Contact us at: sooddram@gmail.com

 

அரசியலுக்கு வழிவிட்ட இயற்கையும , இணைந்த தமிழ் கட்சிகளும்.

(இரா.வி.விஸ்ணு)  

இலங்கையின் அரசியலில் அரசியல் வாதிகளும், மக்களும் செல்வாக்கு செலுத்துகின்றனரோ இல்லையோ அவ்வப்போது இயற்கை தன் செல்வாக்கை செலுத்திவருகின்றது. சிறிது காலம் உறங்கியிருந்  தமிழ் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும் வெள்ள அனர்த்தம் தம் அரசியலை செய்ய வழிவிட்டிருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமானால் கிழக்கில் இயங்கும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தம்மால் இயன்ற உதவிகளை செய்துதான் இருக்கின்றனர். அத்தோடு சேர்த்து உறங்கிக்கிடந்த தம் அரசியையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கின்றனர். அரசியல்வாதிகளையும் பார்க்க சமூக அமைப்புகளும , ஊடக நிறுவனங்களும், வடக்கு, கிழக்கு, தென்பகுதி தமிழ், சிங்கள, முஸ்லீம் நன்கொடையாளர்கள்  என உள்நாட்டிலுள்ள அனைவரும் தம்மால் இயன்ற அதிகபட்ச உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக கொடுத்து தமது மனித நேயத்தையும் , இன ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

மறுபக்கம் புலம்பெயர் உறவுகளும் தமது தாயக உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வைத்தனர் ஆனாலும் குறிப்பிட்டளவு உறவுகளாலேயே தமது உதவிகளை சில அமைப்புக்கள் மூலமாகவும் தனிப்பட்ட ரீதியிலும் செய்ய முடிந்திருக்கிறத . இதற்க்கு காரணம் கடந்த கால செயற்பாடுகளும் நம்பிக்கையீனங்களுமேயாகும். புலம் பெயர் தமிழர்கள் பலர் தாயக உறவுகளுக்கு மனிதநேய உதவிகளை செய்ய தயாராகவே இருக்கின்றனர். ஆனாலும் நம்பிக்கைக்குரிய நிறுவங்கள , அமைப்புக்களோ புலம்பெயர் நாடுகளில் இல்லை. அவ்வாறு சில அமைப்புக்களை, சில நிறுவ முயற்சித்தாலும் அதை விமர்சித்து எதோ ஒரு பக்கம் சார்பானவையாக மக்களுக்கு காட்டிவிடுகின்றனர். அது மாத்திரமல்ல கடந்த காலங்களின் தமிழர்களால் இயக்கப்பட்ட மனித நேய அமைப்புக்களாக செயற்பட்டவை பல மோசடி பேர்வளிகளாக நிறுபிக்கப்பட்டதும்,   பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவை நேரடியாக தமது உதவிகளை செய்யவில்லை என்பதை மக்கள் உணர்துகொண்டதும் ஒரு காரணம . இது எமது புலம்பெயர் சமூகத்திலுள்ள ஒரு இழிகேடான நிலை அத்தோடு எமது சமூகத்துக்கு ஒரு வெக்கக்கேடான நிலை என்றே கொள்ளவேண்டும். ஒரு தனி மனிதன் தமது சமூகம் அல்லலுறும் பொது மனித நேய உதவி செய்ய எண்ணுகிறான் ஆனாலும் தமது சாமூக அமைப்புகளின் மேலுள்ள நம்பிக்கையீனம் காரணமாக அவனால் அந்த உதவிகளை செய்ய முடியவில்லை என்பது எமது தமிழ் சமூகத்துக்கு (குறிப்பாக தாயக மக்களுக்கு) அது பொருளாதார ரீதியிலும , உளவிலை ரீதியிலும் மிகவும் பாதிப்பான நிலை. இந்நிலை மாற தாயக சாமூ , மனிதநேய அமைப்புகளும் , அரசியல் வாதிகளும் புலம்பெயர் சமூகத்தோடு இணைக்கப்படவேண்டியதும், மனிதநேய அமைப்புகளின் வெளிப்படைத்தன்மையும் அவசியம். இவற்றையெல்லாம் முன்னெடுப்பது யாரென்ற? கேள்வி இன்றைய நிலையில் கேள்விக்குறியாகவே உள்ளது.

தாயகத்தை பொறுத்தவரை இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும்போது இலங்கையரில் ஒன்றை காண முடிகின்றது. அது இன ஒற்றுமையின் முக்கியத்துவமும், இனங்கள் ஒன்றுபடவேண்டுமென்ற ஏக்கமுமே. இது பரவலாக இலங்கையருக்கு காணப்படுகின்றது. அவை இவ்வாறா  இயற்கை  அனர்த்தங்களின் போதும், பாரிய இடம்பெயர்வுகளின் போதும் வெளிப்படுவது மகிழ்சிக்குரியவை. ஆனாலும  ுர்அதிஷ்டவசமாக அரசியல்வாதிகள் இனவாதத்தை முன்னிறுத்தியே தமது அரசியலை கொண்டுசெல்ல நினைப்பதனால் இனங்களின் ஒற்றுமை என்பது அரசியல் வாதிகளின் கருத்துக்களிலும் செயற்பாடுகளிலுமே தங்கியுள்ளது. இன்றைய நிலையில் சில அரசியல் தலைவர்கள் இன ஒருமை பற்றி பேசினாலும் அவை வருங்கலாத்திலேனும் செயற்படுத்த படவேண்டுமென்பதே எமது அவ .

தமிழ் கட்சிகளின் இணைவு

புலிகளின் தோல்விக்கு பின்பு தெற்கிலும் அதைவிட வடக்க , கிழக்கிலும் புதியதொரு அரசியல் சூழ்நிலை காணப்படுவது கண்கூடு. இதில் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைப்பு அத்தோடு சிறுபான்மை இனங்களின் ஒன்றிணைப்பு போன்றவற்றுக்கான முயற்சிகள் ஆரம்பத்தில் தனியார் நிறுவங்களின் ஏற்பாட்டில் தாயகத்திலும் பின்னர் சுவிஸ் அரசாங்கம் மற்றும் மனிதநேய நிறுவனங்களின் ஏற்பாடுகளில் நடந்த சுவிஸ் மகாநாடு அதையடுத்து பல கட்சிகள் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் அரங்கம் என்று நீண்டு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்ப , த .வி .கூட்டணி , புளொட் ஆகிய கட்சிகள் இணைந்த தேர்தல் கூட்டு வரை வந்திருக்கின்றது. இந்த ஒற்றுமை ஏற்பட ஒரு நீண்ட காலம் ஏற்ப்பட்டிருக்கிறது. இக்கூட்டென்பது தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை எதிர்பார்க்கும் தாயக மக்களுக்கும் ஒற்றுமையை விரும்பும் அனைவருக்கும் மகிழ்சியான விடையம்.

இந்த கூட்டில் மேலும் சில தமிழ் கட்சிகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படபோதும் அவை இணைக்கப்படவில்லை. அவை ஏன் இணைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுக்கின்றது. தமிழ் கட்சிகள் அரங்கம் பற்றியும , தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடனான பேசுவார்தைகள் , தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி தகவல்கள் வெளியிடுவதில் மிக முக்கியமானவராக காணப்பட்டவர் சிவாஜிலிங்கம். அப்படியிருந்தும் அவர் ஏன் இந்த கூட்டணிக்கும் உள்வாங்கப்படவில்லை என்பது புதிர்தான். இதில் சிவாஜிலிங்கம் முன்னாள் டெலோ அமைப்பை சேர்ந்தவர் என்பதனால் இவரும், ஸ்ரீகாந்தாவும் இணைப்பதில் கூட்டமைப்பில் செல்வாக்குமிக்க செல்வம் அடைக்கலநாதன் தடையாக இருகிறாரா? இது டெலோ சார்பான உட்கட்சி பிரச்சனையா? அல்லது இவர்களின் பேச்சுவார்தையில் சிவாஜிலிங்கம் உள்வாங்கப்பாடாததற்கு என்ன காரணமிருக்கும ? தமிழ் மக்களின் தீர்வு பற்றி யோசிப்பவர்களும் பெற்றுகொள்ள முயற்சிப்பவர்களும் என்ன காரணத்துக்காக புளோட்டையும், த .வி.கூட்டணியையும் இணைக்க முடிந்தவர்களுக்கு சிவாஜிலிங்கத்தை இணைக்க முடியவில்லை. அது மாத்திரம்மல்ல தெற்கிலுள்ள இடது சாரி சிங்கள கட்சிகளிடமும , தலைவர்களிடமும் உறவுமிக்கவரும் அதோடு அக்கட்சிகளுடன் தேர்தலில் ஒன்றாய் கூட்டு சேர்ந்து தேர்தல்களில் போட்டியிடுமளவுக்கு உறவுகளை பேணிவருபவர், தமிழ் மக்கள் மத்தியிலும் அவருக்கு குறிப்பிட்டளவும் செல்வாகுமிருக்கின்றது . இன்றைய ஒரு சாதகமான சூழலில் அதுவும் பழையவற்றை எலாம் மறந்து ஒன்று சேரவேண்டும் என்றளவுக்கு தமிழ் அரசியல் வாதிகள் பலர் வந்திருகின்ற நிலையில் விரும்பும் அனைவரும் உள்வாங்க படாதது துர்அதிஷ்டவசமே. அத்தோடு இன உறவுகளை பேணக்கூடிய தொடபுமிக்கவர்கள் உள்வாங்கப்படாமை வருங்கால இன ஒருமை செயற்பாடுகளில் இவர்களில் சேவைகள் இழக்கப்படலாம்.

அடுத்தாக ஈ.பி.ஆர் .எல் எப் - பத்மநாபா அணியும் இக்கூட்டில் இணைவதற்கும் விருப்பமுள்ள கட்சி. இவையும் கூடமைப்புடனும , த.க.அரங்கத்துடனும் பல பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்தது. பலருக்கும் நினைவிருக்கும் கடந்த பாராளுமன்ற தேர்தலின் பொது கிழக்கு மாகாணத்தில் ஈ.பி.ஆர் .எல் எப் - பத்மநாபா அணியின் தலைவர் தற்போதைய கிழக்கு மா.ச. உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டுசேர்ந்து தேர்தலில் போட்டியிட முயற்சித்தார். இருந்தும் அது கைகூடவில்லை. (கட்சியாக இல்லாமல் தம்முடன் வந்து இணைந்தால் சேர்ப்போமேன்று சுரேஷ் கூறியதா  அவர்களில் உட்கட்சி வட்டாரங்கள் அன்று பேசிக்கொண்டன) இன்றைய நிலையில் ஈ.பீ.ஆர் .எல் எப் - பத்மநாபா கட்சியும் இவருடன் இணைவதற்கான பேச்சுவார்ந்தகளின் சிறீதரன் தலைமையில் முன்னெடுந்து வந்தன. இங்கும் சில கேள்விகள் எழுகின்றன இவர்கள் இணைக்கப்படாததற்கு கூட்டமைப்பில் செல்வாக்குமிக்க சுரேஷ் பிரேமசந்திரன் காரணமா? இது ஈ.பீ.ஆர் .எல் எப் இன் உட்கட்சி முரண்பாட? அல்லது சுரேஷ் பிரேமசந்திரனுக்கு ஈ.பீ.ஆர் .எல் எப் - பத்மநாபா அணியின் வரதராஜபெருமாளை இணைது கொள்வதில் ஏதும் பிரசனை இருக்கும ? அல்லது வேறு என்ன காரணமாகவிருக்கும்? இன்றைய சூழ்நிலையில் ஈ.பீ.ஆர் .எல் எப் - பத்மநாபா சரி கூட்டமைப்பிலுள்ள அனைவருமே ஒன்று சேரவேண்டுமென்றே விரும்புவதாக தோன்றுகிறது. ஆனாலும் மேற்கூறியது போல  தமிழ் மக்களின் தீர்வு பற்றி யோசிப்பவர்களும் பெற்றுகொள்ள முயற்சிப்பவர்களும் என்ன காரணத்துக்காக புளொட்டையும், த .வி.கூடணியையும் இணைக்க முடிந்தவர்களுக்கு ஈ.பீ.ஆர் .எல் எப் - பத்மநாபா அணியையும் அதிலுள்ள  வரதராஜபெருமாளையும் இணைக்க முடியவில்லை.

ஒன்று சேர்வதென்று முடிவெடுத்துவிட்டீர்கள் இதில் ஈ.பீ.ஆர் .எல் எப் அல்லது டெலோவ  பழையபடி அனைவரும் ஒன்றாவதில் என்ன பிரசனை இருக்கிறது (சொத்து பிரச்னையா?) சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாமே. சிலர் விவாதிக்கலாம் தங்கள் தலைவரை கொன்றவரிடம் சரணடைந்தவர்கள் அவர்களோடு சேர முடியாதென்றும் மற்றவர்கள் அவர்கள் தமக்கு பிரசனையானவர்கள் என்றும் இருதரப்பும் யோசிக்கலாம். பழையவற்றை மறந்து தமிழர்களுக்காகவும் தமிழ் பகுதியில் ஒரு புதியதொரு அரசியல் சூழலை உருவாக்கத்தானே முயற்சிக்கிறீர்கள் அப்படியிருக்க பழையவற்றை மறந்து ஒன்றுபடுங்கள் அது எமது சமூகத்துக்கே ஆரோக்கியமானது.

ஒருவேளை இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைக்கபடாத பட்சத்தில் இக்கட்சிகளில  அரசியல் எதிர்காலம் இன்றைய நிலையிலேயே இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இக்கட்சிகள் ஒன்றிணைக்கபடாத போதும் இவை இத்தேர்தலில் தற்போது உருவாகியிருக்கின்ற புதிய கூட்டணிக்கு நிச்சயம் ஆதரவை தெரிவிக்குமென்று எதிர  ார்க்கலாம். வாருங்கால தமிழ் அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்று பிராத்திப்போம்.

"என்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன் செய்யாமை நன்ற "

(என்ன தவறு செய்துவிட்டோமென நினைத்து கவலைப்படக்கூடிய காரியங்களை செய்யக்கூடாது ஒருவேளை அப்படி செய்துவிட்டாலும் அதை மீண்டும் செய்யாதிருப்பதே நன்று?

(இரா.வி.விஸ்ணு)  

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com