Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தலை தூக்க அனுமதிப்பது, தமிழ் மக்களுக்கு ஆபத்தானது!

(செங்குட்டுவன்)

கொடூரப் புலிகளின் பினாமியாக இருந்து, அவர்கள் செய்த வகை தொகையற்ற கொலைகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை, உள்ளூராட்சி தேர்தலைப் பயன்படுத்தி மீண்டுமொரு முறை தமிழ் மக்கள் மத்தியில் தனது அசிங்கமான தலையை நீட்டியுள்ளது. அது தலையை நீட்டியது மட்டுமல்ல, அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தையும் சீர்குலைப்பதற்காக,  தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழ் தரப்பின் பேரம் பேசும் பலத்தை அதிகரித்தல் என்ற வழமையான போலிக் காரணங்களைக் காட்டி உடைத்தெறிந்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய பெரும்பான்மையான கட்சிகளை விட்டு வெளியேறிச் சென்றுமுள்ளன. அதன் மூலம் தமிழ் கட்சிகளின் அரங்கத்தை எப்படியும் உடைத்துவிட வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப்  ொறுத்தவரை அது இதுவரைகாலமும் தமிழ் மக்களுக்கு உருப்படியாக எதனையும் செய்யாத ஒரு அமைப்பாகும். இந்த கூட்டமைப்பு சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் செயல்பட்ட காலத்தில், அன்றைய அரசாங்கம் கொண்டு வந்த ஒற்றையாட்சியை மாற்றிய, சமஸ்டி முறைத் தீர்வான இலங்கையை பிராந்தியங்களின் ஒன்றியமாக மாற்றியமைக்கும் தீர்வை, சிங்கள பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து முறியடித்தவர்கள் ஆவர். அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் எவ்வித தயக்கமோ வெட்கமோ இன்றி அந்தத் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக சிங்கள இனவாத கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியுடனும், ஜே.வி.பியுடனும் ஒரே மேடையில் தோன்றி எதிர்ப்புக் கூட்டங்கள் நடாத்தினார்கள்.

இதுபற்றி அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூட கவலை தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார். அதாவது தனக்கு அன்றைய நிலையில் மேலதிகமாக 10 வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்திருந்தால், அந்த நல்ல தீர்வுத் திட்டத்தை நிறைவேற்றியிருப்பேன் என்று அவர் கூறி வேதனைப்பட்டார். அவருக்கு இல்லாமல் போன அந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்ணியினது என்பதை யாராவது மறுக்க முடியுமா? அவருக்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்பபதில் இருந்த அக்கறை, இந்தக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு இல்லாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை. தாங்கள் ஏன் அன்று தமிழ் மக்களுக்கு வர இருந்த நல்லதொரு தீர்வைக் குழப்பினார்கள் என்பதை, இன்று தமிழ் கூட்டமைப்பினர் பொதுமக்களுக்கு விளக்கவும் இல்லை.

அது ஒருபுறமிருக்க, புலிகள் ஒழுங்கு செய்த கள்ள வாக்குகள் மூலம் 22 பேரை பாராளுமன்றம் அனுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேர்தலைக் கண்காணிக்க வந்த ஐரோப்பிய யூனியன் கண்காணிப்புக் குழுவும், உள்ளூர் கண்காணிப்புக் குழுக்களும், தேர்தல் வடக்கு கிழக்கில் பாரியளவில் மோசடியாக நடந்துள்ளது என்று அறிவித்த பின்னரும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகாமல், சிறீலங்கா பாராளுமன்றத்தின் உறுப்பினர் சலுகைகளை அனுபவித்துக் கொண்டே இருந்தனர். இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி இவர்களது தேர்தல் மோசடி குறித்து பல தடவைகள் இடித்துக் காட்டியும் அவர்கள் அசைந்தும் கொடுக்கவில்லை.

இவையெல்லாவற்றையும் விட, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம், புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த படுகொலைகளுக்கெல்லாம் அவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்ததுதான். தங்களது பாராளுமன்றப் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவர்கள் எவ்வித மனச்சாட்சியுமின்றி புலிகளின் கொலைகள், சிறுவர்களைக் கடத்தி படையணியில் சேர்த்தல், பொதுமக்களிடம் கப்பம் பெறுதல் போன்ற மிலேச்சத்தனமான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளனர். இவ்வளவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தமது குடும்பங்களை வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டே, தமிழ் மக்களுக்கு எதிரான இந்த கொடுமைகளுக்கு ஒத்துழைத்து வந்துள்ளனர்.

அவர்களது இந்த ஒத்துழைப்பு, புலிகள் பொதுமக்களை முள்ளிவாய்க்கால் வரை பலவந்தமாக விரட்டிச் சென்று பலிக்கடாக்களாக்கும் வரை தொடர்ந்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுமக்களை விடுவித்து உயிரிழப்பைத் தவிர்க்கும்படி புலிகளை ஒருபோதும் கோரவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. எதிர்காலத்தில் இலங்கை இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் குற்றவாளிகள் ஸ்தானத்தில் வைத்து விசாரிக்கப்படுவது அவசியம். இல்லாதுவிட்டால் அவர்கள் இதே குற்றத்தை மீண்டும் மீண்டும் இழைக்கத் தயங்கமாட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக பாரியளவில் குற்றங்கள் புரிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களை மீண்டும் புத்துயிர்க்க வைக்கும் வகையில், சில தமிழ் கட்சிகள் தமிழ் கட்சிகளின் அரங்கத்திலிருந்து பிரிந்து சென்று அவர்களுடன் தேர்தல் கூட்டு வைத்திருப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. அவர்களை மீண்டும் தலைதூக்க உதவுவது தமிழ் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்பதை அக்கட்சிகள் உணர வேண்டும்.

கடந்த பொதுத் தேர்தலின் போதும், யாழ்ப்பாணம், வவுனியா மாநகரநகர சபைகளின் தேர்தல்களின் போதும், மாற்று ஜனநாயக தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மையால்தான் தாம் அதிக ஆசனங்களைப் பெற முடிந்தது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளின் அரங்கத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று போட்டியிட்டால் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்ந்தே, அரங்கத்திலுள்ள சில கட்சிகளை உடைத்து தமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முயன்றுள்ளது.

இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மட்டும் குறை கூறிப் பயனில்லை. ஏனெனில் அதன் நோக்கமே தனது இருப்புக்கு எதிராக எந்தவொரு அணி உருவானாலும் அதை உடைத்தெறிவதுதான். எனவே அது என்ன விதத்திலேனும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தை உடைத்தெறிய முயற்சிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதை ஒழிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறியும் இருக்கின்றனர். இந்த விடத்தில் சிந்தித்து செயலாற்றி இருக்க வேணடியவர்கள் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள்தான்.

தமிழ் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள், புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்னர், புலிகளின் கொலை வெறித்தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக, இலங்கை அரசாங்கத்தின் சட்டைப் பொக்கற்றுக்குள் பதுங்கி இருந்தவர்கள்தான். இதை யாரும் மறுத்துவிட முடியாது. அப்பொழுதெல்லாம் இவர்கள் மீது புலிகள் நடாத்தி வந்த கொலைகளை பார்த்து ரசித்தவர்கள்தான் இந்த தமிழ் கூட்டமைப்பினர். இன்று அதே கூட்டமைப்பினரிடம் ஒரு சில உள்ளூராட்சி ஆசனங்களுக்காக சோரம் போவதென்பது, உதைத்த காலை நக்குவதையும் விட கேவலம் இல்லாமல் வேறென்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரே நோக்கம் தனக்கு போட்டியாக எந்தவொரு அரசியல் கட்சியையும் இயங்க விடாமல் அழித்தொழிப்பதும், மீண்டும் புலி அரசியலையும், அதனது அராஜக வேலைப்பாணியையும் கைக்கொள்வதும்தான். அதற்கு அரங்கத்திலுள்ள கட்சிகள் துணை போனால் எதிர்காலச் சந்ததி அவர்களை மன்னிக்காது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ் கட்சிகளும் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்குப் போக வர முடியுதென்றால், அதற்குக் காரணம் மகிந்த ராஜபக்ச அரசு புலிகளை அழித்து அவர்களுக்குப் போட்ட பிச்சை தான்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் உருவாக்கப்பட்டதின் நோக்கமே இன்று பதவியிலுள்ள ஓரளவாவது நீதி நியாயமுள்ள அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காகவே. தேர்தலை மனதில் கொண்டு அக்கூட்டணி அமைக்கப்படவில்லை என்பதை அதன் அங்குரார்ப்பணம் முதல் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வந்துள்ளன. அப்படியிருக்க ஒரு சில கட்சிகள் அதை உடைத்துக் கொண்டு மிகவும் மோசமான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் கூட்டுச் சேருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். தேர்தலில் போட்டியிட தமிழ் அரங்கத்திலுள்ள கட்சிகள் விரும்பியிருந்தால், அவை ஒரு அணியாகப் போட்டியிட முயற்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும். அதை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சோரம் போனதின் மூலம், ‘புலிகளின் அராஜகத்தை எதிர்த்தவர்கள் நாங்கள்என இதுவரை காலமும் இக்கட்சிகள் பெருமையுடன் சொல்லி வந்த வார்த்தைகள் செல்லாக்காசாகிப் போயுள்ளன. தமிழ் அரங்கக் கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற பெயரே எஞ்சியுள்ளது.

எனவே காலம் தாழ்ந்தாலும் தமது தவறை உணர்ந்து, தமிழ் அரங்கத்தை உடைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் கூட்டுச் சேர்ந்த கட்சிகள், அதிலிருந்து வெளியேறி தமது பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்வதுடன், தமிழ் பொதுமக்களின் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும் என அனைத்த மக்களும் வலியுறுத்த வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com