Contact us at: sooddram@gmail.com

 

ஒன்பது மணித்தியாலங்களுக்குள் சாதாரண  பிரஜையானவர் மஹிந்த ராஜபக்'

இப்போது என்ன செய்கிறார்?

இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்டன் இல்லத்துக்கு தினசரி அவரைப் பார்க்க வருகை தரும் மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி அவரைக் காண மக்கள் குழுக்களாக பஸ்களில் வருகை தருகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைத்த ஒரு தலைவர் அவர். நிச்சயமாக போரை வெற்றி கொண்டதுக்கான பெருமையை கோருவதற்கான ஒரு தலைவர் அவர்தான், அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது மணித்தியாலங்களுக்குள் மக்கள் மஹிந்தவை ஒரு சாதாரண பிரஜையின் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

ஐந்தாவது ஜனாதிபதி பதவியிலிருந்து, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் ஓய்வுபெற வேண்டியவரானார். இதுதான் அரசியல் இயல்பு. வழக்கம் போல தோல்வி எங்களுக்கு பல முக்கிய பாடங்களைப் போதிக்கிறது. கடந்த ஒன்பது வருடங்களாக இலங்கையில் பிரபலமாக அவர் திகழ்ந்துள்ளார். அலரி மாளிகையில் வசித்தபடி தன்னை சுற்றி மக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் புடைசூழ உலகை வலம் வந்து கொண்டிருந்தார். தோல்வியடைந்து ஒரு மாதத்தின் பின்னர் அவர் தனது ஓய்வை எப்படிக் கழிக்கிறார் என்பதைக் காண்பதற்காக தங்காலையில் இருந்த அவரிடம் விஜயம் செய்தோம்.

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது தன்னை ஒரு சாதாரண கிராம வாசி என்று கூறிய அவருக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் மரியாதைக்கு ஆதாரம் தேவையானால் நிச்சயமாக ஒருவர் வார இறுதி நாட்களில் தங்காலைக்கு வருகை தர வேண்டும். கொழும்பிலிருந்து காள்ட்டனுக்கு திரும்பி வந்த முதல்நாள் மக்கள் அழுது கொண்டு அவரது வீட்டுக்கு முன்னால் குவிந்தார்கள். அதனால் அவர் தனது வீட்டின் ஒரு ஜன்னலின் அடித்தட்டின் மேல் ஏறி நின்று அவர்களுடன் பேச வேண்டியதாயிற்று. இன்னும் கூட வார இறுதி நாட்களில் சுமார் 50 பேரூந்துகள் நிறைந்த மக்கள் அவரைக் காண்பதற்காக தங்காலைக்கு வருகிறார்கள்.

நாட்டின் நான்கு மூலைகளிலும் இருந்து வருகை தருபவர்களுக்காக இப்போது அந்த வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்படுகிறது.நீங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். இல்லையென்றால் நாங்கள் உயிர் பிழைத்திருக்க மாட்டோம். காள்ட்டனுக்கு வருகை தந்த வயதானவர்கள் சொல்கிறார்கள். அதேவேளை மற்றொருவர் உங்கள் எதிரிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்கு எச்சரிக்கை செய்தோம். ஆனால் நீங்கள் அவர்களைப் புரிந்து கொள்ளவில்லை என்கிறார்.

மஹிந்த மனமுடைந்து போயிருக்கலாம். ஆனால் காள்ட்டன் பங்களாவில் ஒரு சாய்மானக் கதிரையில் சாய்ந்தவாறே மக்களை வரவேற்பது, நேரத்துக்கு நேரம் அவரை வணங்கும் வயதான பெண்களின் தலையை தடவுவது மற்றும் குழந்தைகளை முத்தமிடுவது போன்ற செயல்களை அவர் செய்வதைக் காணமுடிகிறது. இப்போது உங்களுடன் பேசுவதற்கு எனக்கு நேரமுள்ளது. முன்னர் எனக்கு நேரமிருக்கவில்லை. இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. சுதந்திரமாக இருப்பது அற்புதமாக உள்ளது. எந்த நேரத்திலும் வாருங்கள் என்னுடன் பேசலாம் என்று அவர் மக்களிடம் சொல்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை எப்போதும் மக்கள் சூழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இப்போதும் அது அப்படித்தான் உள்ளது. அவர் தனிமையில் இருப்பதை விரும்புவதில்லை. அவர்தனது ஜீப் வண்டியில் தனது நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்கிறார். கடந்த காலத்தில் செய்ததைப் போல அவர் கடலில் குளிக்கிறார். எந்த வித பாதுகாப்புமின்றி தங்காலை நகரில் நடந்து செல்கிறார் இப்படித்தான் அவரது அயலவர்கள் அவரது ஓய்வைப் பற்றி வர்ணிக்கிறார்கள்.

தான் அரசியலில் இருந்து வெளியேறப் போவதில்லை மற்றும் எந்த நேரத்திலும் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் தயாராக இருப்பதாகச் சொல்லி அவர் வாக்காளர்களைத் திருப்தி செய்கிறார். மக்களின் முடிவில்லாத கேள்விகளுக்கு திறந்த மனதுடன் மஹிந்த பதில் சொல்கிறார். கடந்த காலங்களில் நான் உதவி செய்த பணக்கார வியாபாரிகள்தான் என்னை காண வருவார்கள். இப்போது சாதாரண மக்கள் என்னைக் காண வருகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே எனக்கு விசுவாசமானவர்கள். நான் மகிழ்ச்சியாக உள்ளேன். அரசியல் ரீதியாக என்னைப் படுகொலை செய்ய முடியாது. எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமானால் அவர்களின் முகத்துக்கு நேராக நான் பதில் சொல்வேன்.

அவர் தனது வேதனைகளை மக்களின் முன்னால் விளக்கிறார். அவர் என்னை தொலைபேசி மூலம் அழைத்த போது நான் அவரை ஏசியதாக சந்திரிகா சொல்கிறார். அவர் என்னுடன் பேசவேயில்லை. மூன்று தடவைகள் அவருக்கு நான் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினேன். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது. அவர் மக்களுடன் கலந்து அவர்களுடன் சுதந்திரமாக பேசிக் கொண்டிருந்ததால், தங்காலையில் உள்ள அவரது காள்ட்டன் பங்களாவை விட்டு நாங்கள் அமைதியாக வெளியேறினோம்.

வாசனா மற்றும் சுனந்தா (தமிழில் எஸ். குமார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com