறிவிடுகின்றன. இவையும் பல நேரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஒரு தீவிரமான கருத்து மட்டுமல்ல, ஆபாசப் படத்தை வெளியிடுதல் அல்லது அவதூறான செய்தியைப் பகிர்தல் முதலியனவும் சில எடுத்துக்காட்டுகள்.



இந்த நோக்கில் “Communications Decency Act (CDA)” என்றொரு சட்டம் 1996ல் இயற்றப்பட்டது. ஆபாசப் படங்கள் மற்றும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும் கருத்துக்களைச் சமூக ஊடகங்களிலும் பிறவற்றிலும் பரப்புவதை அது தடை செய்தது.

1997ல் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் (cyber law case of Reno v. ACLU) இச் சட்டத்தின் பெரும் பகுதியை அரசியல் சட்ட விரோதமானது எனச் சொல்லி ரத்து செய்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வில் நீதியரசர் ஸ்டூவர்ட் ஆர் டால்ஸெல் இது குறித்துக் கூறிய கருத்துக்கள் இங்கு, இன்று நம் கவனத்துக்குரியவை.



“அச்சு முதலான இதர ஊடகங்களைக் காட்டிலும் வலைத்தளம் என்பது “பேச்சை வளப்படுத்தும் ஒரு ஊடகம்” (speech enhancing medium). அது வலைத்தளத்தை நிச்சயமாகப் பாதிக்கும் என்கிற வகையில் மேற்படி சட்டம் வயது வந்தோருக்கு இந்த ஊடகத்தில் கிடைக்கக்கூடிய பேச்சுச் சாத்தியத்தின் அளவைக் குறைக்கிறது. இது அரசியல் சட்ட அடிப்படையில் ஒரு சகித்துக் கொள்ள முடியாத ஒன்று ஆகும். வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் சில உரையாடல்கள் மரபுவழிச் சொல்லாடல்களின் எல்லைகளை மீறக்கூடியவைதான். வலைத்தள உரையாடல்கள் வடிகட்டப்படாதவை; செதுக்கிச் சீர்திருத்தப்படாதவை; வழமைகளை மீறியவை; உணர்ச்சிவயமானவை: பாலியலை வெளிப்படையாகப் பேசுபவை; ஆபாசமானவை; ஒரு வார்த்தையில் சொல்வதானால் தரக்குறைவானவை எனப் பல சமூகங்களால் கருதப்படுபவை. சமூகத்தின் சகல தளங்களிலும் உள்ள குடிமக்களும் தங்கள் குரலை ஒலிக்க வாய்ப்புள்ள ஒரு ஊடகத்தில் இப்படிப் பேச்சு அமைவதை நாம் எதிர்பார்க்க வேண்டும். மீடியா மன்னர்களைப் போலவே சாதாரண மக்களுக்கும் இத்தகைய ஊடகம் அளிக்கும் இந்தச் சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். […] எனது இந்தப் பகுப்பாய்வு, வலைத்தள உரையாடல்களின் ஆபத்துக்களிலிருந்து குழந்தைகளை அரசு காப்பாற்றுவதற்குத் தடையாக இருந்துவிடக் கூடாது. வலைத்தள ஆபாசம் மற்றும் குழந்தைகளை ஆபாசமாகக் காட்சிப்படுத்துதல் (child pornography) தொடர்பான சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக அரசு இவற்றின் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவதைத் தொடர வேண்டும். […] நீதிமன்ற விவாதங்களில் சொல்லப்பட்டது போல புதிய ஊடகங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த பொதுக் கல்வியைப் பரப்புவதும் மிகவும் அவசியமாகிறது. என்னுடைய பார்வையில், நமது இந்த நடவடிக்கையின் பொருள் என்னவெனில், வலைத்தளப் பதிவுகளின் மீதான அரசின் அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு என்பது பாதுகாக்கப்படாத பேச்சுக்கான மரபு வழி எல்லைக்கோட்டுடன் நின்றுவிடுகிறது என்பது மட்டுமே. […] வலைத்தளப் பதிவுகள் மீதான அரசுக்கட்டுப்படு இல்லாதது என்பது ஒரு வகையான பெருங் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் வழக்கு விவாதத்தின்போது வல்லுனர் ஒருவர் சொன்னது போல, “ வலைதளம் சாதித்த வெற்றி என்பது அதன் இந்தக் குழப்பம்தான். வலைத் தளத்தின் வலிமையே இந்தப் பெருங் குழப்பம்தான்”. வலைத்தளத்தின் வலிமை அதன் பெருங்குழப்பம்தான் என்பதுபோல, நமது (அரசியல் சட்டம் வழங்கியுள்ள) உரிமைகளின் வலிமை தடை செய்யப்படாத நமது பேச்சின் ஊடாக உருவாகும் இந்தக் குழப்பமும் கூக்குரலிலும்தான் உள்ளது…”



மிக அழகான தீர்ப்பு. ஒரு கவிதையை வாசித்த உணர்வு நமக்கு ஏற்படுகிறது. கருத்துரிமையின் ஊடாக உருவாகும் மொழி வளம், பல வகைப்பட்ட மக்கள் தொகுதிகளும் தடைகள் இன்றி முழு உரிமைகளுடன் ஒரே தளத்தில் சந்திக்கும்போது நிகழும் மொழி விசாலிப்பும், அழகிய குழப்பமும் இழக்கக்கூடியவை அல்ல. இவற்றின் மூலம் எந்த ஒரு தரப்புக்கும் ஊறு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டியதும் பாதுகாக்க வ்வேண்டியதும் அரசின் கடமை. அதைவிட இந்த ஊறுகள் குறித்த புரிதல் மற்றும் பிரக்ஞையை உருவாக்கும் பொதுக் கல்வி மிக மிக முக்கியம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com