Contact us at: sooddram@gmail.com

 

"தமிழர்களின் பிரச்சினையை முடித்த  ைப்பதென அமெரிக்கா முடிவெடுத்து விட்டது" யாழ்ப்பாண வலம்புரியின் நகைச்சுவை!                                                                                                               நக்கீரன்

முதலில் நான் ஒரு உண்மையை ஒத்துக் கொண்டு விடுகிறேன். புலத்தில் உள்ளவர்களை நிலத்தில் உள்ளவர்களோடு ஒப்பிட்டால் புலத்தில் உள்ளவர்கள் ஒரு முழம் கட்டை.  நாம் ஏதாவது கருத்துத் தெரிவித்தால் உடனே "வெண்பனி நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு தாயகத்தின் கள நிலை தெரியாது"  என்று ஒரே போடாகப் போட்டுத்தள்ளி எங்கள் வாயை ஒரு சில ஆய்வாளர்கள்  அடைத்து விட முயற்சிக்கிறார்கள். ஆனால் நிலத்தில் இருந்து போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள், கால்தடம் போட்டு விழுத்துபவர்கள் அல்லது குறுக்குச் சால் ஓட்டுபவர்கள் ஆகியோர  ிட புலத்தில் இருந்து போராட்டத்துக்கு தோள் கொடுப்போர் குரல் கொடுப்போர் மேலோர். இதில் எந்த அய்யமும் இல்லை.

வலம்புரி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு நாளேடு ஆகும். இதன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்  நல்லூர் ஆறுமுக நாவலர்  காலத்து உரை நடையும், எந்த ஒழிவு மறைவும் அற்ற  சைவ மற்றும் இந்து சமய அடிப்படைவாதக்  கருத்தியல்களும் இன்றைய இராசிபலன், இராகு காலம், யம கண்டம் பற்றிய செய்திகளும்  இந்த ஏட்டின் மனப்போக்கையும் (temperament) அதன்  பின்புலத்தையும் அனுமானிக்க உதவுகிறது.   இதில் நடுவுநிலை தவறா நன்னெறி காக்கும் நாளிதழ் என்ற வீராப்பு வேறு!  விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம்!

எது பற்றி எழுதினாலும் - தொடர்பு இருக்கிறதோ இல்லையோ - பொருத்தம் இருக்கிறதோ இல்லையோ சைவத்தோடு வலிந்து முடிச்சுப் போடுவதை இந்த ஏட்டின் ஆசரியர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.   எடுத்துக் காட்டாக இன்றைய தலையங்கம் (19-01-2012) "தந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்!"  இப்படித் தொடங்குகிறது.

"மணிவாசகரின் திருவாசகப் பெருமை உணராதார் தமிழராய் இருத்தல் உகந்ததன்று. திருவாசகத்தின் பெருமை என்ற பொருளில் தனிநாயகம் அடிகளார் ஆற்றிய சிறப்புரை திருவாசகத்தின் இனிமையை இதர சமயத்தவர்களும் பருகுதல் வேண்டும் என்பதை உறுதி செய்கின்றது. மணிவாசகரின் திருவாசகத்தில் ஒரு வரிதந்தது உன்தன்னை கொண்டது என்தன்னை ஆர்கொலோ சதுரர்’என்பதாகும். நமக்கு மிகவும் பிடித்தமான வரிகள் இவை. பிடித்தமைக்கு சிவன் மீது கொண்ட அளவு கடந்த அன்பு காரணமன்று.மாறாக மணிவாசகரின் அற்புதமான உளநிலைக் கருத்து என்பதால் அதன்மீது பற்று. உன்னைத் தந்து என்னைக் கொண்டாய். இதில் ஆர் சதுரர் என்பது மணிவாசகரின் கேள்வி. இந்தக் கேள்வியை நினைக்கும்போது இலங்கை - இந்திய அரசுகளின் நினைவு நம்மைத் தொட்டுக் கொள்ளும்."

 அண்மைக்காலமாக இந்த நாளேட்டின் ஆசிரிய தலையங்கங்கள் அந்த ஆசிரியரின் ஞானசூனியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.   எடுத்துக் காட்டாக கடந்த ஆண்டு இந்த நாளேட  ராகுலைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பர்னாலா"  என்ற தலைப்பில்  தமிழக ஆளுநர் உரைக்கு மிகவும்அறிவு பூர்வமான  விளக்கம் வழங்கியது.

 

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்துத் தமிழக ஆளுநர் பர்னாலா முன்னர் ஒருபோதும் இவ்வாறு குறிப்பிட்டது கிடையாது. தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகப் பேசுவதோ அல்லது ஈழத் தமிழர்கள்பால் அன்பு கொண்ட தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் எங்களுக்காகப் பேசுவது வேறு விடயம். ஆனால் ஆளுநர் பர்னாலாவின் பேச்சை நாம் அது போலக் கருத முடியாது. ஏனெனில், அவர் இந்திய மத்திய அரசினால் நியமிக்கப்படுபவர். எனவே அவரின் உரையை இந்திய மத்திய அரசின் கருத்தாகவே பார்க்க வேண்டும். ஈழத் தமிழர்களின் யதார்த்த நிலையை முழுமையாக உணர்ந்து கொண்டு பர்னாலா அவர்கள் ஆற்றிய உரையானது ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைகின்றதுஎன்பதுதான் அந்த 'அறிவு பூர்வமான' கருத்து!

ஆளுநர் உரை என்பது தமிழக அரசின் உரைதான்.  அதனை தமிழக முதல்வரது அமைச்சுத்தான் தயாரிக்கிறது. அதில் ஆளும் கட்சி தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், புதிய வரிகள், பொருளாதாரக் கொள்கைகள்,  அரசின் திட்டங்கள் போன்றவை இடம் பெறும்.  ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த உரையைப் படித்தே ஆக வேண்டும்.  கனடிய நாடாளுமன்றத்தில் ஆளுநர் நாயகம் அரியணை உரையைப் படிப்பார்.  அது தலைமை அமைச்சரின் அமைச்சினால் தயாரிக்கப்படுகிறது.  இந்த உண்மை ஒரு மாணவனைக் கேட்டாலும் சொல்லிவிடுவான். ஆனால் வலம்புரி ஆசிரியருக்கு அது தெரியவில்லை.  கல்வியில் உயர்ந்த யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு நாளேட்டின் ஆசிரியரது அறிவ  இப்படி மட்டமாக இருப்பது வியப்பாக இருக்கிறது. இவர் எப்படி ஆசிரியரானார் என்பது அதைவிட வியப்பாக இருக்கிறது!

சென்ற கிழமை இன்னொரு தலையங்கம்.  தலைப்பு "கடைசி நேரத்தில் கந்தறுத்து காவடி ஆடும் தமிழ் அரசியல் தலைமைகளே! கவனம்."

 

"இனப் பிரச்சினைக்கு தீர்வை முன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு இருப்பதை இப்போது உணர முடிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடுமையான அழுத்தம் இத்தகையதொரு நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது. வன்னியில் கொடும்போர் நடத்தி தமிழ் மக்களை வதைத்தன் விளைவாக உலக நாடுகள் எடுத்த முடிவுதான் இது. இது விடயத்தில் தயவு செய்து எந்தத் தமிழ் அரசியல் தரப்புகளும் உரிமை கோரக் கூடாது என்பது தாழ்மையான கோரிக்கை"  எனத தலையங்கம் தொடங்குகிறது.

 

அப்படியென்றால் யார் உரிமை கோருவது?  வலம்புரி ஆசிரியரா?  இல்லை என்றால் அமெரிக்கா தானாக முன்வந்து அழுத்தம் கொடுக்கிறதா? இந்தியாவுக்க இந்த அழுத்தத்தில் பங்கில்லையா?

 

அமெரிக்கா சரி ஏனைய மேற்குலக நாடுகள் படித்த பாடங்கள  இணக்க ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கும்  அதே சமயம் அறிக்கையில் போர்க்குற்றத்துக்கான பொறுப்புப் பற்றி எதுவுமே இல்லை எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் எனத்தான் கேட்கின்றன. அரசியல் தீர்வு பற்றி அவை மூச்சு விடவே காணோம். அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் 'இனப்படுகொலை' 'தன்னாட்சியுரிமை' (சுயநிர்ணயம்) பற்றிப் பேச மறுக்கின்றன. அந்தச் சொல்லாட்சியைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க இராசாங்க அமைச்ச  அறிவுரை வழங்குகிறது.

 

அதற்குக் காரணம் உண்டு. சிறிலங்கா ஒப்பேற்றியது இனப்படுகொலைதான் என்ற  ொன்னால் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்மக்களுக்கு அதன் அடிப்படையில் தன்னாட்சி உரிமை கேட்க வழியுண்டு. அதனை அமெரிக்கா விரும்பவில்லை. இதுதான் காரணம்.

 இனச் சிக்கலைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் அமெரிக்காவுக்கு பங்குண்டு என்று சொல்லும் வலம்புரி ஆசிரியர் கண்களுக்கு தெற்காசியாவின் வல்லரசு இந்தியாவுக்கு அமெரிக்காவை விட பெரிய பங்குண்டு என்பது தெரியாமல் இருக்கிறது!  இந்தியா பற்றி ஒரு சொல் கூட இந்த ஆசிரியத் தலையங்கத்தில் இல்லை!

இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு இனச் சிக்கலுக்குத் தீர்வு காணலாம் என்பத  இராமன் இல்லாமல் இராமாயணம் நடத்த முயற்சித்தவன் கதையாகத்தான் முடியும்!  அமெரிக்க வல்லரசு கூட இந்தியாவை மீறி  இலங்கை இனச்சிக்கலில் தலையிட முடியாது. அது விரும்பாது. போர்க்காலத்தில் அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்கா நவீன இரடார் கருவிகளை வாங்க விரும்பிய போது அதற்கு அமெரிக்கா கொடுத்த பதில் அது பற்றி இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதுதான்!

இந்த இலட்சணத்தில் வலம்புரி ஆசிரியரின் உச்ச கட்ட நகைச்சுவ  "தமிழர்களின் பிரச்சினையை முடித்து  வைப்பதென அமெரிக்கா முடிவெடுத்து விட்டது. பின்னர் யார் வெகுண்டாலும் அதற்கு இடமில்லை"  என்பதாகும்!

இனியென்ன நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), பன்னாட்டு தமிழர் அவை (Global Tamil Forum), பிரித்தானிய தமிழர் அவை (British Tamil Forum), அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் United States Tamil Political Action Council (USTPAC) Tamils Against Genocide (TAG) கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் கனடிய தமிழர் பேரவை (CTC)  ோன்ற அமைப்புகளுக்கு இனி வேலையே இல்லை!  அவர்கள் எல்லோரும் நாயாய் பேயாய் காடு மேடு என்று அலையாமல் வீட்டில் காலுக்கு மேலே கால் போட்டுக் கொண்டு சாய்மனை நாற்காலியில் ஓய்வாகப் படுத்துக் கொள்ளலாம்.  ஜெனிவா, தென் ஆபிரிக்கா என்று அலைய வேண்டியதில்லை!

இதில் சோகம் என்னவென்றால் வலம்புரி எழுதிய இந்த முட்டாள்த்தனமா  தலையங்கத்தை இங்கு வெளியாகும் உலகத்தமிழர் கிழமை இதழ் மறுபிரசுரம் செய்துள்ளது!  அது மட்டுமல்ல வலம்புரி போடும் இராசிபலனை உலகத்தமிழரும் போடுகிறது! இதில் வியப்பில்லை. உலகத்தமிழர் ஏட்டுக்கு ததேகூ என்றால் எட்டிக்காய். ததேகூ தாக்கி அல்லது எள்ளல் செய்து வரும் கட்டுரைகளைப் போட்டு மகிழ்கிறது. அதன் அரசியல் தலைவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்டுக்காசைக் கோட்டை விட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செல்வராசா கஜேந்திரனும்தான்! இப்போது வடமாகாண சபைத் தேர்தலில் ததேகூ போட்டியிடக் கூடாது சுயேட்சைகளை நிறுத்த வேண்டும் என்ற படுமுட்டாள்த்தனமான பரப்புரையை கஜேந்திரகுமார் மேற்கொண்டு வருகிறார். அவர் எழுதிய கட்டுரையை வழிமொழிவது போல உலகத்தமிழர் ஏடு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் போன கிழமை வெளியிட்டுள்ளது.

இவற்றைப் பார்க்கும் போது அவ்வையார் சொன்ன மூதுரை தான் நினைவுக்கு வருகிறது. "மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை உகக்கும் பிணம்!" அதாவது இழிந்ததையே நாடும் காக்கைகள், சுடுகாட்டில் பிணங்களைக் கொத்திக் கொண்டிருப்பதைப் போல அறிவில்லாதவர்கள் தம்மைப் போன்ற அறிவில்லாதவர்களோடுதான் நட்பாகச  ேர்ந்திருப்பார்கள்!

முடிவாக வலம்புரி ஆசிரியரின் அறியாமையால் யாழ்ப்பாண மண்ணின் மானம் கப்பல் ஏறுவதைத  தடுப்பார் யாரும் அங்கு இல்லையா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com