Contact us at: sooddram@gmail.com

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசுடனான
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெகிழ்வுப் போக்கும் உள்ளக விமர்சனங்களும்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடைசி நிமிடம் வரையிலான மெளனமும் இறுதி நேர முடிவும் சுயநிர்ப்பந்தத்தின் பால் பட்டது என்பது யாவருமறிந்ததே. புலிகளின் காலத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதன் தலைவர் பிரபாகரன் எடுத்த முடிவு அபத்தமானது என்பது பலரின் ஆதங்கமாகவிருந்தது. இதை மனதில் கொண்டும், புதியதொரு மாற்றம் வேண்டியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவானது சரியானதும் தவிர்க்க முடியாததுமாகும் என்பது நிதர்சனம்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தின் ஓர் அங்கம் அல்ல. ஆனால் அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு அரசியலை அது நடத்துகிறது. இதில் அரசியல் சாணக்கியம் இருக்கலாம். இந்த அடிப்படையிலேயே கடந்த சுதந்திர தின விழாவிலே கூட்டமைப்புத் தலைவர்களான இரா. சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டிருக்கவும் கூடும்.

மேடையில் இவர்கள் அமர்ந்திருந்ததை சிங்களத் தொலைக்காட்சிகள் தலைப்புச் செய்திகளில் காட்டின. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசுடனான அணுகுமுறையை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கமும் அனந்தி சசிதரனும் இவர்களில் முக்கியமானவர்கள்.

இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழர்கள் மதில் மேல் பூனை நிலையில் இன்றும் இருப்பதை நாம் உணரலாம். ஏனெனில் முப்பது வருட கோர யுத்தத்தின் விளைவுகளும் இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்கால் இழப்புகளும் இவர்களைச் சட்டென ஒரு தீர்மானத்துக்கு வர முடியாதபடி செய்திருக்கலாம். ஆனால் வடகிழக்கு மக்களின் சுய நிர்ணய உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் எதையாவது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருப்பது என்னவோ உண்மை தான்.

தற்போது அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உருமய கட்சியின் தற்போதைய போக்கில் ஒரு மாற்றத்தினை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அத்துரலிய ரத்ன தேரரும் இராணுவம் தேவைக்கதிகமாக கையகப்படுத்தி வைத்துள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை மீளவும் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்கவும் பேசுமளவுக்கு அக்கட்சியின் நிலைப்பாடு மாறியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேசிய அரசியலில் இதுவொரு சாதகமான அம்சம்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, விஜித்த ஹேரத் போன்றோர் விசாரணைகளின்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது ஆரோக்கியமான சங்கதி. இனவாதம் பேசி அரசியல் செய்ய விழையும் தெற்கு அரசியல்வாதிகளுக்கு ஜாதிக ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய போக்கானது ஜீரணிக்க முடியாத விடயமாக இருக்கும்.

நூறுநாள் திட்டங்களை நிறைவேற்றுவதில் இருக்கும் சங்கடங்களை ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே புரிந்து கொண்டிருந்தார்களோ தெரியாது. ஆயினும் சளைக்காத ஒரு முனைப்பில் அரசாங்கம் இயங்குவதாகவே தெரிகிறது. குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிவாயுப் பொருட்களின் விலைகளைக் குறைத்ததன் மூலம் மக்களுக்கு ஆறுதலான ஒரு நிவாரணத்தை வழங்கியுள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம், காணிப் பிரச்சினை, சிவில் நிர்வாகம் ஏற்படுத்தல், இராணுவ செறிவினை அகற்றுதல் அல்லது குறைத்தல் போன்ற பிரச்சினைகளை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளது அரசாங்கம். இதன் அடிப்படையிலேயே ஆட்சிக்கு வந்த வேகத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று வட மாகாண ஆளுநரை மாற்றியது. மாகாணசபை செயலாளரையும் மாற்றி திரு. பத்திநாதனை நியமித்தது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வரும் தமிழர்களுக்கு வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குச் செல்வதற்கான கெடுபிடிகளை நீக்கியுள்ளது. இவைகள் நம்பிக்கைகளுக்கான அடையாளங்கள் மட்டுமே. இதைவிட அவசியமானதும் அவசரமானதும் நடவடிக்கைகளுக்கான தேவைகள் இருக்கவே செய்கின்றன.

ஆனால் இவற்றுள் எதையாவது உடனடியாகச் செய்யப் போய் அது தெற்கில் இருக்கும் இனவாதச் சக்திகளுக்கு தீனி போடும் சமாச்சாரமாக ஆகிவிட்டால் அது தமது இருப்புக்கே ஆப்பு வைத்துவிடும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவே செய்யும். இந்த ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு தேவை. தமிழ், முஸ்லிம் மக்களை அனுசரித்துப் போகும் போக்கும், நீதியான ஆட்சிக்கான கட்டமைப்பு என்ற நம்பிக்கையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களில் பதிய வைக்க வேண்டியது இவர்களைப் பொறுத்தவரை அவசியமானது. இதனடிப்படையிலேயே வட மாகாண முதலமைச்சர் சி. விக்னேஸ்வரனின் காரசாரமான விமர்சனத்தைக் கூட அரசாங்கம் பெரிதுபடுத்தாமல் இருந்து வருகிறது. மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன் வழக்கம் போலவே துணிச்சலாக தமது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

வடமாகாண முதலமைச்சர் பேச்சில் அவ்வப்போது முரண்கள் காணப்படுவது வழமை என்பதால் பலரும் இதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் சிவாஜிலிங்கம் போன்றோருக்கு இவரது பேச்சு ஆறுதலாக இருக்கும். சிவாஜிலிங்கமோ, அனந்தி சசிதரனோ தமிழ்ப் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. கடந்த காலங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களே அவர்களை இப்படி பேச வைக்கிறது. ஆனால் ஒரு விடயம் இங்கு முக்கியமானது. இவர்களின் விமர்சனங்கள் விளைவுகள் இன்றியே அடங்கிப் போகலாம். வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் அப்படி போய்விடாது. அவை எதிர்க் கருத்தியல்களை உற்பவிக்கும்.

தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் மீண்டுமொரு சந்தர்ப்பத்துக்காக தயாராகி வருவதை அவர்களின் முனைப்புகள் உணர்த்துகின்றன. அரசியலில் இது புதிய விடயமல்ல. அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. எனவேதான் மைத்திரிபால சிறிசேன மிக மிக நிதானமாக நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியவராக இருக்கிறார். ஏனெனில் மகிந்த தேர்தலில் போட்டியிட முன்வந்தால் அதற்கு அங்கீகாரம் தரவேண்டிய கட்சித் தலைமையில் மைத்திரிபால இருக்கிறார். உண்மையில் வரப் போகும் பொதுத் தேர்தல் கட்சிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் குழப்பமானதாகவே இருக்கப் போகிறது. அத்தோடு இனவாதமே பிரதான பிரச்சார தொனிப்பொருளாகவும் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட தோல்வியடைந்தபின் மக்களிடையே பேசிய போது இன வாதம் கலந்த வார்த்தைகளைத்தான் உதிர்த்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, எடுத்தோம், தொடுத்தோம், வீழ்த்தினோம் என்ற ரீதியில் செயற்படக் கூடிய அதிரடி அரசியலை இப்பொழுது நடத்த முடியாது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிய நெகிழ்வுத் தன்மையால் பெரிதாக நன்மையேதும் பெறமுடியாது என்ற நிலை தோன்றினால் மட்டுமே அவர்கள் வேறு வழிகளை நாட முடியுமே தவிர அதற்கு இது தருணமும் அல்ல என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகும். இதிலிருந்து வேறுபாடான கருத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்க முயலுமாயின் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் கூட கூட்டமைப்பின் மீது பிரயோகிக்கப்பட இடமுண்டு.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கடைப்பிடித்து வரும் பொறுமை, நிதானம், நெகிழ்வு தன்மை இன்னும் சில காலத்துக்குத் தொடர வேண்டியது அவசியம். அதே நேரம் இதை இயலாமையின் வெளிப்பாடு என அரசாங்கம் தவறாக எடை போட்டு விடவும் கூடாது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே வடகிழக்கு தமிழ் மக்களின் இரட்சிப்புக்கான ஏகத் தெரிவு என்பதையே இற்றை வரையிலான தேர்தல் முடிவுகள் யாவும் எடுத்துக் காட்டியிருக்கின்றன என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை கருத்திற் கொண்டு இந்த அரசாங்கம் ஆக்க பூர்வமாக எதையாவது செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பன்.பாலா

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com