Contact us at: sooddram@gmail.com

 

சவூதி அரேபியாவில் ஜனநாயகமும் சமத்துவமும்..

சவூதி அரேபியாவில் ஜனநாயகம் இல்லை, சமத்துவம் இல்லை என்பது போல 'தமிழ் இந்து' நாளிதழில் ஒரு கட்டுரை வந்திருக்கும் போல. நான் படிக்கவில்லை. ஆனால் அதற்குக் கடும் எதிர்வினை ஆற்றி முஸ்லிம் அமைப்பு ஒன்றும், சில தனி நபர்களும் முகநூலில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். எனக்கென்னவோ இந்த எதிர்வினைகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.சவூதி அப்படி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நாடல்ல. அங்கு நடப்பது ஒன்றும் கலீபாக்களின் காலத்திற்கு இணையான ஆட்சியுமல்ல.
நானும் அங்கு சென்றுள்ளேன்.

ஏர்போர்டில் இறங்கும் கணம் தொடங்கி வெளிநாட்டார்கள் அவமானப் படுத்தும் நிலை தொடங்கி விடுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கர்களும் அய்ரோப்பியர்களும் அப்படி நடத்தப் படுவதில்லை. அங்கே மது விலக்கு இருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அமெரிக்கக் குடியிருப்புகளில் மதுவிலக்கிற்கு விலக்குகள் உண்டு. அங்குள்ல அமெரிக்கப் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதும் இல்லை.
கொடும் தண்டனை முறைகளின் விளைவாக அங்குக் குற்றச் செயல்கள் முற்றிலுமாகக் குறைந்து விடவும் இல்லை. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து அருகிலுள்ள ஓட்டலுக்குச் செல்லும்போது செல்பேசியில் பேசிக் கொண்டு சென்றதைப் பார்த்து என்னை அங்கு வரவழைத்திருந்த நண்பர், "யாரவது செல்லைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்" என எச்சரிக்கை செய்தார்.
எல்லோரும் அங்கு 'அரபிகள்' என ஒரே விளிபிற்குள் அடக்கப்படுவதுமில்லை. அங்கே "காட்டு அரபிகளும்" உண்டு. அவர்கள் இரண்டாம் தரமானவர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். அவர்களின் வாழ்நிலையும் அப்படித்தான்.
சவூதி அரபியர்கள் எல்லோர் மத்தியிலும் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்ந்து காட்டிய இஸ்லாமிய மதிப்பீடுகள் குடி கொண்டிருப்பதாகக் கருதினால் அதைவிட அபத்தம் ஏதுமில்லை. இங்கிருந்து வேலைகளுக்குச் செல்கிறவர்கள், முக்கியமாக வீட்டு வேலைகள் அ;ல்லது ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலைகளுக்குச் செல்பவர்கள் எல்லாம் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். சொல்லி மாளாது. அப்படிப் பாதிக்கப்படுபவர்களைக் கண்டு அனுதாபப் பட்டு திருப்பி நாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கும் நமது தமிழக முஸ்லிம் நண்பர்கள் மற்றும் இயக்கங்களின் செயல்பாடுகளை நான் நேரில் கண்டுள்ளேன்.
மரண தணடனை விதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தப் பணம் பெற்று மன்னிப்[பு வழங்குவதிலும்கூட ஊழல்கள் உண்டு என்பது குறித்து ரிசானா நபீக் மரண தண்டனை விவாதத்தின் போது முஸ்லிம் நண்பர்கள் சிலர் எழுதியிருந்ததை நண்பர்கள் வாசித்திருக்கலாம்.
அங்கு ஜனநாயகம் கிடையாது, மனித உரிமைகள், தொழிலாளர் சங்கங்கள் எதுவும் கிடையாது என்பதெல்லாம் யாவரும் அறிந்த உண்மை. ஆனாலும் அங்கு மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள், எனவே அதற்கெல்லாம் அவசியம் இல்லை எனச் சொன்னால் அது அபத்தம். பொதுவாக எவ்வளவு பணக்கார வளைகுடா நாடானாலும் சரி அங்கு குடிமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. சமீபத்திய அரபு வசந்தம் என் அழைக்கப்பட்ட போராட்டங்கள் துனீசியா, எகிப்து எனப் பரவியபோது, எல்லா அரபு நாட்டு அரசுகளும் அஞ்சின. மிகப் பெரிய தொகைகளை மக்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தும், சலுகைகளை அறிவித்துந்தான் அந்த அதிருப்தி தங்கள் நாட்டிற்குள்ளும் பரவாமல் தடுத்துக் கொண்டன. நான் அடுத்த சில மாதங்களில் குவைத் சென்றிருந்தேன். அங்கும் அத்தகைய சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன.
எண்ணை வளம், மற்றும் நம்மைப் போன்ற நாடுகளிலிருந்து செல்லும் உழைப்பாளிகளுக்குக் குறைந்த ஊதியம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவை மூலம் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்படும் மான்யங்கள் (subsidies) மற்றும் கடும் அடக்குமுறை ஆகியவற்றின் மூலமே அங்கு அமைதி நிலைநாட்டப்படுகிரது.
முஸ்லிம் நண்பர்கள் சவூதியை ஒரு இலட்சிய இஸ்லாமிய அரசாகக் கண்டு விமர்சனகளைப் பார்த்துக் கோபம் அடைய வேண்டியதில்லை. இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் இழிவு செய்யும் போது அவர்கள் கொள்ளும் கோபத்திலுள்ள நியாயம் இதில் இல்லை என்பதே என் கருத்து.
சமீபத்தில் சவூதி மன்னர் அப்துல்லா இறந்தபோது மிக எளிமையாக அவரது ஜனாசா அடக்க நிகழ்ச்சி நடந்தது குறித்து என் அன்பிற்குரிய நண்பர் அபு ரய்யான் அவர்கள் பக்கம் பக்கமாக வரிந்து கட்டி அதைப் பாராட்டியும் சவூதியைக் கொண்டாடியும் எழுதியபோதே இத்தகைய பதிவை இட நான் நினைத்திருந்தேன், அபு ரய்யான் சொன்னது உண்மைதான். அப்படியான கல்லறைத் தோட்டங்களை நான் சவூதியில் இருந்தபோது சென்று பார்த்துள்ளேன். என்னை அங்கு அழைத்துச் சென்ற நண்பர் அப்துல்லா அப்போதும் இதைச் சொன்னார். இங்கே மன்னர்களின் கல்லறைகளும் உண்டு. எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்லறைகள்தான். தனியாக அடையாளம் காண இயலாது என்றார். உண்மைதான் நானும் வியந்து போனேன். ஆனால் இந்தச் சமத்துவம் கல்லறைகளில் இருந்தால் மட்டும் போதாது. வாழும்போதும் அந்தச் சமத்துவம் வேண்டும்.

Marx Anthonisamy

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com