Contact us at: sooddram@gmail.com

 

உடப்பு

கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம்

(அருள் சத்தியநாதன்)

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ் மக்கள் வாழும் இடங்களாகக் காணப்பட்ட போதிலும் இன்று அந்த சூழல் வெகுவாக மாறிவிட்டது. மாற்றங்கள் சகஜம்தான். ஆனால் சிலாபத்தில் இருந்து 26 கி. மீ. தொலைவிலும் புத்தளத்தில் இருந்து 42 கி. மீ. தொலைவிலும் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் மீன்பிடிக் கிராமமான உடப்பு, எல்லாத் தாக்கங்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் தனித் தமிழ் கிராமமாக விளங்கி வருகிறது. இது பலரும் அறியாத உண்மை.  இங்கே 90 சதவீதமானோர் தமிழ் இந்து மக்கள். ஏனையோர் தமிழ் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள். சிலாபத்தில் இருந்து பிரிந்து செல்லும் குண்டும் குழியுமான பாதையூடாக ஆடியசைந்து சென்றால் இக்கிராமத்தை சென்றடையலாம்.

இப்போது உடப்புக்கு பயணிக்கும் போதும் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே உடப்பூர் கிராமத்தை அடையாளம் காணலாம், கம்பீரமாக எழுந்து நிற்கும் 108 அடி உயர ராஜகோபுரத் தரிசனத்தால்! கோபுர தரிசனமே பெரும்பேறு என்றும் அதுவே ஒரு வழிபாடு என்றும் சொல்வார்கள். எனவே இக்கிராமத்தைச் சென்றடைவதற்கு முன்னரேயே ஒரு வழிபாட்டையும் நடத்திவிடும் பாக்கியம் இங்கே தான் உங்களுக்குக் கிடைக்கிறது.

இது ஒரு தமிழ்க் கிராமம் என்பதற்கு அப்பால் இன்னும் சில விசேஷங்களும் இங்கே காணப்படுகின்றன. உடப்பூரின் மொத்த சனத்தொகை 18 ஆயிரம். சுமார் நாலாயிரம் குடும்பங்கள். இக்கிராம மக்கள் இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். இலங்கையிலேயே திரெளபதை அம்மனுக்கு ஆலயம் இங்கேயே அமைந்துள்ளது.

இந்த ஆலய பரிபாலன சபையே ஊர் பொது விவகாரங்களை நிர்ணயிக்கிறது. முடிவுகளை எடுத்து அமுல் செய்கிறது. பரிபாலன சபையின் கட்டுப்பாடுகளை மக்கள் மீறுவதில்லை. இக் கட்டுப்பாடுகள் பல ஆக்கபூர்வமான காரியங்களை இங்கே நடத்திக் காட்டியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம : ஐந்து ஆண்டு காலத்தில் எழுந்திருக்கும் 108 அடி உயரமான ராஜகோபுரம்.

திரெளபதையம்மன் கோவிலும் அதன் பிரசித்திபெற்ற தீ மிதித்தலும் இக் கிராமத்தின் முகவரிகள். உடப்பூர் கிராமத்தின் மையக் கருவாகவும் இயக்கு சக்தியாகவும் இந்த ஆலயமே விளங்குகிறது. எனவே அவ்வப்போது இந்த ஆலயத்தில் திருப் பணிகள் இடம்பெற்று வருவது வழமை. இத் திருப்பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி ராஜ கோபுரம் எழுந் துள்ளது.

நாளை 24ம் திகதி இங்கே மஹா கும்பாபி ஷேகம் நடைபெறு கிறது. இலங்கையின் ராஜ கோபுரங்களில் மாத்தளை முத்து மாரியம்மன் ஆலய கோபுரமே உயரமானது. உயரம் 108 அடி. இப்போது உடப்பூர் ஸ்ரீ பார்த்தசாரதி ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ திரெளபதி தேவி அம்மன் ஆலய கோபுரமும் 108 அடி உயரத்தில் எழுந்து நிற்கிறது.

இதன் பிர தான வாயில் கதவுகள் 11 ண அடி நீளமும் 19 ண அடி உயர மும் கொண்டவை. தேக்கு மரத்திலான, அதி உயரமான, பிரமாண்டமான கதவுகள், ஆலயத்தின் உள்ளே சென் றால் சுவர், கூரையெங்கும் வண்ணச் சிலைகள், கண்கவர் வேலைப்பாடுகள், சுவரோவியங்கள் என உங்களை புதிய உலகத்துக்கு மெய் சிலிர்க்கச் சிலிர்க்க அழைத்துச் செல்கின்றன.

புதிய புத்தகத்தைத் திறந்ததும் ஒரு வாசனையும் சிலிர்ப்பும் ஏற்படுமே, அந்த மாதிரி ஒரு பக்திச் சிலிர்ப்பு உடலைப் புல்லரிக்கச் செய்கிறது.

ஒரு பாரம்பரிய மீன்பிடிக் கிராமத்தால் எண்பது லட்ச ரூபா செலவில் ஒரு ஆஸ்பத்திரியைக் கட்டி அரசுக்கு அளிக்க முடிகிறது; எட்டு கோடி ரூபா செலவில் ஐந் தாண்டுகளில் இராஜகோபுர திருப்பணியை பூர்த்தி செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிகிறது என்றால், முன்னரேயே சொன்ன மாதிரி இந்த மக்கள் விசேஷ தன்மைகளைக் கெண்டவர்களாகத்தானே இருக்க வேண்டும்!

இக்கிராம மக்களின் ஐந்தாண்டுகால சலியா உழைப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக நாளை 9.15 முதல் 10.37 வரையிலான மகர லக்ன சுபமுகூர்த்த சுபவேளையில் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன.

கும்பாபிஷேகத்துக்கான சமயக் கிரியைகள் நேற்று காலை ஐந்து மணியில் இருந்து ஆரம்பமாகி தொட ர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாளை ஐந்து மணிக்கு பூஜையுடன் ஆரம்பமாகும் கிரியைகள் கும்பாபிஷேகத்துடன் உச்ச கட்டத்தையடைந்து மாலை 5.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை யுடன் நிறைவுபெறும்.

கும்பாபிகே குருமார்களாக ஆலய பிரதம குருவானவர் வேத வித்வமணி ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ பத்ம ஜெயராம் குருக்கள், நயினை நாக பூஷணியம்மன் கோவில் சிவஸ்ரீ முத்துக்குமார சுவாமி குருக்கள், மன் னார் அந்தணர் ஒன்றிய செஞ்சொற்செல்வர் பிரம்மஸ்ரீ நா. பிரபாகர சர்மா, கண்டி பிரம்மஸ்ரீ ப. ராகவசர்மா ஆகியோர் விளங்குகிறார்கள். கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 தினங்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.

இக்கும்பாபிஷேகத்துக்கு பத்தாயிரம் பேர் வரை வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து தருவதில் திருப்பணிச் சபையினர் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி என பார்த்து பார்த்து செய்யப் படுகின்றன. அனைத்து இந்து அடியார்களும் இக்கும் பாபிஷேகத்தில் கலந்து கண்குளிரக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கி அருள் பெற வேண்டும் என்பது திருப்பணிச் சபையினரின் வேண்டுகோள். கும்பாபி ஷேகத்தில் கலந்து கொண்ட மாதிரியும் இருக்கும்; ஒரு இலட்சிய கிராமத்தைப் பார்த்த மாதிரியும் இருக்கும்.

இந்த ஆலயத்தி னுள் நுழைந் ததும் உட்புற வேலைப்பாடுகள் மற்றும் சுவரோவியங்க ளில் நீங்கள் கிரங்கிப் போய்விடுவீர்கள். கிருஷ்ண திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், கண்ணனின் திருவிளையாடல்கள், கீ தோபதேசம், பீஷ்மரின் முட்படுக்கை என பாகவத மற்றும் மகாபாரத காட்சிகள் ஓவியங்களாக நுவரெங்கும் விரிகின்றன.

இவற்றை வரைந்தவர் இந்தியாவின் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற கேள்வி உங்கள் மத்தியில் எழலாம். ஆனால் அவர் உடப்பூரைச் சேர்ந்தவர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஓவியத்தில் சிரமமான சுவரோவியத்தில் அதுவும் தெய்வ உருவங்களை வரையும் கலையில் இத்தனை தேர்ச்சியா என்ற வியப்பு உங்களுக்கு ஏற்படவே செய்யும், அவரது அற்புதமான கை வண்ணத்தை ஆலயச் சுவர்களில் பார்க்கும்போது!

உடப்பூர் என்றால் திரெளபதை ஆலயம்தான். ஆனால் இந்த ஆலயத்தின் மூலவர் ஸ்ரீபார்த்தசாரதி ருக்மணி சத்தியபாமா. அர்த்த மண்டபத்தின் இடது பக்கத்தில் திரெளபதி அம்மனும் மகா மண்டபத்தின் வலதுபுறம் விநாயகரும் எழுந்தருளி இருக்கிறார்கள். இதற்குக் காரணம் உள்ளது.

உடப்பூர் மக்களின் ஆதி சந்ததியினர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்காள்மடம், தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1630ம் ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளையடுத்து இனிமேல் இங்கே எமது கலை, கலாசாரத்தைப் பேணி வாழ முடியாது என்றெண்ணிய 18 குடும்பங்கள் ஏழு தோணிகளில் ஏறி மன்னார் வந்தடைந்தனர் என்றும் பின்னர் இவர்கள் உடப்பூரில் குடியமர்ந்தனர் என்றும் ஒரு வரலாறு இங்கு பேசப்படுகிறது.

அக்காலத்தில் இது ஒரு விவசாய பூமியாக இருந்ததாம். பின்னர் தண்ணீர்ப் பிரச்சினை ஏற்படவே இம்மக்கள் கடற்றொழிலில் இறங்கினர் என்று கூறும் இவ்வூர் பெரியோர், தற்போது மரக்கறி செய்கை சொற்ப அளவில் நடைபெறுவதாகவும் நெற்செய்கை மறந்துபோன ஒரு விசயம் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

அன்று தோணிகளில் வந்தவர்கள் சந்தனக் கட்டையிலான ஒரு திரெளபதை சிலையைத் தம்முடன்கொண்டு வந்துள்ளனர். திரெளபதை வணக்கம் இலங்கையில் இப்படித்தான் ஆரம்பித்தது.

எனினும் அடிப்படையில் இவ்வூர் மக்கள் பெண் தெய்வ உபாசகர்கள். வீரபத்திர காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் என உடப்பூர் கோவில்கள் அனைத்துமே பெண் தெய்வங்களுக்குரிய கோவில்களே.

இது ஒரு உதாரண தமிழ்க் கிராமமாக இருக்கின்ற போதிலும் இவர்கள் சில பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். சிலாபத்தில் இருந்து இந்த ஊர் நோக்கித் திரும்பும் பாதை குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.

இதைத் திருத்தி ஒழுங்கான பாதையாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வியர்த்தமாயின என்கிறார்கள் ஊர் மக்கள். கட்டிக் கொடுத்த ஆஸ்பத்திரி இன்னும் கிராம ஆஸ்பத்திரியாகவே நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தரமுயர்த்த எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. ஆஸ்பத்திரி ஒன்றை அமைத்துத் தந்தும் அதனால் பெறக்கூடிய நன்மைகள் எமக்குக் கிட்டாமல் உள்ளதே என்ற அங்கலாய்ப்பு இம்மக்களிடம் உள்ளது. இக் கிராமத்தில் இரண்டு பாடசாலைகள் உள்ளன.

இரண்டிலும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை. கிராமத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் கைகூடியதாகத் தெரியவில்லை. கல்விமான்கள் இக்கிராமத்தில் இன்னும் தலையெடுக்கவில்லை.

இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

இத்தமிழ்க் கிராமம் எழுச்சிபெற்று வாழ வேண்டும் என விரும்பும் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் தயவு செய்து உதவுங்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com