Contact us at: sooddram@gmail.com

 

வடபுலத்து முதல்வரின் பொருள் பொதிந்த வார்த்தைகள்

பொது நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியவின் வடபகுதி விஜயத் தின்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஆற்றியிருக்கும் உரை பல விஷயங்களைத் திறந்து காட்டுவதுபோல அமைந்திருக்கிறது. இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்ற தீர்மானம் வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றியதால் தென் னிலங்கையில் அவர் மீது ஏற்பட்ட கசப்புணர்வைக் கலைவது மாதிரி அவர் கடந்த திங்கட்கிழமை வட மாகாண விசேட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாண சபை முறை ஒரு அரசியல் அதிகாரப் பகிர்வாக அமையும் என்ற எதிர் பார்ப்பிலேயே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் நடைமுறைக்கு இது கொண்டுவரப்பட்டது. நாடெங்கிலும் இம்முறை அமுல்படுத்தப்பட் டாலும் அதற்காகப் போராடியவர்களும் இரத்தம் சிந்தியவர்களும் வட க்கு, கிழக்கு தமிழர்களே. அவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்ற போராட்டங்களின் விளைவாக தமிழர்களுக்கு ஒரு அதிகார அலகை முன் வைக்கும் வகையில் மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டாலும் மிக நீண்ட காலமாகவே அது செயல்பட வேண்டிய பிரதேசங்களில் செயல் படவில்லை. உள்நாட்டுப் போரின் முடிவிலேயே வடமாகாணத்துக்கு அது செயல்படும் வடிவத்தில் வந்து சேர்ந்தது.

முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர் மாகாண சபை செயல் படுவதற்கு அன்றைய அரசாங்கமும் அதன் பிரதிநிதியான ஆளுநரும் விடுகிறார்களில்லை என்றும் தாம் செயலிழந்த நிலையிலேயே இருப்ப தாகவும் வடமாகாண முதலமைச்சர் பல தடவைகள் கூறிவந்திருக்கிறார். புதிய அரசாங்கம் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்ற நிலையில் இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின் னரான இலங்கை அரசியல் வரலாற்றில் இத்தகைய அரசியல் புரட்சி ஒன்று முன்னெப்பொழுதுமே நடந்ததில்லை. இலங்கையின் ஒரு பிர தான தேசிய கட்சியைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாக இருக்க, இன்னொரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராகவும் ஏழு கட்சிகளைச் சேர்ந்த வர்கள் அமைச்சர்களாகவும் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களாகவும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பது, ஆறு மாதங்களுக்கு முன்னர் கூட கற்பனை செய்யவும் முடியாத அசாத்தியமான விஷயம். ஆனால் அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. அடுத்து வரவிருக்கும் பாராளும ன்றத் தேர்தலில் கட்சிகள் தனித்தனியாக நின்று வெற்றியீட்டிய பின்னர் இரண்டாண்டு காலத்துக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அக்காலப்பகுதியில் நாட்டின் முக்கியமான தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவை எல்லாம் அலாவுதீன் கதைகள் அல்ல, நிதர்சனமாகக் கூடியவை என்பதை இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்கனவே நடைமுறை யில் நிரூபித்திருப்பதால், அடுத்துவரும் மாதங்களில் நடக்கவிருப்பவை யும் சாத்தியமே என உறுதியாக நம்பலாம். இந்த அடிப்படையிலேயே வடமாகாண முதல்வரின் உரையை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘இதுவரைக் காலமும் ஈடுபட்டு வந்த முரண்பாட்டு அரசியலில் இருந்து விடுபட்டு இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட வழி ஏற்பட வேண்டும். இணக்க அரசியல் என்பதற்கு இதற்கு முன் இருந்தவர்கள் கொடுத்த வியாக்கியானத்தை நாங்கள் இங்கே குறிப்பிடவில்லை. இரு மக்கள் கூட்டங்கள் என்ற அடிப்படையில் எமக்கிருக்கும் உரிமைகளை உளமாற எடுத்துரைத்து மனிதாபிமான அடிப்படையில் அவற்றை அர சாங்கத்துடன் பேசி பெற்றுக்கொள்வதையே நான் இணக்க அரசியல் என்று பொருள் கொள்கிறேன்’ என்பதாக வடமாகாண முதல்வர் பேசி யிருக்கிறார்.

‘இதற்கு இரு சாராரிடமும் மனோபக்குவம் இருக்க வேண்டும். தமது மக்க ளின் உதவியாலும் ஜனாதிபதி பதவிக்கு வந்திருக்கிறார். இந்த வகையில் ஜனாதிபதியின் அரசாங்கம் எமது அரசாகும், அதனிடம் நாம் கோரவும் அவற்றை அரசாங்கம் வழங்கவும் இனி எந்தத் தடையும் இருக்கப்போ வதில்லை’ என்பதாக முதல்வர் விக்னேஸ்வரனின் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் அமைந்திருக்கின்றன.

வடபுலத்து அரசியல் வாதியொருவர் இவ்வளவு நம்பிக்கையுடனும் எதிர் பார்ப்புடன் பேசி எத்தனை தசாப்தங்கள் கடந்துவிட்டன! எத்தனையோ புரட்சிகள் இந்நாட்டில் நடந்தேறியுள்ளன. ஆனால் இத்தகைய ஒரு அர சியல் புரட்சி நடைபெற்றதேயில்லை என்பதைத்தான் விக்னேஸ்வரனின் இந்த உரை உணர்த்துகிறது.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத் தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இடம்பெற்று அமைச்சரவை நியமனங் களைப் பெறும் என்பதற்குக் கட்டியம் கூறும் வகையில், கிழக்கு மாகாண சபையில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பதற்கு கூட்டணியினர் சம்ம தம் தெரிவித்திருப்பதை ஒரு நல்லடையாளமாகக் கொள்ள முடியும். இந்த மனமாற்றத்தையும் புரிந்துணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத் தியதை ஜனவரி எட்டாம் திகதி கொண்டு வந்த புதிய அரசியல் சிந்த னைகளிலேயே மிகப்பெரியதாகக் கருத வேண்டும்.

எனவே, வடமாகாண முதல்வர் ஏற்கனவே நிறைவேற்றியிருக்கும் இனப் படுகொலை தொடர்பிலான தீர்மானத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு அது பற்றியே பேசி இனக்குரோத சூழ்நிலைகளை மீண்டும் தூண்டி விடாமல் ஏன் அவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டியிருந்தது என்பதற் கான அரசியல் பின்புலங்களையும் அதில் புதைந்திருக்கும் நுணுக்க அர சியலையும் புரிந்து கொள்வதே சரியான பார்வையாக இருக்க முடியும்.

சுதந்திரத்தின் பின்னர் பிரதான கட்சிகள், வடபுலத்து கட்சிகள் மற்றும் இன வாத சக்திகள் தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாத அர சியலையே முன்னெடுத்து வந்திருக்கின்றன. இப்போதுதான் முதல் தட வையாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சி பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள், குறிப்பாகச் சொன்னால், தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை வடபுலத்து முதல்வர் தெரிவித்து இருப்பது புதிய அரசியல் உதயத்தை சுட்டுவதாக உள்ளது. எனவே நூறு நாட்களுக்குள் அதற்புதங்கள் அனைத்தும் நிறைவேறிவிட வேண் டும் என்று நினைக்காமல், எல்லா எதிர்பார்ப்புகளும் மாற்றங்களும் படி ப்படியாகவும் இணக்கமான சூழலிலும் நடைபெறுவதற்கான நல் சூழலை ஏற்படுத்துவதே நமது அரசியல்வாதிகளின் தலையாய பணியாக இருக்க வேண்டும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com