Contact us at: sooddram@gmail.com

 

வட மாகாண புலி ஆனந்தி சசிதரனின் சுய உருவம் இதோ..!

தமிழர்களை தேர்தலை பகிஷ்கரிக்க கோரி மகிந்தவுக்கு நன்றிக் கடன் !

வட மாகாண சபையின் உறுப்பினர் புலி எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காது பகிஷ்கரிக்கும்படி கூறியுள்ளார். அவரின் கூற்றுப்படி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத எந்த ஒருவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதாகும். அவரின் மற்றொரு காரணம் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை மைத்ரிபால சிறிசேன ஏற்க மறுப்பதாகும். வெளிப் பார்வைக்கு இந்தக் கோரிக்கை தமிழர் நலன் சார்ந்தது அல்லது சிங்களத் தலைவர்களுக்கு எதிரானது போல் தோன்றலாம். அது தவறு. ஆனந்தி தமிழரின் அக்கறையில் இவ்வாறு கூறுகிறார் என எவராவது நினைத்தால் அதுவும் தவறாகும். சர்வதேசத்தை பொறுத்தவரை அரச படைகள் மட்டுமல்ல புலிப்படையினரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்தான் என்பதை ஆனந்தி வகையாக மறந்துவிட்டார் போலும். இவர் புலிகளின் முக்கிய உறுப்பினரின் மனைவியாக இருந்தும் எவ்வாறு அரசாங்கம் இவரை அரசியல் செய்ய அனுமதித்தது எனத் தமிழர்கள் பலரும் இதுவரை தலையை சொறிந்தவண்னம் இருந்தனர். ஆனால் இப்போது அவரின் சுய உருவம் வெளிவந்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல மொத்த நாட்டு மக்களையுமே தனது குடும்பத்தின் நலனுக்கு கீழ்ப்படுத்தி நாட்டையே கொள்ளையடிக்கும் கும்பலான ராஜபக்ஷவின் காட்டாட்சியை எதிர்த்து இன, மொழி, மத வெறுபாடு ஏதுமின்றி மக்கள் அணிதிரண்டு நிற்கும் இந்த நேரத்தில் ஆனந்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது மீண்டும் ராஜபக்க்ஷ கும்பலை பதவியில் அமர்த்த செய்யும் கேடுகெட்ட செயலாகும். இன்று மகிந்தவை எதிர்த்து நிற்கும் பல அமைப்புக்களும் தனி நபர்களும் கடந்த காலங்களில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பது ஆனந்தி போன்ற அங்கிடுதத்திகளுக்கு எங்கே புரியப்பொகிறது.

எப்படி அன்று புலிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழ் மக்களை தேர்தலை பகிஷ்கரிக்கச் செய்து மகிந்தவை வெல்லப் பண்ணினார்கள் என்பது யாவரும் அரிந்ததே. எமில் காந்தன் என்னும் புலி தொடர்பு நபரூடாக அன்று பல கொடிக்கணக்கான ரூபாய்கள் மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ஷ புலிகளுக்கு கொடுத்துத்தான் புலிகள் இந்த தேர்தல் பகிஷ்கரிப்பை அன்று நடத்தினார்கள். இன்று ஆனந்தி அரசாங்கத்திடம் எவ்வளவு வாங்கிக்கொண்டு இந்த நாடகத்தை ஆடுகிறார்? அறிக்கையை விடுகிறார்?

தமிழர்களின் வாக்குகள் குறைந்தால் மைதிரிபாலவை தோற்கடிக்கலாம் என்பதே மகிந்த கும்பலின் அவா. அதைத்தான் ஆனந்தி செய்ய முனைகிறார். எத்தனையோ அப்பாவித் தமிழர்களை கொன்ற மகிந்த தன்னை சுதந்திரமாக அரசியல் செய்ய அனுமதித்தற்காக ஆனந்தி இந்த நன்றிக் கடனை செய்கின்றார். இவர் மட்டுமல்ல இன்று மகிந்தவின் மடியில் இருக்கும் கே.பீ. ஊடாக மகிந்த அரசுடன் தொடர்பு வைத்து பல சட்டவிரோத வியாபாரங்களில் ஈடுபடும் வெளி நாட்டு தமிழர்களும் இந்த பகிஷ்கரிப்பை ஊக்குவிக்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை மகிந்த போன்ற ஒரு திருட்டு ஊழல் கூட்டம் பதவியில் இருப்பதே வசதியானது. மகிந்த மீண்டும் வெற்றிபெற்றால் அவர் தென்னிலங்கையில் பழையபடி புலியெதிர்ப்பு பேசி தனது கொள்ளையடிக்கும் குடும்ப அரசியலை கொண்டு செல்வார். ஆனந்தி போன்றவர்கள் வடக்கில் மகிந்த எதிர்ப்பு பம்மாத்து அரசியல் பேசி தங்களது வயிற்றை வளர்ப்பார்கள். வெளிநாட்டில் உள்ள வியாபாரக் கூட்டம் தங்களது கள்ள வியாபாரங்களை நடத்தி இலங்கையில் உள்ள பணத்தை சுருட்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வார்கள். இலங்கையில் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன?
- Ajeevan Veer

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com