Contact us at: sooddram@gmail.com

 

இனிமை, ஐக்கியம் நிறைந்த புத்தாண்டு உதயமாகட்டும்!

உலக சரித்திரத்தை நோக்குவோமாயின் அதில் இவ்வுலகில் வாழ்ந்து மடிந்தவர்கள், புதிய தலைவர்கள் உருவாக்கம், புதிய கண்டுபிடிப்புக்கள், உலக சமாதானம், பொருளாதாரம் கொள்கைகள், ஒரு நாட்டின் வருமான மதிப்பீடு போன்ற பலவற்றை நாம் ஆண்டுகள் ரீதியாக கையாள்கின்றோம். ஒரு புதிய ஆண்டை வரவேற்பதிலும், இவ்வாண்டில் நாம் செய்யப் போகும் பல திட்டங்களை மனதில் நிறுத்தி வருடத்தின் முதல் நாள் அன்று உறுதிபூணுகின்றோம். புதிய ஆண்டு என்பது பூமியின் ஒரு சுற்று நிறைவடைந்து மீண்டும் புதிய சுற்றுக்குள் பிரவேசித்தல் என்பதாகும். உதாரணமாக ஒரு வட்டத்தில் ஒரு மையப்புள்ளியை வைத்து அதனை மீண்டும் அடைதல் என்பது எனலாம். இதைத்தான் ஓராண்டில் 365 நாட்கள் என கணக்கிடப்பட்டு அந்த நியதியின் படி வாழ்வுச் சக்கரத்தை நகர்த்திச் செல்கின்றோம்.

கீழைத்தேய நாடுகளில் ஐரோப்பிய சாம்ராஜ்சியம் விஸ்தரிக்கப்பட்டது முதல் வணிகத் தொடர்புகள் பெரு வளர்ச்சி கண்டன. இதனால் கிறிஸ்தவர்களின் காலக்கணிப்பு முறை அறிமுகமாகி ஜனவரி மாதம் முதல் திகதியை புத்தாண்டு தினமாக உலகிலுள்ள மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனாலும் பல்வேறு கலாசாரங்களை பின்பற்றுகின்ற மக்களின் புத்தாண்டு தினம் நாட்டிற்கு நாடு இனத்திற்கு இனம் வேறுபாடாக அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.

கிறிஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டளவில் தேவநம்பியதீசன் இலங்கையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் பெளத்த மதம் இலங்கையில் அறிமுகமானது இதிலிருந்து புத்த ஆண்டு ஒன்றும் வழக்கத்தில் இருந்து வருகின்றது.

பண்டைய காலத்தில் ரோமாபுரியில் வாழ்ந்து வந்த அறிஞர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதத்தில் மூன்று வாரங்கள் என வகுத்தார்கள். இதன் விளைவாக ஒரு கிழமை பத்து நாட்களாக அமைந்திருந்தது எனலாம். ஆனால் இதனை ரோமானிய வானசாஸ்திர மேதைகள் அடியோடு மறுத்தலித்தனர். அவர்கள் சூரியன் சந்திரன் அடங்கலாக மேலும் ஐந்து கோள்களின் நாமங்களை இவ்வார நாட்களுக்கு சூட்டினார்கள்.

இதன் பிரகாரம் தற்போது உள்ளது போன்று ஒரு கிழமை ஏழு நாட்களாக மாற்றம் பெற்றது. இதனையே மிலேனியம் ஆண்டாக இன்றைய கால கட்டம் வரை நாம் பின்பற்றுகின்றோம். இன்று பிறந்துள்ள 2015 ம் ஆண்டு மூன்றாவது (03) மிலேனியத்தின் 15 வது ஆண்டு என கூறப்படுகின்றது. இதை இன்னும் விரிவாக நோக்கினால் 21 ம் நூற்றாண்டின் 15 வது வருடமாகவும் 2010 தசாப்தத்தின் 5 வது ஆண்டாகவும் அமைந்துள்ளது. இன்று உலகில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாவனையிலுள்ள கிரே தெரியின் நாட்காட்டியின் படி 2015 இன்று வியாழக்கிழமை (ஜனவரி 01) ஆரம்பமாகின்றது.

கி.மு. ஜுலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜுலி நாட்காட்டியின் திருத்திய வடிவமே தற்போது நாம் பயன்படுத்தும் கிரேகெரி நாட்காட்டி என்னும் கலண்டர் ஆகும். இந்த நாட்காட்டியை கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடு கிரீஸ் என்பது நாம் ஆச்சரியப்படுத்துகின்ற செய்து ஆகும். நாகரிக வளர்ச்சி கண்ட புராதன எகிப்தியர்களும் யூதர்களும் இந்த ஏழுநாள் கொண்ட ஒரு வார கால சக்கரத்தை தொடர்ந்தனர். ரோமானியர்களின் கிழமையில் பிரகாசிக்கின்ற ஏழு நாட்களும் வரிசைக் கிரமத்தின் பிரகாரம் சூரியன் சந்திரன் மற்றும் ஐந்து கோள்களின் பெயர்களைக் கொண்டதாக பெயரிடப்பட்டன.

ரோமானியர்கள் மிகுந்த இறை பக்தியுடையவர்கள் என்பதனால் ஞாயிறு முதல் சனிவரை தங்களின் கடவுள்களின் பெயர்களை சூடினார்கள். இதன்படி ஞாயிற்றுக்கிழமைக்கு சூரியனும் ( Sun) திங்கட்கிழமை சந்திரனும் (Moon) செவ்வாய்க்கிழமைக்கு அங்காரனும் (Mars) புதன்கிழமைக்கு புதன் கிரகமும் (Mercury) வியாழக்கிழமைக்கு குரு புருஹஸ்பதி (Jupiter) வெள்ளிக்கிழமைக்கு வீனஸ் (Venus) சனிக்கிழமைக்கு சனிக்கிரகமும் (Saturn) பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது யதார்த்தமாகும்.

ஒவ்வொரு மனிதரிடமும் மற்றவர்களால் போற்றிப் புகழப்படும் தனி மகவத்தும் வாழ்ந்த அதிசயிக்கக் கூடிய ஒருவகை திறமை இருக்கத்தான் செய்கிறது. அது எது என்பதை அறியாமல் நாம் வாழ்நாளைப் போக்குகின்றோம். இறை அருள் எமக்கிருந்தால் நல்ல குரு கிடைத்து வாழ்வில்முன்னோக்கிச் செல்ல முடியும். அகந்தையும் அறியாமையும் எமது எதிரிகள். இதனால் பல சாம்ராஜ்யங்களே அழிவுகளைக் கண்டிருக்கின்றன.

இதற்கு உதாரணமாக யோகி ஒருவர் சுவாமி விவேகானந்தரிடம் வந்து ஐயா எனக்கு ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருக்கிறது. பூமிக்குக் கீழ் நீண்ட நேரம் புதையுண்டு மூச்சை அடக்கும் வல்லமை உள்ளது. தண்ணீரின் மேல் நடந்து மறுகரையை அடையும் வல்லமையுள்ளது. எனவே நான் சர்வசக்தி படைத்தவன்தானே என்றார். இதைக் கேட்ட விவேகானந்தர் உனது வித்தைகளால் உனக்கு என்னபயன்? உன் சார்ந்தவர்களுக்கு என்ன பயன் உண்டு? உன்னால் பிறருக்கு உதவி செய்தால் அதுவே பெரிய மகிழ்வைத் தரும் என்றார். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது இப்புத்தாண்டுக்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு பகுதியையாவது ஏழைகளுக்கு தானமாக வழங்கப்பழகிக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

புதிய ஆண்டு பிறந்து முதல் சிறுவர் பெரியவர்கள் ஆடவர் பெண்கள் என எல்லோரையும் கவர்கின்ற ஒரு பொருளாக கலண்டரும் டயறிகளும் இருந்து வருகின்றன. அப்படி என்னதான் இதில் உள்ளது? புத்தாண்டில் ஒருவரை நாம் சந்தித்தால் எமது மனம் தேடுவது கலண்டர் டயறியைத் தான். குறிப்பாக பெண்கள் புத்தாண்டு பிறந்த கையோடு வீட்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொண்டு நகரிலுள்ள பெரிய வர்த்தக நிலையத்திற்கு சென்று தேவை உள்ளதோ இல்லையே பொருட்களை வாங்குவார்கள். இறுதியில் கவுண்டரில் ஒரு கலண்டர் வழங்கப்படும். இது மிக விலை உயர்ந்த பொருளாகவே அமையும்.

தலைநகர் கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடைகளில் மிக அழகான கலண்டர்களும் டயரிகளும் தமது கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்படும். புதுவருடம் வந்து விட்டால் செட்டியார் தெரு கலகலப்பாவது பார்ப்போரை பரவசப்படுத்தும் எனலாம். ஆனால் மக்களால் பெறப்படுகின்ற டயறிகளும் கலண்டர்களும் பயன்படுத்தப்படு வதென்பது கேள்விக்குறி எனலாம். எமது ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை டயறி (நாட்குறிப்பேடு) எழுதும் வழக்கத்தை கைக்கொண்டவர் அல்லது நாட்குறிப்பேடு எழுத தனது காலத்தையும் வேலைகளையும் சரிவர மேற்கொண்ட பெரியார் இந்தியாவின் மகாத்மா காந்தி ஆவார்.

இதற்கு பின்னரே இந்திய, இலங்கை மக்கள் டயறி எழுதும் பழக்கத்தை ஒரு பொறுப்பான கடமையாக செய்துள்ளனர். இறுதியாக பண்டிகை என்பது மக்களை வாழ்வாங்கு வாழ்வதற்கும் அனைவரும் ஐக்கியமாக ஒன்றிணைந்து கூடி மகிழ்வதற்கேயாகும். பேதமற்ற வாழ்வை புத்தாண்டில் இறை கருணையுடன் கொண்டாடுவோம் நாடு வளம் பெறட்டும்.

ஆர். நடராஜன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com