Contact us at: sooddram@gmail.com

 

புலம்பெயர்ந்த வடக்கிற்கு கிழக்கிலிருந்து ஒருகடிதம்!!

(வாவிமகன்)

 செல்வச்செழிப்பும் பொருளாதாரத்தில் தன்நிறைவும் கொண்டு இலங்கை முழுவதும் மட்டுமன்றி தென்கிழக்காசியாவிற்கும் அரிசி ஏற்றுமதியில் கிழக்கிலங்கை சிறந்துவிளங்கிய காலம் ஒன்று இருந்தது. மேலும் காகித தொழிற்சாலை கண்ணாடித் தொழிற்சாலை சீனித் தொழிற்சாலை மற்றும் உல்லாசப் பயணத் துறை மீன்பிடி போன்றவற்றிலும் இலங்கையின் பொருளாதார அவிருத்தியில் இம்மாகாணம் சிறந்து விளங்கியதும் வரலாறு.

 இவ்வாறு தன்நிறைவுபெற்ற கிழக்கின் பொருளாதாரம் மக்களின் உயிர் உடமைகளின் அழிவிற்கு அச்சாரமாக அமைந்தது 1978ஆம்ஆண்டு நவம்பர்மாதம் 23ந்திகதியன்று கிழக்கிலங்கையைத் தாக்கிய சூறாவழி ஆகும். அப்போது யாழ்பல்கலைக்கழக மாணவர்களால் நிவாரண உதவி செய்ய எனவந்து கிழக்கின் உயர்தரமாணவர்களை ரியூசன்என்றபேர்வையில் மூளைச்சலவை செய்து இயக்கங்களில் இணைத்துக்கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து 30வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் 2004 டிசம்பர் 26இல் சுனாமியின் வரலாறுகாணாத பாரியதாக்கத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8ந்திகதிதொடக்கம் தொடர்ச்சியாக எட்டுநாட்கள் விடாதுபெய்த மழை என்பன கிழக்கிலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்தெறிந்த மிகத்துர்பாக்கிய அனர்த்தங்களாகும்.

 இந்த 30 வருட விடுதலைப் போரட்டத்தினால்தான் கிழக்குமக்களின் வாழ்க்கைத் தரம் கல்வியறிவு கலாச்சாரம் என்பன மிகமோசமாக பாதிக்கப்பட்டது. கிழக்கு மக்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாகவும் அவசியமானதாக வேண்டப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்துத் தலைமைகள் எதிர்பார்த்தன. ஓவ்வொரு போரிலும் தங்கள் சுயலாபத்திற்காக அவர்களை முன்நிறுத்தி தங்களை பின்றிறுத்தியே பாதுகாத்துவந்துள்ளனர். கிழக்கிலங்கையைச்சேர்ந்த இளைஞர்களும் மகுடிக்கு கட்டப்பட்ட நாகம் போல யாழ் தலைமைக்கு கட்டுப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு தங்கள் இன்னுயிரைத் தானம் செய்தார்கள். யாழப்பாணத்தில் நடந்த ஒவ்வொரு பாரியசண்டைகளிலும் கிழக்குப்போராளிகளின் உதவியாலே விடுதலைப்புலிகள் வெற்றிஅடைந்தனர் என்பதை புலிஅமைப்பு ஒத்துக்கொள்ளா விட்டாலும் அங்குவாழும் மக்கள் அதனை மறந்திருக்கமாட்டார்கள். ஒவ்வொருசண்டையிலும் எத்தனை கிழக்கின் பாலகர்கள் கொல்லப்பட்டார்கள் என்னும் கணக்கறிக்கை யாரிடமுள்ளது.

தற்போது 57ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகளும், 9860அநாதைச் சிறுவர்களும், 6945 அங்கவீனர்களும் கிழக்குமாகாணத்தில் வாழ்கின்றனர் என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம். நடைபெற்ற யுத்தத்தின் மூலமும் சகோரப் படுகொலைகள் மூலமாகவும் 18750 கிழக்கை சேர்ந்த இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தாலும் கொலைக் கொட்டியா என்ற சிங்களகாடையர்களாலும் 7325பேர் கொலை செய்யப்பட்டதுடன் சம்பூர், மூதூர், வெருகல், வாகரை, வாழைச்சேனை, வந்தாறுமூலை பல்கலைகழகம், சத்துருக்கொண்டான, கொக்கட்டிச்சோலை, பாண்டிருப்பு, காரைதீவு, திருக்கோவில், பொத்துவில் எனசுமார் 715பெண்கள் கற்பழித்தும் கொலை செய்யப்பட்டனர்.

 இதைவிட உள்நாட்டு யுத்த்தின் சீரழிவுடன் அவ்வப்போது ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் இடப் பெயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களின் துயர்துடைக்கவென வெளிநாடுகளில் இருந்து வந்த தொண்டர் நிறுவனங்களாலும் எதிர்மறையான தாக்கத்தால் ஏற்பட்ட கலாச்சார கருக்குலைவும் ஒன்றுசேர்ந்து மிகவும்கேவலமான சமூகச்சீரழிவுக்குள் தள்ளப்பட்டனர். அச்சில நிறவனங்களால் உள்வாங்கப்பட்டு இளம் யுவதிகள் விபச்சாரம் மற்றும் ஆபாசப் படப்பிடிப்பு என அதனால் மனநிலை பாதிக்கப்பட்டதுடன் பலர் கொலைசெய்யப்பட்டும் வேறு சிலர் தற்கொலைசெய்தும் இறந்தவர்கள் சுமார் 237 இளம்பெண்களாகும். மேலும், கிழக்கு மற்றும் வடக்கு உட்பட இலங்கையில் ஏனையபகுதிகளில் வாழும் தமிழ்மக்களின் தற்போதய கலாச்சார சீரழிவானது மிகவும் கவலையைத் தருவதுடன் தமிழினத்திற்கு பாரிய அளவில் அபகீர்த்தியையும் ஏற்படுத்தியுள்ளதை யாரும் மறுக்க மாட்டார்கள். தமிழ்ப் பகுதிகளிலிருந்து சிங்களப் பகுதிகளுக்கும் குறிப்பாக கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் சென்று வாழத்தொடங்கியவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை நகர சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டனர். அதன்விளைவால் பலர் விபச்சாரத்திலும் சிலர் போதை மருந்துக்கும் இன்னும்பலர் மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகினர்.

 1983ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயரத் தொடங்கிய நாள் முதல் இன்று வரைக்கும் உலகநாடுகளில் இந்தியவுட்பட சுமார் 13 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றார்களென அண்மையில் வெளிவந்த ஒரு அறிக்கை குறிப்பிடுகின்றது. இதில் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்கள் சுமார் ஒருலட்சத்து 15 ஆயிரம் மட்டுமே. உலகம் முழுவதும் வாழும் 12லட்சத்திற்கு மேற்பட்ட வடமாகாணத்து புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களோடு வாழும் 1 லட்சத்துக்கு சற்றே அதிகமான கிழக்குமக்களை என்றுமே கண்டும் காணாதவர்களாக இருந்துவந்துள்ளனர். தாயகத்தில் கிழக்கில் சிங்கள அரசாங்கத்தால் அல்லது இராணுவத்தால் அல்லது அவர்களின் ஆதரவால் மேற்காள்ளப்பட்ட எந்தவொரு கொலைகள் கற்பழிப்புக்கள் ஆள் கடத்தல்களுக்கோ அன்றி மாணவர்களுக்கு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கோ எந்தவொரு புலம்பெயர்ந்த தமிழர்களாலும் எந்தவொருநாட்டிலும் எவ்விதமான ஆர்ப்பாட்டங்களோ கொடிபிடிப்புகளோ மறியல் போராட்டங்களோ நடத்தப்படவில்லை. ஆனால் வடக்கில் மேற்குறிப்பிட்ட இவ்வகையான அசம்பா விதங்கள் நடந்தபோதெல்லாம் தங்கள் எதிர்ப்புக்களை அவர்கள் ஏதோவொரு விதத்தில் தாமதியாது வெளிப்படுத்தினர். அதற்கான உதவி ஒத்தாசைகளை ஊடகங்கள் தாராளமாக வழங்கியிருந்தன.

 ஆனால் கிழக்கில் நடபெற்ற கொடுமைகளைச் செய்தியாக்கி திரிபுபடுத்தி தமிழர்களின் உணர்வுகளைத் தூண்டி சகல ஊடகங்களும் தங்கள் பணப்பையையும் நிரப்பிக்கொண்டனர். இதன் மூலம் இயக்கங்களும் அதன் ஆதரவாளர்களும் செல்வந்தராகினர். 1948 முதல்கொண்டு இன்று வரைக்கும் தமிழ் அரசியல்வாதிமுதல் உயர்பதவிவகித்த அரச உத்தியோகத்தர்களுடன் சகல ஊடகங்களும் கிழக்கு மக்களின் நலனில் கிஞ்சித்தும் அக்கறைகொண்டிருக்கவில்லை. அரசியலில் தொண்டர்களாகவும் இயக்கத்தில் முன் நிலைப் போராளியாகவும் அரச பதவியில் எடுபிடியாகவும் ஊடகத்துறையில் 'பேப்பர்போயா'கவுமே கிழக்கு மக்கள் வடமாகாணத்து மக்களால் பயன் படுத்தப்பட்டனர்.

 தந்தை செல்வாவின் தமிரசுக்கட்சி தொடங்கி இன்று சம்பந்தன் தலைமையலான தமிழர் தேசியக் கூட்டமைப்புவரையும் சகல இயக்கங்கள் உட்பட கிழக்குமக்களை ஒதுக்கியே வைத்துள்ளனர். 1977இல் மூதூர் தங்கத்துரை, இராசதுரை தொடங்கி 2004இல் கருணா மற்றும் 2010இல் பியசேனா இன்று மட்டக்களப்பு தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களென யாழ்ப்பாணத் தலைமையினால் வஞ்சிக்கப்பட்டோ ஓதுக்கிவைத்தோ அல்லது அவர்களின் ஆலோசனைகளை காதில் போட்டுக்கொள்ளாமலும் தங்கள் அரசியலை தன்னிச்சையாகவே நடத்தி அல்லது நகர்த்தி வருகின்றனர். கடந்த வருடம் அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் திரு.பியசேனா அரசுக்கு ஆதரவாக வாக்களித்த போது யாழ்மாவட்ட பா.உ.திரு சுரேஷ பிரேமச்சந்திரன் பியசேனாபற்றி அவதூறாகக் கூறிய பேட்டி அதன்பின்னர் அண்மைய உள்ளூராட்சி தேர்தல் கூட்டுப்பற்றி திரு.அரியநேத்திரன் பி.பி.சிக்கு வழங்கியபேட்டியும் அதனைதொடர்ந்து அப்பேட்டி சம்பந்தமாக திரு.சுரேஷ பிரேமச்சந்திரன் வழங்கிய செவ்வியும் இறுதியாக சிவாஜிலிங்கத்தை தன்னிச்சையாக திரு.சேனாதிராஜா வல்வெட்டிதுறையில் தமிழசுக்கட்சி சார்பில் போட்டியிட வைத்தமை போன்ற தில்லு முல்லுகளையும் சகல கிழக்கு மக்களும் மிகவும் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதே போன்ற யாழ்த் தலைமைகளின் மெத்தனப்போக்கும் கிழக்கு மக்களை மதிக்காத கர்வமும்தான் வடக்குகிழக்கு பிரிவதற்கான அடிப்படைகாரணங்கள் என்பதை யாழ் மக்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே யாழ்ப்பாணத் தலைமையை வெறுத்து மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகளோ போராட்ட தளபதிகளோ தமது பிரதேச மக்களின் நலன் கருதி பிரிந்துசென்றனர். இது யாழ்மக்களுக்கு கிழக்கு மக்களின் மீது ஒருவகை காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் உண்டாவதற்கு காரணங்களாக இருந்தாலும் கிழக்கு மக்களின் ஆதங்கத்தையும் அவர்களின் விருப்பு வெறுப்புக்களையும் அறிந்து கொள்வதில் எவ்வித முயற்சியோ நாட்டமும் யாராலும் காட்டப்படவில்லை. மாறாக இச்சந்தர்ப்பத்தினை தமிழ் ஊடகங்கள் தமக்குச் சாதகமாக பாவித்து கிழக்கு மக்ளை துரோகிகள் விரோதிகள் என்று ஊதிப் பெரிதாக்கி தமது பணப்பையை நிரப்பிக் கொண்டனர். பாதிக்கப்பட்ட பல கிழக்கு தமிழர்கள் யாழ் தலைமைக்கு எதிராக கருத்துத் தெரிவித்த போதெல்லாம் துரோகிகளாகக்கருதப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு மிக எளிதாக தங்கள் எதிரிகளை வேரோடு அழிப்பதில் இயக்கங்கள் மிகவும் உறுதிப்பாட்டுடன் செயற்பட்டுள்ளது.

மாத்தையா, டக்ளஸ், ஆனந்தசங்கரி, கே.பி போன்றோர் புலித்தலைமைக்கு எதிராக செயற்பட்ட போதெல்லாம் இன்றுவரை அவர்கள்பற்றி வசைபாடாத யாழ் தலைமையும் ஊடகங்களும் கருணா, பிள்ளையான் பற்றிய தரக்குறைவான பேச்சுக்களாலும், ஒட்டுமொத்த கிழக்கு மக்களை பாதிக்கூடிய எதேச்சதிகார ஊடகப் பேட்டிகளும் மனிதில் மாறாத வடுக்களாக அவர்கள் மனதில் நிற்கின்றன. யாழ்த் தலைமையைப் போன்று அவர்கள் சட்டத்தரணிகளாகவோ அல்லது அரச உத்தியோகத்தராக இல்லை என்றாலும் அவர்களது கிழக்கு மக்ளை மட்டுமன்றி வடபகுதி மக்களையும் அரவணைத்து போவதும் இன்றுவரை மாகாண முதல்வராக ஆட்சிசெய்வதும் 2009 மே மாதம் ஏற்பட்ட போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தாமதியாது தனது மாகாண மக்கள் சார்பாக உதவிகளைவழங்கி தங்கள் ஆத்மாத்த உறவினை வெளிப்படுத்தியதுமான அவ்விருவரின் செயலானது அரசியல் சாணக்கியத்தைவிட அவர்களது மனிதாபினாத் தன்மையினை வெளிப்படுத்தி நிற்கின்றது.

 வடபகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பிரதேசத்தின் சமூக நலனிலும் கடவுள் பக்தியிலும் கலாச்சார அக்கறையும் கொண்டவர்கள். மேலும் இடப்பெயர்வு இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தாயக மக்களின் அவல நிலைக்குள்ளான போதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நிதிவழங்கும் தாராள மனம் படைத்தகொடையாளிகள். பெரும்பாலான வடமாகாணத்தவர்கள் கிழக்கு மக்களில் அன்பும் அவர்களின் விருந்தோம்பலினால் நன்றியும் வைத்துள்ளதுடன் அவர்கள் கடந்த காலங்களில் போரினாலும் மற்றும் இயற்கை அனர்த்தங்காளாலும் பாதிக்கப்பட்டதனால் இரங்கி அதற்கான மனப்பூர்வமாக உதவியும் செய்தவர்கள் என்பதை நாம் மறவோம்.

அவ்வாறு, கிழக்கிலங்கை மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்கள் நிதியுதவி அரசியல் மற்றும் இயக்கத் தலைமையாலும் தமிழ் ஊடகங்களின் செல்வாக்காலும் திசைதிருப்ப பட்டதை அம்மக்கள் அறியமாட்டார்கள். இப்படியான அவர்களின் எதேர்ச்சையான சுயநலமிக்க பிரதேச வேறுபாட்டுச் செயல் பாட்டினால் கிழக்கு மக்கள் என்றும் வடபகுதி மக்கள் தங்களுக்கு எதுவித உதவியும் செய்யவில்லையே என நம்பிக்கையிழந்து அவர்களை சந்தேகத்துடன் பார்த்தனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களால் நடத்தப்படும் பல அமைப்புக்கள் தாங்கள் கிழக்கிற்கு உதவுவதாக பிரச்சாரம் செய்து பாரிய அளவில் மக்களிடம் நன்கொடைகளை பெற்றுள்ளனர். இவற்றில் எவ்வளவு தொகைப் பணம் கிழக்கு மக்களின் நலனுக்காக அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டதென்றால் அது கேள்விக்குறியே!!

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்டம் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புக்களால் அமைக்கப்போவதாகவும் அமைத்து வருவதாகவும் சொன்னார்கள். ஆனால், யாராவது ஆதாரத்துடன் உதவி பெற்ற கிழக்கு மக்களினால் உறுதிப்படத்தப்பட்ட காணொழிகளை அல்லது விபரங்களை வெளியிட்டிருக்கிறார்களா? எங்கே? யாருக்கு? யார் மூலம்? எவ்வளவு? அதற்கான கணக்கறிக்கை அதன்விபரங்கள் எங்கே? எனக்கேளுங்கள்!!! எது எப்படியிருந்தபோதும் வடமாகாணத்து தலைமையைப் போலவோ அல்லது பிரதேச வேற்றுமையை தூண்டும் விதத்திலோ உளரீதியாகவோ உணர்வுபூர்வமாகவோ இதுவரை கிழக்கிலங்கையைச் சேர்ந்த எவரும் நடந்ததில்லை என்பது அப்பட்டமான உண்மை. அவ்வப்போது கிழக்கு மக்கள் யாழ் தலைமையை விமர்சித்தபோதெல்லாம் உண்மைக்கு புறம்பான செய்திகளையே மட்டக்களப்பு மக்களுக்கெதிராக திசைதிருப்பட்டதை உலகம் அறியும். நீங்கள் கேள்வி கேட்காமலிருந்தபடியால்தான் முள்ளிவாய்க்கால் வரை சிங்கள இராணுவம் வந்தது. கேள்வி கேளுங்கள்! கேள்வி கேளுங்கள்!! நீங்கள்கொடுக்கும் ஒவ்வொரு சதத்திற்கும் கேள்வி கேளுங்கள்!!!

கடந்த 30வருட போராட்ட காலங்களில் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 4800 குடும்பங்களைச் சேர்ந்த 12750 பேர் கிழக்குமாகாணத்தில் நிரந்தரமாக நிலங்களை வாங்கியோ வாடகை வீட்டிலோ வாழ்கின்றார்கள். இவர்கள் அனைவரையும் கிழக்கு மக்கள் எதுவித பாகுபாடுமின்றி ஆதரித்து தங்கள் பகுதியில் வாழ வைத்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 85 வர்த்தக நிலையங்கள் யாழ் மக்களுக்கு சொந்தமானவை. அவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு மக்களை திருமணம் செய்தும் வாழ்கின்றனர். ஆனால், முன்னய காலங்களில் யாழ் பெண்களை மணமுடித்த கிழக்கிலிருந்து யாழ்பல்கலைகழகம் சென்றுபடித்த ஆண்கள் யாழ்ப்பாணத்தவர்களாகவே மாறி அரசியல் மற்றும் போராட்டக்குழுக்களின் தலைமையுடன் இணைந்து கிழக்குமக்களை புறக்கணித்தவர்கள் என்பதையும் நாம் மிகவேதனையுடன் குறிப்பிட்டேயாகவேண்டும்.

கிழக்குமக்களின் எதிரிகளாக வடக்கு மக்களை வைத்திருப்பதால் இயக்கமும் அரசியல்வாதிகளும் புலம்பெயர் ஊடகங்களும் தங்கள் நலன்களையும் இருப்பையும் தக்கவைத்துக் கொண்டதுடன் தங்கள் கஜானாவையும் அதனால் நிரப்பிக்கொண்டனர். மேலும், இன்னுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் சில ஊடகங்கள் கிழக்கு மக்களுக்கு ஓரளவு சார்பானதாக கருத்து தெரிவித்தாலும் ஏனைய பெரும்பாலான ஊடகங்களால் அவ் ஊடகங்கள் துரோகிகளாக கருதப்பட்டார்கள். அதனால் அவர்களும் அதிலிருந்து விலகி கிழக்கு மக்களை தனிமைப்படுத்தி ஆதரவற்றவர்களாக ஆக்கினர். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒட்டுமொத்த ஊடகங்களும் தமிழ்அரசியல் தலமைகளும் கிழக்கு மக்களின் நலனுக்காக போதிய ஒத்துழைப்புகளை வழங்கவோ அன்றி அவர்களை அரவணைத்து ஆதரவான கொள்கையினையோ கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

புலம்பெயர்ந்து வாழும் அன்பிற்குரிய தமிழ்மக்களே! தமிழ் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக நடைமுறைக்கு ஒவ்வாதவற்றைக் கைவிட்டு இதய சுத்தியுடனும் எல்லாப் பிரதேசமக்களின் நம்பகத் தன்மையையும் உறுதி செய்யவேண்டியது உங்கள் கடமையாகும். தற்போது நாட்டில் ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய கட்டாயமும் கடப்பாடுமுள்ளது. அவ்வகையில், தாயகத்திலுள்ள மக்களின் அபிலாசைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதமுறைகளை நிதானத்துடன் கையாளவேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இருபாலாருக்கும் உண்டு. இவை சம்பந்தமாக அமைக்கப்படும் எந்த குழுவிலோ அமைப்பிலோ இரு மாகாணத்தவருக்கும் சமமான இடமும் அவர்களுக்கான முக்கிய பொறுப்பும் சமமாக வழங்கப்படவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து ஆயுதம் தாங்கிய போராட்டம் அல்லது இலங்கை அரசிற்கு எதிரான தீவிர பிரச்சாரம் செய்யும் அமைப்புக்களை புறக்கணித்து நேர்மையான அரசியல் சாணக்கியத்தை பயன்படுத்தி உலகநாடுகளின் உதவியுடன் நம் மக்களுக்கான உரிமைகளை இலங்கை அரசின் சம்மதத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டியதும் நமது தலைமுறையின் கடமையாகும்.

(வாவிமகன்) (தை 29, 2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com