Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம்

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தம் முஸ்லிம் மக்களின் முதுகில் குத்தப்பட்ட அடிமைச் சாசனம்இப்படி முத்திரை குத்தியவர் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன். முதன் முதலாகத் தேர்தல் மூலம் 1988 இல் தெரிவு செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராகவும் விளங்கியவர் இவர். அந்த மாகாண சபையின் பெரும்பான்மை தமிழர் தரப்புக்கள் ஆளும் கட்சியாகவும் முஸ்லிம் தரப்புக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அணி எதிர்த்தரப்பாகவும் விளங்கின. 22.02.2002 இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்தே மேற்கண்டவாறு சேகு இஸ்ஸதீன் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்து அப்பட்டமான உண்மையாகும். ஏனெனில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில்தான் யுத்தம் நடைபெற்றது. ஆனால் யுத்தத்தோடு எந்த வகையிலும் சம்பந்தப்படாத முஸ்லிம் மக்களும் யுத்தக் கொடூரத்துக்கு பாரிய விலை கொடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.

முஸ்லிம்கள் தனியான ஒரு தேசிய இனம். அவர்களுக்கு இன, மத, அரசியல், கலாசார ரீதியான தனியான பண்பாட்டு அம்சங்கள் இருக்கின்றன. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் என்று நான்கு தேசிய இனங்கள் இலங்கையில் உள்ளனரென்று அரசியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

வடக்கு, கிழக்கின் யுத்தக் கோரங்களுக்கு அதிக விலை கொடுத்தவர்கள் அப்பகுதி வாழ் முஸ்லிம் மக்கள் என்றால் அதில் தவறில்லை. எனவேதான் அந்த மக்களின் பங்களிப்போ அல்லது அங்கீகாரமோ இன்றி மேற்கொள்ளப்பட்ட ரணில் - பிரபா ஒப்பந்தத்தை சேகு அடிமைச் சாசனம் என்று வர்ணித்தார்.

1983 இல் ஜே. ஆர். அரசின் அனுசரணையோடுதான் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன சங்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது ஓர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை. இதைப்போன்றுதான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை புலிகள் கட்டவிழ்த்து விட்டார்கள்.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி சுமார் லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். சுமார் 40,000 க்கு மேற்பட்ட இந்த முஸ்லிம் குடும்பங்களின் வரலாற்று வாழ்விடங்களாக வடபகுதியே இருந்து வந்தது.

இந்த மக்களின் அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் புலிகள் அபகரித்து விட்டு உடுத்த உடுப்புடனும் வெறுங்கையுடனும் விரட்டியடித்தனர். வேரோடும் வேரடி மண்ணோடும் புலிகளால் பிடுங்கி எறியப்பட்ட முஸ்லிம் மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட அகதி முகாம்களில் சந்தித்த அவலங்கள் அளப்பரியவை.

1981 ஆம் ஆண்டு வடக்கில் 50,831 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்ததாக முஸ்லிம் செயலகத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அப்போது யாழ். மாவட்டத்தில் மட்டும் 13,757 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன.

யாழ். நகரப்பகுதிக்குள் முஸ்லிம் மக்களை மட்டுமே கொண்ட முஸ்லிம் வட்டாரம் என்ற பகுதி கூட இருந்தது. யாழ். மாநகர சபையின் மேயர்களாக, பிரதி மேயர்களாக முஸ்லிம்கள் பணியாற்றிய காலமும் ஒன்றிருந்தது. மர்ஹ¥ம் எம்.எச்.எம். அஷ்ரபின் வார்த்தைகளில் சொல்வதானால்பிட்டும் தேங்காய்ப்பூவும் போலதமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்தது அந்தக்காலம்.

தமிழ் மக்களின் விடிவுக்காக ஆயுதம் ஏந்துகின்றோம் என்று கூறிக்கொண்ட புலிகள் தமிழைத் தவிர வேறு எந்த மொழியையும் பேசத் தெரியாத வடபுல முஸ்லிம்களை ஆயுத முனையில் விரட்டியடித்தனர். இது ஓர் இனச் சுத்திகரிப்பு.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாக கிழக்கில் இருந்தும் முஸ்லிம்களை விரட்டுவதற்கான முன் தயாரிப்புகளை புலிகள் மேற்கொண்டனர். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஆயுதபாணிகளாக காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் புகுந்த புலிகள் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது அடாவடித்தனமாக துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இந்தக் கொடூரத்தில் 25 சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரு கிழமை கழித்து 11 ஆம் திகதி ஏறாவூர் பள்ளிவாசலுக்குள் புகுந்த ஆயுதபாணிகளான புலிகள் 116 முஸ்லிம்களை சுட்டுக் கொன்றனர். இந்த இரண்டு பள்ளிவாசல்களிலுமே நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களில் ஏறக்குறைய 100 முஸ்லிம்கள் காயமுற்றனர்.

இவ்விரு சம்பவங்களுக்கும் முன்னராக ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி அம்பாறை முள்ளியங்காட்டில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளை புலிகள் சுட்டுக்கொன்றனர். மறுநாள் 6 ஆம் திகதி மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் அம்பாறையில் புலிகளால் கொல்லப்பட்டனர்.

புலிகளின் கொலைகளைப் பட்டியல் இடுவதானால் அவை வகை தொகையின்றி நீண்டு கொண்டே போகும். புலிகளைப் போன்று அப்பாவித் தமிழர்கள் மீதுஜிகாத்என்ற போர்வையில் கிழக்கில் தாக்குதல் நடத்தியவர்களும் இருக்கிறார்கள்.

புலி வேட்டையோடு ஒப்பிடுகையில் இது மிகச் சிறியது தானென்றாலும் முளையிலேயே இந்த மரணக் கும்பல் ஒடுக்கப்பட்டமை பாராட்டுக்குரியது.

வடக்கைப் போலன்றி கிழக்கில் இனப்பரம்பல் முறை மிகவும் வித்தியாசமானது. திருகோணமலை மாவட்டத்தில் 32.36 சதவீத முஸ்லிம்களும் 22.93 சதவீத சிங்களவர்களும் 44.67 சதவீத தமிழர்களும் வாழ்கின்றனர்.

அம்பாறையில் 41.2 சதவீத முஸ்லிம்களும் 38.8 சதவீத சிங்களவர்களும் 18.2 சதவீத தமிழர்களும் வாழ்கின்றனர். கிழக்கில் முஸ்லிம் மக்கள் பரந்தும் செறிந்தும் வாழ்ந்ததால் வடக்கைப் போன்று கிழக்கில் இருந்து முஸ்லிம்களை புலிகளால் விரட்டியடிக்க முடியவில்லை.

இருந்தாலும் கிழக்கில் முஸ்லிம்களுக்கு சொந்தமான விவசாய காணிகள், மாட்டுப்பட்டிகள் போன்றவற்றை புலிகள் அபகரித்திருக்கிறார்கள்.

ரணிலுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகி சரியாக இரண்டு மாதங்கள் முடிவதற்கிடையில் பிரபாகரனுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் மற்றொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரபாகரன் முஸ்லிம்களின் தனித்துவமான அரசியல் மற்றும் கலாசார அம்சங்கள் பேணப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொண்டார்.

வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவப் போவதாகவும் உறுதியளித்தார். ஆனால் மீளக்குடியேறச் சென்ற மக்கள் மீண்டும் புலிகளால் மிரட்டி விரட்டப்பட்டனர்.

இலங்கையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைஎன்ற தலைப்பில் ஐ.நா. வில் மனித உரிமைப் பேரவையில்பங்களிப்பு அபிவிருத்தி பங்குதாரர்கள்என்ற அமைப்பு சார்பாக சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் சில விடயங்களை விரிவாக விளக்கினார்.

ரணில் - பிரபா ஒப்பந்தம் கைச்சாத்தாகி 3 மாதங்களின் பின்னர் ஜெனீவாவில் இடம்பெற்ற சிறுபான்மையினர் சம்பந்தமான செயலணிக்குழுவில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை முன்வைக்கப்பட்டது.

முஸ்லிம் மக்கள் தமது தாய் மண்ணில் இருந்து விரட்டப்பட்டு 20 வருடங்கள் கழிந்து விட்டன. படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் முடிவதற்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்றன.

புலிகளின் அராஜகம் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மீள்குடியேற்றங்களை செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள முடியும். மீளக்குடியேற்றினால் புலிகள் சுட்டுத்தள்ளுவார்கள். எனவே அரசின் மீதோ அல்லது முஸ்லிம் தலைவர்கள் மீதோ நாம் குற்றம் சாட்ட முடியாது.

ஆனால் இனியும் தாமதிக்காமல் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க முடியும்.

அரசாங்கமும் முஸ்லிம் அமைச்சர்களும் இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளில் தற்போது ஈடுபட்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றே.

யாழ். மாவட்டத்தில் 5841 முஸ்லிம்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்று யாழ். அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் கூறுகிறார். இவர்களில் 142 பேர் சாவகச்சேரியிலும் 15 பேர் வேலணையிலும் உள்ள தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1800 பேரே மீள்குடியமர்த்துவதற்காக சென்று பதிவு செய்துள்ளனர் என்று முஸ்லிம் அமைப்புக்கள் கூறுகின்றன.

இவர்களிலும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே தமது சொந்த குடியிருப்புகளில் வாழ்கின்றனர் என்று கூறப்படுகின்றது. ஏனையவர்கள் கதீஜா முஸ்லிம் மகா வித்தியாலயம், கதீஜா ஆரம்ப பாடசாலை, மன்பஉல் உலூம் கலவன் பாடசாலை மற்றும் தனியார் வீடுகளில் உள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இவர்களுக்கு நிவாரணங்களும் உடனடி உதவிகளும் செய்து கொடுக்கப்படுவதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் மெளலவி பி.எஸ். சுபியான் தெரிவிக்கின்றார்.

மன்னாரிலே முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த கிராமங்கள் குடியேற முடியாத அளவுக்கு காடு மண்டிக் கிடக்கின்றன. விடத்தல் தீவு, பெரியமடு, விளாங்குளி, போன்ற கிராமங்களே அவை. இந்தக் கிராமங்களில் இப்போது காடழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

தகர்ந்து கிடக்கும் வீடுகளில் தங்கியிருக்கும் சில குடும்பங்கள் தமது பாரம்பரியத் தொழிலான விவசாயத்தையும் மீன்பிடியையும் மேற்கொள்கின்றன. முசலி, மறிச்சுக்கட்டி, வேப்பங்குளம், சிலாபத்துறை, கொண்டச்சி, பொற்கேணி, அகத்தி முறிப்பு, பண்டாரவெளி, கூழாங்குளம் ஆகிய கிராமங்களில் பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வாழ்வதற்கு பதிவு செய்துள்ள போதும் சில நூற்றுக் கணக்கான குடும்பங்களே தங்கியுள்ளன.

எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்களும் மீளக்குடியேறும் முயற்சியில் ஆர்வமாயுள்ளனர். ஜனாதிபதியும் அரசாங்கமும் வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதில் உறுதியாக உள்ளனர். அதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மன்னாரில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட அமைச்சர் றிசாட் பதியுதீன் முஸ்லிம்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதில் முன்னின்று உழைக்கின்றார். அவரின் துரித முயற்சியினால் மீள்குடியேறிய மக்களுக்கு நிவாரணங்களும் உதவிகளும் கிடைக்கின்றன.

பல கிராமங்களில் காடு களை அழிக்கும் பணிகளுக்கு அவர் உதவி வருகிறார். மீளக்குடியேறியோருக்கு 6 மாத உலருணவையும் உடனடிக் கொடுப்பனவாக ரூ. 5000 ஐயும் அரசு வழங்கிவருகின்றது.

20 வருடத்திற்கு மேலாக சொந்த மண்ணைவிட்டு ஓர் அந்நிய மண்ணில் வாழும் அகதி முஸ்லிம்கள் வந்த நிலத்தில் உறுதியான கட்டுமானங்களையும் வாழ்க்கை அமைப்புக்களையும் கொண்டிருக்கின்றனர். பிந்தி வந்த சமுதாயம் இந்த வாழ்க்கை அமைப்புக்கே தம்மை பழக்கப்படுத்திவிட்டது.

ஏற்கெனவே வாழ்ந்த மண் காடாகி கிடக்கின்றது. வாழ்க்கை வசதிகளுக்கு ஏற்ற இடமாக இன்னும் இல்லை. சொந்த மண்ணில் தொழிலுக்குரிய வாய்ப்புக்கள் உள்ள போதும் வாழ்வுக்கான வசதிகள் இல்லை. முஸ்லிம்கள் வாழ்ந்த சில காணிகள் கபZகரம் செய்யப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பல தசாப்தங்களாக யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு கிடந்த இந்த கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செப்பனிடுவது என்பதும் கண்ணி வெடிகளை முழுமையாக அகற்றுவது என்பதும் இலகுவான விடயமல்ல. எனினும் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சுஐப். எம். காசிம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com