Contact us at: sooddram@gmail.com

 

வட்டி விவகாரம் கிழக்கில் பாரியதொரு சமூகச் சிக்கல்

முப்பது வருடகால யுத்தம் ஓய்ந்து விட்ட போதிலும் அது ஏற்படுத்திச் சென்ற வலிகளும் வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களை விட்டு அகலவில்லை. இந்நிலையில் எமது சமூகத்திற்குள் புற்று நோய் போல் புரையோடிப் போய் இருக்கும். வட்டிக்குப் பணம் வாங்கும் செயற்பாடு காரணமாக பல குடும்பங்கள் நிர்க்கதி நிலைமைக்கு வந்துள்ளன. கிழக்கில் வட்டிப் பிரச்சினை என்பது சமூக சீரழிவுக்குக் காரணமாக உருவெடுத்துள்ளது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பல குடும்பங்கள் இதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.

வட்டி உயிரைப் பறிக்கும், வட்டி குட்டிபோடும், வட்டி வாழ்க்கையை பாழாக்கி விடும், வட்டி குடும்பத்தையே நடுத்தெருவிற்கு கொண்டு செல்லும் என்றெல்லாம் எமது முன்னோர் கூறினர். ஒரு காலத்தில் அவசர தேவைக்குப் பணம் தேவையெனில் அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் கைமாற்றுப் பணம் வாங்கி விட்டு அதனை இரண்டொரு நாட்களில் திரும்பக்கொடுத்து பரஸ்பரம், புரிந்துணர்வுடன் உறவுகளை வளர்த்தனர். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. அவசர தேவைக்குப் பணம் தேவை என்றால் கூட வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களே உள்ளனர். வட்டி அந்தளவிற்கு உருசியாகவுள்ளது. இது மக்களை வாட்டி வதைத்தும் வருகிறது.

தற்போது கிழக்கிலுள்ள கிராமங்களில் வட்டிக்குப் பணம் பெறுவது என்றால் ஒரு இலட்சம் ரூபாவிற்கு 6 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் ரூபா வரை மாத வட்டி அறவிடப்படுகின்றது. இது தவிர நாள் வட்டிக் கொடுமையும் இங்கு அரங்கேறி வருகின்றது. ஒருவரிடம் அவசர தேவைக்கு 1000 ரூபா பெற்றால் அதற்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் வட்டி செலுத்த வேண்டும். இந்நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மாத்திரமே வட்டிக்குப் பணம் கொடுக்கின்றனர்.

அண்மையில் பாண்டிருப்பு கிராமத்தில் 1000 ரூபா பணத்தினை நாள் வட்டிக்கு பெற்ற ஒருவர் மூன்று மாத காலம் (90 நாட்கள்) கழித்து திருப்பிக் கொடுத்த போது குறித்த நபர் அதற்கு நாள் வட்டி கணக்குப்பார்த்து 9000 ஆயிரம் ரூபாவினை வசூல் செய்திருந்தார். இதனால் பாதிக்கப்பட்டவர் வட்டிக்காரரை வீதி வீதியாக திட்டித்திரிந்த சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

வட்டிக்குப் பணம் பெறுபவர்கள் முன்பின் யோசிக்காது தமது தற்போதைய தேவை மட்டும் முடிந்தால் போதும் என்ற நினைப்பிலே பணம் பெறுகின்றனர். இதானலேயே பணம் பெறுகின்றவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், இணக்க சபைகள் போன்றவற்றில் வட்டிப் பிரச்சினை தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட நபர்களிடம் வட்டிக்கு பணம் பெற்றவர்கள் அதனை திரும்பச் செலுத்த முடியாத காரணத்தால் கிராமத்தை விட்டு தலைமறைவாகியுள்ளனர். இன்னும் சிலர் வீடு, வாசலை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். வேறு சிலர் கடன் சுமையினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கிழக்கில் சுனாமிக்குப் பின்னர் பல தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், லீசிங் கம்பனிகள் தமது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளதனால் இவற்றிலும் கடன் பெற்றுக்கொள்ளும் மக்கள் தனி நபர்களிடம் பெற்றுக்கொண்ட பணக்கஷ்டத்தைவிட அதிகமான பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் முயற்சிக்கென கடன் வழங்குவதாக சொல்லிக்கொள்ளும் தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து அதனை வசூலிப்பதையே கண்ணும் கருத்துமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

இங்கு தனியார் நிறுவனங்கள் கடன்களை வழங்கும் போது ஆங்கிலத்தில் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் பல இடங்களில் கையெழுத்தைப் பெற்றுவிட்டு 20 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் ரூபா வரை முதற்கட்டமாக அதிக வட்டிக்கு பணம் வழங்கி வருகின்றன. அவை பற்றித் தெரியாத அப்பாவி மக்களும் ஏதோ பணம் பெற்றால் போதும் என நினைத்து அந்நிறுவனங்கள் விரிக்கும் கடன் வலையில் சிக்கி வாங்கிய கடனை அடைக்க முடியாது நிம்மதியை இழந்து விடுகின்றனர்.

மட்டு, அம்பாறை மாவட்டங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் கம்பனிகள் ஏட்டிக்குப் போட்டியாக செய்து வரும் இவ் வியாபார தந்திரத்தில் அப்பாவி மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக பெண்களை மையமாக வைத்தே நிதி நிறுவனங்கள் தமது நடவடிக்கையினை முன்னெடுத்துச் செல்கின்றன. இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையிலும் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.

கடன் வழங்கிய நிறுவனங்களில் கடமைபுரியும் ஊழியர்கள் சிலர் பணம் அறவீடு செய்வதில் காட்டுகின்ற கடினத்தன்மையினால் கடன் பெற்றோர் மன அழுத்தத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் தவணைப் பணம் கட்டாதவர்களை தொலைபேசியிலும் மற்றும் நேரிலும் அழைத்து தரக்குறைவாக பேசுகின்றனர். அவர்களை அச்சுறுத்தும் தொனியில் வீடு, வளவைப் பறிமுதல் செய்யப்போவ தாகவும் தெரிவிக்கின்றனர்.

அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து மக்களை சுமைக்குள் தள்ளும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

செ. துஜியந்தன்
பாண்டிருப்பு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com