Contact us at: sooddram@gmail.com

 

இசையின் படுதோல்வி

சுப்பர் சிங்கர் ஜுனியர் தொடர் நாலாவதின் முடிவுகள்

(சிவசண்முகமூர்த்தி சுந்தரம்)

கடந்த சில வருடங்களாக விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தவறாது பார்த்து வருகின்றேன். இந்த வருடத்து சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் (2014-2015) இசை தோற்றுப் போனதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைகின்றேன். மிகச்சிறந்த பாடகர்கள், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதிலிருந்து, முதல் மூன்று இடங்களுக்கு வருவதுவரை, மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் யசிக்காவிற்கு முதலிடம் வழங்காமல் விஜய் ரி.வி மோசடி செய்து விட்டதாகவும் இலங்கைத்தமிழர்சார் இணையங்கள் பிரச்சாரம் செய்து வருவது இன்னமும் வேதனையை அதிகரிக்க செய்துள்ளது. யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்கப்பட்டது என்பது உண்மையானால், இந்த பெருந்தொகையான (உலகெங்கிலும் ஏறத்தாள ஏழு கோடி அல்லது ஆகக்கூடிப்போனால் எட்டுக் கோடி தமிழர்களே வாழ்கின்றார்கள் என்று பார்த்தால், ஒரு கோடி வாக்குகள் என்பது ஒருவருக்கு கிடைப்பது என்பது பெருந்தொகையே) வாக்குகளை வைத்து பார்க்கும் போது, யசிக்காவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு சிறந்த தமிழ் இசை அல்லது சிறந்த தமிழ்ப்பாடகர் முதலிடத்திற்கு வருவதைக்காட்டிலும், வேறு ஏதோ காரணங்களுக்காக யசிக்கா என்பவர் முதலிடத்திற்கு வரவேண்டுமென்ற முனைப்பே அல்லது தீவிர எண்ணமே மேலோங்கி நின்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில்தான் மாத்திரம்தான் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என்றால் உண்மையிலேயே யசிக்காவிற்குதான் முதலிடம் அளித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழ்ந்திருந்தால், மிகவும் மோசமான முறையில் இசை படுதோல்வி அடைந்திருக்கும். போட்டியாளருக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையிலும் நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையிலுமே யசிக்கா இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டார். இதுகூட இசைக்கு கிடைத்த படுதோல்வியே.

இசைத்திறமையின் அடிப்படையிலும், சுப்பர் சிங்கர் ஜுனியர் நாலாவதில் பங்குபற்றிய ஏனைய போட்டியாளர்களின் பாடும் திறமைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, யசிக்கா முதல் பத்து இடங்களுக்கு வருவதற்கே தகுதியற்றவர் என்பது என்னைப்போன்ற இசைபற்றி அதிகம் ஆழ்ந்த ஞானம் இல்லாதவர்களுக்கு சாதாரணமாக புரியும். இந்த புரிதல் எனக்கு எனது காதுகள் வழியாக மாத்திரம் வரவில்லை, பாடகர்களின் பாடல்கள் தொடர்பாக நடுவர்கள் தெரிவித்த விமர்சனங்கள், பாராட்டுதல்கள் என்பவற்றை கேட்டதாலும் வந்ததே. எனினும் மிகவும் திறமையுள்ளவர்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிரவஸ்தி, அனல் ஆகாஸ், சிவானி போன்ற பாடகர்களை முதலிலே கழட்டி விட்டதற்கு நடுவர்களின் தீர்ப்பே காரணம்.

இவர்களுக்கு வைல் கார்ட்டில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது மீண்டும் இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அப்படியிருந்தும் வைல் கார்ட்டில் தெரிவு செய்யப்பட்டவர்களில் யசிக்கா முதலாவதாக இருந்தது மாத்திரமன்றி, இறுதிப்போட்டியில் இரண்டாமிடத்திற்கு முன்தள்ளிவிடப்பட்டார். யசிக்கா இரண்டாமிடத்திற்கும், யசிக்காவை விடவும் திறமையுள்ள ஹரிப்பிரியா மூன்றாமிடத்திற்கும், அதேபோன்று ஸ்ரீஷா, பரத், அனுஷ்சியா போன்ற சிறந்த பாடகர்கள் கடைசி மூன்று இடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டதின் காரணம் என்ன?

முதலாவது காரணம், விஜய் ரி.வி. வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்களின் சந்தையை இழக்க விரும்பவில்லை. இவர்கள் தங்களது தொலைக்காட்சியில் விஜய் ரி.வியைப் பார்ப்பதற்காக வருடாவருடம் சந்தாப்பணம் செலுத்த வேண்டும். இந்த சந்தாப்பணம் மூலமாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்களது நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலமாகவும் விஜய் ரி.விக்கு பெருந்தொகையான வருமானம் கிடைக்கின்றது. இரண்டாவது காரணம், விஜய் ரி.வியும் நடுவர்களாக உள்ளவர்களும் அவ்வப்போது வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்கள் ஒழுங்கு செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்கு வந்து பணம் சம்பாதிக்க முடியாமல் போய்விடும். அனந்த் வைத்தியநாதன் அவர்களை இந்த வியாபாரத்தில் உள்ளடக்க முடியாது.

யசிக்கா இலங்கையை பூர்விகமாக கொண்டவரென்பதும், தமிழர்களின் அதிதீவிரவாத தேசிய உணர்ச்சியை தட்டியெழுப்பும் பாடலொன்றை (விடை கொடு எங்கள் நாடே) பாடியவர் என்பதாலுமே யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. சரியான புள்ளி விபரங்கள் எதுவுமில்லாவிடினும் கடந்த 32 ஆண்டுகளில் ஏறத்தாள 5 இலட்சம் இலங்கைத்தமிழர்களே (தமிழ்நாட்டிலுள்ளவர்களை தவிர்த்து) வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாக கூறலாம். (இதில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த விருத்திக்காக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து, ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு, இலங்கையில் பயங்கரவாதத்தை விதைத்துக் கொண்டிருப்பவர்கள்) இவர்களில் எல்லோரும் வருடாவருடம் சந்தாப்பணம் செலுத்தி தமிழ் ரி.வியினை பார்ப்பபதில்லை. அப்படி தமிழ் ரி.வியினை பார்ப்பவர்களில் விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சிகளை கண்டு களிப்பவர்கள் ஒரு சிறு பகுதியினரே. இதுதவிர சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சிகளை இணையத்தினூடாவும் கண்டு களிப்பவர்கள் கணிசமானோர் உள்ளனர் எனபதை மறுப்பதற்கில்லை.

எனினும் ஒருவர் 500 வாக்குகளை அளிக்கலாம் என்பதை பயன்படுத்தி, ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை யசிக்காவிற்கு அளிப்பதில் ஈடுபட்டவர்கள் 5000 ஆயிரத்திற்கு மேற்படாத இலங்கைத்தமிழர்களே என்பதை உறுதியாக கூறமுடியும். ஒருவர் 500 வாக்குகளை அளிப்பதற்கு எவ்வளவு நேரம் செலவிடப்பட வேண்டுமென்பது தெரியுமா? இலங்கைத் தமிழர்களுக்கே உரிய இந்த அதிதீவிர மனோபாவம், விஜய் ரி.வியின் சுப்பர் சிங்கர் நிகழ்சிகளை பார்த்து இரசிக்கும் ஏனைய தமிழ் பார்வையாளர்களில் பெரும்பான்மையோருக்கு இல்லை என்பது தமிழ் இசை உலகுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயம்.

கடந்த 65 வருடங்களாக இலங்கை அரசியலிலும் எப்போதுமே பிழையானவர்களுக்கே ஆதரவளித்தும் வாக்களித்தும் (ஜனவரி 8ந் திகதி இலங்கைளில் நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தல் இதற்கு சிறந்த உதாரணம்) பழகிப்போன இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கைத்தமிழர்களிடம், இசைத்துறையில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் என்ன செய்வார்கள்? இலங்கைத்தமிழர் என்பதால் திறமை குறைந்தவரை, திறமை வாய்ந்தவர்களை மீறி முன்னுக்கு தள்ளுவதா? நடுவர்கள் எவரெவரை அதிகம் பாராட்டுகிறார்ள், எவரெவருக்கு எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் போன்றவற்றினை கவனித்தாவது யசிக்காவிற்கு வாக்களிப்பது குறிப்பது இலங்கையர்கள் தங்கள் மனச்சாட்சிக்குள் கேள்விகளை எழுப்பி இருக்கலாம்.

அதிதீவிரவாத தமிழ்த்தேசியத்தால் இலங்கை அரசியலையும் சமூகத்தையும் பொருளாதார வளங்களையும் சீரழித்தது போதாதென்று, இவர்கள் இப்போது தமிழ்நாட்டு இசைத்துறையையும் நாசம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். விஜய் ரி.வி. நிர்வாகம், சுப்பர் சிங்கர் ஸ்பொன்சர்கள், அனந்த் வைத்தியநாதன், சுப்பர் சிங்கர் நடுவர்கள் மற்றும் தமிழ்நாட்டு இசைத்துறையினர், இந்த நாசகாரச்சக்திகள் சுப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சியில் புகுந்து தில்லுமுல்லுப் பண்ணுவதை உடனடியாக தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். எந்தவொரு இசையின் வளர்ச்சிக்கும் அதனை சந்தைப்படுத்தல் என்பது முக்கியமானதாயினும், அது இசைத்துறையில் திறமை வாயந்தவர்கள் முன்வருவதை, இசைத்துறையை வளர்தெடுப்பதை மழுங்கடிக்க அனுமதிக்கக் கூடாது.

சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் இறுதியில் யசிக்காவிற்கு இரண்டாமிடம் வழங்கப்பட்ட பின்னர், முகத்தில் எந்தவித சலனமும் காட்டாது ஹரிப்பிரியா, ஸ்ரீஷா, பரத், அனுஷ்சியா ஆகியோர் அரங்கில் இருந்ததை பாராட்டாமலிருக்க முடியாது. அடுத்துவரும் சுப்பர் சிங்கர் போட்டியில் ஒரு போட்டியாளருக்கு ஒரு வாக்குத்தான் அளிக்க முடியும் என்பதை கட்டுப்பாடாக விஜய் ரி.வி. வாக்களர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

(சிவசண்முகமூர்த்தி சுந்தரம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com