Contact us at: sooddram@gmail.com

 

லிபியாவில் தலைதூக்கும் ஐ.எஸ்.பிரச்சினை

கிழக்கு லிபியாவின் மத்தியதரைக் கடலோர நகரான டெர்னா சுமார் 80,000 மக்கள் தொகை கொண்ட அழகான நகராகும். 18 நூற்றாண்டு பள்ளிவாசலில் கறுப்பு நிற கொடி பறக்கின்றது. இங்கு ஷரியா நீதிமன்றம், இஸ்லாமிய பொலிஸார் என்று கூறிக்கொண்டு வாகனங்கள் அங்கும் இங்கும் வட்டமிடுகின்றன. நகரத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் ஆண்களையும் பெண்களையும் பிரிக்க நடுவால் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழத்தில் சட்டத்துறை, இயற்கை விஞ்ஞானம் மற்றும் மொழிகள் ஆகிய கல்வி பீடங்கள் மூடப்பட்டு விட்டன. சிரியா, ஈராக்கிற்கு வெளியில் இஸ்லாமிய தேசம் குழு நிறுவியிருக்கும் முதலாவது நகரின் தோற்றம்தான் இவ்வாறு காட்சி அளிக்கிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி லிபியாவில் இயங்கும் இஸ்லாமிய இளைஞர்களின் ஷ¥ரா கவுன்ஸில் மற்றும் ஓரிரு ஆயுதக் குழுக்கள் சேர்ந்து இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவோடு இணைவதாக அறிவித்தன. இதனை எவரும் பெரிதாக கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை. ஏனென்றால் சிரியாவில் ஆயுதம் எடுத்தவர்கள் எல்லாம் ஆயுதக் குழு அமைத்து 10 ஏக்கர் காணித்துண்டையாவது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதால் இதுவும் பத்தோடு பதினொன்றாகவே பார்க்கப்பட்டது.

ஆனால் நிலைமை நினைத்ததை விடவும் மோசம் என்பதை டெர்னா நகரை பார்த்தவர்களுக்கு புரிந்துவிட்டது. அதாவது ஐ.எஸ்.இன் டெர்னா கிளையில் சுமார் 1000 போராளிகள் வரை இருக்கிறார்கள். ஒரு டஜனுக்கு மேல் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு புறநகர் பகுதியில் இருக்கும் மலைப்பகுதியில் பயிற்சி அளிக்கும் முகாம் ஒன்று இருக்கிறது. இதனை வேவு பார்த்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவாளிகள் நிலைமை மோசம் என்று கடந்த ஆண்டில் எச்சரிக்கை விடுத்தார்கள். சிரியா மற்றும் ஈராக்கில் போராடிய 300 வரையான ஜிஹாதிக்கள் லிபியா திரும்பி இந்த ஐ.எஸ். கிளையை பலப்படுத்த ஆரம்பித்தார்கள். இவர்கள் யுத்த அனுபவம் கொண்டவர்கள்.

டெர்னா தவிர, லிபியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான பெங்காசியிலும் கிளையைப் பரப்பிய ஐ.எஸ். ஆதரவாளர்கள் இம்மாத ஆரம்பத்தில் மற்றொரு மத்தியதரைக் கடலோர நகரான சிர்த்திலும் காலூன்றினார்கள். இந்தக் கதையின் உச்சகட்ட நாடகம் கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி அரங்கேறியது. கடற்கரையோரத்தில் வரிசையாக ஆட்களை அழைத்துவந்து மண்டியிடச் செய்து கழுத்தை துண்டித்து, முகமூடியோடு எச்சரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியானது.

சிரியா அல்லது ஈராக்கில் இருக்கும் ஐ.எஸின் மற்றொரு கொடூரச் செயல் என்றுதான் அதனை பார்ப்பவர்கள் மறு பேச்சு இன்றி சொல்வார்கள் அச்சொட்டாக ஐ.எஸ். பாணியிலேயே அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. செம்மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்தவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு கறுப்பு நிறத்தில் முகமூடி அணிந்தவர்கள் தலைகளை துண்டிக்கிறார்கள்.

இது ஐ.எஸ். இன் வேலை என்பது புரிகிறது. ஆனால் சிரியாவில் அல்லது ஈராக்கில் நடந்த அட்டூழியமல்ல. லிபியாவின் சிர்த் நகர கடற்கரையிலேயே இது நடந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் லிபியாவுக்கு பிழைப்புக்குப் போன எகிப்து நாட்டின் கொப்டிக் கிறிஸ்தவர்கள் 21 பேர். “சிலுவைப் போராளிகளே, அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு இயங்கும் நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒசாமா பின்லேடனை புதைத்த இந்தக் கடலில் உங்களது ரத்தத்தைக் கலப்போம் என்று அல்லாஹ்வுக்கு உறுதி அளிக்கிறோம்” என்று தலைகளை துண்டித்த பின்னர் வீர உரையாற்றினார்கள் அந்த ஐ.எஸ்.காரர்கள்.

தலை துண்டிப்பு வீடியோவை அடுத்து எகிப்து லிபியா மீது அர்த்தமில்லாமல் கண்மூடித்தனமாக வான் தாக்குதல் நடத்தி அதில் வேறு சிறு குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இப்போதைய நிலையில் சிரியா, ஈராக்கிற்கு அடுத்து ஐ.எஸ் இன் பலம் மிக்க கோட்டையாக லிபியா மாறி வருகிறது. அதற்கு சாதகமான சூழல்கள் அனைத்தும் லிபியாவில் போதுமாக இருக்கின்றன. அரசியல் குழப்பம், தடுக்கி விழுந்தால் ஆயுதம் ஏந்திய பத்துப் பேர் ஆட்சியைப் பிடிக்க போராட்டம், எண்ணெய் வளம் என்று ஐ.எஸ். வேரூன்ற போது மான அனைத்து வசதிக ளும் குவிந்து கிடக்கின்றன.

2011ஆம் ஆண்டு மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டு முஅம்மர் கடாபி தெருவில் கொல்லப் பட்டு அவரது ஆட்சி கலைந்து இப்போது நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இப்போது லிபியாவில் ஜனநாயகமும் இல்லை, ஆட்சியும் இல்லை, அரசும் இல்லை, எந்த தலைவரும் இல்லை. கடாபி வாங்கிவிட்டுச் சென்ற ஆயுதங்களை தூக்கி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக நின்று சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

லிபியாவில் 1,700 ஆயுதக் குழுக்கள் வரை இயங்குகின்றன. ஆரம்பத்தில் அனைவருக்கும் கடாபி என்ற பொது எதிரி இருந்தார். எனவே இஸ்லாமியவாதிகள், பிரிவினைவாதிகள், மிதவாதிகள், ஜனநாயகவாதிகள் என்ற எல்லா வாதிகளும் கடாபியைத் தான் குறிவைத்தார்கள். கடாபி இறந்ததும் இவர்கள் தமது வாதங்களுக்காக ஒருவருக்கு ஒருவர் தமது ஆயுதங்களை திசை திருப்பிக்கொண்டனர்.

கடாபியின் பல தசாப்த சர்வாதிகார ஆட்சி முடிந்தபோது நாடு எந்த திசையில் போக வேண்டும் என்பதில் எவருக்கும் ஒருமித்த கருத்து இருக்கவில்லை. அவர்களுக்கு ஜனநாயகம் என்றால் கூட சரியாக புரிந்திருக்கவில்லை. எனவே கடாபிக்கு எதிராக போராடியவர்களால் சட்ட ஒழுங்குக்கு அமைய ஒரு நாட்டை கட்டி எழுப்ப முடியாமல் போனது. இதன் விளைவாக 2011 கிளர்ச்சி போராட்டம் முடிந்த கடாபியின் மரணம் தொடக்கம் 2014 ஜூன் மாதம் வரையில் குறைந்தது ஐந்து அரசுகள் வந்துபோயிருக்கின்றன. கடாபி அரசு பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் நாட்டில் இரண்டாவது ஜனநாயக தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. ஆனால் இந்த தேர்தல் பிரச்சினையை சுமுகமாக்கும் என்று பார்த்தால் அது மேலும் தீவிரப்படுத்தியது.

இந்த பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட உலகத்தில் இல்லாத கதையாக லிபியாவில் இரண்டு அரசாங்கம் உருவானது. 2014 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பான்மையானவர்கள் ஓடிப்போய் லிபியாவின் எகிப்து எல்லையில் இருக்கும் தொப்ருக் நகரில் அரசொன்றை அமைத்தார்கள். 2014 பொதுத் தேர்தலை நிராகரித்தவர்கள் தலைநகர் திரிபோலியில் இருந்து மற்றொரு அரசை அமைத்தார்கள். அதனால் லிபியாவில் இரண்டு அரசுகள், இரண்டு பிரதமர்கள்.

அதிலே திரிபோலியில் இருக்கும் அரசு நாட்டில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கிறது. இந்த அரசுக்கு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான பெங்காசி மற்றும் மிஸ்ரட்டா ஆகிய நகரங்களில் ஆதரவு காணப்படுகிறது. ஆனால் இஸ்லாமியவாதிகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மறுபக்கம் தொப்ரூக்கில் இயங் கும் அரசுக்கு அந்த நகரத்திற்கு வெளியில் எதுவும் இல்லை. ஆனால் மேற்குலகுக்கு செல்லப்பிள்ளையாக இருப்பதால் சர்வதேச ஆதரவு இந்த அரசுக்கு இருக்கிறது. பெங்காசி நகரை பொறுத்தவரை அங்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் பலம்பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ஐ.எஸ¤க்கு தேவையான அனைத்து பொருத்தங்களும் லிபியாவில் கச்சிதமாக இருக்கிறது.

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தபோது அங்கு ஜிஹாத் செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு ஓடியவர்களில் சவூதி அரேபியாவுக்கு அடுத்து லிபிய நாட்டவர்களே அதிகம். எனவே ஐ.எஸ். உள்நாட்டில் கிளை திறந்தபோது அதில் கலந்துகொள்ள அதிகமான ஜிஹாதிக்கள் லிபியா திரும்பி இருக்கிறார்கள். லிபியா பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து சர்வதேசத்திடம் கதைபேசும் எகிப்தின் முன்னாள் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி அரசும் தற்போதைய பிரச்சினைகள் தீவிரமடைவதற்கு பங்காற்றி இருக்கிறது. எகிப்தின் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தே சிசி அங்கு ஜனாதிபதியானார்.

அதேபோல் லிபியாவிலும் ஹீரோ வேடம் போட முயன்றவர்தான் அந்நாட்டின் முன்னாள் இராணுவ ஜெனரல் கலீபா ஹப்தர். இந்த ஹப்தரை எகிப்து உசுப்பேற்றியது என்பது வெளியே சொல்லப்படாவிட்டாலும் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். குரங்கின் வாலில் தீ மூட்டும் வேலையை எகிப்து செய்ய, லிபியாவை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. கடாபி அரசில் இராணுவ அதிகாரியாக இருந்த இந்த ஹப்தர் கடந்த மே மாதம் திரிபோலி மற்றும் பெங்காசியில் இருக்கும் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்.

ஹப்தரின் வேலையால் நாடு இரண்டாகப் பிரிந்தது. ஹப்தர் படை கிழக்கு லிபியாவின் பெரும்பகுதியை கைப்பற்றியது. ஆனால் அங்கிருக்கும் டெர்னா அல்லது பெங்காசியை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இந்த நகரங்களுக்கு இன்று போனாலும் எங்காவது ஓர் இடத்தில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்கும்.

மறுபக்கம் ஹப்தருக்கு எதிரான இஸ்லாமிய ஆயுதக் குழுக்களின் கூட்டணி தலைநகர் திரிபோலி, மிஸ்ரட்டா மற்றும் சிர்த் ஆகிய நகரங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஹப்தருடன் கூட்டணி சேர்ந்திருக்கும் பழங்குடி ஆயுதக் குழுக்கள் நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் நாட்டின் தெற்கின் பரந்த பாலைவனப் பகுதி எவரது கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருக்கிறது. இங்குதான் ஐ.எஸ். மற்றும் இஸ்லாமிய மக்ரப்பிற்கான அல் கொய்தா அமைப்புகள் தீவிரமாக இயங்குகின்றன.

பொதுவாக மத்திய கிழக்கு எங்கும் இருக்கும் நோய்தான் ஐ.எஸ்.மற்றும் அல் கொய்தா போன்ற அமைப்புகள் பலம்பெறுவதறகு காரணமாகும். 2011 அரபு வசம் என்று ஆர்த்தமில்லாமல் அடைமொழி வைத்த, அரசுகளுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது தொடக் கமே இந்த பிரச்சினை கிளறி விடப்பட்டது. மத்திய கிழக்கை பொறுத்த வரை இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன ஒன்று இஸ்லாமியவாதிகள் மற்றையது ஆட்சியை கைவிட மறுக்கும் சம்பிரதாய மான ஆட்சியாளர்கள்.

2011 இந்த ஆட்சியாளர்க ளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் கிளம்பியபோது மாற்றாக வந்தவர்கள்தான் இந்த இஸ்லாமியவாதிகள். இதனை இப்படியே விட்டால் தமக்கு ஆபத்து என்பதை இந்த சம்பிரதாய ஆட்சியாளர்கள் புரிந்தே வைத்திருந்தார்கள். இந்த சூழலில்தான் ஐ.எஸ். தோன்றி மத்திய கிழக்கின் உண்மையான பிரச்சினையை திசை திருப்பி விடுகிறது. சிரியாவில் ஆட்சியை விட்டு எழும்பாத பஷர் அல் அஸாத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டிருந்தபோது ஐ.எஸ்.நடுவில் புகுந்ததில் அதிக இலாபம் கண்டது பஷர் அல் அஸாதாகத்தான் இருப்பார். அஸாத்தை ஆட்சியில் இருந்து வெளியேற்ற திகதி குறித்துக்கொண்டிருந்த மேற்குலகம் இப்போது ஐ.எஸ்.துதி பாடி வருகிறது.

கிட்டத்தட்ட லிபியாவிலும் இதேபோல் சூழல் ஒன்றுதான் இருக்கிறது. ஜெனரல் ஹப்தரைக் கொண்டு லிபியாவின் ஆட்சியை தமக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சித்த சம்பிரதாயமான மத்திய கிழக்கு ஆட்சியாளர்கள் ஐ.எஸ் ஐ காரணம் காட்டி லிபியாவில் நேரடியாக தலையிட வழி வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மறுபக்கம் ஐ.எஸ். குழுவை அழிக்க சர்வதேச கூட்டணி ஒன்றையே அமைத்து கண்மூடித்தனமாக வான் தாக்குதல்களை நடத்தும் அமெரிக்காவின் யுத்த தந்திரங்கள் வெற்றி அளிப்பதாகக் கூட தெரியவில்லை. இதனால் சிரியா, ஈராக்கில் ஐ.எஸ்.பலம் பெரிதாக குறைந்ததாக தெரியவில்லை. அது லிபியாவிலும் பலம்பெற்று வருவது, அப்பாவி கிறிஸ்தவர்களின் கழுத்து வெட்டும் வீடியோவோடு ஓரளவுக்கு உறுதியாகிறது. லிபியாவில் போய் எகிப்து வான் தாக்குதல் நடத்தினாலும் தனது சொந்த நாட்டிலும் சிசி அரசு ஐ.எஸ். அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருக்கிறது.

எகிப்தின் சினாய் பிராந்தியத்தில் இருக்கும் அன்சார் பைத் அல் மக்திசி ஆயுதக் குழு கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.எஸ் உடன் சேரும் உறுதிமொழியை செய்துகொண்டது. இந்த ஆயுதக் குழுவிடம் ஆயிரத்தில் இருந்து 2000 வரையான போராளிகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அல்ஜீரியா, யெமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா என்று ஐ.எஸ். உடன் சேருவதாக ஆயுதக் குழுக்கள் உறுதி மொழி எடுத்திருக்கின்றன. அமெரிக்கா மற்றும் மேற்குலகின் அர்த்தமற்ற தலையீடுகள் ஐ.எஸ்ஸ¤க்கு சாதகமாகவே அமைவது அதன் கிளைகள் விரிவடைவது காட்டுகிறது.

லிபியாவிலும் ஐ.எஸ்ஸை காரணம் காட்டி வெளிநாட்டு இராணுவத் தலையீடு ஒன்று பற்றி எகிப்து ஜனாதிபதி சிசி கடந்த ஒரு சில தினங்களாக புலம்பி வருகிறார். என்ன அர்த்தத்தில் அவர் இதனை கோருகிறாரோ தெரியவில்லை. ஆனால் இப்போது லிபியாவில் எத்தனையோ உள்நாட்டுப் பிரச்சினைகள் இருந்தபோதும் அது ஆப்கானிஸ்தானையோ அல்லது ஈராக்கையோ போல மோசமான நிலையை சந்திக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு இராணுவம் ஒன்று அங்கு கால் வைத்தால் அந்த நிலைமை வருவது தவிர்க்க முடியாததாக மாறிவிடும்.

எஸ். பிர்தெளஸ்...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com