Contact us at: sooddram@gmail.com

 

எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி?

திரையரங்க வசூல் மட்டுமே சினிமாவில் போட்ட முதலை எடுப்பதற்கான வழி என்றிருந்த காலம் கடந்து போய்விட்டது. மொழிமாற்று உரிமை, மறுஆக்க உரிமை, ஆடியோ உரிமை என ஆரம்பித்து, வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப, ஒலிச்சித்திரம் ஒலிபரப்ப என்று வழிகள் கிளைத்தன. தூர்தர்ஷனில் பாடல்களையும், படத்தையும் போட வரிசையில் நின்று விற்றுக் காசாக்கும் காலம் வந்ததது.

இலங்கை தமிழர்கள் உலகம் முழுவதும் பரவப் பரவ, தமிழ்ச் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. இதனால் படத்தில் கடல் கடந்து வெளியிடும் உரிமை, வீடியோ கேசட், வி.சி.டி, டிவிடி உரிமைகள், சாட்டிலைட் உரிமை எனப் போட்ட முதலை எடுக்கப் பல வழிகள் வந்துவிட்டன.

ஆனாலும் தற்போது மீண்டும் கற்காலத்திற்கே தமிழ் சினிமாவின் நிலை போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னால் என்னடா இவன் நல்லதே சொல்ல மாட்டானா என்று நீங்கள் சலித்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு கோடம்பாக்கத்தைச் சலித்துப் பாருங்கள் உண்மை உங்கள் முன்னால் கசப்பாக நிற்கும்.

வியாபாரமா? விவகாரமா?

சினிமா வியாபாரம் என்ற ஆவணப்படத்திற்காகப் பல சினிமா வியாபாரப் பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேட்டியெடுத்து வருகிறேன். எல்லோரும் சினிமாவின் தற்போதைய வியாபாரம் குறித்துக் கவலையாகத்தான் பேசுகிறார்கள். ஒரு சினிமா தயாரித்துவிட்டு, மேற்சொன்ன வியாபாரத்தில் இன்று ஒன்றைக் கூடச் செய்ய முடியாமல் படங்களை வெளியிட என்ன செய்வது என்று பல தயாரிப்பாளர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வியாபாரம் இன்று விவகாரமாக மாறிவிட்டதில் படத்தில் ஆடியோவில் ஆரம்பித்து, எந்த உரிமையும் வாங்க ஆளில்லை. இன்று கோடம்பாக்கத்தின் வண்ணமயமான விழாக்களாக நடக்கும் பல இசை வெளியீடுகள் தயாரிப்பாளர் சொந்தச் செலவில் படத்தின் விளம்பரத்துக்காகச் செய்வதாக நோக்கம் குறுகிப்போய்விட்டது.

பெரிய படங்களே திரையரங்குகளைப் பிரித்துக்கொள்வதில் சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் போட்ட பணத்தை எடுக்கச் சின்னப் படங்களுக்கு வேறேதாவது வழி இருக்கிறதா? எனப் பல தயாரிப்பாளர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாற்று வருமான வழிகளைத் தடுப்பது எது?

ஒரு சினிமாவை எடுத்துவிட்டு, கமர்ஷியல் திரையரங்குகளில் வெளியிடாமல் உலகத் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிட்டு, கோடிகளில் சம்பாதிப்பவர்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அப்படிச் சம்பாதிப்பவர்கள் அதற்கான வழிகளைச் சிரமேற்கொண்டு வெளியே சொல்லுவதேயில்லை. எங்கே அங்கேயும் கூட்டம் அதிகமாகிவிடுமோ என்கிற பயம் கூடக் காரணமாக இருக்கலாம்.

ஆனால் வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று கேட்டீர்களானால் நிறைய இருக்கிறது. ஆனால் இல்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணமாய் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் தேவைக்கு மீறிப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டு, போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்றால் அதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

ஒரு சில படங்களை நாம் திரையரங்குகளில் பார்க்காமல் டிவியில் பார்க்கும் போது “ அட நல்லாத்தானேயிருக்கு இந்தப் படம் ஏன் ஓடலை?” என்று நம்மை நாமே கேட்டிருப்போம். காரணம் போதிய விளம்பரமின்மை, அரங்குகள் கிடைக்காமை என ஆயிரம் காரணங்கள். அரங்குகளில் ஒருசில நாட்களோடு பிடுங்கி எரியப்பட்ட படங்களைத் தேடிப் பார்க்கிறவர்களுக்கு இருக்கும் ஒரே வழி திருட்டு வீடியோதான்.

அதுவும் ஓரளவுக்குப் பெயர் பெற்ற, மிகவும் குறைந்த அளவிற்காகவாவது முகம் தெரிந்த இயக்குநர், அல்லது நடிகர் நடித்த படத்தைத்தான் வாங்குவார்கள். திருட்டு வீடியோ கேசட் விற்கும் காலத்திலிருந்து இன்று வரை ஓரளவு கவனம் பெற்ற படங்களும், பெரிய நடிகர்கள் நடித்த படங்களைத் தவிர மற்றப் படங்களின் திருட்டு வீடியோகூட விற்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சிங்கப்பூரில் வாழும் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். “அட்லீஸ்ட் இங்க ரிலீஸ் பண்ணாட்டிக்கூட பரவாயில்லை. திருட்டு டிவிடியில வர்ற அளவுக்காவது படமெடுங்க சார்” என்று கிண்டலடிப்பார். எனக்கு உள்ளுக்குள் கோபமெழுந்தாலும் அவர் சொல்வது ஜீரணிக்க முடியாத நிஜம்தான் என்பதை மனம் ஒப்புக் கொள்ளும். இன்று தயாராகும் பல படங்கள் திருட்டு டிவிடிக்கு கூட லாயக்கில்லையென்றால் நாம் அதை நேர்மையாக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

எல்லாவற்றையும் மாற்றுமா?

ஒரு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பெற்றவர்கள் அவ்வுரிமத்திலிருந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் சாட்டிலைட் உரிமை, ஓரளவுக்குப் பெரிய படங்கள் என்றால் அங்குள்ள திரையரங்குகளில் வெளியிடும் உரிமை, மற்றும் உலக நாடுகள் அனைத்துக்குமான சாட்டிலைட் உரிமை, டிவிடி, இண்டர்நெட், ஏர் பவுண்ட் எனப்படும் வான் வழி ஒளிபரப்பு, ரோட் பவுண்ட் எனும் தரைவழி ஒளிபரப்பு என நிறைய வழிகளில் பணத்தை எடுக்க வழியிருக்கிறது.

எல்லாப் படங்களின் பைரஸியும் வெளிநாட்டு உரிமம் பெற்ற டிவிடிக்களிலிருந்து காப்பியடித்து இங்கே தருவிப்பதுதான் என்ற நம்பிக்கை பெரும்பாலும் இருந்தாலும் இன்றைய நிலையில் பெரும்பாலான திருட்டு டிவிடிக்கள் உள்ளூரில் இருந்து வருகிறது என்பதுதான் உண்மை. இதையெல்லாம் மீறித் தியேட்டர் தருகிறீர்களோ இல்லையோ நான் என் படத்தை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறேன் என இயக்குநர் சேரன் நேரடி டிவிடி விற்பனைக்காகத் தமிழ்நாடு பூராவும் முகவர் நெட்வொர்க்கை அமைத்து வருகிறார்.

பொங்கல் முதல் தன் படமான ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின் 50 லட்சம் டிவிடி விற்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். இது சாத்தியமா? சாத்தியமில்லையா? என்று நிறைய பேர் இத்துறையில் உள்ளவர்கள் நீயா? நானா? விவாதக்களம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது முனைப்பு துணிவான நல்ல முயற்சியென்றே சொல்லுவேன். சினிமா டூ ஹோம் வெற்றிபெற்றால் தரமான சின்னப் படங்களுக்கான பொற்காலம் கண்டிப்பாக உருவாகும். ஆனால் சேரனின் வலைப்பின்னலில் அரசியல் மற்றும் மாபியா சிலந்திகள் கூடுகட்டலாம் என்று கோடுபோட்டு களமிறங்கினால்...!? அது நடந்துவிடக் கூடாது என்று இப்போதைக்குப் பிரார்த்தனை செய்வோம்.

திரைக்குத் தோதான கதை! - மினி ரிவ்யூ

என்னைப் பொறுத்தவரை பெருமாள் முருகனின் ‘மாதொருபாகனை’ மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்வேன். அருமையான ப்ரீயட் நாவல். குழந்தை பாக்கியமில்லாத பொன்னா, காளி தம்பதியரின் வலியைச் சொல்லும் கதை. குழந்தைக்காக ஏங்கி அவர்கள் செய்யும் சடங்குகள், நம்பிக்கைகள், மருத்துவ முறைகள், உறவு கொள்ளும் முறை என எல்லாவற்றையும் முயன்று நொந்திருக்கும் வேளையில், தன் கணவனுக்காக, இன விருத்திக்காக, அவன் தன் மேல் வைத்திருக்கும் காதலுக்காக அவள் ஊர் திருவிழாவில் வேறொரு ஆடவனுடன் கூடிப் பிள்ளை பெற விழைகிறாள்.

விருந்தாளிக்குப் பிறந்தவன், திருவிழாவில தரிச்சது போன்ற வசை சொற்களைச் சொல்லிப் பிள்ளைகளைத் திட்டுவதைக் கேட்டிருப்போம். குலம் காக்க, வம்சம் தழைக்க, செவி வழிக்கதைகளாகவும், மகாபாரதக் கதைகள் மூலமாகவும், நாட்டுப்புறக் கதைகளிலும் கேள்விப்பட்ட, பேசப்பட்ட விஷயம்தான்.

குழந்தையில்லாததற்குப் பெண் மட்டுமே முழு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், வேறொரு திருமணம் செய்ய விரும்பாத காளியின் மனநிலை, அவனுக்காகப் பொன்னா படும் மன ரீதியான அவஸ்தை, ஒவ்வொரு முறை கூடும் பொழுதும், இந்த முறை தங்கிரணுமே என்ற பரிதவிக்கும் மனநிலை எனப் பொன்னா, காளியின் காதலை, மன விசாரங்களை மிக அற்புதமாய் எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன். முக்கியமாய்க் கதையின் முடிவை எழுதிய விதம் உயர்தரம். வாய்ப்பிருந்தால் ஒரு சிறந்த திரைப்படமாய் வர எல்லாத் தகுதிகளைக் கொண்ட கதை.

சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நாவல் 2010ல் வெளிவந்தது. நாலு வருஷம் கழித்துத் தடை கோர அப்படி என்ன பூதம் கிளம்பிவிட்டது என்று தெரியவில்லை. பேசாமல் எதையெல்லாம், எப்படி எழுதலாம், படமெடுக்கலாம், கருத்து சொல்லலாம்னு கோனார் நோட்ஸ் ஒண்ணைப் போட்டுட்டாங்கன்னா நல்லாயிருக்கும்.

(கேபிள் சங்கர்)(The Hindu)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com