Contact us at: sooddram@gmail.com

 

மீள்குடியேற்ற வசதிகள் பூர்த்தியானதும் அகதிகள் நாடு திரும்புவதே உகந்தது

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுடன் இந்தியா பல ஒப்பந்த ங்களில் கையெழுத்திட்டுள்ளது. அணுசக்தி ஒத்துழைப்பு முதல் கால் நடைகளைத் தாக்கும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால் இலங்கைத் தமிழர் பற்றியோ இலங்கை அகதிகள் பற்றியோ எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை.

மீனவர் பிரச்சினை பற்றி செய்தி யாளர்களிடம் இலங்கை ஜனாதிபதி சிறிசேன கூறுகையில், ஆக்கபூர்வமாகவும் மனிதாபிமானத்துடனும் பிரச்சினையை அணுகித் தீர்வு காண ஒப்புக் கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே தெரிவித்தார்.

சிறிசேன இந்தியா வருவதற்கு முன்பாக 82 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டது. இருப்பினும், மீனவர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு மிக எளிய வழி, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்துவதைப் போல ராமேசுவரம் பகுதியில் இழுவைப்படகுகளுக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு இந்திய அரசு, மாகாண சபை மூன்றும் இணைந்து செயல்படுவதே சரியானதாக இருக்கும்.

இராஜ்ய உறவுக்கு மற்ற ஒப்பந்தங்களும் முக்கியமானவை என்றாலும், தமிழக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு அழுத்தம் தரவில்லையா அல்லது இலங்கை ஜனாதிபதி சிறிசேன இதில் ஆர்வம் காட்டவில்லையா என்பதைத் தீர்மானிக்க இயலவில்லை.

இனப்படுகொலை தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அண்மையில் இலங்கை வட மாகாண சபை நிறைவேற்றி இருக்கும் தீர்மானம் சிறிசேன தலைமையிலான அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகளும், பேட்டிகளும் குறிப்பிட்டாலும், இந்த அறிவிப்பு வடமாகாணத் தமிழர்களின் உணர்வு வெளிப்பாடே தவிர, ஜனாதிபதி சிறிசேன மீதான நம்பிக்கையிழப்போ அல்லது நெருக்கடி தரும் நோக்கமுடையதோ அல்ல என்பதை வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

சிறிசேன அமைச்சரவையும் வடக்கு மாகாண அரசின் தீர்மானத்தை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதன் வெளிப்படாக இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் பகுதியில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பது என்ற முடிவை மேற்கொண்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணம் அருகே, வலிகாமத்தில் உருவாகி வரும் மாதிரிக் கிராமத்தில் 1,022 குடும்பங்களை குடியமர்த்தவும் தீர்மானித்துள்ளது.

இத்தகைய சூழலில் இந்தியா வந்துள்ள சிறிசேனவிடம் இலங்கைத் தமிழர் வாழ்வாதாரம் குறித்து அழுத்தம் தர வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருக்கிறது. ஒருவேளை, அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்லவிருப்பதால் அந்தப் பயணத்தின் வெற்றிக்காக இத்தகைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவோ என்று கருதவும் இடமிருக்கிறது.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது மட்டுமே இந்திய அரசின் நோக்கமாக இருக்கிறது. இருப்பினும், இலங்கையில் குடியமர்த்துதல் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை (17/02) உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா, “இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு அகதி களாக வாழும் இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே தமிழக அரசின் கருத்து” என்பதை ஆணித்தரமாக முன்வைத்துள்ளார். இலங்கையில் மீள்குடியமர்த்துதல் என்பது மிகவும் சிரமமான பணியாக இருந்து வருகிறது. யாருடைய நிலம், யாருக்குச் சொந்தமானது, யார் யாருடைய வாரிசு என்பதெல்லாம் தேடிக்கண்டடைய முடியாத விஷயங்களாக உள்ளன.

இந்தச் சிக்கல்களை முன்வைக்கும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தாயகம் திரும்பினால் இன்றைய சூழலில் அவர்களுக்கும் சேர்த்து வீடுகள் கட்டி மீள்குடியமர்த்துதல் சிரமம், அவர்களது குழந்தைகளுக்கு இந்தியாவில் கிடைக்கும் சிறந்த கல்வியை இங்கே கிடைக்கச் செய்வதும் இயலாதது என்று ஒப்புக்கொள்கிறார். ஆனால், அவர் மற்றொரு வாதத்தையும் முன்வைக்கிறார். அவர்கள் திரும்பி வந்தால் சிங்களவர் குடியேற்றதுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதுதான் அது.

தற்போதைய சிறிசேன அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியிருப்பதால் சிங்களவர் குடியேற்றம் நின்றுவிடும் என்று சொல்லிவிட முடியாது. இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிங்களவர் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டதாக வடக்கு மாகாண சபை இல்லை என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இந்த நிலையில் தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு அங்கே முதல் கட்டமாக வீடுகள், காணிகள் ஒதுக்கப்படவும், அதை இப்போதே பத்திரப்பதிவு செய்து தரவும் வேண்டும். வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை இந்தியாவில் உதவித் தொகையுடன் தங்கியிருக்கவும், வீடுகள் கட்டி முடித்த பிறகு குடிபெயரச் செய்யவும் வேண்டும். அவர் தம் குழந்தைகள் இங்கே உயர் கல்வி படித்துக் கொண்டிருந்தால், அவர்கள் படித்து முடிக்கும் வரை குடும்பமோ அல்லது குழந்தைகள் மட்டுமோ இங்கு தங்கியிருக்கவும் வகை செய்ய வேண்டும்.

இத்தகைய அணுகுமுறைகள், தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழர்களுக்கு வலியற்றதாகவும் இயல்பானதாகவும் அமையும்.

(ஆசிரியர் தலையங்கம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com