Contact us at: sooddram@gmail.com

 

உள்ளூராட்சித் தேர்தல்களில் அரசுடன் இணைந்து போடடியிடுவதின் மூலமே, யுத்தத்தால் அழிந்து போன வடக்கு கிழக்கைக் கட்டியெழுப்ப முடியும்!

(வி.சின்னத்தம்பி)(யாழ்ப்பாணம்)

இலங்கையில் மீண்டும் ஒரு தேர்தலுக்கானஅதாவது உள் ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை பொதுமக்களின் வரிப்பணத்தை அல்லது தேசிய வருவாயை வீண் விரயம் செய்வதில் அடிக்கடி நடைபெறும் இந்தத் தேர்தல்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டென்று கூறினால், அது மிகையாகாது. ஆனாலும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் இந்தத் தேர்தல்களும் அவசியமாகவே இருக்கின்றன. அதுவும் கடந்த முப்பது வருடங்களாக புலிகளின் எதேச்சாதிகாரப் பிடியில் சிக்கி, தேர்தல் போன்ற ஜனநாயக செயற்பாடுகளை அறிந்திராத தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், இந்தத் தேர்தல்கள் முக்கியமானவை தான்.

ஆனால் இந்த உள்ளூராட்சித் தேர்தல்களால், மக்களுக்கு என்ன நன்மை என்ற கேள்வியும் முக்கியமானது. முக்கியமாக தமிழ் கட்சிகளைப் பொறுத்த வரை இக்கேள்வி அதி முக்கியமானது. ஏனெனில் தேர்தல் என்று வந்ததும், இந்த தமிழ் கட்சிகள் ஆளுக்காள் குத்து வெட்டுப்படுவதும், பழைய புளித்துப் போனஉலகத்துக்கு எமது பலத்தைக் காட்ட ஒன்றுபட்டு எமக்கு வாக்களியுங்கள்என்ற வேண்டுகோளை விடுப்பதும், மீண்டும் மீண்டும் அரங்கேறி வருகின்றன.

சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல்வேறு கோசங்களைக் கேட்டு, தமிழ் மக்கள் சலித்துப் போய்விட்டார்கள். முதலில் தமிழ் காங்கிரஸ் கட்சி, ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!’ என தமிழ் மக்களுக்கு உருவேற்றியது. பின்னர் தமிழரசுக்கட்சி, ‘அடைந்தால் தமிழ்நாடு, இல்லையேல் சுடுகாடுஎன தூக்குமர நிழலில் நின்று வசனம் பேசியது. அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, ‘தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கு என்றோர் நாடில்லைஎன வயிற்றில் அடித்து ஒப்பாரி வைத்தது. அதன் பின்னர் போர்க்களம் புகுந்த புலிகள், ‘புலிகளின் தாகம் (தமிழ் மக்களுடையதல்ல) தமிழீழத் தாயகம்எனச் சூளுரைத்தனர்.

எல்லா வாய்ச்சவடால்களுக்கும், இலங்கை அரசாங்கத்தின் இராணுவப்படைகள், 2009 மே மாதம் 18ம் திகதி வெள்ளாம் முள்ளி வாய்காலில் வைத்து சமாதி கட்டின.

ஆனால், தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தனது ஏகபோகத்தையும், பிற்போக்கு இனவாத அரசியலையும் தொடர வேண்டும் என்ற நினைப்பில், ஜனாதிபதித் தேர்தலில் போர் வெறியனும், சிங்கள இனவாதியுமான முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகாவுக்குப் பின்னால் ஓடியது. ஆனால் பொன்சேகாவின் வீழ்ச்சி தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் வீழ்ச்சியாகப் போக, தாங்கள் புலிகளின் பினாமிகளுமல்ல, பொன்சேகாவின் பினாமிகளுமல்ல என மீசையில் ஒட்டிய மண்ணைத் தட்டிக்கொண்டு, பாராளுமன்றத் தேர்தலில் போட்டி போட்டு சில ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஏனைய தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டதால் தான், தனக்கு அதிக ஆசனங்கள் கிடைத்தது என்பதையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புரிந்து கொண்டது.

இந்தச் சூழ்நிலையில் தான், பெருத்த இழுபறிகளுக்குப் பின்னர்தமிழ் கட்சிகளின் அரங்கம்உருவானது. இந்த அரங்கத்தின் நோக்கம் தேர்தல்களை அடிப்படையாக கொண்டதல்ல என அதன் தோற்றத்தின் போது விளக்கமளிக்கப்பட்டது. தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு, ஒரு தீர்வை ஏற்படுத்துவதற்குப் பாடுபடுவதே, தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் நோக்கம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் உருவாக்கத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்பது, அதன் சில தலைவர்கள் ஆரம்பம் முதல் விடுத்து வந்த அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தின. ஆனாலும் மக்கள் மத்தியில் தமிழ் கட்சிகள் அனைத்தும ஓரணியில் நின்று செயல்பட வேண்டும் என்ற அவா நிலவியதினால், வேறு வழியின்றி தமிழ் கட்சிகளின் அரங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளாகியது.

ஆனாலும், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சிறீதரன் ஆகியோர் பகிரங்கமாகவே தமிழ் கட்சிகளின் அரங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படுவதை எதிர்த்ததுடன், தமிழ் அரங்கத்தைச் சீர்குலைக்கவும் முயன்றனர். அவர்கள் இருவரினதும் எதிர்ப்புக்குக் காரணமுண்டு. சரவணபவனைப் பொறுத்தவரையில்சப்றா நிதி நிறுவனத்தின்மூலம் தமிழ் மக்களின் லடசக்கணக்கான பணத்தை மோசடி செய்தவர் என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, அவரும் அவரது பத்திரிகையானஉதயன்நாளிதழும், புலிகளின் தீவிர விசுவாசிகளாகச் செயல்பட்டதுடன், தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் நீணடகால ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் என்பதும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, சரத் பொன்சேகாவை ஆதரித்தவர்கள் என்பதும் பகிரங்கமான விடயம். உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முனைப்புக் கொண்ட நேரத்தில், ‘ஆஹா தமிழ் அரங்கம் உடைந்துவிட்டது ஹய்யா!’ என சரவணபவனின் உதயன் பத்திரிகை அமர்க்களம் செய்ததின் மூலம், அவரது கெட்ட உள்நோக்கம் வெட்ட வெளிச்சமானது

சிறீதரனைப் பொறுத்த வரையில், அவர் புலிகளின் ஆதிக்க காலத்தில், கிளிநொச்சிப் பகுதியில் பாடசாலை அதிபராக இருந்த போது, பல மாணவச் சிறார்களை புலிகளின் படையணிக்குத் திரட்டிக் கொடுத்தவர் என்பது, அங்கு வாழும் மக்கள் அனைவரும் அறிந்த விடயம். பாராளுமன்ற உறுப்பினரான பின்னரும், அதை நீடித்துத் தக்க வைப்பதற்காக உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் சென்று பச்சை இனவாதம் பேசி வருவதுடன், இன்றும் புலிகளைப் பகிரங்கமாக ஆதரித்து வருபவர்.

இவர்களைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் முன்னர் புலிகளின் தீவிர பினாமிகளாகச் செயற்பட்ட சில கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் கட்சிகளின் அரங்கத்துடனான ஐக்கியத்தை தமது குறுகிய அரசியல் லாபம் கருதி எதிர்த்து வருகின்றனர். இவர்கள் எல்லோரதும் எதிர்ப்புக் காரணம், தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக அரசியல் சக்திகள் வளர்ச்சி பெறாமல் தடுப்பதற்காகவே மட்டுமே.

இது ஒருபுறமிருக்க, தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு, சில பதவிகளைப் பெறுவதற்கு அங்கலாய்ப்பது தெரிய வந்துள்ளது. தமிழ் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், பெரும்பாலும் அரசாங்கக் கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடக் கூடிய சூழல் நிலவுவதால், அதனை ஏற்காத கட்சிகளின் நிலைப்பாட்டை உற்சாகப்படுத்துவதன் மூலம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக உருவான தமிழ் அரங்கத்தை உடைத்துவிடலாம் என கூட்டமைப்பினர் திட்டமிட்டுச் செயற்படுவது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சதிச் செயலுக்கு இரையாகாமல் இருப்பது தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியினதும் தலையாய கடமையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தக் கட்சிகள் சேர்ந்தால், அவர்கள் நிச்சயமாக இவர்களைக் கறிவேப்பிலையாகத்தான் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவாகள் என்பது நிச்சயம். எனவே, ஒரு அற்ப தேர்தலுக்காக, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வுக்காக மிகவும் கஸ்டப்பட்டு உருவாக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தை உடைத்துவிடாதீர்கள்

முதலில் இந்தத் தமிழ் கட்சிகளுக்கு உள்ளூராட்சித் தேர்தல்கள் சம்பந்தமான ஒரு தெளிவு வேண்டும். உள்ளூராட்சிச் சபைகள் என்பது, தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் களங்கள் அல்ல. அவை மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் அலகுகள். அவற்றின் சிறந்த செயற்பாட்டுக்கு எந்தக் கட்சி அதை நிர்வகிக்கிறது என்பதை விட, அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தின் ஆதரவு மிக இன்றியமையாதது. எனவே இன்றைய சூழ்நிலையில் மிகவும் பலமான நிலையில் (பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உட்பட) இருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதே, யுத்தத்தால் அழிந்து போயுள்ள வடக்கு கிழக்கைக் கட்டியெழுப்ப உதவியாக இருக்கும்.

அதைவிடுத்து, தமிழனின் ஒற்றுமையை உலகிற்குக் காட்டுவதற்கு தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் என்ற, வழமையான சுத்தமாத்துக் காரணத்தை முன்வைப்பதாலோ, உள்ளூராட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றுவதால் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என போலி நியாயம் பேசுவதாலோ, வடக்கு கிழக்கு மக்களின் அவசர பிரச்சினைகளுக்கோ, அன்றாடத் தேவைகளுக்கோ ஒருபோதும் தீர்வ கண்டுவிட முடியாது. உண்மையை உள்ளபடி சொல்வதானால், ‘நாடு கேட்டு, அது கிடைக்காமல் போய், பின்னர் ஐந்து ஊர்கள் கேட்டு அதுவும் கிடைக்காமல் போனதால், ஐந்து வீடு கேட்ட பாண்டவர்கள் கதையாக’, பாராளுமன்றத்திற்குப் போக முடியாமல் போன சிலர், கடைசி உள்+ர் நிர்வாகங்களிலாவது ஏதாவது பதவிகளில் குந்தலாம் என்ற நப்பாசையிலேயே, இப்பொழுது தமிழ் கட்சிகள் இணைந்து, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை உரத்துக் கூவுகிறார்கள்.

ஐயா கனவான்களே! உங்களுடைய இந்த தந்திரோயங்களையெல்லாம் புரிந்து கொள்வது, ஆனானப்பட்ட புலிப் பேய்களுடனேயே வாழ்ந்து பழக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒன்றும் சிரமமான காரியமல்ல. மக்களுக்கு ஏதாவது உருப்படியாக நீங்கள் செய்ய எண்ணினால், அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து செயல்படுங்கள். அதை விடுத்து மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி, அவர்களது அற்ப சொற்ப வாழ்வையும் அதல பாதாளத்தில் தள்ளாதீர்கள்!

(நன்றி: தேனி இணையம்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com